யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/1/18

சமூகதளத்தில் போட்டோ போடாதீங்க! விவாகரத்து வழக்கில் உத்தரவு!!!

புதுடில்லி: மஹாராஷ்டிராவில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த, 
கணவன், மனைவிக்கு, விவாகரத்து வழங்கிய உச்ச நீதிமன்றம், எதிர்காலத்தில், தங்களுக்கு இடையிலான புகைப்படங்களை, சமூக வலைதளம் உட்பட எங்கும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இன்ஜினியருக்கும், அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்தனர். இருவரும், ஒருவர் மீது ஒருவர், விவாகரத்து உட்பட பல்வேறு வழக்குகளை தொடுத்தனர். இறுதியில், இவர்களின் விவாகரத்து வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களை முழுமையாக கேட்ட பின், நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மனைவியின் பராமரிப்பு செலவுக்காக, இரண்டு மாதங்களில், 37 லட்சம் ரூபாயை, கணவர் வழங்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில், தங்களுக்கு இடையிலான புகைப்படங்களை, சமூக வலைதளம் உட்பட எந்த இடத்திலும் வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர். இருவரும், பரஸ்பரம் தாக்கல் செய்த புகார் மனுக்கள் அனைத்தையும், நீதிபதிகள் ரத்து செய்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக