யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/15

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - அரசு ஊழியர்கள் முடிவு

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்தது. இதனால்சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில்பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில்தமிழக அரசு
ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்கமுன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள்மற்றும் அடிப்படைபணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்றுதலைமை செயலாளர்ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவுசெயலாளர் ஆகியோருக்குஇதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார். 


அந்த கடிதத்தில், “தலைமைசெயலகம் முதல்அனைத்து அரசுதுறைகளிலும் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும்அடிப்படை பணியாளர்கள்2 லட்சத்து 34 ஆயிரம் பேர்களும், தங்களுடைய ஒருநாள் சம்பளத்தை“வெள்ள நிவாரணநிதி”யாக  நவம்பர்மாத சம்பளத்தில்பிடித்தம் செய்துகொள்ளசம்மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார். அதேபோன்று அரசுஅலுவலக ஒன்றியம்சார்பில் மாநிலதலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசுஊர்தி ஓட்டுநர்சங்க மாநிலதலைவர் ஜெயக்கொடிஆகியோரும் ஒருநாள்சம்பளத்தை பிடித்தம்செய்ய அரசுக்குகடிதம் எழுதியுள்ளனர். மொத்தத்தில் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள்மேற்கண்ட 3 சங்கத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக