யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/1/18

அரசை நம்பும் மக்கள்: இந்தியா 3ஆவது இடம்!!!

அரசு மீது அதிகம் நம்பிக்கை உடைய மக்களைக் கொண்ட நாடுகளின்

பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாக உலக நம்பிக்கைக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. முதலிடத்திலிருந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது.

உலக நம்பிக்கைக் கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 74 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 67 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருந்த சீனா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தோனேசியா 71 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 68 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.,

இந்தியாவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 66 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் , சிங்கப்பூர் 58 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.

பணமதிப்பழிப்பு, மானியம் ரத்து, ஆதார் கட்டாயம், ஜிஎஸ்டி என போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் அரசு மீது அதிகம் நம்பிக்கையுடைய மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக