யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/16

வங்கிகள் 3 நாட்கள் இயங்காது: வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜன.8) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன?

வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

சட்டத்துக்கு முரணாக...:

கடந்த ஆண்டு மே மாதத்தில் அனைத்து வங்கிகளுக்கும் புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது.ஆனால் ஒப்பந்த ஷரத்துகளை மீறி பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான,"ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்',"ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்', "ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா' ஆகிய 5 வங்கிகளின் நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை வாபஸ் பெறக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று வெங்கடாசலம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக