யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/15

உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவு!!!

அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு 
பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கான தேவையை விட அதிகமாக இருக்கும், உபரி ஆசிரியர்களை, விரைவில் பணியிட மாற்றம் செய்ய உள்ளதாக கல்வித்துறையில் தகவல்கள் வெளியாகிஉள்ளன.

தற்போது கல்வி ஆண்டின் பெரும்பாலான வேலை நாட்கள் முடிந்து, அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. ஆனால், நிறைய பாடங்கள் பாக்கி உள்ளதால், சிறப்பு வகுப்பு மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தி, போர்ஷன் முடிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை இடம் மாற்றினால், மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.பல பள்ளிகளிலும் புதிய ஆசிரியர்கள் இடம் மாறும்போது, பாடங்கள் நடத்துவதில் பின்னடைவு ஏற்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக