யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/16

ரிசர்வ் வங்கி பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு அளித்துள்ள விளக்கம்:

1. பழையநோட்டுகளை மாற்றினால் முழுத்தொகையும் கிடைக்குமா?

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைவங்கிகள்/ தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில்கொடுத்து அதற்கான முழு மதிப்பிலானதொகையையும் பெறலாம்.

2 .ரொக்கமாகஎவ்வளவு பெற முடியும்?

இப்போதைக்குதனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில்பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம். அதற்கு மேலான
தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

3. நான்ஏன் எனது அனைத்து பழையநோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளை பெறமுடியாது?

இப்பொதைக்குமத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை. எனவே தற்போதைய இந்தத் திட்டம் ரூ.4000 வரை மாற்றி கொள்ள அனுமதிவழங்கியுள்ளது.

4. எனக்குரூ.4,000 போதவில்லை நான் என்ன செய்வது?

ரூ.4000 ரொக்கத்தொகை போக மீதித் தொகையைவங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம், அதனை காசோலை மற்றும் பிறஎலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை மூலம் உங்கள் தேவைக்குபயன்படுத்தலாம்.

5. என்னிடம்வங்கிக் கணக்கு இல்லை எனில்?

நீங்கள்வங்கிக் கணக்கு ஒன்றை அதற்கானஅடையாள ஆவணங்களுடன் சமர்ப்பித்து தொடங்குவது அவசியம்.

6. என்னிடம்ஜன்தன் யோஜனா திட்டப்படி தொடங்கப்பட்டகணக்குதான் உள்ளது என்றால்?

ஜன் தன் கணக்கு வைத்திருப்போர்அதற்கான விதிமுறைகளுடன் பணத்தை பரிமாற்றம் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

7. பரிமாற்றத்திற்குநான் எங்கு செல்ல வேண்டும்?

அனைத்துவர்த்தக வங்கிகள், ஆர்ஆர்பி.க்கள், அரசு கூட்டுறவுவங்கிகள், அல்லது எந்த ஒருதலைமை மற்றும் துணை தபால்அலுவலகங்களிலும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

8. நான்கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?

ரூ.4,000 வரை மாற்றி கொள்ள எந்தஒரு வங்கிக்கும் முறையான அடையாள அட்டையுடன்சென்று மாற்றிக் கொள்ளலாம்.
ரூ.4,000த்துக்கும் கூடுதலான தொகைக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும்வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின்கிளைகளுக்கும் சென்று கணக்கில் வரவுவைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குரிய அடையாளஅட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். மெலும் எலெக்ட்ரானிக் முறையின் பணத்தை வங்கிக் கணக்கில்மாற்றம் செய்வதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும்கொண்டு செல்லவும்.

9. நான்கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாமா?

ஆம். உங்கள் வங்கியின் எந்தஒரு கிளைக்கும் செல்லலாம்.

10. எந்தஒரு வங்கியின் எந்த ஒரு கிளைக்கும்செல்லலாமா?

ஆம். செல்லலாம், ஆனால் பணப்பரிமாற்றத்துக்கு தேவையான அடையாளஅட்டை, ஆவணத்தை சமர்ப்பிப்பது அவசியம். ரூ.4,000த்துக்கும் அதிகமான தொகைக்கு எலெக்ட்ரானிக்நிதி பரிமாற்றத்துக்குத் தேவையான அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பதுஅவசியம்.

11. எனக்குவங்கிக் கணக்கு இல்லை.. ஆனால்என் நண்பர் அல்லது உறவினர்வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் நான்பரிமாற்றி கொள்ளும் தொகையை வரவு வைத்துக்கொள்ளலாமா?

செய்யலாம், மற்றவர்களது விருப்பத்தின் பேரில், அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைக்கலாம். அப்போது உங்கள் அடையாள அட்டையைவங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதல் சான்றும் அவசியம்.

12. பணத்தைஎடுத்துக் கொண்டு கணக்கு வைத்திருப்பவர்தான்நேரில் செல்ல வேண்டுமா, அல்லதுபிரதிநிதியை அனுப்பலாமா?

நேரடியாகசெல்வது விரும்பத்தக்கது. உங்களால் நேரடியாக செல்ல முடியாதபட்சத்தில் உங்கள்பிரதிநிதியிடம் உங்கள் கைப்பட எழுதியஅனுமதி கடிதம் அவசியம். அவரதுஅடையாள அட்டையும் அவசியம்.

13. ஏடிஎம்.இலிருந்து நான் பணம் எடுக்கமுடியுமா?

18 நவம்பர்2016 வரை நீங்கள் ரூ.2,000 வரைநாளொன்றுக்கு எடுக்க முடியும், அதன்பிறகு 19-ம் தேதியிலிருந்து இதன்வரம்பு ரூ.4000 ஆக அதிகரிக்கப்படும்.

14. காசோலைமூலம் பணம் எடுத்துக் கொள்ளலாமா?

இம்மாதம்24ம் தேதி வரை வித்ட்ராயல்ஸ்லிப் அல்லது காசோலை மூலம்ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை எடுக்கலாம். வாரம்ஒன்றிற்கு ரூ.20,000 வரையே எடுக்க முடியும்(இதில் ஏ.டி.எம். பண எடுப்புத் தொகையும் அடங்கும்), இதன் பிறகு இந்தத்தொகையை உயர்த்த மறுபரிசீலனை செய்யப்படும்.

15. ஏ.டி.எம். மூலம்பணத்தை டெபாசிட் செய்யலாமா?

ஆம். ரூ.500, ரூ.1000 நோட்டுகளைஏ.டி.எம்மூலம் வங்கிக் கணக்கில் டெபாசிட்செய்யலாம்.

16.நெட்பேங்கிங்கில்பணபரிமாற்றம் செய்யலாமா?

என்இஎப்டி/ ஆர்டிஜிஎஸ் / ஐஎம்பிஎஸ் / இன்டர்நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் மூலம்பணப் பரிமாற்றம் செய்யலாம். எந்த தடையும் இல்லை.

17. நான்தற்போது இந்தியாவில் இல்லை, நான் என்னசெய்ய வேண்டும்?

உங்கள்பிரதிநிதியிடம் உங்கள் கையெழுத்துடன் ஒப்புதல்கடிதம் அளித்து அவரது அடையாளஅட்டையுடன் வங்கிக்கு அவர் சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

18. நான்ஒரு என்.ஆர்.ஐ. என்னிடம் என்.ஆர்.ஓ. கணக்கு உள்ளது பரிமாற்றத் தொகையைஎன் கணக்கில் வரவு வைக்க முடியுமா?

ஆம், செய்யலாம்.

19. சுற்றுலாப்பயணிகள் தங்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை என்ன செய்வது?

விமான நிலையங்களில் இருக்கும் பணப்பரிவர்த்தனை மையங்களில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்துரூ.5,000 வரை மாற்றிக் கொள்ளலாம். ஓ.எச்.டிநோட்டுகளை பெற்றதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும்.

20. செல்லுபடியாகும்அடையாள அட்டைகள் யாவை?


ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், என்.ஆர்.இ.ஜி.ஏ கார்டு, பான்கார்டு, அரசுத்துறை அதன் ஊழியர்களுக்கு அளித்துள்ளஅடையாள அட்டை ஆகியவை.

TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி

மத்தியஅரசு 2011ம் ஆண்டு இலவசகட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும்ஒன்றாம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலைபட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதிதேர்வு நடத்தி
பணியில் அமர்த்தவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.


மேலும்2011ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் பணியில்சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வை எழுதிதேர்ச்சி பெற வேண்டும் என்றுஉத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவைதொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் தகுதிதேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வுசெய்யவும், பணியில் சேர்ந்த ஆசிரியர்களைபணி நிரந்தரம் செய்யவும் முடிவு செய்தது.

அதற்காகதமிழகத்தில் முதன் முதலாக தகுதித்தேர்வைஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த12.7.12ம் தேதி நடத்தியது. 7 லட்சம்பேர் எழுதிய இந்த தேர்வில்துரதிஷ்டவசமாக 2 ஆயிரத்து 448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். இது ஆசிரியர்களின் தரம்பற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்துமுதல்வர் ஜெயலலிதா ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று மீண்டும் மற்றொருதகுதி தேர்வை நடத்தும்படி உத்தரவிட்டார். இன்னொரு தகுதித்தேர்வு 14.10.12ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த முறையை விட இந்ததேர்வில் 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப்பெற்றார்கள். அடுத்தடுத்து தகுதித்தேர்வை நடத்தும் பணியில் ஆசிரியர் தேர்வுவாரியம் இறங்கியது.

இந்நிலையில்கடினமான இந்த தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மதிப்பெண்களில்சலுகைகள் வழங்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசு தகுதித்தேர்வுமதிப்பெண் சலுகை வழங்க முடிவுசெய்தது. 2014ம் ஆண்டு இறுதியில்ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி வழங்கி ஆசிரியர் தேர்வுவாரியம் உத்தரவிட்டது.2014ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு இந்த சலுகையின் படிஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்என்று தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு முன்புநடந்த தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதை ஏற்கவில்லை. எங்களுக்கும்5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி ஆசிரியர்வேலை வழங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர். இதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கவில்லை.

இதையடுத்துதேர்வர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சிசலுகையை ரத்து செய்ய வேண்டும்என்றுவழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமதுரை கிளை 5 சதவீதம் மதிப்பெண்தளர்ச்சி உத்தரவு செல்லாது என்றுதீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆசிரியர்தேர்வு வாரியம் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்குகடந்த 2 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்துவந்தது. இதனால் ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2 ஆண்டுகளாக தகுதித்தேர்வைநடத்தவில்லை. ஆயிரக்கணக்கானோர் எப்போது தகுதித்தேர்வு நடக்கும்என்று பெரும் எதிர்பார்ப்பில் நீண்டநாட்களாக காத்திருந்தனர்.

தமிழக அரசின் சார்பில் 2014ம்ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில்5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை தொடர்ந்து வழங்கிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி விவாதித்துவந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கை கடந்தவாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பு இறுதிவாதத்தை கேட்ட பிறகு தேதிகுறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்நிலையில்5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகை குறித்து உச்சநீதிமன்றம்இன்று காலையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் தகுதிதேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கிய5 சதவீத மதிப்பெண் சலுகை உத்தரவு செல்லும்என்று தீர்ப்பளித்தது. தங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்புவழங்கியதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும்தேர்வு எழுதாத ஆசிரியர்கள், பட்டதாரிகள்பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரிஇயக்குனர் ராஜராஜேஸ்வரியை தொடர்பு கொண்டாம்.. அவர்கூறியதாவது:

உச்சநீதிமன்றம்ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின்அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்றுதீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள்தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சிசலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்ததகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின்எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்குமேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின்தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கிவிட்டது. இனிமேல் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வுமுடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள்ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ்முறையும் அமல்படுத்தப்படும்.


பட்டதாரிஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பிளஸ் 2 வுக்கு 10 மதிப்பெண்கள், பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்கள், பி.எட். படிப்பிற்கு15 மதிப்பெண்கள், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில்வைத்துக்கொள்ளப்படும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ்2வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பிற்கு25 மதிப்பெண்கள், தகுதித்தேர்வுமதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். இதுதான் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கெடுக்கும் முறை. இதன் அடிப்படையில்தான்ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 'இவ்வாறு அவர்கூறினார்

அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் நாளை முதல் புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் எடுக்கலாம் மத்திய அரசு தகவல்

அனைத்துஏ.டி.எம். மையங்களிலும் நாளை(வெள்ளிக்கிழமை) முதல்புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளைஎடுக்கலாம் என்று மத்திய நிதித்துறை
செயலாளர் அசோக் லாவசா தெரிவித்தார்.
மத்தியநிதித்துறை செயலாளர் அசோக் லாவசா டெல்லியில்நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:–
மத்தியஅரசு நடவடிக்கை
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள்சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களது சிரமங்களைப் போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுத்து வருகிறது. குறிப்பாகஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுப்பதற்கும் மற்றும்செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகளை செல்லாதுஎன மத்திய அரசு அறிவித்ததன்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், இடையூறுகளை சமாளிப்பதில் மத்திய அரசுக்கு மக்கள்ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.
நாளை முதல் பணம் எடுக்கலாம்
மக்களின்பண பரிவர்த்தனை தேவைக்காக மாற்று ரூபாய் நோட்டுகள்அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ரூபாய்நோட்டுகள் வினியோகத்தை ரிசர்வ் வங்கி தீவிரமாககண்காணிக்கும். பணப் பரிமாற்றம் என்பதுபல்வேறு வழிகளில் நடக்கலாம். என்றபோதிலும், இதில் ரொக்கம் அல்லாதபரிவர்த்தனையை நோக்கிச் செல்லவே மத்திய அரசுவிரும்புகிறது.
தற்போதுஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதில் உள்ளசிக்கல்கள் புதிய ரூ.500 மற்றும்ரூ.2,000 நோட்டுகளின் வினியோகம் சீரடைந்தவுடன் எளிதாகிவிடும்.
அனைத்துஏ.டி.எம். மையங்களும் வெள்ளிக்கிழமை(நாளை) திறக்கப்பட்டுவிடும். பல ஏ.டி.எம். மையங்கள்வியாழக்கிழமை(இன்று) திறக்கப்படும். இவற்றில்இருந்து புதிய ரூ.500 மற்றும்ரூ.2,000 நோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறுஅவர் கூறினார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம்கூறுகையில், ‘‘இது முக்கியமானதொரு நடவடிக்கை. ஊழல், கள்ளநோட்டு, கருப்பு பணம் ஆகியவற்றுக்குஎதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

பழைய 'கரன்சி' மீது வரி உண்டா? : அருண் ஜெட்லி புது குண்டு

புதுடில்லி: ''மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி விதிப்பில்இருந்து தப்பாது; அந்த பணத்தின் வருவாய்ஆதாரம்
தொடர்பாக, சட்டம் தன் கடமையைசெய்யும்,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமானஅருண் ஜெட்லி கூறியுள்ளார்.

பிரதமர்நரேந்திர மோடி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, நேற்று முன்தினம் அறிவித்தார்; அவற்றை, வங்கியில் டிசம்பர், 30க்குள் 'டிபாசிட்' செய்யலாம் என அறிவிக்கப் பட்டது. இந்த பணத்துக்கு வரிவிதிக்கப்படுமா என்பது குறித்து, பொதுமக்கள்மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி துார்தர்ஷன், செய்தி சேனலில் கூறியதாவது: செல்லாதெனஅறிவிக்கப்பட்ட
கரன்சிநோட்டுகள், வரிவிதிப்பில் இருந்து தப்பாது. அவற்றின்வருவாய் ஆதாரம் தொடர்பாக, சட்டம்தன் கடமையை செய்யும். வங்கிகளில், 'டிபாசிட் 'செய்யப்படும் பணம், இதற்கு முன்வங்கியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலோ, சட்டரீதியில் பெறப்பட்டிருந்தாலோ, அது பற்றி கவலைப்படத் தேவையில்லை.

அதேசமயம், சட்டவிரோதமாக சம்பாத்தியம் செய்தி ருந்தால், அந்தபணம் வந்ததற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். அந்தபணம், சட்டவிரோதமாக வோ, லஞ்சம் வாங்கியோபெறப்பட்டிருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டுசெலவினங்களுக்காக வைத்திருக்கும், 25 ஆயிரம் அல்லது 50 ஆயிரம்ரூபாய் போன்ற சிறிய தொகைபற்றி, பொதுமக்கள் கவலைப்படத் தேவை யில்லை. அவற்றை, கவலைப்படாமல் வங்கிகளில், 'டிபாசிட்' செய்யலாம். முதல் இரு வாரங்களில், குறைந்தளவே, புதிய கரன்சி சப்ளைசெய்யப் படும்; எனவே, செல்லாதகரன்சிகளுக்கு பதில், புதிய கரன்சிகளைமாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். மூன்றுவாரங்களுக்கு பின், அதிகளவில் கரன்சிசப்ளை செய்யப்படுவதால், பிரச்னை இருக்காது.

மத்தியஅரசின் நடவடிக்கையால், மின்னணு வியல் முறையில்பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரிசெலுத்துவோர் அதிகம் உள்ள நாடாகஇந்தியா உருவெடுக்கும். இதன் பின், ஊழல்செய்வோர், லஞ்சம் வாங்கு வோர், குற்ற செயல்களால் பணம் குவிப்போர் சிரமப்படுவர். இதனால், நேர்மை அதிகரிக்கும்.

அரசின்நடவடிக்கையால் முதல் இரு நாட்களுக்கு, பொதுமக்கள் சிரமப்படுவர் என்பது உண்மையே.


அதற்காக, கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும்நடவடிக்கைகளை எடுக்கா மல் இருக்கமுடியாது. இதனால், அரசுக்கு, நேரடிமற்றும் மறைமுக வரி வருவாய்அதிகரிக்கும். இவ்வாறு அருண் ஜெட்லிகூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆசிரியர்தகுதித் தேர்வு முறை தொடர்பாகதமிழக அரசு வெளியிட்டுள்ள இருஅரசாணைகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம்புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் சென்னைஉயர் நீதிமன்றம் அளித்த
தீர்ப்பை உறுதிப்படுத்தியஉச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைகிளை அளித்த தீர்ப்பை ரத்துசெய்துள்ளது.
இரு அரசாணைகள்: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தகுதிகாண் (வெயிட்டேஜ்) முறையை 2013-ஆம் ஆண்டில் தமிழகஅரசு கொண்டு வந்தது. இதுதொடர்பாக 2014, பிப்ரவரி 6-ஆம் தேதியிட்ட அரசாணை25-இல் "தேர்வெழுதும் அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும்ஐந்து சதவீத மதிப்பெண் விலக்குஅளிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2014, மே 30-ஆம் தேதியிட்ட அரசாணை71-இல் தேர்வெழுதிய ஆசிரியர்களின் பணி நியமனத்தின்போது தகுதிகாண்(வெயிட்டேஜ்) முறை கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில்"தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டியமதிப்பெண் சலுகையை அனைத்து இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கும் வழங்க வகை செய்யும்தமிழக அரசின் அரசாணையால் எங்களுக்குபாதிப்பு ஏற்படும்' என்று சில ஆசிரியர்கள்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தனர். இந்த வழக்கில் தமிழகஅரசின் அரசாணையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் 2014 செப்டம்பர் 22-இல் தீர்ப்பளித்தது. இதேவிவகாரத்தில் மற்றொரு ஆசிரியர் பிரிவினர்சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடுத்தனர். அதில், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி தமிழகஅரசின் அரசாணைகளை ரத்து செய்து 2014, செப்டம்பர்25-இல் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து"ஒரே விவகாரத்தில் இரு நீதிமன்றங்கள் மாறுபட்டதீர்ப்புகளை அளித்ததால் இந்த விஷயத்தில் தலையிடவேண்டும்' என்று கூறி பாதிக்கப்பட்டஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர். தீர்ப்பு: இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துபுதன்கிழமை அளித்த தீர்ப்பின் முக்கியஅம்சங்கள் வருமாறு: ஆசிரியர் தகுதித் தேர்வு முறைதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டஇரு அரசாணைகள், தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வழிமுறைகளின்படி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு உள்ளஅதிகாரத்தை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. அத்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பயனாளர்களுக்கு மதிப்பெண் சலுகை அளித்துள்ளது. எனவேதான்தமிழக அரசின் அரசாணைகளை உறுதிப்படுத்திசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வழிமுறைகளின் அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் நடவடிக்கையைதன்னிச்சையானதாகக் கருதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. எனவே மதுரைக் கிளை அளித்ததீர்ப்பை ரத்து செய்கிறோம். இந்தவிவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம்அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக தேர்வில்வெற்றி பெறாதவர்கள் தாக்கல் செய்த அனைத்துமேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின்ஆசிரியர் தகுதித்தேர்வு முறை செல்லும் என்றுஇன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வுநடத்த இனி தடையேதும் இல்லை.

இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர்மஃபா பாண்டியராஜன் கூறியதாவது :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்பானது அரசுக்கு சாதகமான வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. 

தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும்இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கானஅறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

TNTET Supreme Court Judgement copy (09.11.2016)

9/11/16

பிழைப்பு ஊதியமும் 'கட்:' தலைவருக்கு சிக்கல்

கல்வித் துறையால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, கலை ஆசிரியர் சங்க தலைவருக்கு, இரு மாதங்களாக, பிழைப்பு ஊதியம் வழங்காததால், போராட்டம் நடத்துவது குறித்து, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார். இவர், கல்வித் துறையின் பல பிரச்னைகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, உயரதிகாரிகளிடம் மனு அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதனால், இரு மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தருவதாகவும், இவர் மீது, கல்வித் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், ஆசிரியர் ராஜ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின், விதிகளின்படி ஊதியத்தில், 50 சதவீதத்தை பிழைப்பு ஊதியமாக வழங்க வேண்டும்; அதுவும், வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. 'பிழைப்பு ஊதியமாவது வழங்க வேண்டும்' எனக்கோரி, ராஜ்குமார் சார்பில், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், சென்னை வந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவிலும், பள்ளிக்கல்வி செயலரிடமும் மனு அளித்துள்ளார். இதேநிலை தொடர்ந்தால், சங்க உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்த, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

ரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்...!

1. நவம்பர்9-ம் தேதி அனைத்து வங்கிகளும்மூடப்பட்டிருக்கும்.

2. நவம்பர்9 மற்றும் 10 தேதிகளில் ஏ.டி.எம்செயல்படாது.

3. நீங்கள்கையில் வைத்திருக்கும் ரூபாய் 500, 1000 நோட்டுகளை உங்கள் வங்கி அல்லதுதபால் நிலையம் சேமிப்புக் கணக்கில்வைப்பு வைதிருக்க
வேண்டும்.
4. வங்கியிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு 10000 ரூபாய் அல்லது ஒரு வாரத்திற்கு 20,000 தான் எடுக்க முடியும்.

5. காசோலைகள், வரைவோலைகளை, டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகள் மற்றும் மின்னணு நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த தடையும் இல்லை.
அடுத்த72 மணிநேரங்களுக்கு கீழ்கண்ட இடங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தமுடியும் :



1. ரயில்நிலையத்தின் டிக்கெட் கவுண்டர்கள், பஸ் மற்றும் விமானடிக்கெட்டுகள் பெற தற்போதைய 500, 1000 ரூபாய்நோட்டுகளைப்    பயன்படுத்தலாம்.

2. அரசுமருத்துவமனைகளில் பில் தொகைக்கு செலுத்தமுடியும்.

3. மத்தியஅரசின் அங்கீகரிக்கப்பட்ட  பெட்ரோலியநிறுவனங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில்செலுத்த முடியும்.

4.  மத்திய மற்றும் மாநிலஅரசால் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளில் செலுத்த முடியும்.

5.  மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டபால் பூத்களில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு

தமிழகத்தில்10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார்எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும் என்றுஅரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2016-2017 பொதுத்தேர்வு வருகிற மார்ச்
மாதம்நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வில்பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவருவதாக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்ககம்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைஅரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவர்களின் ஆதார் எண்ணையும் கட்டாயமாகபதிவு செய்ய வேண்டும். இதைவைத்துதான் இந்த ஆண்டு பொதுத்தேர்வில்பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆதார் எண் இருந்தால் மட்டுமேபொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். எனவேஇந்த மாதத்திற்குள் மாணவர்களிடம் ஆதார் எண்ணை வாங்கவேண்டும்என கூறப்பட்டுள்ளது.


இதனால்தனியார் மற்றும் அரசு, அரசுநிதியுதவி பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் எத்தனை பேர்? இன்னும்எத்தனை பேர் ஆதார் எண்எடுக்கவில்லை என்று கணக்கெடுத்து, அந்தபள்ளிகளுக்கு ஆதார் எடுக்கும் சிறப்புமுகாம் அமைத்து, ஆதார் அட்டை வழங்ககல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியை இந்தமாதத்திற்குள் முடிக்கவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது முதல் முறை அல்ல...!

ஃபேஸ்புக், ட்விட்டர் என சமுகவலைதளங்களின் ஆதிக்கம்ஊடுருவியுள்ள இந்த டிஜிட்டல் காலத்திலும்1000,  500 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்பதை  பிரதமர்மோடியின் அரசு ரகசியமாக வைத்திருந்துஇன்று அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு புத்தாண்டுதொடக்கத்தில்
மக்களிடம் பழைய, ரூ 500, ரூ1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது.
திடீரெனஇப்படி ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன மத்திய அரசு அறிவிப்பதுதற்போதைய தலைமுறைக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், இதற்கு முன்புஇதே போல இரண்டு அதிர்ச்சிசம்பங்களை இந்தியா சந்தித்துள்ளது.

''ஊழல்மற்றும் கறுப்பு பணம், வறுமை, பயங்கரவாதம் ஆகியவை நம்  நாட்டை பின்நோக்கி இழப்பதைநான் உணர்ந்தேன்" .1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன பிரதமர் மோடி அறிவித்தபோது, கூறிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்இவை.  மோடியின்இந்த  முயற்சியால், கருப்புப்பண முதலைகள் ஆட்டம் கண்டுள்ளன. ரூபாய்நோட்டுகள் செல்லாது என அரசு திடீரெனஅறிவிப்பது புதிதல்ல. இதற்கு முன் இந்தியாவில்ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசும், அதற்குப் பின் மொரார்ஜி தேசாய்அரசும் இதை செய்து இருக்கின்றன.

1946 ஆம்ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின்கணக்கில் வராத  பணங்களைதடுக்கும் நோக்கில் ரூ1,000 மற்றும் ரூ10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது. இந்தியாசுதந்திரம் அடைந்த பிறகு 1954-ல்மக்களில் வசதிகளுக்காக  5,000 ரூபாய்நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், மீண்டும் அரசுக்குதலைவலியே மிஞ்சியது, கடத்தல்காரர்கள் லட்ச லட்சமான பணத்தைச்சுலபமாகக் கடத்க்ச் சென்றனர். வேறு வழியின்று 1978-ல்5000 ரூபாய் நோட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. அதன்பிறகுதற்போது தான் ரூபாய் நோட்டுகளுக்குமத்திய அரசு தடை விதித்துள்ளது.

 தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையின்பிண்ணனியில் மோடி அரசின், நம்பகத்தன்மைஅடங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  1946 மற்றும்1978-ல் இந்தியவின் வளர்ச்சியை தடுக்கும் மலையளவு  கருப்புபணம் இல்லை. ஆனால் 1990க்குபிறகு கருப்புப்பணம் பதுக்கல் என்பது புதுப் பரிமாணத்துடன்வளர்ந்தது.  ஆட்சிக்குவந்தவுடன் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தைமீட்டு, ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம்வழங்குவோம் என்கிற வாக்குறுதியை 2014-ம்ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி முன்வைத்தார். மோடிஅரசின் மிக முக்கியமான வாக்குறுதியாககருதப்பட்டது இது. ஆனால், ஆட்சிக்குவந்த பிறகு இந்த வாக்குறுதியைமோடி மறந்துவிட்டார் என்று நாடு முழுவதிலும்விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அதிரடிநடவடிக்கையால், தனது செல்வாக்கை மீட்டிருக்கிறார்மோடி

TNTET CASE......ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம்*


ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -

உச்சநீதிமன்றம் தீர்ப்பு.


5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.

Flash news:TNTET தீர்ப்பு -ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும்: உச்சநீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.

இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.

இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம்

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.

8/11/16

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கை மதுரையில் நவ.11ல் துவக்கம்

மதுரை: மதுரை ரேஸ்கோர்சில் ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர் பதவிகளுக்கு ஆள் சேர்க்கை முகாம் நவ., 11 முதல் 16 வரை நடக்கிறது.நவ., 11ல் தர்மபுரி,தேனி; 12ல் மதுரை; 13ல் திண்டுக்கல், கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தினர் பங்கேற்கலாம். விண்ணப்பித்தவர்கள் அனுமதி அட்டையை www.joinindianarmy.nic.inல் பதவிறக்கம் செய்யலாம்.

'அதை தேர்வின் போது கொண்டு வர வேண்டும்' என ராணுவ தேர்வு இயக்குனர் பிக்ராம் டோக்ரா தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற பணி : சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: உயர் நீதிமன்ற பணி நியமனங்களுக்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 14 முதல், 17 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில், கணினி இயக்குபவர், தட்டச்சர், காசாளர், மற்றும் ஒளி நகல் எடுப்பவர் பதவிகளில், 290 காலியிடங்களுக்கு, ஆக., 28ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 714 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு, நவ., 14 முதல், 17 வரை, சென்னை, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அலுவலத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணி நிறைவு நாளில் பி.எப்., பணம்

மதுரை: மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இதற்கு, மண்டல கமிஷனர் ரபீந்திர சமல் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊழல் கண்காணிப்பு வார விழா நடத்தப்படுகிறது.
துறை அதிகாரிகள் வெளிப்படை தன்மையையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களின் சேவை அளிப்பதில் ஏற்படும் தாமதமே ஊழலின் துவக்கம். எனவே, ஏழு நாட்களுக்குள் அவர்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்.பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை தீர்த்து வைப்பதில் மதுரை பி.எப்., மண்டல அலுவலகம், இந்தியாவிலேயே 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்திற்கு வருவதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.இனி, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பணி காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, அவர் சார்ந்த நிறுவனங்களிடமிருந்து, அவரது ஆவணங்கள் பெறப்படும். இதன் மூலம், அவர் பணி நிறைவு செய்யும் நாளில், பி.எப்., பணத்தை பெறும்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.மண்டல உதவி கமிஷனர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டம் 80 லட்சம் குடும்பங்கள் 'ரெடி'

அனைத்து உறுப்பினர்களின், 'ஆதார்' விபரமும் வழங்கிய, 80 லட்சம் குடும்பங்களுக்கு, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில், தற்போதுள்ள காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அக்கருவியில், ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின், 'ஆதார்' அட்டை விபரம் பதியப்படுகிறது. அதன் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.இப்பணியை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், அக்டோபரில் துவங்கி, டிச., 31க்குள், அனைத்து மாவட்ட மக்களுக்கும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கதிட்டமிடப்பட்டது. பலர், ஆதார் விபரம் தராததால், இப்பணி தாமதமானது.


திட்டமிட்டபடி

இந்நிலையில், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரத்தை வழங்கிய குடும்பங்களுக்கு மட்டும், விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்போர் தான், ஆதார் விபரம் தராமல் உள்ளனர். இதனால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி,திட்டமிட்டபடி துவங்கவில்லை. தற்போது, 80 லட்சம் குடும்பங்கள், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்களையும் வழங்கியுள்ளன.
அரசு ஒப்புதல் அளித்தால், முதல் கட்டமாக, அவர்களுக்கு, டிச., துவக்கத்தில் ஸ்மார்ட்கார்டு வழங்கப்படும். பின், ஆதார் விபரம் வழங்குவதற்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்டு வழங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


எத்தனை பேர்?


தமிழகத்தில், 2.06 கோடி ரேஷன் கார்டுகளில், 7.87 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி, 4.96 கோடி பேர் மட்டுமே ஆதார் விபரம் வழங்கியுள்ளனர். மீதமுள்ள, 2.91 கோடி பேர், விபரம் தரவில்லை.

வட்டி தள்ளுபடி அரசாணை எப்போது? : முதல்வர் அனுமதித்தும் தாமதம்

வீட்டு வசதி வாரியத்தில், தவணை கட்ட தவறியோருக்கு, வட்டி தள்ளுபடி திட்டத்தை, ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க முதல்வர் அனுமதித்தும், அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
நிலுவை தொகை : தமிழகத்தில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள், முறையாக தவணை செலுத்தாததால், வட்டி, அபராத வட்டி ஆகியவை சேர்ந்து நிலுவைத் தொகை அதிகரித்து விடுகிறது. இதனால், அவர்கள் விற்பனை பத்திரம் பெற முடிவதில்லை.
இதையடுத்து, அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி, இறுதி விலை வித்தியாச தொகை ஆகியவற்றில், குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்யும் திட்டம், 2011ல் அறிவிக்கப்பட்டது; பின், 2014 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, 14 ஆயிரத்து, 992 பேர் நிலுவைத் தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெற்றனர். மேலும், 23 ஆயிரத்து, 600 பேர் நிலுவைத் தொகையை செலுத்தாததால், விற்பனை பத்திரம் பெற முடியவில்லை. அவர்கள் நலன் கருதி, அபராத வட்டி தள்ளுபடி திட்டம், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என, செப்., 17ல், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை.அரசு ஒப்புதல்
இது குறித்து, வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
முதல்வர் அனுமதி அளித்தும், அரசாணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வீட்டு வசதி துறை செயலருக்கு, நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்றார். 

துணைவேந்தர் கையெழுத்து: சான்றிதழில் கட்டாயமா?

சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்த தாண்டவன், ஜனவரியில் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டு, இந்த குழு, அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
துணைவேந்தர் இல்லாததால், பல்கலை நிர்வாகம், உயர்கல்வி செயலர் கார்த்திக் பொறுப்பில் உள்ளது. இந்நிலையில், பட்டமளிப்பு விழா நடத்த, பல்கலையில் முடிவு எடுக்கப்பட்டது. பட்டச் சான்றிதழில், துணை வேந்தருக்கு பதில், கார்த்திக் கையெழுத்திட முடிவானது. அதற்கு, சிண்டிகேட் கூட்டத்தில், உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த பிரச்னை சட்டத் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம், துணை வேந்தர் கையெழுத்து இல்லாமல், பட்டச் சான்றிதழ் வழங்கலாமா; அதற்கு, பல்கலை விதிகளில் இடம் உள்ளதா என, விதிகளை புரட்டிப் பார்க்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது. இந்த ஆய்வுக்கு பின்னரே, பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என, தெரிகிறது

பிழைப்பு ஊதியமும் 'கட்:' தலைவருக்கு சிக்கல்

கல்வித் துறையால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, கலை ஆசிரியர் சங்க தலைவருக்கு, இரு மாதங்களாக, பிழைப்பு ஊதியம் வழங்காததால், போராட்டம் நடத்துவது குறித்து, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார். இவர், கல்வித் துறையின் பல பிரச்னைகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, உயரதிகாரிகளிடம் மனு அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதனால், இரு மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தருவதாகவும், இவர் மீது, கல்வித் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், ஆசிரியர் ராஜ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின், விதிகளின்படி ஊதியத்தில், 50 சதவீதத்தை பிழைப்பு ஊதியமாக வழங்க வேண்டும்; அதுவும், வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. 'பிழைப்பு ஊதியமாவது வழங்க வேண்டும்' எனக்கோரி, ராஜ்குமார் சார்பில், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், சென்னை வந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவிலும், பள்ளிக்கல்வி செயலரிடமும் மனு அளித்துள்ளார். இதேநிலை தொடர்ந்தால், சங்க உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்த, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. அதனால், குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு ஆலோசனைப்படி, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம், 2003ல் அமலுக்கு வந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

வல்லுனர் குழு : 'பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, பல போராட்டங்களையும் நடத்தினர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை சமாளிக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை தேர்தலுக்கு முன், வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், வல்லுனர் குழுவின் செயல்பாடுகள் துவங்கின. செப்டம்பரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், வல்லுனர் குழு கருத்து கேட்டது. அக்டோபர், 28ம் தேதியுடன், வல்லுனர் குழுவின் பதவிக்கலாம் முடிவடைந்து விட்டது. அதனால், குழுவினர் தங்களின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
ஆசிரியர்கள் உறுதி : இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, இரண்டு மாதங்களாகிறது; இன்னும் குழுவின் முடிவு தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடரக்கூடாது என்பதில், ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள், 85 பக்கங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் முக்கிய அம்சங்கள்:


* தேர்வர்கள் யாரும், சிபாரிசுக்காக, தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கக் கூடாது. சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்* அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது

* வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர, மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல் போன் எண், முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது

* விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக் கூடாது

* கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்

* தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச்,மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை, தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது* தேர்வர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்திருக்கக் கூடாது.இவ்வாறு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.


ஒரு மொழியில்மட்டும் எழுதலாம்


தேர்வர்கள் விடைத்தாளில், தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டில் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், இரண்டிலும் மாற்றி, மாற்றி ஒவ்வொரு பக்கத்திலும் எழுதக் கூடாது. விதிகளை மீறுவோர், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, முந்தைய விதிகளில் இருந்தது. தற்போது, எந்த காலம் வரை தடை என்பதை, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்யும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிடெட்' ஆசிரியர் தகுதி தேர்வு 'ரிசல்ட்'

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'சிடெட்' தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசு பள்ளி, தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'சிடெட்' என்ற, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, செப்., 18ல் நடந்தது.மொத்தம், 91 நகரங்களில், 851 மையங்களில், 6.53 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அதற்கான முடிவுகள், http:/www.ctet.nic.in/ என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன.

கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மதிப்பெண் பார்க்கும் முறை சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம்

சென்னை, கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மாணவர்கள் மதிப்பெண்களை பார்க்கும் முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

சென்னை பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் 129 உள்ளன. இதில் தன்னாட்சி கல்லூரிகள் 23 உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 512 மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.


இந்த கல்லூரிகள் தவிர தொலை தூரக்கல்வி நிறுவனமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் இந்தியா உள்பட 80 நாடுகளில் உள்ள மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.

தேர்வில் சீர்த்திருத்தம்
சென்னை பல்கலைக்கழக தேர்வில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுகிறதா? என்று சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் எஸ்.திருமகனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தொலை தூரகல்வி நிறுவனத்தில் படித்தால் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக எம்.பி.ஏ. படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தாலும் நல்ல வரவேற்பு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ளது.

வெளிநாடுகளில் சென்னை பல்கலைக்கழகதொலை தூரக்கல்வி நிறுவனத்தில் படிப்போருக்கு தேர்வு நடத்தும்போது வினாத்தாள்கள் ஆன்லைன் மூலம் தான் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டு பல்கலைக்கழகத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்திற்கு வினாக்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து மாணவ–மாணவிகளிடம் வழங்குவார்கள்.

தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுவதில்லை. அவர்கள் தாளில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதி ஒப்படைத்த விடைத்தாள்கள் ஒரு வாரத்திற்குள் கூரியர் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்கிறது.

ஆன்லைன் மூலம் தேர்வு
இப்போது சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

அவ்வாறு ஆன்லைனில் முதல் கட்டமாக 2 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அவை ஆப்ஜெக்டிவ் டைப் ஆக இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும். 4 பதிலில் ஒன்று சரியாக இருக்கும். 3 தவறாக இருக்கும். மாணவ–மாணவிகள் காப்பி அடிக்காமல் இருக்க கேள்விகளின் நம்பரில் மாற்றம் இருக்கும். ஆனால் கேள்விகள் ஒன்றாக தான் இருக்கும்.

உடனடியாக மதிப்பெண் தெரியும் முறை
2 மணி 45 மணிக்கு குறைவாக எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில் தேர்வு எழுதி முடிக்கும் போது அவர்கள் எழுதிய தேர்வு கம்ப்யூட்டரில் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் உடனடியாக தெரியும்.

அதாவது தேர்வு எழுதி முடிக்கும்போது மதிப்பெண் தெரிந்து விடும். இந்த புதிய முறை அடுத்த கல்வி ஆண்டில் (2017–2018–ம் ஆண்டு) சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த முறை நன்றாக இருந்தால் தொலை தூரக்கல்வியிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முறை செனட், சிண்டிகேட் கூட்டத்தின் அனுமதி பெற்று பின்னர் கொண்டுவரப்படுகிறது. ஆன்லைனில் கம்ப்யூட்டரில் தேர்வு நடத்தும்போது எந்த கல்லூரியிலாவது கம்ப்யூட்டர் வசதி இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் மூலம் கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இந்த முறையில் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் தேவை இல்லை.  இவ்வாறு எஸ்.திருமகன் தெரிவித்தார்.

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 37-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-1998 மற்றும் 1-1-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித்தகுதி: பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். நாளை (8-11-2016) முதல் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

சென்னை, தனியார் பள்ளிகளுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் 3 கல்வியாளர்களை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–


தற்காலிக அங்கீகாரம்
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள எந்தவொரு அடிப்படை தகுதிகளையும் கடை பிடிக்காமல், கடந்த 2004–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசும், ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக அங்கீகாரத்தை வழங்கி வருகின்றன.

இறுதியாக கடந்த மே மாதம் 31–ந்தேதி வரை ஒரே ஒருமுறை என்ற அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு பல பள்ளிகள் தேவையான நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை நீட்டிக்க கூடாது.

செயலாளர் ஆஜர்
சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடவும், அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா நேரில் ஆஜரானார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ஒரு வகுப்புக்கு எவ்வளவு நிலம் தேவை? என்பது தொடர்பான ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

கால அவகாசம்
பின்னர் அவர், ‘ஒரு வகுப்பிற்கு தேவைப்படும் நிலத்தின் அளவை தீர்மானித்து, இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 5 பிரிவுகள் வரை உள்ளன. இந்த பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும்? என்பதையும் கணக்கிட்டுள்ளோம். இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழு முன்பு வைத்து, ஒப்புதல் பெற்ற பின் உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

கல்வியாளர் நியமனம்
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

அரசு அமைத்த நிபுணர்கள் குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை. அரசு அதிகாரிகள் தான் உள்ளனர். கல்வியாளர்களை நியமித்தால் மட்டுமே குழுவின் நோக்கம் நிறைவேறும். எனவே கல்வியாளர்கள் எஸ்.எல்.சிட்டிபாபு, லலிதா, எஸ்.எஸ்.ராஜகோபால் ஆகியோரை அரசு நியமித்த நிபுணர்கள் குழுவில் சேர்த்து உத்தரவிடுகிறோம்.

இந்த குழுவில் உள்ளவர்கள், கும்பகோணம் கோர விபத்து சம்பவம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை மனதில் வைத்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆலோசிக்கவேண்டும்
நிலம் தொடர்பான விதிமுறைகளை சரியாக கணிக்க வேண்டும். இந்த குழுவில் இடம் பெற்ற நிபுணர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து 4 வாரத்தில் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பிளஸ்-2 படித்தவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள்.


தற்போது 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 37-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-1998 மற்றும் 1-1-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். நாளை (8-11-2016) முதல் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

பட்டதாரிகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகத்தில் பணி

மத்திய அமைச்சரவை செயகத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 11 Despatch Officer, Attache பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: புதுதில்லி
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Director - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100/- + தர ஊதியம் ரூ.7600/5400
பணி: Joint Deputy Director - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Senior Para Despatch Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Para Despatch Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Junior Para Despatch Officer - 03
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Assistant Fire Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Attache (Junior Time Scale) - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
தகுதி: அரசு அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:   அதிகாரப்பூர்வ இணையதளமான www.cabsec.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Director (Pers B), Post Box no. 3003, Lodhi Road Post Office, New Delhi - 110003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_47_1617b.pdf, http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_45_1617b.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2016 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - தேர்வு முடிவு வெளீயீடு ( Result Announced CTET-SEP 2016 )

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. அதனால், குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு ஆலோசனைப்படி, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம், 2003ல் அமலுக்கு வந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


வல்லுனர் குழு : 'பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, பல போராட்டங்களையும் நடத்தினர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை சமாளிக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை தேர்தலுக்கு முன், வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், வல்லுனர் குழுவின் செயல்பாடுகள் துவங்கின. செப்டம்பரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், வல்லுனர் குழு கருத்து கேட்டது. அக்டோபர், 28ம் தேதியுடன், வல்லுனர் குழுவின் பதவிக்கலாம் முடிவடைந்து விட்டது. அதனால், குழுவினர் தங்களின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
ஆசிரியர்கள் உறுதி : இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, இரண்டு மாதங்களாகிறது; இன்னும் குழுவின் முடிவு தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடரக்கூடாது என்பதில், ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் சாதிக்கும் பெண்

ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் இளம்பெண் சாதனை நிகழ்த்தி வருகிறார்.சாயல்குடி அருகே குதிரைமொழி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி,28. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். 

இவரது கணவர் விவசாயி விக்னேஷ் ராம்,33. இவர்களுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் விவசாயம் நிலம் உவர்ப்பு தன்மை உடையதாக உள்ளது.


இருந்தும் மனம் தளராத தம்பதியினர் இருவரும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறையினரிடம் ஆலோசனைகள் பெற்று அந்த நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளனர். மா, புளி, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, நார்த்தங்காய், கொடுக்காப்புளி, நாவல், தென்னை, தேக்கு உள்ளிட்ட பலன்தரும் மரங்களை நடவு செய்துள்ளனர். ஊடு பயிராக கால்நடைகளுக்கான கட்டைப்புல் சாகுபடி செய்துள்ளனர். பயிர்களுக்கு இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மரங்கள் பலனளிக்க துவங்கியுள்ளதால் தம்பதியினர் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

விவசாயி ஸ்ரீதேவி கூறுகையில்,“ ஆசிரியர் பயிற்சி முடித்த பின்னர், கிடைத்த அரசு வேலையை உதறிவிட்டு கணவருடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் வகை, வகையான பலன்தரும் மரங்களை நட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டிவருகிறோம். விவசாயத்திற்கு பயன்படாத உவர் மண்ணை, மண் மாதிரி மூலம் ஆய்வு செய்து, அதிகளவில் மக்கிய இயற்கை உரங்களான கால்நடை கழிவுகள், மண்புழு உரம் இவற்றின் மூலம் நுண்ணுாட்டம் செய்து விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றியுள்ளோம். 

இங்கு 15 அடியில் நல்ல தண்ணீர் கிடைப்பதால், கிணற்று பாசனத்தில் மகசூல் ஈட்ட முடிகிறது. பெரும்பாலான நேரங்களை விவசாயத்தில் செலவிடுகிறேன். மாலையில் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கிறேன். இதுவரை வேளாண்மைத்துறையின் மூலம் எந்தவித உதவிகளும், இலவச மின்சாரம், மானியமும் பெறவில்லை. அரசு ஊக்குவித்தால், என்னைப்போன்ற படித்த பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும்,” என்றார்.

1தண்ணீர் நிறைய குடியுங்கள்

SABL ஏற்கக் கூடிய ஒன்றா?

தீபாவளி

ஆதார் எண் வங்கியுடன் இணைத்து இருந்தால் இலவச இருப்பு தொகை அறியலாம் Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள்

இன்றைய மருத்துவ பலன்

ஈ. வெ. ராமசாமி

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சோதனை

ஒரு பகுத்தறிவுவாதிக்கும்

குங்குமப்பூ

குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்

சித்தர்கள் சமாதியான இடம்

சின்ன சின்ன கை வைத்தியங்கள்

சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா?

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வைத்தியம் செய்யும் முறை

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ

நடைப்பயிற்சியின் நன்மைகள்

நாம் - முதல் தலைமுறை,

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்

படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்!

மனம் கலங்காதிருக்க

மேட்டுர் அணை வரலாறு

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வைத்தியம் செய்யும் முறை

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா

ஹெல்மெட்டின் பணி என்ன?

7/11/16

பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவது தவிர்த்தல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது - எந்தவித அரசியலும் இல்லை: ஜாவடேகர்

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசினார். சென்னையில் பாரதிய ஜெயின் சங்காதனா (Bharatiya jain sanghatana) அமைப்பின் சார்பில், -இந்தியாவின் பள்ளி கல்வியில் உள்ள சவால்கள்- என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: நமது நாட்டின் கல்வி முறையில் புதுமையான முறைகள் அவசியமாகும். எல்லா துறைகளிலும், தரமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, நமது நாட்டின் கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
அரசியல் இல்லை...
கல்வியை அடுத்த நிலைக்கு முன்னெடுத்து செல்லும் நோக்கில், புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இவற்றில் எந்தவித அரசியலும் இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் ஏற்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் அரசியலமைப்பு சட்டத்தில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சிதைக்கப்படாது. கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது, இறுதியானது அல்ல.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், பல்வேறு தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொண்டே இறுதி செய்யப்படும். ஆனால், தமிழகம், கேரளத்தில் சரியான புரிதல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவசியமற்றது.
நவம்பர் 10-ஆம் தேதி அனைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து மாநிலத்திலுள்ள நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, நல்ல மனித நேயத்தை வளர்க்கவும், புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். மேலும் சக மனிதர்களை, மனிதர்களாக மதிக்கவும் பயன்படும் என்றார்.

புதிய விதிப்படி ஐ.ஐ.டி., 'அட்மிஷன்' மாணவர் சேர்க்கை கமிட்டி அமைப்பு

புதிய விதிப்படி, உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய அரசின், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வுப்படி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை, இத்தேர்வில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் என்ற முறை இருந்தது.


இந்த ஆண்டு முதல், புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, பிளஸ் 2 பொதுத்தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். பட்டியலின தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல, ஜே.இ.இ., தேர்வு முடிந்து, அதன் தரவரிசை பட்டியலில், ஏற்கனவே இருந்தது போல், பிளஸ் 2 மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக சேர்க்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன், புதிய முறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியையும், 
மத்திய அரசு அமைத்துள்ளது. 

கமிட்டியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, என்.ஐ.டி.,க்கள் மற்றும் ஐ.ஐ.டி.,க்களுக்கான இயக்குனர்கள், தேசிய தகவல் மைய உறுப்பினர், மத்திய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில் ஒருவர், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் வுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெறுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது

கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா?

ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்.தமிழக அரசு பள்ளிகளில், 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகமாகின. அப்போது, கணினி பட்டப்படிப்பு இல்லாததால், கணினி பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக அரசு நியமித்தது. பின், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இதில், இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பி.எஸ்சி., - பி.எட்., பட்டம் பெற்று, ஆசிரியர் வேலை இன்றி, திணறி வருகின்றனர்.

கணினி அறிவியல் படிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாமல், கணினி பட்டதாரிகள் தவிக்கின்றனர்.'அரசு விரைந்து முடிவு எடுத்து, கணினி பட்டதாரிகளுக்கு, அரசு பணி வழங்க முன்வர வேண்டும்' என, கணினி பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பல்கலை சிண்டிகேட் தேர்தல்:கல்வி துறை இயக்குனர்கள் புறக்கணிப்பு

சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில், வரலாற்று துறை பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓட்டளிக்காமல், அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.சென்னை பல்கலையின் நிர்வாக பணிகளை முடிவு செய்யும், உயர்ந்த அதிகார அமைப்பாக, சிண்டிகேட் செயல்படுகிறது. இதில், செனட் உறுப்பினர்கள் ஆறு பேர், பல்கலை இணைப்பு கல்லுாரிகள் அங்கம் வகிக்கும், அகாடமிக் கவுன்சில் சார்பில், நான்கு கல்லுாரி முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பர்.

மூன்று இடம் காலி
மேலும், சென்னை பல்கலையில் பணியாற்றுவோரில், மூத்த உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்களில் தலா, ஒருவர், சென்னை பல்கலை துறைத் தலைவர்களில், மூத்தவர்களில் தலா, மூன்று பேர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் எட்டு பேரும் உறுப்பினர்களாக இருப்பர். இதில், துறை தலைவர்களுக்கான மூன்று இடங்கள் காலியாக உள்ளன.
செனட் பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன், ஜூனில் ஓய்வு பெற்றார். அந்த காலியிடத்திற்கு, பல்கலை செனட் கூட்டத்தில், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. சென்னை பல்கலை ஆங்கில துறை தலைவர், ஆர்ம்ஸ்ட்ராங், வரலாற்று துறை தலைவர்எஸ்.எஸ்.சுந்தரம் இருவரும் போட்டியிட்டனர்.
பதிவான, 114 ஓட்டுகளில், 74 ஓட்டுகள் பெற்று, பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். புதிய சிண்டிகேட் உறுப்பினரின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள். சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் ஓட்டளிக்க, 128 செனட் உறுப்பினர்கள் தகுதி பெற்றனர். ஆனால், 114 ஓட்டுகளே பதிவாகின. 
ஓட்டளிக்கவில்லை
இதில், செனட் உறுப்பினர்களான, உயர் கல்வி செயலர் கார்த்திக், கல்லுாரி கல்வி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சட்டப்படிப்புகள் துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்ட, எட்டு அரசு உயர் அதிகாரிகள் ஓட்டளிக்கவில்லை. அரசு அதிகாரிகளே தேர்தலை புறக்கணித்தது, மாணவர்கள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது

5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள்... 12.60 லட்சம் பேர்!:10ம் வகுப்பு முதல் இன்ஜி., படித்தவர்கள் வரை பங்கேற்பு;ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு

5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள்... 12.60 லட்சம் பேர்!:10ம் வகுப்பு முதல் இன்ஜி., படித்தவர்கள் வரை பங்கேற்பு;ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்புசெப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்று காலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு, பிஎச்.டி., மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை, மொத்தம், 15.64 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்; அவர்களில், 80.5 சதவீதமாக, 12.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.


* சென்னை உட்பட, 301தாலுகாக்களில், 5,296 தேர்வு அறைகளில் தேர்வு நடந்தது. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட ஆய்வு அதிகாரிகள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் என, மொத்தம், 88 ஆயிரத்து, 810 பேரும்; பறக் கும் படை அதிகாரிகள், 218 பேரும், தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர்

* தேர்வுக்கு வந்தவர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், கைப்பை உள்ளிட் டவை, தேர்வறையில் அனுமதிக்கப் படவில்லை. 

'ரிசல்ட்' எப்போது?

சென்னையில் தேர்வு நடைபெற்ற மையங் களை,டி.என்.பி.எஸ்.சி.,தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகி யோர் பார்வையிட்டனர். பின், அருள்மொழி அளித்த பேட்டி:

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஓராண்டில், 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வு களும் நடத்தப்பட்டு; 22 முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜூன், 16 வரை நடந்த அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும்அறிவிக்கப்பட்டு விட்டன. மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு, வரும் வாரத்தில் வெளியாகும்.

சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, உயர் பதவிகளில் காலியாக உள்ள, 85 பணிஇடங் களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு, வரும், 9ல், அறிவிக்கப்படும். தேர்வாணையத் தின் திருத்தப்பட்ட அறிவுரைகள், இன்று வெளியிடப்படும். இந்த விதிகள், அடுத்து வரும் தேர்வுகள் அனைத்துக்கும் பொருந்தும். 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஆறு மாதங்களுக் குள் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வில் புதுமண தம்பதி 

தர்மபுரியைச் சேர்ந்த மணமக்கள் மணிமாறன் - சித்ரா ஆகியோர், நல்லம்பள்ளி அரசு பள்ளி மற்றும் தர்மபுரி குட்ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில், மணக்கோலத்தில் தேர்வு எழுதினர். 
மணமகன் மணிமாறன் கூறியதாவது:

பி.இ., படித்த எனக்கும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்த சித்ராவுக்கும், திருமணம் நிச்சயம் செய்யும் முன்னரே, இருவரும், 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பித்துஇருந்தோம். தேர்வு நாளில், எங்கள் திருமணத்தை நடத்த, பெரியோர்கள் முடிவு செய்தனர். 

அதனால், அதிகாலை, 5:00 மணிக்கு திருமணம் முடிந்ததும்,இருவரும் அவரவர் தேர்வு மையத் தில், தேர்வில் பங்கேற்றோம்; தேர்ச்சி பெற்று, இருவரும் அரசு வேலையில் சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டம்

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில், சிறப்பு திட்டத்தை, தமிழக கல்வித்துறை மேற்கொண்டுஉள்ளது. 

இதன்படி, பல்வேறு மாவட்டங்களில், மாவட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட முயற்சியில், பல முன்னோடி பயிற்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.சென்னையில், 'பெஸ்ட்;' சிவகங்கை, ராமநாதபுரத்தில்,'எலைட்' திட்டம் போன்றவை இவற்றில் அடங்கும். தர்மபுரி மாவட்டத்தில், காலாண்டு தேர்வில் தோல்வியடைந்த, 5,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக, தனி பயிற்சி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பின், பாடங்கள் படிக்கும் முறை குறித்து கேட்டறிய, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும், விளக்கம் கேட்கும் வகையில், ஆசிரியர்களின் மொபைல் போன் எண்கள் தரப்பட்டு உள்ளன

10 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவுகளில் காலியாகவுள்ள 5,451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில், தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:-
இந்தத் தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். விண்ணப்பித்தவர்களில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
2014-இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.
10 தேர்வுகளுக்கான முடிவு:மேலும், 2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும்.
இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
திருத்திய வரையறை இன்று வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் திங்கள்கிழமை (நவ.7) பதிவேற்றம் செய்யப்படும். இவற்றைத் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இனி அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும்.
நவம்பர் 9-இல் குரூப்-1 தேர்வு அறிவிக்கை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 81 காலி இடங்களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை நவம்பர் 9-இல் வெளியிடப்பட உள்ளது என்றார் அவர். 

பள்ளி, கல்லூரிகளில் துப்புரவு பணியாளர்: காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி என பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலிங்கம் தெரிவித்துள்ளார்.

 அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் விடுதிகளில் காலியாக உள்ள 2 பெண் முழு நேர துப்புரவு பணியாளர்கள், தலா 9 ஆண் பெண் பகுதிநேர துப்புரவு பணியாளர் பணியிடங் கள் சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2016 நவ., 1 தேதியில் ஆதி திராவிடர் மற்றும் பழஙங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற் குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபி னருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பெயர் மற்றும் முகவரி, கல்வி தகுதி, ஜாதி, முன்னுரி மை விபரம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, குடும்ப அடடை முதலான நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு நவ., 15 க்குள் அனுப்ப வேண்டும். தகுதி யானவர்களுக்கு நேர்கானல் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார். 

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான திருத்திய வரையறை வெளியீடு: அருள்மொழி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கான வரையறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி கூறினார்.


இந்த திருத்திய வரையறைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய 5,451 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் நடத்தப்பட்டத் இந்தத் தேர்வில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று தேர்வெழுதினர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் 5,296 மையங்களில் நடத்தப்பட்ட இந்த குரூப்-4 தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு:

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த 12 மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

2014 இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.

மேலும்,  2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதிவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும்.

இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

திருத்திய வரையறை: 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் திங்கள்கிழமை (நவ.7) பதிவேற்றம் செய்யப்படும். இவற்றைத் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வாணையத்தால் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும்.

குரூப்-1 தேர்வு அறிவிக்கை:

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 81 காலி இடங்களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. 
இதற்கான அறிவிக்கை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்.

தமிழ்நாட்டில் 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த உத்தரவு

ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டமானது மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித கற்றலை மகிழ்ச்சியான கற்றலாக அமைப்பதற்கும், புதுமை செய்வதில் கவனம் செலுத்தவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திட்டத்தின் நோக்கத்தினை மாணவர்கள் பெறும் வகையில், அறிவியல் கண்காட்சிகள் குறுவளமைய அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு இந்த கண்காட்சிக்கான தலைப்பு தேசிய வளர்ச்சியில் அறிவில், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு (Science, Technology and Mathematics for Nation Building) ஆகும்.

இத் தலைப்பில் உடல்நலம், தொழிற்துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, நிலையான சுற்றுச் சூழலுக்கான புதுப்பிக்கத்தக்க வளங்களை கண்டுபிடித்தல், உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள், அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவை உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கிய அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகள் (Models) மற்றும் திட்டங்களை (Projects) மாணவர்கள் தயார் செய்ய வேண்டும்.

குறுவளமையம் அமைந்துள்ள பள்ளியிலே அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மாநிலத்தில் 3975 குறுவளமையங்களில் நடைபெறும் இக் கண்காட்சிக்கு பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 134 குறுவளமையங்களில் நவம்பர் 25-ம் தேதிக்குள் இந்த அறிவியல் கண்காட்சி நடத்தி முடிக்கப்படும்.

தொடக்கப் பள்ளிகள் (1 முதல் 5 வகுப்பு) 2 மாதிரிகளும், நடுநிலைப் பள்ளிகளில் (1-5 வகுப்பு 2 மாதிரிகளும் 6-8 வகுப்பு 2 மாதிரிகளும்) 4 மாதிரிகள் தயார் செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் 6-8 வகுப்பு மாணவர்கள் இரு மாதிரிகளும் தயார் செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் திட்டங்களின் எண்ணிக்கைத் தவிர்த்து, மாணவர்கள் தாங்களாக முன் வந்து செய்யும் மாதிரிகள் ஊக்குவிக்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் விலையில்லா மற்றும் விலைகுறைந்த பொருட்களைப் பயன்படுத்தி மாதிரிகள் செய்ய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மலரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும், குறுவளமையம் அளவில் சிறந்த மூன்று மாதிரிகள் நடுவர் குழு தேர்வு செய்து முறையே ரூ.400, ரூ.300, ரூ.200 வழங்கும்.

சிறப்பாக பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் படைப்பாற்றல், திறமை, ஈடுபாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பள்ளியினை நடுவர் குழு தேர்வு செய்து அவர்களின் கூட்டு முயற்சிக்காக ரூ.500 மதிப்புள்ள கேடயம் பரிசாக வழங்கும்.

கண்காட்சியை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது - எந்தவித அரசியலும் இல்லை: ஜாவடேகர்

சென்னை,புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசினார்.
சென்னையில் பாரதிய ஜெயின் சங்காதனா (Bharatiya jain sanghatana) அமைப்பின் சார்பில், -இந்தியாவின் பள்ளி கல்வியில் உள்ள சவால்கள்- என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: நமது நாட்டின் கல்வி முறையில் புதுமையான முறைகள் அவசியமாகும். எல்லா துறைகளிலும், தரமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, நமது நாட்டின் கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
அரசியல் இல்லை...
கல்வியை அடுத்த நிலைக்கு முன்னெடுத்து செல்லும் நோக்கில், புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இவற்றில் எந்தவித அரசியலும் இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் ஏற்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் அரசியலமைப்பு சட்டத்தில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சிதைக்கப்படாது. கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது, இறுதியானது அல்ல.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், பல்வேறு தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொண்டே இறுதி செய்யப்படும். ஆனால், தமிழகம், கேரளத்தில் சரியான புரிதல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவசியமற்றது.
நவம்பர் 10-ஆம் தேதி அனைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து மாநிலத்திலுள்ள நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, நல்ல மனித நேயத்தை வளர்க்கவும், புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். மேலும் சக மனிதர்களை, மனிதர்களாக மதிக்கவும் பயன்படும் என்றார்.

போலி 10 ரூபாய் காயின் வலம் வருகிறது... கவனமாக இருங்க..