யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/16

TNPSC EXAM CERTIFICATE VERIFICATION NEWS:

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 290 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 28ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர் மற்றும் தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இதன் தேர்வுமுடிவுகள் 02.11.2016 அன்று வெளியிடப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண், அவர்களின் இடஒதிக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு SMS மற்றும் E-mail மூலமும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்: 13.12.2016
கலந்தாய்வு நடைபெறும் நாள்: 14.12.2016 முதல் 16.12.2016 
மேலும் விவரங்களுக்கு: http://tnpsc.gov.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக