யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/17

மார்ச் 9ம் தேதி துவங்குகிறது சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு

புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, மார்ச், 9ல் துவங்குகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வில், 26 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தலைவர் ஆர்.கே.சதுர்வேதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல், மார்ச், 8ல், முடிகிறது. அதனால், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, மார்ச், 9ல், துவங்குகிறது. பிளஸ் 2 வுக்கு, ஏப்., 29 வரையும், 10ம் வகுப்புக்கு, ஏப்., 10 வரையும் தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பில், 16.67 லட்சம்; பிளஸ் 2வில், 10.98 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடங்களுக்கும் இடையே, போதிய இடைவெளி வழங்கப்பட்டு உள்ளது. விடை திருத்த பணிகள், கணினி தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதால், தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக