யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/4/17

நர்சிங் கல்லூரிகள் அங்கீகாரம்: ஆக.31ல் பட்டியல் வெளியீடு.

நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ள, நர்சிங் கல்லுாரிகளின் பட்டியல், ஆக., 31ல் வெளியிடப் படும்' என, இந்திய நர்சிங் கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., உள்ளிட்ட நர்சிங் சார்ந்த துறையை நடத்த, நடப்பு கல்வியாண்டில், 257 கல்லுாரிகளுக்கு மட்டுமே, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நர்சிங் கல்லுாரிகளை துவக்கவும், புதுப்பிக்கவும், தமிழக அரசு, இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் என, மூன்று தரப்பால் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு கல்லுாரிகள், ஒரு பாடப் பிரிவுக்கு அனுமதி பெற்று, பல்வேறு பாடப் பிரிவுகளை நடத்தி வருவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், அங்கீகாரம் சார்ந்த செயல்பாடுகளை விரைவுபடுத்த, 'ஆன்லைன்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அங்கீகாரம் புதுப்பிக்க, கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், ஏப்., 21 வரை கால அவகாசம் நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஆன்லைன்' தவிர்த்து, வேறு முறைகளில், பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லுாரிகளின் பெயர், பாடப்பிரிவு பட்டியல் ஆக., 31ல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்து, நர்சிங் கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள், இப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக