யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/15

"தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது'

மாணவ, மாணவிகளுக்காக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் தெரிவித்தார்.
 கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 46 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் பேசியது:  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா பாடப்புத்தகம், கல்வி உபகரணங்கள், விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மணிமுருகேசன், மூர்த்தி, குயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக