யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/18

பள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை :

புயலால் சேதம் அடைந்த, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, அரசு கட்டடங்கள் புனரமைப்பு பணிக்கு, அரசிடம், 35 கோடி ரூபாயை, பொதுப்பணித் துறை கேட்டுள்ளது.
சமீபத்தில் வீசிய, 'கஜா' புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 865 அரசு பள்ளி கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அரசு அலுவலக கட்டடங்கள், ஆய்வு மாளிகை போன்றவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இவற்றை புனரமைக்க, 35 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த நிதியை, அரசிடம் பொதுப்பணித் துறை கேட்டுள்ளது. நிதி கிடைப்பது தாமதமாகி வருவதால், பள்ளிகள், மருத்துவமனைகளை சீரமைப்பதில், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக