யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/15

2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் நடத்தப்படுவது எப்போது? பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் எப்போது நடத்தப்படும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், ‘டெட்‘ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 

இதேபோல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் நவோதயா பள்ளி போன்ற, மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணியாற்ற விரும்புபவர்கள், சி.பி.எஸ்.இ. அமைப்பு நடத்தும் ‘சிடெட்‘ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு இதுவரை 3 முறை மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. 

2 ஆண்டுகளாக நடைபெறவில்லை

இந்த நிலை யில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் ஆசிரியர் பணியில் சேரு வதற்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாமல் இருப்பது, அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இது தொடர்பாக பி.எட். பட்டதாரிகள் சிலர் கூறியதாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதி முறையை சி.பி.எஸ்.இ. அமைப்பு சரியாக பின்பற்றி வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் முதல் சிடெட் தேர்வு கடந்த பிப்ரவரி மாதமும், 2-வது தேர்வு கடந்த செப்டம்பர் மாதமும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டுக்கான (2016) தேர்வு தேதிகளும் அறிவிக்கப் பட்டு விட்டன.

மீண்டும் நடத்த வேண்டும் 

இந்த நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்பட வில்லை. சிறப்பு தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. இதனால் பி.எட். படிப்பு மற்றும் இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித்தேர்வை மீண்டும் நடத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக