யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/15

ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு: 15 ஆயிரம் பேர் எழுதினர்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வை 15 ஆயிரம் எழுதினர்.

ஐஏஎஸ்,. ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.


முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற   நிலையில், முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 153 தேர்வு மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதினர்.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 864 பேர் தேர்வை எழுதினர். 1200 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு இன்று தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளிடப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக