யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/16

தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில்தேர்வு நேரத்தில்உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்குஎதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும்உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி ஒவ்வொருஆண்டும் ஆசிரியர்கள்பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டுஆக.,1ல்மாணவர்களின் வருகைப்படி உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைகணக்கிடப்பட்டன.
தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில்மட்டும் உபரிஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது. கல்வியாண்டின் இடையில்பணி நிரவல்செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர்கழக மாவட்டச்செயலாளர் இளங்கோகூறியதாவது: அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்மே மாதம்நடக்கும் கவுன்சிலிங்கில்தான் பணிநிரவல்செய்யப்படுவர். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைதிடீரென தேர்வுசமயத்தில் பணிநிரவல் செய்யஉள்ளனர். கல்வியாண்டின்இடையில் ஆசிரியர்களைமாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அவர்களைதேர்வுகளுக்கு தயார்படுத்த முடியாது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக