யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/7/17

பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள்: பிரணாப்

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க சிரமப்படுவதை தவிர்க்க, பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டும் என ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கல்வித்தரத்தில் வேறுபாடு:

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: நம் நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த முடியும். நம் நாட்டில் கிராம பகுதிகளுக்கும், நகரப் பகுதிகளுக்கும் இடையே கல்வித்தரத்தில் மிகுந்த வேறுபாடு உள்ளது. தவிர மாநிலங்களுக்கு இடையிலும், கல்வி நிலையங்களுக்கும் இடையிலும் கல்வித்தரத்தில் வேறுபாடு உள்ளது.

ஆங்கிலத்தில் கற்க சிரமம்:

பிராந்திய மொழிகளில் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக் கல்வியை பிராந்திய மொழியில் படித்துவிட்டு, உயர் கல்வியை ஆங்கிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனை தவிர்க்க பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக