யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/7/17

ஐஐடி.,யில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!!

நாடு


முழுவதிலும் உள்ள ஐஐடி மற்றும் என்.ஐ.டி.,க்களில் மாணவர்கள் சேர்க்கை
ஐஐடி நுழைவு தேர்வில் இந்தி வினாத்தாளில் பிழை இருந்ததன் காரணமாக சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி பிழையில்லாத வினாத்தாள் கொண்டு ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் இந்த சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த ஐஐடி நிர்வாகம், வினாத்தாளில் பிழை இருப்பது தெரிந்ததும் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இது போன்ற அச்சுப்பிழைகள் இனி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விளக்கத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மாணவர்கள் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், சலுகை மதிப்பெண்ணிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக