யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/7/17

வருங்கால வைப்பு நிதியில் புதிதாக ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் - அமைச்சர் தத்தாத்ரேயா

இந்த ஆண்டு பொதுமன்னிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அது வெற்றியும்
 பெற்றது. புதிதாக இணைந்த உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 5.4 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். வருங்கால வைப்பு நிதி திட்டம் சத்துணவு ஊழியர்களுக்கும் நாடு முழுதும் விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர்.

மேலும் அவர் கூறுகையில் ஊழியர்கள் தங்கள் நிலுவைத் தொகைகளை செலுத்த வசதியாக பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி உட்பட பல வங்கிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை வருங்கால வைப்பு நிதியம் செய்து கொண்டுள்ளது. அதே போல தவணை தொகைகளை வசூலிக்கவும், ஊழியர்களின் சேமிப்பை திரும்ப அளிக்கவும் ஆக்சிஸ் வங்கி, எச் டி எஃப் சி உட்பட பல வங்கிகளை இந்நிறுவனம் கூறியுள்ளது.

சேமிப்புத் தொகையை கையாளும் வங்கிகளுக்கு 1.10 சதவீத நிர்வாக கட்டணமாக செலுத்தப்பட்டு வந்தது. தற்போது அது 65 சதவீதமாக குறைந்துள்ளது.  முன்பு பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.350 கோடியை நிர்வாக செலவினமாக கொடுக்கப்பட்டது. புதிய வங்கிகளை இணைத்ததும் நிர்வாக செலவு ரூ. 140 கோடியாக குறைந்துள்ளது. அடுத்த வருடம் இத்தொகை ரூ 50 கோடியாக குறையும் என்றே எதிர்பார்க்கப்ப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக