யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/16

தேசிய வருவாய் வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடைய மாணவர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் ஜனவரி 28ம் தேதி நடக்கஉள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் நாளை முதல் டிசம்பர் 2ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் டிசம்பர் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுஅனைத்து வட்டார அளவில் மையங்கள் அமைக்கப்பட்டு நடக்கும். இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக