யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/15

ஜே.இ.இ., 3ம் கட்ட நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், டிச., 31ம் தேதியுடன் முடிகிறது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - பி.எஸ்., உள்ளிட்ட இன்ஜி., படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எனப்படும் ஜே.இ.இ., தேர்வு எழுத வேண்டும்.

வரும் கல்வி ஆண்டுக்கு, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, எழுத்து தேர்வாக ஏப்., 3; 'ஆன்லைனில்,' ஏப்., 9, 10ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப்பதிவு, jeemain.nic.in என்ற இணைய தளத்தில், டிச., 1ல் துவங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் டிச., 31.
*ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு ஏப்., 27ல் வெளியாகும். இதில் தேர்ச்சி பெறுவோர், ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேரலாம். ஆனால், ஐ.ஐ.டி.,யில் சேர, அடுத்த கட்டமான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும்.
இந்த தேர்வுக்கு, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், ஏப்., 29 முதல் மே, 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வு, மே 22ல், இரு தாள்களாக நடக்கும். இதன் முடிவுகள் ஜூன், 12ல் வெளியாகும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஐ.ஐ.டி., நிறுவனங்களில், இடஒதுக்கீடு செய்து, பி.இ., - பி.டெக்., பாடங்களில் சேர்க்கப்படுவர்.* பி.ஆர்க்., போன்ற வடிவமைப்பு படிக்க விரும்புவோர், மூன்றாம் கட்டமாக, 'ஆர்கிடெக்ட்' திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, ஜூன், 15ல் நடக்கிறது. இதற்கு, ஜே.இ.இ., தேர்வின், இரண்டு கட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், ஜூன், 12 முதல், 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் முடிவு ஜூன், 19ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.'நாட்டா' தேர்வு அறிவிப்பு
ஐ.ஐ.டி., அல்லாமல் மற்ற ஆர்கிடெக்ட் கல்லுாரிகளில் பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், இந்திய ஆர்கிடெக் கவுன்சில் நடத்தும் தேசிய ஆர்கிடெக் திறனறி தேர்வான, 'நாட்டா' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஏப்., 1ல் நடக்கும்; ஜன., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக