யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/15

கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் கரூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ம. வீ. செந்தில்குமார் மீது நடவடிக்கை கோரி கரூர்,தாந்தோணி,க.பரமத்தி,அரவக்குறிச்சி,
கிருஷ்ணராயபுரம்,கடவூர்,தோகைமலை,குளித்தலை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தந்த வட்டார நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.
கரூரில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஜ. ஜெயராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்ஏ. இராஜா, பொருளாளர் இரா.
ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் டிச.8 அன்று மாவட்ட அளவில் கரூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதில், செயலாளர் பா. பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக