யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/4/18

மே 8ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ ஜியோ முடிவு :

கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8 ல் கோட்டையை முற்றுகையிட ஜாக்டோ -ஜியோ முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சென்னையில் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பு உயர்மட்ட குழுக்கூட்டம் நடந்தது. அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8 ல் கோட்டையில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து ஏப்ரல் 23 முதல் 27 ம்தேதி வரை 11 மண்டலங்களில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களை சந்திக்க உள்ளோம். ஏப்ரல் 14 ல் மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அமைக்கப்பட்ட ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர்குழு காலநீட்டிப்பு செய்வதை கண்டிக்கிறோம், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக