யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/15

போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாவட்ட மைய நூலகங்களில் தனி படிப்பகம் உருவாக்கம்: வெளிப் புத்தகங்களை எடுத்து வரவும் அனுமதி

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட அரசு மைய நூலகங்களி லும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்காக தனி படிப்பகம் அமைக்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் 32 மாவட்ட அரசு மைய நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு தினமும் 500 முதல் 800 வாசகர்கள் வருகின்றனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், புத்தகம் படிக்கும் பழக் கத்தை மாணவர்கள், இளைஞர் களிடம் ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 


இதன்படி, நூலகங் கள் நவீனப்படுத்தப்பட்டு கூடுதல் பல்துறை வரலாற்று ஆராய்ச்சி, அறிவியல் புத்தகங்கள் வாங்கப்படு கின்றன.நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் அங்குள்ள புத்தகங்கள், நாளிதழ்களை மட்டுமே நூலகத்தில் அமர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார்கள். வெளியில்இருந்து கொண்டு வரும் புத்தகங்களை நூலகத்துக்குள் வைத்து படிக்க அனுமதியில்லை.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு கள், தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் பிற அரசுத் துறை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு களுக்கு தயாராகும் மாணவர்கள், நூலகங்களில் தங்கள் தேர்வுகள் சம்பந்தமான புத்தகங்களை நூலகரிடம் பெற்று படித்து குறிப் பெடுப்பார்கள். இந்த குறிப்புகளை மற்ற புத்தகங்களுடன் ஒப்பிட்டு படிக்க முடியாது.இந்நிலையில், போட்டித் தேர் வுக்கு தயாராகும் தேர்வர்களுக் கென அமைதியான சூழலில் இடை யூறு இல்லாமல் படிக்க வசதியாக மாவட்ட மைய நூலகங்களில் தனி படிப்பக அறை அமைக்க தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறைமுடிவு செய்துள்ளது.இதுகுறித்து மதுரை மாவட்ட நூலக அதிகாரி சி.ஆர்.ரவீந்திரன் கூறியதாவது:முதல்கட்டமாக சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் அமைந்துள்ள நூலகங்களில் இந்த அறை அமைக்கப்படுகிறது.

அடுத்தகட்டமாக மற்ற நூலகங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்த படிப்பகத்துக்காக 15 முதல் 20 பேர் அமர்ந்து படிக்கும் அளவில் புதிய மேஜை, நாற்காலிகள் வாங்கப்பட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் அறை அமைக்கப்படுகிறது. இந்த அறைகளில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், மாண வர்கள் நூலகம் திறக்கும் நேரத்தில் இருந்து மாலை மூடப்படும் வரை வெளியில் இருந்து கொண்டு வரும் புத்தகங்களைப் படிக்கலாம். இவர்களுக்கு மற்ற வாசகர்களால் எந்த தொந்தரவும் ஏற்படாது.இந்த அறையில் நன்கொடை யாளர்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக