யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/8/16

TNPSC:குரூப்-2 மெயின் தேர்வுக்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர்,வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. 
இத்தேர்வை 6 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே 21-ம் தேதி அன்று வெளியிடப்பட்டன.இந்தநிலையில், அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஆகஸ்டு 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறவுள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக