யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/9/15

பள்ளிகளில் தொழிற்கல்வி கேள்விக்குறி:ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2,500 மேல்நிலைப்பள்ளிகளில் 3,000 தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த 1990ல் தொகுப்பூதிய ஆசிரியர்கள், நிரந்தரப்பணிக்கு மாற்றப்பட்டனர்.'தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டது. மேலும், 'இது போன்ற பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு மேம்படுத்தப்பட்ட தேர்வுநிலை தர ஊதியம் வழங்க வேண்டும்' என நிதித்துறை உத்தரவிட்டது.

இந்த இரு உத்தரவுகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை செவிசாய்க்கவில்லை. 'தர ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என போராட்டங்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நடத்தி வருகிறது.
மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், ''900 பள்ளிகளில் தொழிற்கல்வி நடைமுறையில் இல்லை. 300 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 2007 முதல் காலியாக உள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை,'' என்றார்

கல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு 100% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இச்சலுகையைப் பெற,  பெற்றோரின் வருமானச் சான்றிதழை அக்டோபர் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில்,  மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகின்றன. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்குள் இருந்தால்,  அவர்களது பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கு 100% வட்டி மானியம் வழங்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை 2009 ல் அறிவித்தது.
மேலும்,  கடன் தொகையை திருப்பிச் செலுத்த மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்து ஒருவருடம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. படிப்புக்காலம் மற்றும் இந்த ஓராண்டு காலம் வரை மட்டுமே வட்டிக்கு 100% மானியம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 முதல் 2014 வரை வழங்கப்பட்ட கல்விக் கடனுக்கு இச்சலுகையைப் பெற மாணவர்கள் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. கல்விக் கடனுக்கான மானியத் தொகையை அனைத்து வங்கிகளுக்கும் அளிப்பதற்காக கனரா வங்கியை தொடர்பு வங்கியாக மத்திய அரசு நியமித்துள்ளது

தலைமை ஆசிரியர் காலியிடம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்திலுள்ள அரசு உயர்,மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் குறித்த விபரங்களை, அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை சிலர் விரும்பவில்லை. இலவச நலத்திட்ட உதவிகளை வழங்குதல், சில பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையேயான கோஷ்டியை சமாளித்தல், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை மனதில் வைத்து பதவியை தவிர்த்தனர்.

இதன் காரணமாக தலைமை ஆசிரியர் பணியிடம் சில இடங்களில் நிரம்பாத நிலை உருவானது. இந்நிலையில் உயர்,மேல்நிலை பள்ளிக்கான தரம் உயர்வு பட்டியல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத சூழலில், தலைமை ஆசிரியர் காலி யிடம் சேகரிப்பு பதவி உயர்வை விரும்புவோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், “கலந்தாய்விற்கு பின், காலியிடம் பற்றி பட்டியல் கேட்பது வழக்கம். தரம் உயர்வு பள்ளிகள் அறிவிப்பு வெளியாகும் முன், பட்டியல் கேட்பதால் காலியிடங்களின் அடிப்படையில் தரம் உயர்வு பள்ளிகளை கணக்கிட்டு வெளியிடலாம். காலாண்டு நெருங்குவதற்குள் தரம் உயர்வு பள்ளிகள் பட்டியல் அறிவித்தால் மாணவர்களை சேர்ப்பது சிரம்ம் இருக்காது. டிசம்பருக்குள் அறிவிக்க வேண்டும், என்றார்.

10/9/15

மாணவர் சேர்க்கை: திண்டாடும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்

பி.எட்., எம்.எட். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பது, மாணவர் சேர்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 30 முதல் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின் படி, பி.எட்., எம்.எட். ஆகிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளின் படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
 இந்த வழிகாட்டுதலை எதிர்த்து தமிழக சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், படிப்பு காலம் ஓராண்டாக இருக்குமா அல்லது இரண்டு ஆண்டுகளாக இருக்குமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதனால், பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கை தாமதமாகி வந்தது.

இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள்: செப். 14 முதல் பள்ளிகளுக்கு விநியோகம்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ புத்தகங்கள் வருகிற 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
 தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 முதல் பருவம் செப்டம்பர் மாதத்தோடு நிறைவடையும் நிலையில், இரண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை அச்சடிக்கப்பட்டுள்ளன.
 இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
 இரண்டாம் பருவத்துக்கு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மொத்தம் 2.15 கோடி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 1.33 கோடி புத்தகங்கள் மாநிலம் முழுவதும் உள்ள 67 மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 இந்தப் புத்தகங்கள் செப்டம்பர் 14 முதல் 19-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
 அத்துடன், இரண்டாம் பருவத்துக்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுப் புத்தகங்களும் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 தனியார் பள்ளி மாணவர்கள்: தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 82 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

த்தாம் வகுப்பு தனித் தேர்வு: செப். 21 முதல் 23 வரை அறிவியல் செய்முறைத் தேர்வு

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.

 இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
 அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்றவர்களும், ஏற்கெனவே இந்தப் பயிற்சியைப் பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.
 வரும் மார்ச் 2016-இல் அறிவியல் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் ஜூன் மாதம் நடைபெற்ற செய்முறை பயிற்சிக்கு பெயர்களை பதிவு செய்திருப்பர். அந்தத் தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10 லட்சம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் இலவச மடிக்கணினி

வரும் டிசம்பருக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டில் சென்னை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.

 ஒப்பந்தப்புள்ளிகளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பல மாதங்கள் தாமதத்துக்குப் பிறகு ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிசெய்யப்பட்டு, மடிக்கணினி விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 
 இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
 கடந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேனி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்பட 15 மாவட்டங்களில் மடிக்கணினி விநியோகம் நிறைவடைந்துள்ளது.
 மீதமுள்ள மாவட்டங்களில் அக்டோபர் முதல் வாரத்துக்குள் மடிக்கணினிகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இந்த மடிக்கணினிகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். கடந்த நிதியாண்டில் (2014-15) 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.1,080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
 இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒப்பந்தப்புள்ளிகள்: ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவதில் தாமதம் ஏற்பட்டதால், நிகழ் கல்வியாண்டுக்கும் (2015-16) சேர்த்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 5 லட்சம் பேருக்கும் டிசம்பருக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக நிகழாண்டிலும் (2015-16) ரூ.1,080 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14-இல் துணை மருத்துவ படிப்புகளுக்கான 2-ஆம் கட்டக் கலந்தாய்வு

துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
 2,104 இடங்கள் காலி: பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், அரசு கல்லூரிகளில் 555 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 6,621 என மொத்தம் 7,176 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து 555 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 4,517 என மொத்தம் 5,072 இடங்கள் நிரம்பின. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எஞ்சியுள்ள 2,104 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 14, 15, 16, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
 சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். மேலும் விவரங்களுக்கு: www.tnhealth.org.

11,000 மாணவர்களுக்கு அறிவியல் விருது மத்திய அரசு ரூ.2.40 கோடி ஒதுக்கீடு

நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் விருது வழங்க, மத்திய அரசு, 2.40 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடத்தி, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது.
மாவட்ட விருதுக்கு, 2,000 ரூபாய்; மாநில விருதுக்கு, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதம் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு பெறுவோர், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர். இந்த விருதையும், அதற்கான நிதியையும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்குகிறது.நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்திற்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 2.40 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த நிதியில், 11 ஆயிரம் பேருக்கு விருதுகள் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.'இன்ஸ்பயர்' விருதுகள் வழங்குவது தொடர்பாக, பரிந்துரை செய்யப்படும் பள்ளிகளின் பட்டியலை, வரும், 15ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' அனுப்பலாம் என, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விவரங்களை, inspirea wards-dst.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பி.எட்., விண்ணப்பம் இன்று கடைசி நாள்

தமிழகத்திலுள்ள, 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், 2,200 பி.எட்., இடங்களை நிரப்ப, 3ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இன்று பிற்பகல், 3:00 மணி வரை மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

காதல் திருமணம் செய்த ஆசிரியர் பாடம் நடத்த அனுமதி மறுப்பு

சென்னை, ராயபுரத்தில், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது; இங்கு, ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியையை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு, பள்ளி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருமணத்துக்குப் பின்,
அந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆசிரியருக்கு, பள்ளி நிர்வாகம் பணி மாறுதலும் அளிக்கவில்லை; மாறாக, 100 நாட்களாக பள்ளியில் பாடம் நடத்த, அனுமதி மறுத்துள்ளது; தினமும், பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, செல்லும்படி கூறியுள்ளது. அதனால், இந்த பள்ளியில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, மூன்று மாதங்களாக, தமிழ் பாடம் நடத்தப்படவில்லை. இதுகுறித்து, ஆசிரியர் சங்கங்களின் சார்பில், பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரியும், பள்ளிக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.எனவே, சென்னையிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, நேற்று, கிழக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுரேஷ் கூறியதாவது:
சென்னையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுகின்றனர். பாடம் நடத்த விடாமல், தங்கள் சொந்த பணிகளை பார்க்க அனுப்புகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் மனமொத்து திருமணம் செய்ததை, பள்ளி நிர்வாகம் கொச்சைப்படுத்தி, ஆசிரியரை பள்ளிக்குள்ளேயே விடாமல், 100 நாட்களாக அவமானப்படுத்துகிறது. 
இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தால், மாவட்ட கல்வி அதிகாரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள

ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு: அக்கவுண்ட் தொடங்கிய பொழுது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டால் இரண்டு மணி ஒலித்த பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு, அந்த எண்ணுக்கு உங்கள் இருப்புத் தொகை தானாகவே வந்துவிடும்…
Know ur bank account balance by giving a missed call to below numbers… Don’t waste your ATM transactions just to see your balance… (your mobile number must be given in your bank account )
0 ) Indian overes bank 04442220004
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445 17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR 1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292 20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000 Good information always shared with others.
Government Sector Banks – Missed Call Number:
1. Allahabad Bank: - 09224150150
2. Andhra Bank: - 09223011300
3. Bank of Baroda: - 09223011311
4. Bank of India: - 02233598548
5. Bank of Maharashtra: - N/A
6. Bharatiya Mahila Bank: - 09212438888
7. Canara Bank: - 09289292892
8. Central Bank of India: - 09223512345
9. Corporation Bank:
Balance Details (In Hindi) – 09289792897
Balance Details (In English) - 09268892688
10. Dena Bank:
Balance Detail - 09289356677
Last 4 Transactions Mini Statement - 09278656677
11. IDBI Bank: - 09212993399
12. Indian Bank: - 09289592895
13. Indian Overseas Bank: - N/A
14. Oriental Bank of Commerce (OBC): - Send SMS
Balance Detail – “ACBAL<Space>Accountnumber” Send to - 09915622622
Mini Statement – “STM<Space>Accountnumber” Send to - 09915622622
15. Punjab & Sind Bank: - 1800221908
16. Punjab National Bank (PNB):- 18001802222 or 18001032222 Or 01202490000
17. State Bank of Bikaner & Jaipur (SBBJ): - N/A
18. State Bank of Hyderabad: - N/A
19. State Bank of India (SBI):
To Register This Service Send SMS - “REG<Space>Accountnumber” Send to - 09223488888
Balance Detail - 09223766666
Last 5 Transactions Mini Statement - 09223866666
20. State Bank of Mysore: - N/A
21. State Bank of Patiala: - N/A
22. State Bank of Travancore: - N/A
23. Syndicate Bank:
To Register This Service Send SMS - “SREG<Space>Customer-ID” Send to - 09241442255
Balance Detail – 09241442255 Or 08067006979
24. UCO Bank:
Balance Detail – 09278792787
Last 5 Transactions Mini Statement - 09213125125
25. Union Bank of India: - 09223009292
26. United Bank of India: - 09015431345
27. Vijaya Bank:
Balance Detail - 1800-266-5555
Last 5 Transactions Mini Statement - 1800-266-5556
Private-Sector Banks - Missed Call Number:
1. Axis Bank: - 09225892258
2. Catholic Syrian Bank: - N/A
3. City Union Bank: - N/A
4. Development Credit Ban: - N/A
5. Dhanlaxmi Bank:
Balance Detail: - 08067747700
Last 3 Transactions Mini Statement – 08067747711
One Day E- Statement - 08067747733
6. Federal Bank: - 1800-425-1199 or 1800-420-1199
7. Tamilnad Mercantile Bank: - N/A
8. HDFC Bank: - 18002703333
9. ICICI Bank: - 022-30256767
10. Indusind Bank: - N/A
11. Karnataka Bank: - 18004251445
12. Karur Vysya Bank:
Balance Detail: - 09266292666
Last 3 Transactions Mini Statement - 09266292665
13. Kotak Mahindra Bank - 18002740110
14. Lakshmi Vilas Bank: - N/A
15. RBL Bank: - Click Here
16. Nainital Bank: - N/A
17. South Indian Bank: - 09223008488
18. Yes Bank: - 09840909000
19. ING Vysya Bank: - N/A

குழந்தைகளுக்கான வீரதீர விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

குடியரசு தினத்தை ஒட்டி, மத்திய அரசு வழங்கும், குழந்தைகளுக்கான வீரதீர விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.குழந்தைகளின் வீரதீர செயல்களைப் பாராட்டி, மத்திய அரசின் இந்திய குழந்தைகள் நல கவுன்சில் சார்பில், 1958 முதல், விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில், 24 குழந்தைகளை தேர்வு செய்து, இந்த விருது வழங்கப்படுகிறது.
வரும் ஜனவரியில் குடியரசு தினம் கொண்டாடு கிறது. எனவே, குழந்தைகளுக்கான வீரதீர விருது பெற, விண்ணப்பங்களை அனுப்பும்படி, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, 2014 ஜூலை, 1ம் தேதி துவங்கி, 2015 ஜூன், 30ம் தேதி முடிய, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்த சாகச சம்பவங்களின் அடிப்படையில், விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர், இந்திய குழந்தைகள் நல கவுன்சிலின் மாநில பொதுச் செயலர் அல்லது தலைவர், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆகியோரில் யார் வேண்டு மென்றாலும், குழந்தைகளின் பெயர்களை பரிந்துரை செய்யலாம்.
விண்ணப்பங்களை, வரும், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு : பெண்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவதுகட்டாயமாகிறதுஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு
அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னைஉயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதுகிராமப்புறங்களில் இந்தஉத்தரவு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்ற அறிக்கையை தாக்கல்செய்ய அரசுக்குநீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்தமிழகத்தில்கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்இதற்கு தமிழக அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகிருபாகரன்கடந்த ஜூன் 8ஆம் தேதி உத்தரவிட்டார்அதைத்தொடர்ந்துதமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர்கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு ஜூன்18ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி இந்தவழக்கு விசாரணைக்கு வந்தபோது சமூக ஆர்வலர் நிம்மு வசந்த்ஆஜராகிபெண்கள் மற்றும் குழந்தைகள்வயதானவர்கள்,உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்துவிலக்கு அளிக்க வேண்டும் என்றும்ஆவணங்கள் பறிமுதல் செய்யும்உத்தரவை திரும்பபெற வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்தீர்ப்பைதள்ளிவைத்திருந்தார்அதன்படி இந்த வழக்கில் நேற்று தீர்ப்புகூறினார்நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.அதனை மாற்றும் விதமான உத்தரவை பிறப்பிக்க கோருவது ஏற்கமுடியாதுசட்டத்தை அமல்படுத்த உத்தரவிடும் போது கோர்ட்டைமனுதரார் குறைகூற முடியாது.
அரசியல் அமைப்பில் குடிமக்களை காப்பாற்றும் கடமை ஒரு அரசின்கடமைஅதனை மனுதரார் மறந்து விட்டார்கட்டாய ஹெல்மட்அணிந்து செல்வதால் விபத்து குறைய வில்லை என்பதை ஏற்கமுடியவில்லை என்பதற்கான எந்த ஆதாரமும் மனுதராரிடம் இல்லை.
பெண்கள்குழந்தைகள் கட்டயாம் ெஹல்மட் அணிய வேண்டும்.இதை மாற்ற முடியாது.
புறநகர் மற்றும் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக கிராமங்களில்முறையாக ஹெல்மட் விதிகளை அமல்படுத்தப்படுவதாகதெரியவில்லைஇதேநிலை நீடித்தால் அமல்படுத்தாக மாவட்டஎஸ்.பி.க்கள் நேரில் ஆஜராக நேரிடும்.
இந்தச் சட்டம் மாநிலம் முழுதும் எப்படி அமல்படுத்தப்படுகிறதுஎன்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும்19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில்கூறியுள்ளார்.
உங்கள் மனுவும் தள்ளுபடி ஆகியிருக்கும்
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் ஆஜராகி, ‘எங்கள்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார்.அதற்கு நீதிபதி, ‘நீங்கள் மனுத்தாக்கல் செய்யாமல் ஆஜராகிவாதிட்டீர்கள்அதனால் உங்களுக்கு உத்தரவு ஏதும் இல்லை;மனுத்தாக்கல் செய்திருந்தாலும் தள்ளுபடிதான் ஆகியிருக்கும்’ எனநீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச்ெஹல்மட் கட்டாயம் என்ற உத்தரவு எதிர்த்த மனுவை தள்ளுபடிசெய்ததால் தற்போது நான் பிறப்பித்த உத்தரவு நீடிக்கிறது என்றும்நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
மூத்த பெண்மணி என்பதால் அபராதம் விதிக்கவில்லை

அரசின் நடவடிக்கைக்கு பிறகு விபத்துகளும்உயிரிழப்புகளும்குறைந்துள்ள நிலையில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதுஇந்தவழக்கு கோர்ட்டின் நேரத்தை மனுதரார் வீண்டித்துள்ளார்.அதிகப்படியான அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்யஉகந்த வழக்காக இருந்தாலும்வழக்குத் தொடர்ந்தவர் மூத்தபெண்மணி மட்டுமல்லசமூக ஆர்வலர் என்பதாலும்அபராதமில்லாமல் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றும் நீதிபதிதெரிவித்தார்

தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டுபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம்
வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டம் மற்றும்அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள 142 தபால்காரர்பணியிடங்கள், 1 மெயில்கார்டு பணியிடம் ஆகியவற்றை நிரப்பவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர், 18 முதல் 27 வயதுக்குஉட்பட்டவராகவும், மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையானதேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கானவிண்ணப்பங்களை www.dopchennai.in என்ற இணையதளத்தில்செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம்செய்யலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய இணையதளத்தை பார்க்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.