யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/16

பணம் மாற்றுபவர்களுக்கு அடையாள மை: சக்தி காந்ததாஸ் பேட்டி

டெல்லியில்பொருளாளதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களைசந்தித்தார்.

அப்போதுஅவர் கூறியதாவது,

போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்குவருவதை தடுக்க சிறப்பு கண்காணிப்புபடை அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கருப்பு பணம்
டெபாசிட்செய்யப்படுகிறதா என்பது குறித்து வருவாய், அமலாக்கத் துறையால் கண்காணிக்கப்படும். வங்கிகளில் ஒருவரே பலமுறை பணம்எடுக்கும் முயற்சியை தடுக்க விரலில் மைவைக்கப்படும். இணையதளம் மூலமான வங்கி பரிவர்த்தனைகளைபிரபலப்படுத்தும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

மத்தியகூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாகவங்கிகளுக்கு சரியான அளவில் ரொக்கப்பணம் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டு பற்றாக்குறை என்றுசமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள்நம்ப வேண்டாம்.

அனைத்துவகை பண பரிவர்த்தனைகளும் மிகவும்உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜன்தன் கணக்குகளில் 50 ஆயிரம்ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால்ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

வங்கிகளில்பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைதவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்குறித்து ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் நடவடிக்கைக்குஎதிராக சில மக்கள் விரோதசக்திகள் குழப்பதை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.


அத்தியாவசியபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்கிற தகவலில் துளிஅளவு கூட உண்மையில்லை. நாட்டில்போதுமான அளவு உப்பு இருப்புஉள்ளது. பொதுமக்கள் வீண் வதந்தியை நம்பவேண்டாம். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக