யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/9/16

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்தபணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில்வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை
தவிர்க்கும் வகையில்சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது.
அதன்படிவாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 1 ல் மாநிலஅரசு பணியில் உதவியாளர் தகுதிஅல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்குகுறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல்அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள்சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர்தகுதி அல்லது அவர்கள் சம்பளவிகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்கவேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களைநியமிக்க கூடாது.

அரசியல்சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தையதேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்தகூடாது. அதிக வாக்காளர்கள் அல்லதுபர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள்நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம்காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண்வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஒரே வாக்குச்சாவடியில்ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள்நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால்வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமேநியமிக்க வேண்டும். இவ்வாறு மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

   அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகைசெய்யும் மகப்பேறு மசோதா இன்று
ராஜ்யசபாவில்ஒருமனதாக நிறைவேறியது.

  தனியார் நிறுவனங்கள் உள்படஅனைத்துத் துறைகளிலும்  பணியாற்றும்பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 3 மாத மகப்பேறுவிடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறுஆதாய சட்டத் திருத்த மசோதாஇன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி,அனைத்துத்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு காலவிடுப்பு கிடைக்கும்
50க்கும்மேற்பட்ட ஊழியர் பணியாற்றும் நிறுவனத்தில்குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்பச்சிளம்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு கிடைக்கும்

மசோதா நிறைவேறியதால் 10.80 லட்சம் பேர் பயன்பெறுவர்.

வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!

 பிரபல இணைய தேடுபொறிநிறுவனமான கூகுள் 'அல்லோ என்றபெயரில் புதிய செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

          கூகுள் நிறுவனம் இந்தஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவைவசதி செயலி மற்றும் 'அல்லோ' எனப்படும்
செய்தி பரிமாற்ற செயலிஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது.  

அதைத் தொடர்ந்து கடந்த மாதம்  'டியூ' சேவை முறைப்படிஅறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் பத்துலட்சம் பேர் அதனை தங்கள்அலைபேசிகளில்  பதிவிறக்கம்செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள்தற்போது 'அல்லோ செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 'அல்லோ செய்தி பரிமாற்றசெயலியானது உள்ளிணைந்த கூகுள் தேடுபொறி வசதியுடன்வெளிவருகிறது. இதன் காரணமாக ஏதாவதுஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக உரையாடல் செயலியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய அவசியம்இல்லை. கூகுள் உதவு ஒருங்கிணைப்புவசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள்  கணக்கை இத்துடன் இணைத்துக்கொள்ளலாம்.
இத்துடன்இதில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவதற்குஏதுவான 'எமோஜிகள் . மற்றும் 'ஸ்டிக்கர்களும்' இடம் பெற்றுள்ளன.
ஆனால் வாட்சப்பில் இடம் பெற்றுள்ள கோப்புகள்  பரிமாற்றம்மற்றும் குரல்வழி  அழைப்புவசதி போன்ற வசதிகள் தற்போதுஇந்த செயலியில் இடம் பெறவில்லை. ஆனால்வெகுவிரைவில் குரல்வழி  அழைப்புவசதி 'அல்லோ ' செயலியில் இடம்பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.


நன்றி: தினமணி

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம்நேற்று நடந்தது.

சென்னை கல்லூரிச் சாலையில்உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில்நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில்அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்விஅலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்ககல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறைஇயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள்கலந்து கொண்டனர். 


நடப்புகல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில்செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்துசெயலாளர் சபிதா விளக்கினார். மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும்விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவமாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாகவழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன்நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும்கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும்உத்தரவிட்டார்.

பிறந்த குழந்தைக்கும் இனி ஆதார் அட்டை!

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

அரசூழியர்களைப்பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும்மாநில அரசு ஊழியர்களென இரண்டுவகையினர் இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநிலஅரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவைஎன்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வதுகட்டாயமாகும்.
ந.க எண் = நடப்புக்கணக்கு எண்

ஓ.மு. எண் = ஓராண்டுமுடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டுமுடிவு எண்
நி.மு. எண் = நிரந்தரமுடிவு எண்
ப.மு. எண் = பத்தாண்டுமுடிவு எண்
தொ.மு எண் = தொகுப்புமுடிவு எண்
ப.வெ எண் = பருவவெளியீடு எண்
நே.மு.க எண்= நேர்முகக் கடித எண்
இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமேஅதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்டஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கானபதிலை விரைந்து சொல்லவேண்டும்.

இவ்வெண்களில்எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமைதவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது.

21/9/16

IAS தேர்வு என்றால் என்ன ?



IAS மற்றும் IPS உள்ளிட்ட 
24 பணிகளுக்காக 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

F.A.Q
IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?
குறைந்தபட்ச வயது : 
21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர் 
(GENERAL) : 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?
பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?
சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு
ஆளுமை அதிகாரம்
பெருமதிப்பிற்குரிய பணி
சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை
மேலும் பல…..

IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?
இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?
முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?
இல்லை.
ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.
என்னால் முடியுமா ?
கண்டிப்பாக முடியும்.
இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.
ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.
உண்மையான போட்டியாளர்கள் 
என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,
தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?
தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?
இல்லை.
IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.
அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?
முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?
IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.
அது ஓர் போட்டித் தேர்வு.
ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?
முற்றிலும் தவறான கருத்து.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?
இல்லை.
அப்படி எதுவும் இல்லை.. 
நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.
அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்
தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்
வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்
சரியான திட்டமிடல்
திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்
மாதிரித் தேர்வுகள் எழுதுதல்
சரியான வழிகாட்டல்
இறுதியாக முழு நம்பிக்கையோடுj இருத்தல்
இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் 
ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
இளைஞர்களுக்கு உற்சாகப் படுத்துங்கள். 
நமது ஊரில் IAS. IPS. போன்ற வேலைக்கு நமது சமுதாய இளைய தலைமுறை ஆர்வம் கொள்ள செய்வோம்.

சத்துணவுக்கான பயறு வகைகள் தரமானதாக வழங்க கோரிக்கை

தரமான பயறு வகைகளை, வாணிபக் கழகம் சப்ளை செய்ய வேண்டும்' என, சத்துணவு மைய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள், வேக வைத்த கருப்பு கொண்டை கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது.
இதற்காக, ஏழு கோடி ரூபாய்க்கு, 700 டன் கருப்பு கொண்டை கடலை; மூன்று கோடி ரூபாய்க்கு, 400 டன் பச்சை பயறு வாங்க, வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. அதை, தரமானதாக வாங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சத்துணவு மைய ஊழியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, வேக வைத்த பயறு வகைகளை வழங்க வேண்டும்; இதற்காக, அரசு வழங்கும் பயறு வகைகளின் தரம் மோசமாக உள்ளது. வாணிபக் கழக அதிகாரிகளிடம், பலமுறை தெரிவித்தும், தீர்வு கிடைக்கவில்லை. இந்த முறையாவது, தரமான பயறு வாங்கி சப்ளை செய்ய, புதிதாக பொறுப்பேற்றுள்ள, வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் கோபால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை

அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள எச்சரிக்கை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 'நீட்' எனும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு உள்ளது; இதில் எடுத்த மதிப்பெண்படி, மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், யு.ஜி.சி., யின் விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த பல்கலைகள், அந்தந்த மாநில பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். பொது கவுன்சிலிங் நடத்தப்படாவிட்டால், 'நீட்' தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்களை சேர்க்க வேண்டும்; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' மறுக்கப்பட்டால், பல்கலை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பி.எட்., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

சென்னை: பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை, செப்., 16ல் முடிக்க, தனியார் கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது.

'சேர்க்கையை திடீரென நிறுத்துவதால், பல ஆயிரம் இடங்கள் காலியாகும்' என, கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. உயர் கல்வி அதிகாரி கள் அவசர ஆலோசனை நடத்தி, தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்துள்ளனர்.'செப்., 30க்கு பின், மாணவர்களை சேர்த்தால், அதற்கு அங்கீகாரம் கிடைக்காது' என, பல்கலை பதிவாளர் தெரிவித்து உள்ளார்.

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன; 6,500 பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்; மற்றவை தனியார் பள்ளிகள். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 11.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, 36 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், மத்திய அரசின் சட்டப்படி, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் வீதம், 33 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றுகின்றனர். அதிலும், குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும், இத்தகையை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரத்தில், பல மாவட்டங்களில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
எனவே, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், இந்த பள்ளிகளை ஆய்வு செய்து, கூடுதல் ஆசிரியர்களை, தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!

மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.


ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்

பள்ளிகள் மற்றும் மாணவர்களின் மீது தனி அக்கறை, ஆர்வம், நேரம் கருதாமல் பணியாற்றுவது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களால் மட்டுமே, சில ஊராட்சிப் பள்ளிகள் &'பெயர் சொல்லும்&' பள்ளிகளாக உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு காண்பிக்கவே, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்; வெறுமனே &'ஓபி&' அடித்தும் செல்கின்றனர்.ஊராட்சி ஒன்றிய, அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே செய்து வரும் நிலையில், அவர்களதுசெயல்பாடுகளிலும் திருப்தியில்லை என்ற புகார், அரசின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

வருகிறது கண்காணிப்பு குழு

இதன் விளைவாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நர்சரி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்களை உள்ளடக்கி குழு அமைக்க, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஒரு குழுவில், இரு உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்துக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, பள்ளிகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிகள், கல்வித் தரத்தில்பின்தங்கிய பள்ளிகளை கண்காணிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பணிகள் வரையறை

ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்கு வந்து, பணி நேரம் முழுக்க பள்ளிகளில் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து சோதித்தறிய வேண்டும். குறிப்பாக, 6, 8 படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கில, கணக்குப் புலமையை பரிசோதிக்க வேண்டும்.

பள்ளி நுாலக செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களை, துணைப்பாட புத்தகங்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுப்புத்தகம், காலனி, புத்தகப்பை, கிரையான், கலர் பென்சில், கணக்கு உபகரணப் பெட்டி,கம்பளிச் சட்டை, பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த சிடிக்கள், லேப்டாப் மற்றும் கணக்கு உபகரணப் பெட்டி போன்றவை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பள்ளியில் உள்ள கழிப்பறை, தண்ணீர் வசதி; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும் என்பன, போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஆய்வில் குறை தென்பட்டால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், துவக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் உயருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !

 மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன.
.
பிரதமர் மோடி நாடு முழுவதும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதுமிருந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக நாடு முழுவதுமிருந்து 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 3-வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.
இந்த பட்டியல் குறித்து மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில் ''3-வது ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு இந்தியா முழுவதுமிருந்து 63 நகரங்கள் போட்டியிட்டதில் 27 நகரங்கள் தேர்வாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து வேலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.66,833 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.
தானே, நாசிக், நாக்பூர், அவுரங்காபாத், ஆக்ரா, அஜ்மீர், அமிர்தசரஸ், மங்களூர், வதோதரா, வாரணாசி, திருப்பதி, மங்களூர், அமிர்தசரஸ் நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன.

50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' :தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

தேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். மேலும் பலருக்கு 'மெமோ' வழங்கியுள்ள இவரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மொக்கத்துரை ஆக., 2ல் பொறுப்பேற்றார். பள்ளிகளுக்கு திடீர்,'விசிட்' செய்வது; ஆசிரியர்கள் குறித்து வரும் புகார்கள் மீது விசாரித்து, 'மெமோ' கொடுப்பது; பாலியல் புகாருக்கு உட்பட்டவர்களை உடனே, 'சஸ்பெண்ட்' செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

உரிய நேரத்தில் பள்ளிக்கு வராத மேலப்பட்டி ஆசிரியர் ராஜேந்திரன், ஆண்டிபட்டி குமரகுருபரன், கம்பத்தை சேர்ந்த ராஜன்; பாலியல் புகாரில், ஜி.கல்லுப்பட்டி லாசர், கடமலைக்குண்டு கோகுல்பாண்டியன் மற்றும் ரவீந்திரன் என, ஆறு ஆசிரியர்கள் இவரால்,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, 13 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' அனுப்பி உள்ளார்.

அங்கீகாரம் பெறாத 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலர் ஆஜராக உத்தரவு.

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட கடைபிடிக்காத நிலையில், 2004-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாற்காலிக அங்கீகாரத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மே 31-ஆம் தேதி வரை ஒரே ஒரு முறை என்ற அடிப்படையில் தாற்காலிக அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளது என்றும், இனி நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்றும் தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், தகுதிகளை பூர்த்தி செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரத்தை நீட்டிக்காமல் மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பள்ளிகள் குறித்து மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், மீண்டும் அதே அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலர் கே.ரவிசந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில், "சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றதால், இந்த விவகாரத்தில் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் மீது இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. இறுதி முடிவு எடுக்க மேலும் 2 மாதம் கால அவகாசம் வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

பின்னர்இரு தரப்பு வாதங்களை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-வழக்கில் இதுவரை ஒரு முடிவு எட்டப்படாமல் தொடர்கிறது.அரசு சார்பில் கோரியதால், அக்டோபர் 31-ஆம் தேதி வரை இறுதி கால அவகாசம் அளிக்கப்படுகிறது.அடுத்த விசாரணையின்போது, எடுக்கப்பட்ட நடவடிக்கையை உரிய ஆவணங்களுடன் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றனர்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 7-க்கு ஒத்தி வைத்திவைக்கப்பட்டது.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,500 பேராசிரியர் இடங்கள் காலி.

அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன. தமிழகத்தில், 80 அரசு கல்லுாரிகளும், 162 அரசு உதவிபெறும் கல்லுாரிகளும், 1,178 சுயநிதி கல்லுாரிகளும் உள்ளன. இவற்றில், இரண்டு லட்சம் பேர் படிக்கின்றனர். 
அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள், இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன.அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் தலையீடுகளால், நேர்மையாக இந்த இடங்களை நிரப்ப முடியவில்லை என, கல்லுாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன. இதனால், பல கல்லுாரிகளில், பாடம் நடத்த ஆளின்றி வகுப்புகள் முடங்கி, மாணவர்கள் நேரத்தை வீணடிக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழக உயர் கல்வித் துறை தாமதிக்காமல், பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, 'நெட், செட்' சங்க தலைவர் தங்கமுனியாண்டி கூறியதாவது: ஒவ்வொரு கல்லுாரியும், அந்தந்த மாவட்டங்களில் அறிவிப்பு செய்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரை, பேராசிரியர் பதவியில் நியமிக்க வேண்டும்.பல லட்சம் பேராசிரியர்கள், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்; அவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில், பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை' வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனிடம், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர், சாமி.சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், நேற்று அமைச்சரை சந்தித்து, மனு அளித்தனர்.மனு விபரம்:

 தமிழக மாணவர்கள், உயர்கல்வியில் அனைத்து வாய்ப்புகளையும் பெற, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும். அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும், வகுப்புகள் முறையாக நடக்கிறதா என்பதை, தனி அதிகாரிகள்நியமித்து, கண்காணிக்க வேண்டும். அரசு நலத்திட்ட பணிகளில், ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுவதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன. எனவே, 10 பள்ளிகளுக்கு, ஒரு தொடர்பு அலுவலர் நியமித்து, நலத் திட்ட பணிகளை ஒப்படைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 4,250 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி வசதி இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, வை - பை வசதியுடன் கூடிய கணினி மற்றும் இணையதள வகுப்புகள் துவங்க வேண்டும். அரசு பள்ளிகளை சிறப்பாக செயல்பட வைப்பதுடன், வருங்காலத்தில் புதிதாகதனியார் பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.
கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஏதேனும் காரணங்களுக்காக பணி ஓய்வு பெறலாம். அப்போது அந்த ஊழியர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாகப் பணி புரிந்திருந்தால் வருமான வரி சட்டத்தின் படி நிறுவனம் கிராஜுவிட்டி அளிக்க வேண்டும்.அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது ஊழியர்களுக்கு அவரின் பணியை பாராட்டும் விதமாகஒரு ஒட்டுமொத்த தொகையை கிராஜூவிட்டியாக வழங்கப்படும்.இதுவரை பணி செய்த மொத்த ஆண்டிற்கும் அரை மாத ஊதியம் விதம் எனக் குறைந்தபட்சம் இரண்டரை மாத ஊதியம் முதல் அதிகபட்சமாக பதினாறரை மாத ஊதியம் கிராஜுவிட்டியாக வழங்கப்படும்.

இந்த கிராஜுவிட்டி தொகையின் அதிகபட்ச வரம்பாக ரூ.10லட்சம் என்று இருந்தது. இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி 20 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பணியில் சேர்ந்த ஓர் ஆண்டில் காலமான ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச பணிக்காலம் கணக்கிடப்படாமல் இரண்டு மாத சம்பளமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டிற்குள் இறந்தால் 6 மாத சம்பளமும், 5 முதல் 20 ஆண்டு பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத சம்பளமும், 20 வருடத்திற்கும் மேலாகப் பணியில் இருந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு அரை மாத சம்பளமும் கணக்கிடப்பட்டு கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ள நிலையில் இந்தத் தொகையை எப்படி முதலீடு செய்து தொடர்ந்து வருமானம் பெறலாம் என்பதை நாம் இங்குப் பார்ப்போம்

B.Ed. படிப்பு: உயர்த்தப்பட்ட கட்டணம் – தவிக்கும் பெற்றோர்!

தனியார் கல்லூரிகளுக்கான பி.எட். படிப்புக்குப் புதிய கல்விக் கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய கட்டண நிர்ணயத்தால் மாணவர்கள் கடந்த ஆண்டு செலுத்தியதைவிட கூடுதல்கட்டணம் செலுத்த வேண்டும்.
பி.எட். கல்லூரிகளுக்கு, கடந்த 2014 - 15 வரை மூன்று கல்வி ஆண்டுகளுக்கும் நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு சார்பில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆனால், இப்போது இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எட். படிப்புக்கு, ரூபாய் 37,500 ஆகவும், பி.ஏ. - பி.எட். நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு ரூபாய் 22,500 ஆகவும், பி.எஸ்சி. - பி.எட். நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு ரூபாய் 25,000 ஆகவும் மற்றும் எம்.எட். படிப்புக்கு ரூபாய் 38,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஓர் ஆண்டுகான கல்விக்கட்டணம். மேலும், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன், பி.எட். படிப்புக்கு ரூபாய் 41,500 ஆக கல்விக் கட்டணம் இருந்தது. அப்போது பி.எட். படிப்பு ஓராண்டாக இருந்தது. எனவே, அந்தக் கட்டணத்தில் படிப்பை முடித்து விடலாம். ஆனால், இப்போது பி.எட். படிப்பு, இரண்டாண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.இதனால், 2015 – 16ஆம் ஆண்டு பி.எட். படிப்பில் சேர்ந்தவர்கள் முதலாம் ஆண்டு ரூபாய் 41,500 செலுத்தி உள்ளனர். இந்த ஆண்டு, ரூபாய் 37,500 செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டு படிப்புக்கு மொத்தமாக ரூபாய் 79,000 செலவிடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, ரூபாய் 75,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, விடுதிக் கட்டணம் தனி என்பதால்ஏழை மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து, அரசும் உயர் கல்வித்துறையும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா?

வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, ஊரக உள்ளாட்சி தேர்தலை, இரு கட்டங்களாக நடத்த வேண்டும்' என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்பு கள் செயல்படுகின்றன.
ஊரக உள்ளாட்சியில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் நான்கு ஓட்டுகளை அளித்து, பிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. நகர்ப்புற வாக்காளர்கள், ஒரு ஓட்டு போட்டால் போதும் என்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படும். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே, கட்சி ரீதியான தேர்தல் நடக்கும். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, சுயேச்சை சின்னங்கள் தான். நான்கு ஓட்டுகளை பதிவு செய்யும் போது, வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை ஒரு நாளும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்டகவுன்சிலர் பதவிகளுக் கான தேர்தலை மற்றொரு நாளும் நடத்த வேண்டும் என, சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, தேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த, 183 கோடி ரூபாயை அரசுஒதுக்கி உள்ளது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கான நேரடி தேர்தல் ரத்தால், அரசு ஒதுக்கிய நிதி மிச்சமாகும். எஞ்சிய நிதியை பயன்படுத்தி, ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த வேண்டும்; அப்படி செய்தால், சின்னங்கள் தொடர்பான குழப்பம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்