யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/7/17

ஒப்புகை சீட்டு முறையால் தேர்தல் முடிவு தாமதமாகும்: தேர்தல் கமிஷன்

தேர்தல்களில் ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் 
வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.
அதில், 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்காக ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நாடு முழுவதும் ஒப்புகைச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டால், தேர்தல் முடிவுகள் வெளியிட 3 மணிநேரம் வரை தாமதமாகலாம். முதல் சுற்று நிலவரங்களை காலை 11 மணிக்கு முன் வெளியிட முடியாது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுக்கள் எண்ணப்படும் போது, ஓட்டு எண்ணிக்கை துவங்கிய அரை மணிநேரத்திற்குள் முதல்கட்ட நிலவரங்கள் தெரிய வந்துவிடும். ஆனால் காகித சிலிப்கள் மூலம் எண்ணப்பட்டால் தேர்தல் முடிவுகளை வெளியிட 3 மணிநேரம் வரை தாமதம் ஆகலாம். இது தோராயணமான தாமத நேரம் மட்டுமே. மனிதர்கள் எண்ணும் போது முதல் சுற்று எண்ணுவதை முடிப்பதற்கே வெகு நேரம் ஆகும் என தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக