யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/15

யார் தவறு செய்தாலும் ஆசிரியர்களுக்கு தண்டனையா??? ஆசிரியர் என்றால் ஏளனமா?

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்து வாந்தியெடுத்த 7 மாணவிகளை பள்ளியிலிருந்து நீக்கிய தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மீது நடவடிக்கை 
எடுக்கும் விதமாக கல்வித்துறை
அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் செயல்படுவது மிகவும் வெட்கக்கேடான நிகழ்வாகும்.

மாணவர்களின் மது அருந்தும் பழக்கத்தை நியாயப்படுத்துவதுபோல TVயில் கட்சிக்காரர்களும், சமூக ஆர்வலர் என்ற பெயரில் திரியும் மேதாவிகளின் பேச்சு வெந்த புண்ணில் வேலினைப் பாய்ச்சுவதுபோல உள்ளது.

ஏற்கனவே மனிதர்களில் பெரும்பான்மையோரை குடி நோய்க்கு அடிமையாக்கிவிட்ட அரசாங்கம் தற்போது மாணவர்களையும் இந்த இழிநிலைக்கு அழைத்துச்செல்ல ஆயத்தப்படுத்துவது மிகவும் அபாயகரமான செயலாகும்.

அரசிற்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும், மக்களின் சிந்திக்க திறனற்ற நிலை இரண்டுமே போதும் அவர்களின் ஆட்சியை நடத்துவதற்கு.

இந்தச் சமுதாய சீரழிவை தட்டிக்கேட்க முடியாத நிலையையும் காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி அரசு மிக எளிதாக செய்துகொண்டு வருகிறது.

பள்ளிக்கு மது அருந்திவிட்டு வரும் மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் வேறு என்ன செய்ய வேண்டுமென்பதை ஆணையாக வழங்கிவிட்டு போதுமான பயிற்சியையும் எங்களுக்கு வழங்கிவிட்டால் போதும் அதன்படி மிகச்சிறப்பாக செயல்படுவோம். இப்படி தேவையில்லாமல் மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்து கல்வித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்த மாட்டோம்.

யாரோ குற்றம் செய்ய அதனை மறைப்பதற்கு கடைசியில் பலிகடா நமது ஆசிரிய இனம்தான் கிடைத்ததா?

அரசு மாணவர்களுக்கு நலத்திட்டங்களில் விலையில்லா மதுவையும் சேர்த்து வழங்கிவிட்டால் போதும் இதுபோன்ற தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் போய்விடும். நீங்களும் தொடர்ந்து ஆட்சிசெய்து வரலாம்.

இந்த கொடுஞ்செயலை அரசு இனிமேலாவது தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சமுதாயச் சீரழிவு ஏற்படாமல் இருக்க்கும்.

ஆசிரியர்கள் மீது தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசின் செயல்பாட்டை கண்டித்து ஆசிரிய இனம் ஒட்டுமொத்தமாக போராடினால் மட்டுமே கல்விச்சூழல் இனிதாக அமையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக