யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/17

பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு

சென்னை: பி.எப்., எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல, பி.எப்., ஆணையர் சலில் சங்கர், வெளியிட்டுள்ள செய்தி: பி.எப்., திட்டத்தின்கீழ், ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, 1.4.2009 முதல், 31.12.2016 வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த ஊழியர்களை, பி.எப்., திட்டத்தில் சேர்த்து கொள்ள முடியும்; இந்த வாய்ப்பு, இம்மாதம், 1ல் துவங்கி, வரும், மார்ச், 31 வரை மட்டுமே அளிக்கப்படும். இதற்காக, நிறுவனத்தின் பங்கு, ஊழியரின் பங்கு, உரிய வட்டியை, விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஊழியருக்கான சம்பளத்தில் பி.எப்., பிடித்தம் செய்யப்படாவிட்டால், அதை செலுத்த வேண்டியதில்லை. மேலும், ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒரு ரூபாய் வீதம், அபராதக் கட்டணத்தையும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை செலுத்தாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விடுபட்ட ஊழியர்களை சேர்ப்பதால், அவர்களுக்கு பி.எப்., திட்டப் பலன்கள் முழுமையாக கிடைப்பதை, நிறுவனங்கள் உறுதி செய்யலாம்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக