யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/16

அரசு ஊழியர்களுக்கு உரிமைகளும், ஊதியமும் தருவதில் குழப்பம் ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தீபஒளிதிருநாளையொட்டி அரசு ஊழியர்களுக்கான அக்டோபர்மாத ஊதியம் 28-ஆம் தேதி வழங்கப்படும்என அறிவித்த தமிழக அரசு, சிறிது
நேரத்தில் அதை திரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கதுஎன பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகஅரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு தடுமாற்றத்தில்உள்ளன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அரசு ஊழியர்களுக்கானஊதியத்தை முன்கூட்டியே வழங்குவதில் நிகழ்ந்த குழப்பங்கள் தான். தீபஒளி திருநாளையொட்டிஅரசு ஊழியர்களுக்கான அக்டோபர் மாத ஊதியம் 28-ஆம்தேதி வழங்கப்படும் என அறிவித்த தமிழகஅரசு, சிறிது நேரத்தில் அதைதிரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கது.

நடப்பாண்டிற்கானதீபஒளி திருநாள் இம்மாத இறுதியில் 29-ஆம்தேதி வருவதால், அதைக் கொண்டாட வசதியாகஇம்மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள்பலவும் கோரிக்கை விடுத்திருந்தன. புதுச்சேரியில் தீபஒளி திருநாளையொட்டி நேற்றேஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையேஇக்கோரிக்கை தீவிரமடைந்தது. இந்தக் கோரிக்கையில் உள்ளநியாயத்தை உணர்ந்த தமிழக அரசு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும்  அக்டோபர்மாத ஊதியம் நாளை மறுநாள்28-ஆம் தேதி வழங்கப்படும் எனநேற்று மாலை ஆணை பிறப்பித்தது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தநிலையில் அந்த அரசாணையை ரத்துசெய்த அரசு, ஊழியர்களுக்கு நாளைமறுநாள் ஊதியம் வழங்கப்படாது; வழக்கம்போல மாதக் கடைசி நாளான31-ஆம் தேதி தான் ஊதியம்வழங்கப்படும் என்று புதிய அரசாணையை  வெளியிட்டது.

தமிழக அரசின் இந்தக் குளறுபடியால்அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு ஊதியம் ஈட்டினாலும், மாதத்தின் கடைசி வாரத்தை கடன்வாங்கி கழிப்பது தான் தமிழக அமைப்புசார்ந்த பணியாளர்களில் பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு தான் பாட்டாளி மக்கள்கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதத்திற்கு இருமுறைஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுதேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம்.  தீபஒளிதிருநாளுக்கு  புத்தாடைஎடுத்தல், பட்டாசுகள் மற்றும் இனிப்பு வாங்குதல்மற்றும் பிற செலவுகளுக்காக கூடுதல்பணம் தேவைப்படும் என்பதால் தான் முன்கூட்டியே ஊதியம்தேவை என்ற கோரிக்கை எழுந்தது.

இக்கோரிக்கையைஏற்றுக்கொண்ட தமிழக அரசு, திடீரெனபின்வாங்கியது ஏன் என்பது மர்மமாகவேஉள்ளது. எது எப்படி இருந்தாலும்தமிழக அரசின் இந்த அணுகுமுறைஎந்த வகையிலும் நல்லதல்ல.
ஊதியத்தைமுன்கூட்டியே வழங்க வேண்டும் என்றகோரிக்கை தவறானதோ, நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை. அண்டை மாநிலமானபுதுச்சேரியில் அக்டோபர் ஊதியம் கடந்த 25-ஆம்தேதி வழங்கப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்கும் போதுதமிழகத்தில் இது ஏன் சாத்தியமில்லைஎன்பது தெரியவில்லை. ஒருவேளை சாத்தியமற்றதாக இருந்தால்கூட அதை சாத்தியமாக்குவது தான்நிர்வாகத்தின் பணியாக இருக்க வேண்டுமேதவிர, அறிவித்ததை திரும்பப்பெறுவது அழகல்ல.

இத்தனைக்கும்இதில் பெரிய சலுகை எதுவும்இல்லை. வழக்கத்தை விட ஒரே ஒருவேலை நாள் முன்கூட்டியே ஊதியம்வழங்கினால் போதுமானது. ஒருவேளை தீபஒளி திருநாள்இம்மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்பட்டால்அதற்கு முந்தைய வேளைநாளான 28-ஆம்தேதியே ஊதியம் வழங்கப்பட்டு இருக்கும். அதேபோல், இப்போதும் ஊதியம் வழங்குவதில் எந்தசிக்கலும் இல்லை. ஆனாலும், ஊதியம்வழங்கப்படாததற்கு அரசு ஊழியர்கள் மீதுஆட்சியாளர்களுக்கு உள்ள வெறுப்பு தான்காரணமாகும்.

ஊதியத்தைமுன்கூட்டியே வழங்குவதில் மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் தொழிலாளர்விரோத போக்கைத் தான் தமிழக அரசுகடைபிடித்து வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, நிலுவைத் தொகை ஒரே தவணையில்வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் ஏழாவதுஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, மத்திய அரசு ஊழியருக்குகடந்த ஜூலை முதல் அகவிலைப்படிஉயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாதது செய்யாத தவறுக்கு கிடைத்தஇரட்டை தண்டனையாகும்.


எனவே, அரசு ஊழியர்களின் நலனைக்கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர்ஊதியத்தை  நாளைமறுநாள் வழங்க அரசு முன்வரவேண்டும். அதுமட்டுமின்றி, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை,  அகவிலைப்படிஉயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைசெயல்படுத்துதல் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும்  உடனடியாகநிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”  இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக