யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/1/18

சிபிஎஸ்இ மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள்!

மாணவர்களுக்குத் தேவைப்பட்டால், சிபிஎஸ்இ வாரியம் அவர்களுடன் 
தொடர்புகொள்ள வரவேற்கிறது.

தேர்வு முடிந்தபின் வெளியே வரும் மாணவர்கள் கூட்டமாக ஒன்றாக கூடி வினாத்தாள் குறித்து விவாதிப்பார்கள். அதில், சில கேள்விகள் கடினமானதாகவும் சில எளிமையானதாகவும் இருக்கும். குறிப்பாக, ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் பரிந்துரைக்கப்பட்ட பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டவையாக இருக்கும். இப்படி, தங்களுக்குள்ளே பேசி குழப்பம் அடையாமல், சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது அதுகுறித்து சிபிஎஸ்இ வாரியத்திடம் கருத்து கேட்கலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது கேள்வித்தாளில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் அதுகுறித்த கருத்துகளை அனுப்ப அனுமதிப்பதற்கான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதிய 24 மணி நேரத்துக்குள் தங்களது கருத்துகளை அனுப்பலாம்.

இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களுக்கு வழிக்காட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி பிற முக்கிய வழிகாட்டுதல்களையும் கோடிட்டுக்காட்டுகிறது. சுற்றறிக்கையின்படி, மதிப்பீட்டுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆசிரியர் அதற்கு செல்லவில்லை என்றால், அந்தப் பள்ளிக்கூடம் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியத்தால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்நிக்தா ராணி பத்ரா கூறுகையில், “இதற்கு முன்பு, வினாத்தாளில் இருக்கும் பிரச்னை அல்லது பிழைகள் குறித்து தெரிவிப்பதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லை. தற்போது, கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம் எளிதாக நாங்கள் வாரியத்தை அணுக முடியும். விடைத்தாளின் மதிப்பீட்டின்போது அவர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதனால் மாணவர்களில் யாரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை” எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக