யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/9/16

B.Ed முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது. 
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பாடவாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 463 இடங்கள் காலியாகஉள்ளன.

இக்காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் காலியிட விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை எம்.எஸ். தில்லை நாயகி தெரிவித்தார்..

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க மறுத்த முதன்மை கல்வி அலுவலர் (CEO) மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!!!

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பையிஸ் நிரப்பப்பட உள்ள 33 சிறப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO-IT/2016-17/08
பணி: Vice President - 03
பணி: Product Development Manager - 03
பணி: Senior Manager - 03
பணி: Manager - 04
பணி: Assistant Vice President (Servicing) - 01
பணி: Assistant Vice President (Customer Experience) -03
பணி: Assistant Vice President (B2c Market place Acquisition) - 12
பணி: Assistant Vice President (B2b Fulfillment) - 02
பணி: Assistant Vice President (B2C Fulfillment) - 02

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.100. இதனை இணையதள மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:10.09.2016

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

பள்ளி வாகனம் விதிமுறை தளர்வு:தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்

பள்ளி வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக பள்ளிகளின் கருத்து கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது. 
பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. 
தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரதம்


பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்தும்   தங்களது கோரிக்கையை வலியும் தொடர் உண்ணாவிரதம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடத்து வருகிறது. .
சென்னையிலிருந்து நேரடி தகவலுடன்
பி.இராஜலிங்கம் புளியங்குடி 

தமிழக ஆளுனர் மாற்றம்...

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, பொறுப்பு ஆளுநர் அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக ஆளுநராக ரோசய்ய பதவியேற்றுக்கொண்டார். அதையடுத்து, ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பொறுப்பை வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.இதையடுத்து, தமிழகத்துக்கு புதிய ஆளுநரை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் நியமிக்கலாம்.பிரதமர் யாரைக் குறிப்பிடுகிறாரோ அவரைத் தான், மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் அறிவிப்பார். அந்த வகையில் குஜராத் மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் தமிழக ஆளுநர் பதவிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிடவும்; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசுக்கு வலியுறுத்த வரும் செப்டம்பர் 02 பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு


அரியலூர் மாவட்டத்தில் 37 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து,அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன்,உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
உடையார்பாளையம் வட்டத்தில் காலியாக உள்ள 22 பணியிடத்துக்கும்,செந்துறை வட்டத்தில் காலியாக உள்ள 5 பணியிடத்துக்கும்,அரியலூர் வட்டத்தில் காலியாக உள்ள 10பணியிடத்துக்கும்,விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்ட இனத்தவர்கள் மற்றும் அந்தந்த வட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்,அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்,தமிழிலில் எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்திருத்தல் கூடாது,குற்றவியல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவராக இருத்தல் கூடாது,நேர்காணலுக்கு அழைக்கும் போது, நன்னடத்தைச் சான்று,உடற்தகுதிக்கான அரசு மருத்துவரிடம் பெற்ற சான்று,கல்வித்தகுதிக்கான சான்றுதள்,வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதற்கான பதிவு அட்டை ஆகியவை சமர்பிக்க வேண்டும்ஒரு வெள்ளைத்தாளில் பெயர்,முகவரி,கல்வித்தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் போன்ற முழு விபரங்களுடன்பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு நகல் சான்றிதழ்கலை இணைத்து சுய முகவரியிட்ட ரூ.30-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் கூடிய அந்ததந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

31/8/16

TET Case Status : Listed on 13/09/2016



PDT GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

பணிக்கொடை(தமிழ்நாடு அரசு)
பணிக்கொடைஎன்பது அரசு/அரசு சார்ந்தஊழியர் அல்லது ஆசிரியர் பணிஓய்வின் போது அல்லது பணியில்இருக்கும் போதே காலமான போதுஅவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை
பாராட்டும் விதமாகவழங்கும் ஒரு ஒட்டு மொத்தத்தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்றஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].

அரசு& அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடைகணக்கீடு முறை தொகு

பணி ஓய்வின் போது பணிக்கொடைகணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாகவழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம்ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]

இறுதியாகவழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn) தொகு
அரசு மற்றும் அரசு சார்ந்தஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படைஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்புஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி(Dearness Allowance) ஆகியவற்றின்கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

பணிக்காலம்கணக்கிடுதல் தொகு
ஓய்வு(Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில்இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமேபணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள்9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால்33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள்5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள்மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

பணிக்கொடைகணக்கீடு தொகு
மொத்தப்பணி செய்த ஆண்டிற்கு அரைமாத ஊதியம் வீதம், குறைந்தபட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாதஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்புரூபாய் 10 இலட்சம்.

பணிக்கொடைவருவாய்க்கு வருமான வரி சட்டம்10 (10)-இன் கீழ் வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குபணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல்பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டியதொகைகள் நிலுவை இருப்பின், அதனைபணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

DINDIGUL DISTRICT-1st TERM EXAM TIME TABLE 2016 SEPTEMBER-CLASS-6,7,8,9,&11

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 ஆண்டு போனஸ்: அருண் ஜெட்லி அறிவிப்பு

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டு போனஸ் விரைவில்வழங்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்மேலும் குறைந்த பட்ச ஊதியம்அதிகரிக்கப்படும்
என்றும் கூறினார்.

12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 2-ம்தேதி முதல் (வெள்ளிக்கிழமை) நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதில் மத்திய அரசு பணியாளர்கள்33 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றுகூறப்பட்டது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர்அருண்ஜெட்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘7வது ஊதிய கமிஷனின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில்உள்ள 2014-15 மற்றும் 2015-2016ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட2 ஆண்டு போனஸ் வழங்கப்படும்’ என்றார். இதனிடையே அரசு வழங்கும் திருத்தியமைக்கப்பட்டபோனஸ் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.1,920 கோடி செலவாகும் என்றுகூறப்படுகிறது.


இதினிடையேவிவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.246 லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டும் என்றநிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஜெட்லி; ‘விவசாயம்சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாகரூ.350 என நிர்ணயம் செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

INSPIRE AWARD 2016 - "ONLINE" - இல் பதிவிடும்முறை - வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

NHIS -2016-ANNEXURE 7 FORM

தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்

 பத்தாம்வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுதேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்குமத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும்,
கல்வி உதவி வழங்கி வருகிறது.


இந்த தேர்வு, மாநில மற்றும்தேசிய அளவில் இரண்டு கட்டங்களாகநடக்கிறது. மாநில அளவிலான தேர்வு, நவ., 6ம் தேதி நடக்கும்என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., அறிவித்தது. தமிழகஅரசு தேர்வுத் துறை, இதற்கான அறிவிப்பை, சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. தற்போது, தமிழகத்தில் தேர்வு தேதி மாற்றப்பட்டுஉள்ளது. 'நவ., 6ம் தேதி, தமிழகத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 4 தேர்வு நடப்பதால், தேசியதிறனாய்வு தேர்வு, நவ., 5ம்தேதி நடத்தப்படும்; இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., அனுமதி பெறப்பட்டு உள்ளது' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு.பெயர் சேர்க்க ஒரு மாத அவகாசம்

வாக்காளர்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும்வரும் 1 ஆம் தேதி விண்ணப்பங்களைஅளிக்கலாம்.        வாக்காளர்பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரிமாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாகஇப்போது புழக்கத்தில் உள்ள
வாக்காளர் பட்டியல்பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப். 1) முதல் வைக்கப்படுகிறது.        

  இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரிராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்டஅறிவிப்பு:           அடுத்தஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வாக்காளர்புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால்மட்டும் தேர்தலில் வாக்களிக்க இயலாது. வாக்காளர் பட்டியலிலும்பெயர் இருப்பது அவசியம்.  

எனவே, பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதில்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்புஅளிக்கப்படுகிறது. இதற்கென இப்போது நடைமுறையில்உள்ள வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியலாகவெளியிடப்படும்.

அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.     சிறப்புமுகாம்கள்: வரைவு வாக்காளர் பட்டியலைதலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில்(www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டுபெயர்கள் சரிபார்க்கப்படும்.     

இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவுஅதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்குவைக்கப்படும்.electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்கலைத்தேடிக் கண்டுபிடிக்கலாம்.    


வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர்30 ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும்சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானிதெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பணி - 206 பேரின் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ள, உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த, 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.பள்ளிக்கல்வித் துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது; 
விண்ணப்பப் பதிவு, ஜூலை, 30ல் முடிந்தது. பரிசீலனையில், 194 பேரின் விண்ணப்பங்கள், தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டு உள்ளன.

இதில், 57 வயது வரையுள்ளோர்விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர், ஓய்வு பெறும், 58 வயதில் விண்ணப்பித்துஉள்ளார். இதேபோல், அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவிப் பேராசிரியர் பணிக்கு, ஆக., 17 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன; வரும், 7ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது. இந்த பதவிக்கு, ஏற்கனவே, 2014ல் முதற்கட்ட அறிவிப்பு வெளியான போது பலர் விண்ணப்பித்தனர். அவர்களில், 12 பேர் உட்பட மொத்தம், 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இந்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி.

சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார். ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. 
இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார். அங்கு செல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல் உத்தரவை ரத்துசெய்ய கோரி வந்தார்.இந்த நிலையில், நேற்று, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து., தன் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லை என, அதிகாரிகள் கூறிய நிலையில், அங்கேயே, தர்ணா நடத்த முயன்றார்.

போலீசார் சமாதானப்படுத்தி, அவரை அனுப்பி வைத்தனர். பின், கழிப்பறை சென்று வந்த அவர், மாடிப்படிஅருகில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அதில், பணி மாறுதலை ரத்து செய்யாததால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக, தனலட்சுமி தெரிவித்தார். இது குறித்து,போலீசார் விசாரிக்கின்றனர்.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ''பணி நிரவல் பட்டியல், ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அதில் குறைபாடு இருப்பின் தெரிவிக்கலாம் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 100 சதவீதம், முறையாக பணி நிரவல் நடந்த நிலையில், தற்போது, அதை ரத்து செய்வது சாத்தியமில்லை,'' என்றார்.