யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/17

கூகுள் நிறுவனத்திடம் வேலை கேட்ட 7 வயதுச் சிறுமி !!

இன்றைய காலத்தில் குழந்தைகள் சிறந்த முறையில் செயல்படுகிறார்கள். அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. தற்போது வளரும் குழந்தைகள் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றனர். அதுபோல, இந்தச் சிறுமியின் செயலும் கூகுள் நிறுவனத்தை வியக்கவைத்துள்ளது.



இங்கிலாந்து ஹேரிபோர்ட் பகுதியைச் சேர்ந்த ச்லோ (7) என்ற சிறுமி, கூகுள் நிறுவனத்திடம் வேலைகேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் டியர் கூகுள் பாஸ், எனது பெயர் ச்லோ. கூகுள் நிறுவனத்தில் வேலைசெய்ய விரும்புகிறேன். மேலும் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் பங்கேற்க வேண்டும். அதற்காக நான் சனி மற்று ஞாயிற்றுக்கிழமைகளில் நீச்சல் பயிற்சிக்குச் செல்கிறேன்.

கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும்போது பீன்ஸ் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம். அங்கு வேலை பார்ப்பது விளையாடுவதுபோல் இருக்கும் என்று எனது தந்தை கூறியுள்ளார்.



நான் என்னுடைய வகுப்பில் சிறந்த மாணவியாக இருக்கிறேன் என்று, எனது ஆசிரியர்கள் என் தந்தையிடம் கூறியிருக்கிறார்கள். நான் மடிக்கணினியில் ரோபோட் கேம் விளையாடுவேன். எனக்கு கணினி என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் கணினி பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்வேன். கூகுள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் உங்கள் முகவரிக்கு என்னைப் பற்றிய குறிப்புகளை இணையத்தில் அனுப்ப வேண்டும் என்று அப்பா கூறியுள்ளார்

இவ்வாறு ச்லோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி. நீ தொழில்நுட்பம் குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உன்னுடைய கனவுகள் நனவாக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி புத்தகம் விநியோகம்!

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்து, வெளியிடும் புத்தகங்கள் மத்திய கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ) இணைந்துள்ள பள்ளிகளுக்கு வருகிற 2017-2018ஆம் கல்வியாண்டில் கட்டாயமாக்கப்படவுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட பள்ளிகள், வாரியத்தின் வலைதளத்தில் அதற்குரிய

மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சடித்து விநியோகம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், பாடத்திட்டம் ஒரே சீரானதாக இருக்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. அதாவது, டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை வேறுபடுத்திக்காட்ட ஒரு பூனையை வைத்து சோதனை செய்யும்வகையில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் தனியார் வெளியீட்டாளர்களால் உருவாக்கப்பட்டது.

பாடப் புத்தகங்கள் அரசால் விநியோகிக்கப்படுவது பெற்றோர்களுக்கு ஒரு விடுதலையைக் கொடுத்துள்ளது. ஏனெனில், தனியார் வெளியீட்டாளர்கள் பாடப் புத்தகங்களை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும் பல பள்ளிகள் தங்கள் வளாகத்துக்குள்ளே ஸ்டோர்ஸ்களை வைத்துள்ளனர். பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் தனியார் வெளியீட்டாளர்கள், அதனுடன் பென்சில், ரப்பர் மற்றும் பிற எழுதுபொருள்கள் அடங்கிய ஒரு பாக்சை விற்பனை செய்கின்றனர். இந்தப் பொருட்கள் வெளியே வாங்கும் விலையைவிட அதிகமாக இருக்கிறது என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், பல பள்ளி தலைமையாசிரியர்கள் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தனியார் வெளியீட்டாளர்கள் செய்து கொடுக்கின்றனர் என அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய மனிதவள அமைச்சகம், மார்ச் மாத இறுதிக்குள் புத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என என்சிஆர்டி-க்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கல்வி வாரியம் 2017-2018ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ-ஐ) நீக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிஎச்.டி. படிப்பில் தமிழகம் முன்னிலை!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிஎச்.டி. எனும் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் அதிகளவில் உள்ளனர் என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு மனிதவள அமைச்சகம் பதிலளித்தது. 
அப்போது, 2015-16ஆம் ஆண்டில் 3,973 பேருக்கும், கடந்த 2014-15 ஆம் ஆண்டில் 3,333 பேருக்கும் பிஎச்.டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 2015-16 கல்வியாண்டில் நாடு முழுவதும் 24,171 பேருக்கு பிஎச்.டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 16 சதவிகிதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், பிஎச்.டி. மாணவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அதாவது, 2,205 பிஎச்.டி. மாணவர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா உள்ளது. இங்கு, 1945 பிஎச்.டி. மாணவர்கள் உள்ளனர் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, 2013-14 முதல் 2015-16ஆம் ஆண்டுகளில் 69,862 பேருக்கு பிஎச்.டி. பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் பொதுச் செயலாளர் பசுபதி கூறுகையில், ‘நெட், செட் தகுதித் தேர்வு தவிர, பிஎச்.டி. படிப்பும் ஆசிரியர் நியமனத்துக்குத் தேவையான ஒன்று. குறிப்பாக, தமிழகத்தில் ஆசிரிய நியமனம் தேர்வு செயல்முறையின்போது, பிஎச்.டி. முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் மதிப்பெண், மாணவர்களை முனைவர் பட்ட படிப்பில் சேரத் தூண்டுவதில் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் 500 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 500 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இதுவும், பிஎச்.டி. மாணவர்கள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இலவசமாக விண்வெளி அழைத்து செல்லும் COHU!

புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்களுக்கும் விண்வெளிக்கும் இருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. சில ரோபோக்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்துஅனுப்பிய புகைப்படத்தை நாம் சமீபகாலத்தில் அதிகம் கண்டிருப்போம் . அதன் படி மனிதர்களும் வேற்றுகிரகத்தில் வசிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று

வருகின்றன. அதனைத் தொடர்ந்து புதுமையான தகவலை வெளியிட்டுள்ளது பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான COHU நிறுவனம் . அந்த செய்தியில் அந்நிறுவனம் விரைவில் ஒரு மொபைல் கேம் ஒன்றினை வெளியிட இருப்பதாகவும், அதில் வெற்றி பெரும் நபர்களுக்கு, விண்வெளி செல்வதற்கு தி ஸ்பேஸ் நேசன் ஆஸ்ட்ரோநாட் ட்ரைனிங் ப்ரோகிராம் (SNAP) எனப்படும் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் இலவசமாக விண்வெளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

CUHU நிறுவனம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஒரு கேம்மில் வெற்றிபெற்றால் விண்வெளிக்கு இலவசமாக செல்ல முடியும் என அறிவித்திருப்பது பெரும் ஆவலை பல்வேறு தரப்பினரிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்த கேம் ஆனது விளையாடும் நபரின் மனநிலை மற்றும் உடல்நிலை என இரண்டையும் சோதிக்கிறது.நிஜ வாழ்வில் நமக்கு சில சவால்களை வழங்கி நமது திறமையை இந்த கேம் சோதனை செய்யும் என தகவல் தெரிவித்துள்ளனர். வரும் 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த கேம் வெளியிடப்பட்டு அதில் சிறந்த 12 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் வழக்கப்படும் பயிற்சியில் சிறந்து விளங்கும் நபர் ஒருவருக்கு இலவசமாக விண்வெளி செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

நீதியரசர் கவுலின் இரண்டாவது தாய் வீடு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான சஞ்சாய் கிஷன் கவுல், உச்சநீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு, பிரிவு உபச்சார விழா சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது.



அவ்விழாவில், அவர் பேசியதாவது: என் தாய் வீட்டுக்கு அடுத்தபடியாக சென்னைதான் எனது இரண்டாவது தாய்வீடு என பெருமிதத்துடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், துணைத்தலைவர் அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவி டி.பிரசன்னா, மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பதிவாளர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தலைமை நீதியரசரைப் பாராட்டி அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி பேசினார். இதையடுத்து, தலைமை நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது: தமிழர்களின் பண்பாடு தனித்துவம் மிக்கது. தமிழர்களின் வீரம், அன்பு, மானம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானது. நீதிமன்றம் மக்களுக்கானது அது சாமானிய மக்களிடமும் நட்புடன் செயல்பட வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களை வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா முடிந்தபின் நிருபர்களிடம் கூறுகையில், சிறந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளுடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இங்குள்ள மக்கள் என்மீது காட்டிய அன்பு மற்றும் அனைவரின் ஒத்துழைப்புமே நான் சிலவற்றை சாதிக்க காரணமாக இருந்தது. இந்த நீதிமன்றத்தின் பாரம்பரியம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று நம்புகிறேன்.

ஸ்ரீநகரை பிறப்பிடமாகக் கொண்ட நீதியரசர் கவுல், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

16/2/17

31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர். 

திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை. 

செங்கோடையன் - பள்ளிக்கல்வித்துறை. 

செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை. 

தங்கமணி - மின்சாரத்துறை 

பெஞ்சமின் - ஊரக தொழில்துறை 

நிலோபர் - தொழிலாளர் துறை 

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத் துறை 

மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை. 

பாஸ்கரன் - காதித்துறை. 

ராமச்சந்திரன் - இந்து அறநிலையத்துறை. 

பெஞ்சமின் - ஊரக தொழில்துறை. 

வேலுமணி - உள்ளாட்சித்துறை. 

ஜெயக்குமார் - மீன்வளத்துறை. 

சி.வி.சண்முகம் - சட்டத்துறை. 

அன்பழகன் - உயர்கல்வித்துறை. 

சரோஜா - சமூக நலத்துறை. 

எம்.சி.சம்பத் - தொழில்துறை. 

கருப்பண்ணன் - சுற்றுச்சூழல். 

காமராஜ் - உணவுத்துறை. 

ஓ.எஸ்.மணியன் - கைத்தறி துறை. 

உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறை. 

விஜயபாஸ்கர் - நல்வாழ்வுத்துறை. 

துரைகண்ணு- வேளாண் துறை 

கடம்பூர் ராஜூ - செய்தி மற்றும் மக்கள் தொடர்பு. 

உதயகுமார் - வருவாய்துறை. 

நடராஜன் - சுற்றுலாத் துறை. 

கே.சி.வீரமணி - வணிவரித்துறை. 

ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை. 

ராஜலட்சுமி - ஆதி திராவிடர் நலத்துறை. 

எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை. 

பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடைத்துறை. 

பிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள் தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது. இதற்கான அறிவியல் செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவ, மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள், அரசு தேர்வுத்துறை கடந்த வாரத்தில் இணையதளம் மூலம் வெளியிட்டது. 

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு மூலம், ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, சரிபார்த்து மாணவர்களிடம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களுக்கு இதுவரை ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூறியதாவது

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி வீதம் அதிகரிக்க பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகின்றனர். இவற்றில், பலவற்றுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வுத்துறை தடை விதித்துள்ளது. 

உதாரணமாக, பள்ளி வருகை பதிவேட்டில் இருந்த அனைவரும், தேர்வெழுதும் மாணவர்கள் பட்டியலில் இடம்பெற உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ச்சி பெற முடியாது என, கருதும் மாணவர்களை தனித்தேர்வராக விண்ணப்பிப்பது பள்ளிகளின் வழக்கமாக இருந்தது. 

இம்முறை அதற்கான வாய்ப்புகளை தேர்வுத்துறை தடுத்துவிட்டது. இதனால், அடுத்த கட்டமாக, சராசரி மாணவர்களை தேர்வெழுத விடாமல், முழுமையாக ஆப்சென்ட் ஆகும் வகையில், பல பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதற்காக, ஹால்டிக்கெட்டுகளை தராமல் இழுத்தடித்து வருகின்றன. இவற்றை உடனடியாக கொடுத்து, அனைத்து மாணவர்களும் தேர்வெழுதுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது

பிப்.,20க்குள் பிளஸ் 2 ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், ஹால்டிக்கெட்டுகளை வழங்கிவிட்டால், அதற்கு பின் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை. 

ரிவிஷன் முறையாக நடக்காததால், தேர்ச்சி வீதம் பாதிக்கப்படுகிறது என, மாணவர்கள் நலன்கருதி பல பள்ளிகள் ஹால்டிக்கெட்டுகளை நிறுத்தி வைத்துள்ளன. மற்றபடி, தேர்வெழுத தடுக்கும் வகையில், ஹால்டிக்கெட் தராமல் இருப்பின், அவர்கள் உடனடியாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு

10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், ’மாணவியரை, ஆண் தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் சோதிக்க தேவையில்லை’ என்ற உத்தரவு, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ்குமார் முதல்வராக உள்ள பீஹாரில், கடந்த ஆண்டு நடந்த தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு மாணவர்கள், மோசடி செய்து, தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

’தேர்வு மையத்துக்கு கண்காணிப்பாளராக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் தீவிரமாக சோதிக்க வேண்டும். அது தொடர்பான உறுதிமொழியையும் அவர்கள் அளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இன்று துவங்க உள்ள, இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு தேர்வு எழுதும், 12.61 லட்சம் பேரில், 5.56 லட்சம் பேர் மாணவியர். 25 பேருக்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள, 38 மாவட்டங்களிலும், தலா, இரண்டு முதல், நான்கு மையங்கள் மாணவியருக்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மாணவியரை சோதனை செய்வதில் தர்மசங்கடம் ஏற்படுவதுடன், தங்கள் மீது பொய் புகார்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர். மேலும் மாணவியர், ’பிட்’ அடித்து சிக்கினால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் உள்ளதையும் அரசுக்கு எடுத்துச் சென்றனர். 

அதைத் தொடர்ந்து, ’தேர்வு மையங்களில் கண்காணிப்பாளராக இருக்கும் ஆண் ஆசிரியர்கள், மாணவியரை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. 

அது குறித்தும், தங்கள் உறுதிமொழியில் குறிப்பிடலாம்’ என, மாநில அரசு விலக்கு அளித்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது; இது ஆண் ஆசிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், நிம்மதி பெருமூச்சையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகில், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. 


மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில அரசு, எட்டாவது ஊதியக்குழுவை அமைத்து, ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 

20 ஆண்டு பணிக்காலத்திற்கு மத்திய அரசு போல மாநில அரசும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர்!

தேசிய தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை இடம்பெற, இணையதளம் மூலம் ஆதரவு அளியுங்கள்,” என, துணைவேந்தர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில், 1.50 லட்சம் பேர் படிக்கின்றனர். 

பல்கலையில், மத்திய அரசின் தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டுக்குழு, 2015ல் ஆய்வு மேற்கொண்டு, ’ஏ’ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை, 2016ல் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை, தேசிய அளவில், 46ம் இடம், மாநில அளவில், அரசு பல்கலைக்கழகங்களில், இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. 

தற்போது, அப்பட்டியலில் மேலும் முன்னேற்றம் அடைய, பல்கலையில் படித்த மாணவ, மாணவியர், அவர்கள் பெற்றோர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், இப்பல்கலை குறித்து, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதனால், http://www.nirfindia.org/perception என்ற இணையதள முகவரியில், தங்கள் மின்னஞ்சல், சுயவிபரங்களை பதிவு செய்து, பல்கலைக்கு ஆதரவு தெரிவிக்கலாம். 

இதன் மூலம், பல்கலையை, தேசிய அளவில், முதல் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தேர்வு செய்ய வாய்ப்பாக அமையும். இன்றைக்குள் (பிப்.,15), பல்கலைக்கு ஆதரவாக ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக

CPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் கவனத்திற்கு.....

`CPS NEWS:```

ஆளேயில்லாத கடைல டீ ஆத்துறதக் கூட பொறுத்துக்கலாம்.


ஆனா,

பால். . . டீத்தூள். . . . சுடு தண்ணீ. . . அட கிளாஸே இல்லாம டீ ஆத்துனா பொறுத்துக்க முடியுமா?

அத ஊத்தித்தரேன் குடிடானா குடிச்சுற முடியுமா?

முடியாதுல. . .

ஆனாநாம குடிப்போம்னு ஆட்சியாளர்கள் நம்புறாங்க. அதுனாலதேன் அவுக டீ ஆத்துறதா நம்பவச்சிக்கிட்டே இருக்காங்க. நாமலும் நம்பித் தொலஞ்சுக்கிட்டே இருக்கோம். . .

எப்படீங்கிறீங்களா❓

👇🏼இப்படித் தான்👇🏼

*ஓய்விற்குப் பின் சல்லிப் பைசா ஊதியமே வழங்காத* புதுமையான *ஓய்வூதியத் திட்டத்தில்*நம்மைச் சிக்க வைத்து சீரழித்து வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பின்னர்

❌ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (ரூ.50,000) ,

❌ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (ரூ.2,00,000)

❌பணிக்கொடை,

❌தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978

ஆகியவை பொருந்தாது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழித் தகவல் : *திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

இனி 'ஆதார்' இருந்தால், 'பான் கார்டு' பெறுவது எளிது..!

ஒருவர் வங்கிகளில் ரூ.50,000 மேல் ரொக்கமாக செலுத்த,மற்றும் பெறுவதற்கும் 'பான் கார்டு' எண் குறிப்பிடவேண்டும். ரூ.2,00,000-
த்துக்கு மேல் எந்தவொரு பொருள் வாங்கும்போதும் 'பான் கார்டு' எண்ணை சொல்லவேண்டும்.
இந்நிலையில் ஒருவரிடம் 'ஆதார் கார்டு' எண் இருந்தால், அந்த ஆதாரில் இருக்கும் அடிப்படை விவரங்களின் அடிப்படையில், ஒரு சில நொடிகளில் வேண்டுவோருக்கு 'பான் கார்டு' வழங்க வருமான வரித்துறை தீர்மானித்து உள்ளது. இதன் மூலம் எளிதில் வருமான வரியை ஒருவர் கட்ட இயலும். பான் கார்டு பெறுவதில் இருக்கும் காலதாமதம் குறைக்கப்படும் என மத்திய வருவாய்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை ஒரு சில மாதங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15/2/17

முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!!!

உங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.

இப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.


தவனைக் காலம் அதிகரிப்பு
இந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.

புதிய திட்டங்கள்
2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
வீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.

6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்
ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்
ஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்
18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.

மொத்த நன்மை
மேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக லாபம் அளிக்கின்றன

வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களில் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறையாமல் அதிகமாகவே உள்ளது. அது மட்டும் இல்லாமல் சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளை அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய 2012-ம் ஆண்டு முடிவு செய்தது. அது மட்டும் இல்லாமல் 2016 ஏப்ரல் முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டியை அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.


இருப்பினும் 2016 ஏப்ரல் மாதமும் வரை 65 முதல் 100 தசம புள்ளிகள் அதாவது .65 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை பத்திரங்களின் லாபம் குறைந்த போதிலும் சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் குறைக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

எனவே இங்கு நாம் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் அளிக்கும் சிறு சேமிப்புத் திட்டங்கள் திட்டங்கள் எவை மற்றும் வட்டி விகிதம் எவ்வளவு என்பதை இங்குப் பார்ப்போம்.

பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தை விட அதிக வட்டி
சிறு சேமிப்புத் திட்டங்களைப் பொருத்த வரை மத்திய அரசு பரிந்துரைத்ததை விட அதிகபட்ச வட்டியே அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளில் அப்படி இல்லாமல் குறைத்துள்ளன.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF - பிபிஎப்)
பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு 7.4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதம் பரிந்துரைத்த போதிலும் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது

மூத்த குடிமக்கள் 'சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு அரசு 8.1 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்பட்டு இருந்தாலும் 8.5 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகின்றது. இதுவே வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

5-வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்
என்எஸ்சி எனப்படும் 5-வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு அரசு 7.3 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்க வேண்டும் என்று இருந்தாலும் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

5 வருட டெர்ம் டெபாசிட்
ஐந்து வருட டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு அரசு 7.3 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்க வேண்டு பரிந்துரைத்துள்ளது. ஆனால் 7.8 சதவீதம் வரை வட்டி விகிதம் லாபமாக அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

1 வருட டெர்ம் டெபாசிட்
ஒரு வருட டெர்ம் டெபாசிட் கணக்குகளுக்கு 7 முதல் 7.1 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது, அதற்கு ஏற்றவாறே 7 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட் வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்வுத் துறையின், http://www.tndge.in/ என்ற இணையதளம் மூலம், கடந்த, 7 முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அனைத்து பள்ளிகளும், தங்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, பிப்., 20க்குள் அவர்களிடம் வழங்க வேண்டும். தொடர்ந்து, தேர்வுக்கு தயாராவதற்கு, அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு ’கோல்டன்’ வாய்ப்பு கிடைக்குமா!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 25வது பட்டமளிப்பு விழாவையொட்டி, செமஸ்டர் தேர்வுகளில் தோல்வியடைந்த அனைவருக்கும் ஒரு ’கோல்டன்’ வாய்ப்பினை அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரி பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வகுத்து, தனது இணைப்பு கல்லுாரிகளுக்கு செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

பொதுவாக எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 5 ஆண்டிற்குள் ளும், இன்ஜினியரிங் மாணவர் கள் 4 ஆண்டிலும், கலை அறிவி யல் மாணவர்கள் 3 ஆண்டிலும் படிப்பினை முடிக்க வேண்டும்.

படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் குறிப்பிட்ட ஆண்டிற்குள் முடிப்பதில்லை. இவர்கள் தோல்வியடைந்த பாடங்களில் வெற்றிபெற அடுத்தடுத்த சில வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனாலும் ஒரு சில மாணவர்கள் படிப்பை முழுமையாக முடிப்பதில்லை.

இது போன்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தற்போது முழுவதுமாக வாய்ப்பு கதவை மூடிவிட்டது. தோல்வியடைந்த பாடங்களை எழுத வாய்ப்பு அளிப்பதில்லை.

2003ம் ஆண்டு முதல் பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு முந்தைய மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு எழுதும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

திருப்புமுனை

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 300 சதவீத வளர்ச்சிக்கு வித்திட்ட துணைவேந்தர் தரீன் பதவி காலத்திலும் இதுபோன்ற பிரச்னை தலை துாக்கியது. அப்போது அகடமி கவுன்சிலை கூட்டி கருத்தினை கேட்ட துணைவேந்தர், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து படித்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதும் வகையில் ஒரு ’கோல்டன்’ வாய்ப்பினை அளித்தார்.

இதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட 7,500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் புது பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுதி, படிப்பினை முடித்து பட்டம் பெற்றனர். வேலையில் இருந்தவர்களுக்கு இது அடுத்த கட்டத்திற்கு செல்ல பிரகாசமான வழியினை ஏற்படுத்தி கொடுத்தது.

அதுபோன்ற ஒரு ’கோல்டன்’ வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என, தற்போது ஆயிரக்கணக்கானோர் எதிர்நோக்கியுள்ளனர். பலர் மனு கொடுத்த போதும் இது குறித்து முடிவை அறிவிக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மவுனம் சாதித்து வருகிறது.

எந்த வித கல்வி சூழலும் இல்லாமல் கிராமப்புறங்களில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வந்துள்ள மாணவர்கள் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைவது இயல்பு.அதற்காக அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் தராமல் முழுமையாக மறுப்பது, பல ஆயிரக் கணக்கானவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத் தின் 25வது பட்டமளிப்பு விழா விரைவில் வர உள்ளது. இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கு மீண் டும் ஒரு ’பொன்னான’ வாய்ப்பு அளிக்க அகடமி கவுன்சிலை அவசரமாக கூட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் முடிவெடுக்க வேண்டும்.

இந்த ’கோல்டன்’ வாய்ப்பு, பல ஆயிரம் மருத்துவர்கள், இன்ஜியர்கள், கலை அறிவியல் மாணவர்கள் பலருக்கும் வாழ்வில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்துவதோடு, உயர் கல்வி வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும்.

நிதி நெருக்கடி வருமா?

புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இருந்தே இந்த கடைசி வாய்ப்பினை அளிக்கலாம். புது பாட திட்டத்தின் படியே இவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பதால் புதிதாக எந்த செலவும் இருக்கபோவதில்லை.

10ம் வகுப்புக்கு அகழாய்வு குறித்த பாடம்!

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, தற்கால தொல்லியல் ஆய்வுகள் என்ற பாடத்தை, தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்று விளக்கினால், கடந்த கால வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.


பள்ளி மாணவர்கள் மத்தியில், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், நினைவுச்சின்னங்கள், பழங்கால மக்களின் வாழ்க்கை முறை குறித்து, எடுத்துரைக்கும் நோக்கில், பல்வேறு தலைப்புகளில், பாடத்திட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன. 

பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், தற்காலக தொல்லியல் ஆய்வுகள் குறித்த, துணைப்பாடம் உள்ளது. இதில், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், செப்பேடுகள், கட்டடங்களின் தன்மை குறித்த, பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தர்மபுரி, கரூர், மதுரை மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட, தங்கம், வெள்ளி, இரும்பு உலோகத்தால் ஆன காசுகள், அதில் பொறிக்கப்பட்ட சின்னங்கள் குறித்த, சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண்களுக்கு, அகழாய்வு குறித்த தலைப்புகளில், கேள்வி இடம்பெறும். இதில், மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவதோடு, தொல்லியல் துறையின் பணிகள், அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க, அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்று, விளக்க வேண்டியது அவசியம். இதன்மூலம், பாடத்திட்டம் சாராத பல்வேறு, கூடுதல் தகவல்களை, மாணவர்கள் அறிந்து கொள்வர்.

கோவை மாவட்டத்தில், ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் ரோட்டில், தொல்லியல் துறையின் அருங்காட்சியகமும், வ.உ.சி., பூங்கா எதிரே, அருங்காட்சியத்துறையின் அருங்காட்சியமும் உள்ளன. இங்கு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, அதிகாரிகள் உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:

பல்வேறு பரிணாமங்களை கடந்து தான், நாகரிக உலகம் உருவெடுத்துள்ளது. கால்நடை வளர்ப்பு, விவசாயத்தில் காலுான்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பழங்கால வர்த்தக பரிமாற்றம், வெளிநாட்டினரின் படையெடுப்பு, நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, தொழில், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஆவணப்படுத்துவது அவசியம்.

இப்பணியை, தொல்லியல் துறை அகழாய்வு மூலம் மேற்கொண்டு வருகிறது. இதை மாணவர்களுக்கு வெறுமனே எடுத்துக்கூறுவதை விட, அருங்காட்சியத்திற்கு அழைத்து சென்று, பாடம் நடத்தலாம். 

இதன்மூலம், கோவை மாவட்டத்தின் சிறப்புகள், தொல்லியல் அகழாய்வு நடந்த இடங்கள், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அதன் பயன் குறித்து, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வர். 

எதிர்காலத்தில், தொல்லியல் துறை படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுக்கும், விதை போட்டது போலாகிவிடும். இதை, பள்ளிகளில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில் நியமனம்

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளின் போது, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு நடக்கிறது. இதனால் தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தலுக்கு, அவர்கள் துணை போகின்றனர் என்ற குற்றச்சாட்டு, சமீப காலமாக வலுத்துள்ளது. 


ஒரு சில மையங்களுக்கு, ஒரே ஆசிரியர்கள் திரும்பத்திரும்ப செல்கின்றனர். எனவே, பொதுத்தேர்வு ஆசிரியர் நியமன முறையை, மாற்ற வேண்டும் என்று, ஆசிரியர்கள் மற்றும் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில் நடப்பாண்டில், பொதுத்தேர்வு மையத்துக்கான, ஆசிரியர் நியமனத்தில், குலுக்கல் முறையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற விருப்பமுள்ள, தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அது ஏற்கப்பட்ட பின், பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்படும். அதன்பின் கலெக்டர், கல்வித்துறை இணை இயக்குனர், ஆசிரியர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில், தேர்வு மைய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், இதற்கான குலுக்கல் நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும், குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு முன்பே, தேர்வு மையம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். முறைகேடு புகாருக்கு ஆளான தேர்வு மையங்களில், முழுமையாக வீடியோ செய்யப்படும்.

10ம் வகுப்பு தேர்வுக்கு 'தத்கல்' தேதி அறிவிப்பு

நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி செய்திக் குறிப்பு: நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத, தனித்தேர்வர்கள், நாளை முதல் இரு நாட்கள், 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தேர்வு விபரங்கள் இடம் பெற்றுஉள்ளன.மாவட்ட கல்வி அலுவலகங்கள், மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றிலும், விபரங்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.