யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/16

அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!

மத்திய அரசின் வருமானவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும்முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர்1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராகநியமிக்கப்பட்டார்.பின், 2008 ல் பணி நிரந்தரம்செய்யப்பட்டு, 2015 மே மாதம் ஓய்வுபெற்றார். அப்போது, அவரது பணப்பலனில் 60 சதவீதம்
வழங்கப்பட்டது. மீத தொகையை (ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து33) ஓய்வூதியத்திற்காக எல்.ஐ.சி., 'ஜீவன் அக் ஷயா -6' திட்டத்தில்டிபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, எல்.ஐ.சி., சார்பில் அந்த ஊழியருக்கு பத்திரம்கொடுத்துள்ளனர். அதில், 'டிபாசிட் செய்யப்பட்டபணத்திற்கு மாத ஓய்வூதியமாக ரூ.770 வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதியோர்ஓய்வூதியம் பெறும் ஆதரவற்றவர்களுக்கு, மாதம்ரூ.1,000 வழங்கப்படுகிறது; ஆனால், மத்திய அரசின்வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு, மாத ஓய்வூதியம் ரூ.770 தான் கிடைக்கிறது.

திண்டுக்கல்லைசேர்ந்த ஏங்கல்ஸ் கூறியதாவது: மத்திய அரசில் 25 ஆண்டுகளாகபணிபுரிந்து, ஒரு லட்சத்து 33 ஆயிரத்தைடிபாசிட் செய்தவருக்கு, மாதம் ரூ.770 தான்என்பது வேதனைக்கு உரியது. இந்தத் தொகையும், 20 ஆண்டுகள் ஆனாலும் உயரப்போவது இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழையதிட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக