யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/16

ஜெ., சொத்துக்கள் யாருக்கு சேரும்

ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அவரது சொத்துக்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, வேட்புதாக்கல் செய்த ஜெயலலிதா, தன் சொத்து விபரங்களை குறிப்பிட்டு இருந்தார். அவரது மொத்த சொத்துமதிப்பு 113.73 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், 41.63 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரநகைகள், 14.7 கோடி ரூபாய் அசையா சொத்து, கொடநாடு எஸ்டேட், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா பப்ளிகேசன்ஸ் உள்ளிட்ட 27 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் 10.63 கோடி ரூபாய் வங்கி டிபாசிட் அடக்கம்.

அவரின் அரசியல் வாரிசு, அநேகமாக முடிவு செய்யப்பட்டு விட்டநிலையில், சொத்துக்களுக்கான வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார், அவர் மகள் தீபா, மகன் தீபக் உள்ளிட்ட உறவினர்கள் உள்ளனர். நேற்றைய இறுதிசடங்குகளை தீபக் தான் செய்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக