யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/4/17

போலி ஜாதி சான்றிதழில் 'அட்மிஷன்' : இன்ஜி., கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், போலி ஜாதி சான்றிதழ் மூலம், இட ஒதுக்கீடு பெறுவதால், சான்றிதழ்களை ஆய்வு செய்யும்படி, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. 
மே 12ல், தேர்வு முடிவு வெளியாகிறது. இதையடுத்து, அண்ணா பல்கலை நடத்தும் கவுன்சிலிங் மூலமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., - அண்ணா பல்கலை உட்பட, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள

சுற்றறிக்கை: போலி ஜாதி சான்றிதழ் அடிப்படையில், இட ஒதுக்கீடு பெற்று, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்வதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, இன்ஜினியரிங் படிப்பிற்கான சேர்க்கையின் போது, பல்கலைகளும், இன்ஜி., கல்லுாரிகளும், மாணவர்கள் தரும் ஜாதி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். அவை உண்மையானவையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான், போலி ஜாதி சான்றிதழ்கள் அடிப்படையில், மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேருவது தடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக