யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/1/17

Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.

கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன்இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.


இந்த புதிய அம்சமானது, பயனர்களின் எந்த இணைப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட பிற கருவிகளை ஒரே கூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் கூகுளின் இந்த அம்சத்தை Wi-Fi மற்றும் Hotspot அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம்.
இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டில் அவர்களின் Tablets-ஐயும் இணைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!

தமிழகம் முழுவதும் 1.1.2011 முதல் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் ரூபாய் 750 பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து உயர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய தொடர்ந்து நீதிமன்றத்தில் தனி ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்கப் போராடும் நிலையில் . தமிழகத்தில் பல
இடங்களில்தொடக்கக்க் கல்வித்துறையில் பதவி உயர்வில் 750த னி ஊதியத்தை அடிப்படை ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு மட்டும் வழங்கி பிறகு கழித்துவிடாமல் அடிப்படை ஊதியத்தோடு இணைத்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடைகள் வரும் நிலையில் ....நாமக்கல் மாவட்டம் .கொல்லிமலை ஒன்றியத்தில் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்றும் 3% கணக்கீட்டில் மட்டுமே தனி ஊதியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மிகை ஊதியம் பெற்று வந்த ஆசிரியர் ஒருவரின் ஊதியத்தை இன்று 24.01.2017 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பிடித்து ஆணை பிறப்பித்து உள்ளார் ....நமது வழக்கு பட்டியலில் வந்தும் விசாரணைக்கு வரவில்லை ..விரைவில் விசாரணைக்கு வரும் .....தனி ஊதிய முரண்பாடுகள் ஓர் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது ......
தகவல்:-திரு.சுரேஷ், ஆசிரியர்

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர். அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.

ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.


அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'

'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 


மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், இன்று முதல், ஜன., 29 வரை, தங்கள் ஹால் டிக்கெட்டை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்த வேண்டும். மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்றவை குறித்து, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாதோருக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அப்கிரேட் செய்தி போலியானது: மக்களே உஷார்!

ரிலையன்ஸ் ஜியோவில் உங்களது தினசரி டவுன்லோட் அளவை அதிகரிக்க வேண்டுமா? ஜியோ 4ஜி அப்கிரேஷன் என்று வரும் செய்தி போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது வெறும் போலி மட்டும் அல்ல என்றும், இந்த செய்தியின் மூலம், மக்களின் முக்கிய தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள், உங்களது தினசரி இணைய பயன்பாட்டை 1 ஜிபியில் இருந்து 10 ஜிபிக்கு அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று ஒரு லிங்க் வருகிறது.

அதனை க்ளிக் செய்தால் அதில், பயனாளரின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கேட்கப்படுகிறது. அனைத்தையும் பதிவு செய்து சப்மிட் செய்தால், இந்த லிங்க்கை உங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் அல்லது குறைந்தது 10 வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் என்று வாசகம் வருகிறது.
அந்த லிங், போலியான சலுகைகளை அறிவித்து, பயனாளர்களை உள்ளே நுழைய வைப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த லிங்கில், ரிலையன்ஸ் அல்லது ஜியோவுக்கு இந்த லிங்க் எந்த வகையிலும் தொடர்பில்லை என்றும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற போலியான லிங்குகளை நம்பி, பயனாளர்கள் தங்களது தகவல்களையும், அதை நண்பர்கள் குழுவிலும் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து விழுப்புரத்தில் அவர் கூறியதாவது: -பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.

அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.

சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.

SMC மூன்று நாட்கள் பயிற்சி பற்றிய செய்தி வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*- மொத்தம் மூன்று நாட்கள் *( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .

SMC மூன்று நாட்கள் பயிற்சி* நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

மேற்கூறிய பயிற்சிக்கு
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*


 ( அல்லது )
 *ஏதேனும் SMC உறுப்பினர்*

ஆக *மொத்தம் மூன்று பேர் ( 1  HM +  2 SMC members )*
 இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் .

*மேற்கூறிய பயிற்சிக்கு வரும் போது  ஈராசிரியர்பள்ளியில்*
*( 1 HM + 2 SMC members ) - Total 3 members*

*அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளியில்*
*( 1 HM + 3 SMC members) - Total 4 members*

அனைவரும் தங்கள் *STAMP SIZE SIZE PHOTO*
 இல்லாத நபர்களுக்கு *PASSPORT SIZE PHOTO*  எடுத்து வர வலியுறுத்தவும் .

SMC பயிற்சி நடைபெறும் இடங்கள்  ஆசிரியர் பயிற்றுநரைத் BRTE தொடர்பு கொண்டு    
 தெளிவு பெற வேண்டப் படுகிறது.

குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

சென்னை: அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று,
இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

திடீர் விடுமுறைகளால் தேங்கிய பாடங்கள்

பொங்கலுக்கு பின் அறிவிக்கப்பட்ட, திடீர் விடுமுறைகளை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, தினமும் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பரில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மறைவு வரை, பல நாட்கள் திடீர் விடுமுறை அளிக்கப்பட்டது. பின், 'வர்தா' புயல் தாக்குதலால், பள்ளிகளுக்கு, மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
பின், ஜனவரியில் நிலைமையை சமாளிக்கலாம் என, பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்த நிலையில், பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு நிற்காமல், ஜல்லிக்கட்டு போராட்டம், பந்த் மற்றும் கலவரம் என, நான்கு நாட்கள் வரை, பள்ளிகள் முறையாக இயங்கவில்லை.அதனால், பல பள்ளிகளில் பாடங்கள் நடத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், திருப்புதல் தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சியும் நடத்த முடியவில்லை. எனவே, நிலைமையை சமாளிக்க, தினமும் வழக்கமான காலை, மாலை சிறப்பு வகுப்புகளில், கூடுதலாக ஒரு மணி நேரம் பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளிலும், சிறப்பு வகுப்புகளை நடத்த, பள்ளிகள் முடிவு செய்துஉள்ளன.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுவாக, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்குவது மட்டுமே அங்குள்ள பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. கல்வி உரிமை சட்டப்படி, அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று விதி உள்ளது.

ஆனால், அத்தகைய கல்வி பணியில் இருக்கும் ஆசிரியர்களை கால்நடை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ரேஷன் கார்டு சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் பொதுப் பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறைவதுடன், மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதில் நாட்டம் குறைந்துவிடுகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. இதன்மூலம் வரும் பொதுத் தேர்வில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகளவில் குறையலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து 10 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்களிடம் பேசியபோது, ‘அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி தவிர, மற்ற பணிகளில் முழு நேரத்தையும் செலவிடுகின்றனர்.

கடந்த அரையாண்டு தேர்வுகளில் நாங்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. மூன்றாம் பருவ பாடங்களும் நிறைவு பெறவில்லை. இதே நிலை நீடித்தால், பொதுத் தேர்வில் பெயிலாகி விடுவோம் என்ற அச்சம் மாணவர்களிடம் நிலவி வருகிறது. இதனால் எங்களை தனியார் டியூஷன் சென்டர்களில் அதிக பணம் செலவழித்து பெற்றோர் சேர்த்துள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக அலைவதால், எங்களுக்கு பாடங்களில் உரிய கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்’ என்று மாணவர்கள் கூறுகின்றனர். இதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி மட்டுமல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்–்ட அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ‘தனியார் பள்ளிகளில் பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை கூடுதலாக ஒரு மணி நேரம் அமரவைத்து சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் எங்களுக்கு ஒரே நாளில் அனைத்து பாடங்களையும் படிப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது’ என்று தனியார் பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களின் கல்வி நேரம் வீணடிக்கக்கூடாது’ என பிரதமர் நரேந்திரமோடி ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள் குழு சமீபத்தில் ஆய்வு நடத்தி மத்திய மனிதவள அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி அல்லாத மற்ற பணிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அவர்களின் கவனம் கல்வியை தவிர, வேறு எதிலும் செல்லக்கூடாது’ என்று குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான புதிய பணி விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் என்று தமிழக கல்வித்துறை ஏற்கெனவே அட்டவணை வெளியிட்டுள்ளது.‘இன்னும் ஒரு மாதமே நடுவில் உள்ள நிலையில், பொது தேர்வுக்கு தயாராகும் அனைத்து பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க, சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?’ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். விடை கிடைக்குமா?

NMMS EXAM - Instruction Regarding Director Proceedings..

'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாகசெயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கழிப்பறைகள் நிறுவப்பட்டு வருகின்றன.சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களைச்சார்ந்த குழந்தைகள் பயன் பெறும் வகையில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தி வருகிறது என ஆளுநர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு

தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது.

காலியிட விவரம்: இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1016 இடங்களும், தீயணைப்போர் 1512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி :பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1993 ஜூலை 1க்கு பின்னரும், 1999 ஜூலை 1 க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். இதிலிருந்து பி.சி, எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.உடல்கூறு அளவுகள்: உயரம் குறைந்த அளவு 170 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 167 செ.மீ.,) இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., மார்பு விரிவாக்கம் குறைந்த 5 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் உயரம் 159 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 157 செ.மீ.,)இருக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:தேர்வு செய்யப் பட்ட 284 அஞ்சல் நிலையங்களில், ரூ.30 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் ரூ. 135.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மதிப்பெண் விவரம்: மொத்த மதிப்பெண்கள் 100 ( எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள்,என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள்)

தேர்ச்சி முறை: முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முழு விவரங்களுக்கு:http://www.tnusrb.tn.gov.in/

RTI தகவல்: CPSல் இதுவரையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அரசின் பங்களிப்புவிபரம்...

பேஸ்புக் பயன்படுத்துவோர்களுக்கு அதிர்ச்சி தகவல்: 5 ல் ஒருவரின் கணக்கில் மற்றவர்கள் ஊடுருவல்.

சமூக வலைத்தங்களில் அதிகமானோரின் ஆதரவைப் பெற்று 2012ம் ஆண்டே 100 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாண்டி நிற்கும் பேஸ்புக் நிறுனம் தற்போது 2016ம் ஆண்டின் கணக்குப் படி 176 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது.


இதுகுறித்து பிரிட்டன், கொலம்பியா, பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒரு அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது.

முகநூல் என்று சொல்லப்படும் பேஸ்புக் பயன்படுத்துவோர்களில் 5 ல் ஒருவரின் கணக்கை அவருக்கு தெரியாமல், அவரது நண்பர், காதலர், அல்லது குடும்ப உறுப்பினர்களே ரகசியமாக ஊடுருவி பார்க்கின்றனர் என தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் ஸ்மார் போன், வழியாக இந்த ஊடுருவல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. 

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து விழுப்புரத்தில் அவர் கூறியதாவது: -பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.

அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.

சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தினம் வரலாறு!(ஒரு சிறப்பு பார்வை)

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும்
நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். 
ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர்.

அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1498 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

கல்விச்சிறகுகள்

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்:

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!!

Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.

கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன்இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அம்சமானது, பயனர்களின் எந்த இணைப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட பிற கருவிகளை ஒரேகூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கப்படுகிறது.மேலும் கூகுளின் இந்த அம்சத்தை Wi-Fi மற்றும் Hotspot அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம். இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டில் அவர்களின் Tablets-ஐயும் இணைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

750 PP - COURT NEWS...

அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!

தமிழகம் முழுவதும் 1.1.2011 முதல் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் ரூபாய் 750 பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து உயர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய தொடர்ந்து நீதிமன்றத்தில் தனி ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்கப் போராடும் நிலையில் .

தமிழகத்தில் பல இடங்களில்தொடக்கக்க் கல்வித்துறையில் பதவி உயர்வில்750த னி ஊதியத்தை அடிப்படை ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு மட்டும் வழங்கி பிறகு கழித்துவிடாமல் அடிப்படை ஊதியத்தோடு இணைத்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடைகள் வரும் நிலையில்.... நாமக்கல் மாவட்டம் .கொல்லிமலை ஒன்றியத்தில் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்றும் 3% கணக்கீட்டில் மட்டுமே தனி ஊதியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மிகைஊதியம் பெற்று வந்த ஆசிரியர் ஒருவரின் ஊதியத்தை இன்று 24.01.2017 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பிடித்து ஆணை பிறப்பித்து உள்ளார் ....நமது வழக்கு பட்டியலில் வந்தும் விசாரணைக்கு வரவில்லை ..விரைவில்விசாரணைக்கு வரும்

.....தனி ஊதிய முரண்பாடுகள் ஓர் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது ......

தகவல்:-திரு.சுரேஷ், ஆசிரியர்.

ஜல்லிக்கட்டு மீதான 2016-ம் ஆண்டு அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தனது 2016-ம் ஆண்டு அறிவிப்பாணைகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
இதனை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தது மத்திய அரசு. இது தொடர்பான நீதிமன்ற அமர்வு ஜல்லிக்கட்டு மனு மீதான முடிவை எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியிடம் தெரிவித்தது.கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டது.

இந்தஅறிவிப்பாணை 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட அறிவிப்பாணையை மறுதலித்து வெளியிடப்பட்டதாகும்.பின்னர், 2014ஆம் ஆண்டு விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் மீண்டும் தடைவிதித்தது. இதனையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிப்பாணை பிறப்பித்தது மத்திய அரசு.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வடிவினால் இவ்விரு அறிவிப்பாணைகளுக்கும் தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது

+2 தனித் தேர்வர்களுக்கு புதன் முதல் ஹால்டிக்கெட்.

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை புதன்கிழமை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறி்ப்பு: 'வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) 25-ம் தேதி(புதன்கிழமை) முதல் 29-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பிரிண்ட் அவுட் என குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்துவிட்டுவிண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்தால் போதும்.மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23/1/17

ஜல்லிக்கட்டுக்கு எந்த தடை வந்தாலும் தமிழக அரசு முறியடிக்கும்: முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி!

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த தடை இனிமேல் வந்தாலும் அதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக முறியடிக்கும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின்படி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காக முதல்வர் பன்னீர்செல்வம் மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவர் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் தெரிவித்தததாவது:

முன்னர் தெரிவித்திருந்தபடி ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காக இங்கு வருகை தந்துள்ளேன்.ஆனால் அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் போது அங்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.    

மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிஅளித்துள்ளது. அதே போல காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதனையொட்டி பல இடங்களில் இன்று வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகள் சீறிப் பாய்ந்துள்ளன.   

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம்தான் நிரந்தர தீவும் கூட. இது தொடர்பான சட்ட முன்வரைவு விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த தடை இனிமேல் வந்தாலும் அதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக முறியடிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்! நிபுணர்கள் கருத்து

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இதன்படி, ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விட்டன. 
முக்கிய இடங்களில் நடத்த முடியாவிட்டாலும் அவசர சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.மத்திய அரசு இயற்றிய பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது. இதில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கைவிட மறுப்பு
'இந்த சட்டம் தற்காலிகமானது தான்; ஆறு மாதங்களுக்கு தான் செல்லும். இது தேவையில்லை; நிரந்தர சட்டம் தான் வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிடவும் மறுக்கின்றனர்.பார்லிமென்ட் அல்லது சட்டசபை நடக்கும் போது சட்ட மசோதா தாக்கல் செய்து, விவாதம் நடத்தி, அது நிறைவேறும் போது சட்டமாக மாறுகிறது. அதன்பின், அந்த சட்டத்துக்கு கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அப்போது, சட்டம் முழு வடிவம் பெறுகிறது.
சட்டசபையோ, பார்லிமென்ட்டோ கூடாத போது சூழ்நிலையை மற்றும் அவசர தன்மையை கருத்தில் கொண்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. அதாவது, சட்டசபை கூடும் வரை காத்திருக்காமல், அவசர தேவையை கருதி, அவசர சட்டம் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவசர சூழ்நிலை உள்ளது என்பதில் கவர்னர், ஜனாதிபதி திருப்தியடைய வேண்டும்.இந்த அவசர சட்டத்தின் ஆயுள், அதிகபட்சம் ஆறு மாதங்கள் தான்; சட்டசபை கூடியதும், ஆறே வாரங்களில் அவசர சட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். அவசர சட்டம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகலாம். இல்லையென்றால் புதிய சட்டமும் கொண்டு வரலாம்.
முதல்வர் உறுதி
'தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தொடர்பாக, இன்று துவங்க உள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்படும்; மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.இந்த அவசர சட்டம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அவசர சட்டம் என்பது தற்காலிகமானது தான்; ஆனால், இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது; அப்போது, அது நிரந்தமானதாகி விடும்.
ஒரு சட்டத்தை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தால், அது வெற்றி பெறாது; ஏனென்றால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 254(2)ன் கீழ், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால், சிலரது யூகங்களுக்கு அடிப்படை இல்லை. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது:தமிழக அரசு, 2009ல், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம், மத்திய சட்டத்துக்கு முரணாக இருந்ததால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்போது, மத்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால், மாநில சட்டத்துக்கும், மத்திய சட்டத்துக்கும் இடையே முரண்பாடு எழாது.சட்டசபை கூடாத போது அவசர சட்டம் தான் பிறப்பிக்க முடியும். சட்டசபை கூடும் போது அவசர சட்டத்தையே சட்டமாக நிறைவேற்றினால் போதும்; அது, சட்ட வடிவம் பெற்றுவிடும். அவசர சட்டத்துக்கும், நிரந்தர சட்டத்துக்கும் இது தான் வித்தியாசம். இதை புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரமுள்ளது
உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டருமான பி.வில்சன் கூறியதாவது:அவசர சட்டம் பற்றிய முழு தகவல்களும் கிடைக்கவில்லை. அரசின் உத்தரவை பார்த்தால், இந்த அவசர சட்டம், நீதிமன்றத்தின் பரிசீலனையின் போது நிற்காது. ஏனென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது.
அதேநேரத்தில், அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், பொதுவாக நீதிமன்றம் தடை விதிப்பதில்லை. அவசர சட்டம் பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றால் தான் தடை விதிக்க முடியும். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை, தமிழக அரசு, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது; இது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவசர சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள், மத்திய சட்டம் - 1960 பிரிவு மூன்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. 

விதிமுறைகள் விபரம்:ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர், அமைப்பு அல்லது குழு, கலெக்டரிடம் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டரின் அனுமதி கிடைத்ததும், ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள், இடம் ஆகியவற்றை அரசு வெளியிடும்அனுமதி தரும் கலெக்டர், போட்டி நடக்கும் இடத்தை பார்வையிட வேண்டும்போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் குறித்த விபரத்தை அளித்து, கலெக்டரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்வருவாய், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் இடம்பெற்ற, ஜல்லிக்கட்டு கமிட்டியை, கலெக்டர் அமைத்து, ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை, கண்காணிக்க வேண்டும்ஜல்லிக்கட்டு காளைகள், நோயால் பாதிக்கப்படவில்லை; போதை பொருட்களுக்கு ஆட்படவில்லை என்பதை, காவல் துறை நிபுணர்கள் உதவியுடன், கலெக்டர் உறுதி செய்ய வேண்டும் காளைகள் களத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், 20 நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், அவற்றுக்கு இடையே, 60 சதுர அடி அளவில், போதிய இடைவெளி அளிக்க வேண்டும்காளைகள் பாதுகாப்பாக உணர, காளையின் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், மழை, வெயில் பாதிக்காமல் கூடாரம் அமைக்க வேண்டும்காயம் இருக்கும் காளைகளை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்போதை பாதிப்புக்கு உள்ளான காளையை, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாதுகாளைகளை பரிசோதனை செய்யும் இடம், ஷாமியானா வசதியுடன் இருக்க வேண்டும்போட்டி நடக்கும் மைதானம், குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர், இடவசதி கொண்டதாக இருக்க வேண்டும்வாடிவாசலை மறித்தபடி, போட்டியாளர்கள் நிற்கக் கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15 மீட்டர் அல்லது, 30 வினாடிகள் அளவுக்கு அல்லது மூன்று துள்ளல்கள் வரை, போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும்போட்டியாளர்கள், காளையின் வால், கொம்பு ஆகியவற்றை பிடித்து, அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்தக் கூடாதுவாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் துாரத்தில், பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும்பொதுப்பணித் துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும்போட்டியாளர்களை, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்போட்டியாளர்கள் மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது

நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகள் பரவுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அறிவித்தது. தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் மட்டும், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், 'நீட்' தேர்வின்படியே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு உண்டா என்பது பற்றி, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவர்கள், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
அதே நேரம், 'நீட்' தேர்வு தேதியும், விண்ணப்ப பதிவுக்கான தேதியும், இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 'நீட்' தேர்வு குறித்து, பல்வேறு தகவல்கள் வதந்தியாக பரவுகின்றன. இது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் சரத்துக்கள்

GO 7 - AH3 Dept Date:21/1/17- Tamilnadu -Conduct of Jallikattu Rules 2017 - Notification issued

Image may contain: textImage may contain: text

ரூ.2 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செய்தால் வருமானவரி நோட்டீஸ்

செல்லாத நோட்டு அறிவிப்புக்குபின், இரண்டுலட்சம் ரூபாய்க்குஅதிகமாக வங்கிகளில், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான
வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.
மத்திய அரசின் செல்லாதரூபாய் நோட்டுதிட்டம், நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; இதை யடுத்து, பழைய நோட்டுகளைவங்கிகளில் டிபாசிட் செய்து கொள்ள அனுமதிவழங்கப் பட்டது. இதை பயன்படுத்தி, கறுப்புப் பணபதுக்கல் கும்பல், பல கோடிரூபாயை வங்கிகளில்டிபாசிட் செய்து, 'வெள்ளை' ஆக்கியது.
இதையடுத்து, 2 லட்சம் ரூபாய்க்குஅதிகமாக
டிபாசிட் செய்யப்பட்ட வங்கிகணக்குகளை ஆய்வுசெய்யும் பணியை, மத்திய அரசுமுடுக்கிவிட்டுள் ளது. இதுகுறித்து, மத்திய நேரடிவரிகள் துறைஅதிகாரிகள் கூறியதாவது:
ஏழை மக்களின், 'ஜன்தன்' வங்கி கணக்குகள்உட்பட,மற்றவர்கள்வங்கி கணக்குகளில், கறுப்பு பணமாகஇருந்த, பழையநோட்டுக்களை, 'டிபாசிட்' செய்து பெரும் தொகையைவெள்ளையாக்கியது உறுதியாகி உள்ளது.நாடு முழுவதும், செல்லாத நோட்டுஅறிவிப்புக்கு பின், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், டிபாசிட் செய்யப்பட்டவங்கி கணக்குகளின்எண்ணிக்கை, 60 லட்சம்; இவற்றில், 7.34 லட்சம் கோடிரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, விளக்கம் கோரி, வருமான வரித்துறையின்சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பும் நடவடிக்கைதுவங்கியுள்ளது.வட கிழக்குமாநிலங்களில் உள்ள வங்கிகளில், 10,700 கோடி ரூபாய்டிபாசிட் ஆகியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில், 16,000 கோடி ரூபாயும், மண்டல கிராமபுற வங்கிகளில், 13 ஆயிரம் கோடியும்டிபாசிட் ஆகியுள்ளது.
இந்த வங்கி கணக்குகளில், முறைகேடாக, பணம்,
'டிபாசிட்' செய்யப்பட்டது குறித்து, வருமான வரித்துறையுடன்இணைந்து, அமலாக்கபிரிவும், சி.பி.ஐ., எனப்படும் மத்தியபுலனாய்வு அமைப்பும்விசாரணையை துவக்கிஉள்ளது.
வங்கிகளில், சேமிப்பு மற்றும்நடப்பு கணக்குமட்டுமின்றி, கடன் கணக்குகளிலும், செலுத்தப் பட்டதொகை குறித்துமுழுமையாக விசாரணைநடைபெறும். இதில், முறைகேடு செய்யப்பட்டது உறுதியானால், கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

GPF shall carry interest @ 8% from 01.01.2017

அரசு ரூ.300 கோடி பாக்கி: தனியார் பள்ளிகள் புகார்

பெரம்பலுார்;-தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன்,
மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.சி., பள்ளிகளின்பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட நிர்வாகிகள்மாநாடு, பெரம்பலுாரில்நடந்தது.

மாநாட்டில், மாநில பொதுச்செயலர் நந்தகுமார்பேசியதாவது:கடந்த, 2014 - -15, 2015 - -16 என, இரண்டு ஆண்டுகளுக்குஇலவச கட்டாயகல்வி திட்டத்தின்கீழ், தனியார்பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய, 300 கோடி ரூபாய்நிதியை தரவில்லை.இந்த நிதியைஉடனடியாக அளிக்கவேண் டும். இல்லையென்றால் வரும் கல்வியாண்டில், இலவச கட்டாயகல்வி சட்டத்தின்படி, 'அட்மிஷன்' போட மாட்டோம்.
அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள, 10 ஆயிரம் பள்ளிகளுக்குஉடனடியாக அங்கீகாரம்அளிக்க வேண்டும். அப்பள்ளிகளில் பயிலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியரை, அரசுபொது தேர்வெழுதஅனுமதிக்க வேண்டும்.நர்சரி, பிரைமரிபள்ளிகளை, நடுநிலைப்பள்ளிகளாக தரம்உயர்த்த நடவடிக்கைஎடுக்க வேண்டும். வட்டார போக்குவரத்துஅலுவலகத்தில், பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றுவழங்க, லஞ்சம்கொடுத்தால் தான் காரியம் ஆகிறது.

மேலும் ஓராண்டுக்கு பள்ளிவாகனங்களை, நான்கு முறை, எப்.சி., செய்யும் முறையைவன்மையாக கண்டிக்கிறோம். இதர வாகனங்கள்போல, பள்ளிவாகனங்களும் ஆண்டுக்கு ஒருமுறை, எப்.சி., செய்யும் முறையைகொண்டு வரவேண்டும். இவ்வாறுஅவர் பேசினார்.

30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்.

பண மதிப்பு நீக்கம் காரணமாக ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் உயர்ந்து வருகின்றன. இதனை மேலும் உயர்த்தும் விதமாக பணப்
பரிவர்த்தனைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது50,000 ரூபாயைரொக்கமாக பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகளில் பான் எண் குறிப்பிடுவது அவசியமாகும். இனி 30,000 ரூபாய் பயன்படுத்தினாலே பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் அதிக பண பரிவர்த்தனைகள் குறையும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கடைகளில் தற் போது 2 லட்ச ரூபாய் பரிவர்த்தனை களுக்கு பான் எண் அவசியமாகும். அதனை குறைக்கவும் முடிவெடுக் கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபணப் பரிவர்த்தனைகள் செய்பவர் களிடம் பான் எண் இல்லை என்னும் பட்சத்தில் ஆதார் எண் குறிப்பிடவேண்டியது கட்டாயமாகும் என்றும் விதிகள் மாற்றப்படலாம். தவிர குறிப்பிட்ட தொகைக்கு பணப்பரிவர்த்தனை செய்யும்பட் சத்தில், பணம் கையாளுவதற்கான கட்டணம் விதிக்கவும் திட்டமிடப் பட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இந்த கட்டணம் விதிக்கப்படலாம் என தெரிகிறது. ரூ.10 லட்சம் டெபாசிட்: வரித்துறை புதிய விதி ஒர் ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரத்தை வங்கிகள் வருமான வரித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என வருமான வரித்துறை கோரியிருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரையில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கேட்டிருந்தது.


இப்போதுஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தியவர்கள் மற்றும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஓர் ஆண்டில் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வங்கிகள் வருமான வரித்துறையிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஓர் ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் தகவலையும் வருமான வரித்துறை கேட்டிருக்கிறது. 30 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்றல் கணக்குகளையும் வருமான வருமான வரித்துறை கேட்டிருக்கிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு-NOTIFICATION

Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் 
பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
Image may contain: text

நத்தம் அல்லது திண்டுக்கலில் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு திடீர் திட்டம்?

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அருகில் வேறு ஏதாவது ஊரில் ஜல்லிக்கட்டை நடத்தி விட்டு கணக்கு காட்ட தமிழக அரசு முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்ததாக பதிவாக வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதைச் செய்து விட்டு நாளை கூடும் சட்டசபைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அனேகமாக மதுரைக்கு அருகே நத்தம் அல்லது திண்டுக்கல்லில் முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு நடைபெறலாம் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன. மேலும் முரட்டுக்காளைகள் கிடைக்காமல் போனால் வாடிவாசல் வழியாக சாதாரண காளைகளை அவிழ்த்து விடலாமா என்றும் ஆலோசனை நடக்கிறதாம்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது மதுரை பாண்டியன் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கு வைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்.

பண மதிப்பு நீக்கம் காரணமாக ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் உயர்ந்து வருகின்றன. இதனை மேலும் உயர்த்தும் விதமாக பணப் பரிவர்த்தனைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தற்போது 50,000 ரூபாயை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகளில் பான் எண் குறிப்பிடுவது அவசியமாகும். இனி 30,000 ரூபாய் பயன்படுத்தினாலே பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் அதிக பண பரிவர்த்தனைகள் குறையும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கடைகளில் தற் போது 2 லட்ச ரூபாய் பரிவர்த்தனை களுக்கு பான் எண் அவசியமாகும். அதனை குறைக்கவும் முடிவெடுக் கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக பணப் பரிவர்த்தனைகள் செய்பவர் களிடம் பான் எண் இல்லை என்னும் பட்சத்தில் ஆதார் எண் குறிப்பிடவேண்டியது கட்டாயமாகும் என்றும் விதிகள் மாற்றப்படலாம். தவிர குறிப்பிட்ட தொகைக்கு பணப்பரிவர்த்தனை செய்யும்பட் சத்தில், பணம் கையாளுவதற்கான கட்டணம் விதிக்கவும் திட்டமிடப் பட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இந்த கட்டணம் விதிக்கப்படலாம் என தெரிகிறது. ரூ.10 லட்சம் டெபாசிட்: வரித்துறை புதிய விதி ஒர் ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரத்தை வங்கிகள் வருமான வரித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என வருமான வரித்துறை கோரியிருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரையில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கேட்டிருந்தது.

இப்போது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தியவர்கள் மற்றும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஓர் ஆண்டில் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வங்கிகள் வருமான வரித்துறையிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஓர் ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் தகவலையும் வருமான வரித்துறை கேட்டிருக்கிறது. 30 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்றல் கணக்குகளையும் வருமான வருமான வரித்துறை கேட்டிருக்கிறது.

அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பள்ளி மாணவர்களிடம் எதிர்நோக்கும் கற்றல் திறன்களை மதிப்பிடு வதற்கான அளவுகோல்களை வரைமுறைப்படுத்தும், 'கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்' அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
வகுப்புவாரியாக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்த வளர்ச்சியை மதிப்பிட இதுபோன்ற கற்றல் குறியீடுகள் பயன்படுத்தப் படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையி லான மாணவர்களிடம்எதிர் நோக்கும் 'கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்' தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள், பெற் றோர்கள் மற்றும் பொது மக்களிடம் கருத்துகளும் கோரப் பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம்இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டு, 2017-18 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, தொகுக் கப்பட்ட கற்றல் திறன் மதிப்பிடல் முறையை கல்வித் திட்டத்தில்இணைக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வரைவு அறிக்கை, தொடக்க நிலை வரையிலான மொழிப் பாடங்கள், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங் களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்்ஷா அபியான்) திட்டத்தை கண் காணிப்பதற்கான'ஷாகன்' எனப் படும் புதிய வலைதள அமைப்பை டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தபோது அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை வெளியிட்டார். ஜவடேகர் மேலும் கூறும்போது, ''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) வடிவமைத்த கற்றல் திறன் மதிப் பிடல் திட்டம், அந்தந்த வகுப்பு களில் ஆசிரியர்களுக்கு உதவுவ தோடு மட்டுமல்லாமல், மாணவர் களின் கல்வியை மேம்படுத்த திட்டமிடும் பெற்றோர், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அரசுத் துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பயன்படும். பல்வேறு படிநிலைகளில் மாணவர்களின் நிலையைதனிப் பட்ட முறையிலும், ஒட்டுமொத்த அளவிலும் ஆசிரியர்கள் மதிப் பிட வசதி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்தப் பதிவு D.S.P.செல்வத்தின் முகநூல் பதிவு.மிகவும் அற்புதமான சிந்திக்க வைக்கும் பதிவு.                                                 --------------------------------------------------------------------------

இனிய இளவல்களே,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நீங்களாகவே மெரினா கடற்கரையில் திரண்டுவந்து நின்ற காட்சியைப் பார்த்து மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன்.

தமிழ்மண்ணின் ஆணிவேரான கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பின் அடையாளமாகவே உங்கள் மெரினா கடற்கரை நிகழ்வை நான் பார்க்கிறேன்.

விவசாயப் பின்னணியில் பிறந்துவளர்ந்த வேளாண்மைப் பட்டதாரி என்ற வகையிலும், விவசாயம் தழைக்கவேண்டும் என்ற வேட்கைகொண்ட ஊடகவியலாளன் என்ற முறையிலும், உங்கள் உணர்வை வியந்து போற்றுகிறேன். இதே உணர்வு சரியான திசையில் செலுத்தப்பட்டால் மகத்தான மாற்றங்கள் சாத்தியமே என்று எனக்குள் நம்பிக்கை பெறுகிறேன்.

இளைஞர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயமும் இப்போது புரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான உண்மை, இன்று தமிழக விவசாயம், அழிவின் விளிம்பில் நிற்கிறது. ஆங்காங்கே நிகழும் விவசாயிகளின் தற்கொலைகள், நாம் எதிர்நோக்கும் பேரழிவின் முன்னறிவிப்புகள் மட்டுமே.

ஒரு பாலைவனத்தை எப்படி பசும் சோலைவனமாக மாற்ற முடியும் என்பதற்கு உலக அரங்கில் முன்னுதாரணம் இஸ்ரேல்.
ஒரு பசும் சோலைவனத்தை எப்படி பாலைவனமாக மாற்ற முடியும் என்பதற்கு உலக அரங்கில் முன்னுதாரணம் தமிழகம்.

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த பெருமைக்குரிய விவசாயிகள், இன்று கருகும் பயிர்களைப்  பார்த்து மனமுடைந்து தற்கொலைசெய்துகொள்கிறார்கள். இந்த பரிதாப நிலைமைக்கு, நம்மை ஆண்டவர்கள் மட்டும் காரணமல்ல, நமது அறியாமையும் காரணம். 

இந்த நிலைமை மாறவேண்டுமானால் - தமிழக விவசாயம் மீண்டும் தழைக்க வேண்டுமானால் - அது ஜல்லிக்கட்டு மூலமாக நடந்துவிடாது என்ற உண்மையை நாம் உணரவேண்டும். தமிழக விவசாயம் குறித்த விரிவான புரிதல் நமக்கு வேண்டும்.

கீழ்க்கண்ட 4 வகையான பணிகளை சாதித்தால், தமிழக விவசாயம், உலக அரங்கில் முன்னுதாரணமாக பேசப்படும் காலம் உருவாகும். 

1. மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.
----------------------------------------------------- 
மேகத்தை குளிர்வித்து மழையாக ஈர்க்கும் மந்திர சக்தி மரங்களுக்கு மட்டுமே உண்டு. இஸ்ரேலியப் பாலைவனத்தை பசுமையாக்கிட அவர்கள் செய்த முதல் வேலை, மரங்கள் நடும் மாபெரும் தேசிய இயக்கத்தை நடத்தியதுதான். 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட அந்த நாட்டில், 25 கோடி மரங்கள் புதிதாக நட்டு வளர்க்கப்பட்டதால், அந்தப் பாலைமண் பூமியில் இப்போது ஆப்பிளும், தக்காளியும் நம்மைவிடப் பல மடங்கு விளைகிறது.

ஆனால் நாம், நம்மிடம் இருந்த பசுமை மாறாக் காடுகளை அழித்து எஸ்டேட்டுகளாகவும், சாமியார் மடங்களாகவும், தார்ச் சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். 1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுக்கு மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.

நமது இளைஞர்கள் களம் இறங்கினால், நமது 17,000 கிராமங்களில் ஒரு கிராமத்துக்கு 60,000 மரங்கள் வீதம் மழைதரும் மரங்களை நட்டு வளர்த்து 100 கோடி மரங்கள் வளர்ப்பது 100 சதம் சாத்தியமே.

வேலிக்கருவை என்ற நச்சுமரத்தை அப்புறப்படுத்தி, வேம்பு, மலைவேம்பு, புளி, பூவரசு, புங்கன், தேக்கு, செம்மரம், சந்தனம், செஞ்சந்தனம், சவுண்டல் உள்ளிட்ட மழைதரும் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்.

இந்த 100 கோடி இலக்கினை சாதித்தால், ஒவ்வொரு ஆண்டும் நாம் தண்ணீருக்காக கர்நாடகத்திடமும், கேரளத்திடமும் கையேந்தும் நிலைமை ஒருபோதும் வராது. விவசாயிகள் வானத்தை வெறித்துப் பார்த்து பெருமூச்சுவிடும் நிலைமை முற்றிலும் மாறிவிடும். மாதம் மும்மாரி பொழிவது இயற்கை நியதியாக மாறிவிடும். 

2. நீராதாரங்கள் பாதுகாப்பு
----------------------------------
தொழில்நுட்ப அறிவு பற்றி மேலைநாடுகளில் பேசப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிற நதியின் குறுக்கே பிரமாண்ட அணையைக் கட்டும் தொழில்நுட்ப அறிவை செயலில் காட்டி சாதித்தவன் தமிழன். ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உருவாக்குவதையும், அவற்றைப் பேணிக்காப்பதையும் அரசின் தலைமைப் பணியாகக் கொண்டிருந்தவர்கள் நம் முன்னோர்கள்.

நீராதாரங்களை கூறுபோட்டுவிற்கும் கொலைபாதகர்களால்தான் நமது விவசாயம் சின்னாபின்னமானது. இருக்கிற ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் கால்வாய்களை போற்றிக் காப்பதையும், புதியனவற்றை சாத்தியமான அளவில் உருவாக்குவதையும் இளைய தலைமுறை தனது கடமையாக தோளில் ஏற்கட்டும்.

3. பல்லுயிர் சூழல் விவசாயத்தை மீண்டும் மலரச் செய்வோம்.
---------------------------------------------------------------------------
ஜல்லிக்கட்டு நமது முன்னோரின் வீர விளையாட்டாக இருந்தது உண்மை. அவர்கள் வாழ்வில் காளைகள் மட்டும் அல்ல - பசுக்கள், எருமைகள், ஆடுகள்,  முயல்கள், பன்றிகள், கோழிகள், கிளிகள், குருவிகள், புறாக்கள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகள், தட்டான்கள், மண்புழுக்கள் என பல்லுயிர் சூழ்ந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர்.

இன்றைய விவசாயம் மீண்டும் பல்லுயிர் சூழ்ந்த விவசாயமாக மாறவேண்டும். அப்போதுதான் மலடாகிப்போன மண், மீண்டும் உயிர்பெற்று அதிக விளைச்சலை அள்ளித்தரும். நமது விவசாயிகளை பல்லுயிர் சூழல் விவசாயத்திலும், புதிய விவசாய தொழில் நுட்பங்களிலும் பயிற்றுவித்து அவர்களுக்குத் துணை நிற்பது அவசர அவசியம். 

பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தின் ஓர் அடையாளமாக நமது முன்னோரின் ஏறு தழுவுதல் வீர விளையாட்டு இருந்தது என்று பெருமை கொள்வோம். அதற்காக இன்றைய கணினி யுக இளைஞர்கள் ஏறு தழுவுதல் வீர விளையாட்டில் இறங்கி ஒருகை பார்க்கவேண்டும் என்று சிந்திப்பது அறியாமை.

கணினி யுக இளைஞர்களில் வாய்ப்புள்ளவர்கள், பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தில் ஈடுபடலாம். நாட்டுமாடு, நாட்டு ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பதை பெரும் தொழிலாக செய்யலாம். ஒற்றை நெல் சாகுபடி, துல்லியப் பண்ணையம், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும். அது மட்டுமல்ல, வேறு எங்கும் கிடைக்காத மன நிறைவும் இதில் பெறமுடியும்.

4. ஆலைத் தொழில்போல், திட்டமிடப்பட்ட விவசாயம்
--------------------------------------------------------------------
முதல் மூன்று பணிகளால் தண்ணீரும், மண் வளமும் உறுதிசெய்யப்பட்டு உயர் விளைச்சல் சாத்தியமாகும். ஆனால், அதிகமாக விளைந்த தக்காளியும், வெங்காயமும், வாழைக்காயும் சாலைகளில் கொட்டப்படுவது போன்ற நிலைமைகள் இனி வரவே கூடாது. அதற்கு ஒரே வழி, மாநில அளவிலும், வட்டார அளவிலும் விவசாய உற்பத்தி திட்டமிடப்பட்ட வேண்டும். ஆலைத் தொழில்போல், விவசாயத்தையும்  PROFESSIONAL VENTURE ஆக மதித்துப் போற்றவேண்டும். அதற்குரிய பயிற்சிகள் மானிய உதவிகள், மாதிரிகள் அனைத்தையும் வழங்க வேண்டும்.

மற்ற எல்லாவித ஆலை உற்பத்தி பொருட்களுக்கும், லாபத்துடன் கூடிய விலை நிர்ணயம் செய்யப்படுவதுபோல், விவசாய விளைச்சலுக்கும் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்கான நிர்பந்தத்தை அரசுக்கு நாம் உருவாக்க வேண்டும்.

தமிழக விவசாயத்தில் உண்மையான புரட்சியை சாத்தியமாக்கும் இந்த 4 மகத்தான பணிகளையும் எந்த அரசாங்கமும் தானே செய்யாது. அதற்குரிய அக்கறையும் மனத்துணிவும் இளைய சக்தியிடம் பீறிட்டுக் கிளம்பினால் மட்டுமே இவை சாத்தியம்.

அன்பு இளவல்களே,
------------------------
ஜல்லிக்கட்டு ஆதரவு என்ற அடையாள போராட்டத்தில் நீங்கள் முடங்கிவிடவேண்டாம். பண்டிகைகால நிகழ்வுகள்போல் உங்கள் உணர்வுகள் முனைமழுங்கிப் போகவேண்டாம்.  

நமது கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை மேலும் வளர்த்தெடுங்கள். மேலே சொன்ன நான்கு விதமான பணிகளில் எது முதலில் சாத்தியமோ முதலில் அதைத் தொடங்குங்கள்.

ஆக்கபூர்வ ஊடகங்களும், நேர்மையாகச் சிந்திக்கும் வேளாண்மைத் துறை சார்ந்தவர்களும் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.

பசுமையான தமிழகம் மலரட்டும்! விவசாயிகள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்!

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு !!

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

 ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது.


 இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி பணியை தவிர, பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர். பள்ளிகளிலும், கல்வி சாராத மற்ற பணிகளை செய்கின்றனர்; அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் போன்றவற்றில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், கல்வியில் ஆசிரியர்களின் கவனம் குறைவதாக, புகார் கூறப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த செயலர்கள் அடங்கிய குழு ஒன்றை, பிரதமர் மோடி அமைத்தார். இக்குழு தன் ஆய்வை முடித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அடிப்படை பணி : இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி வழங்குவது மட்டுமே, பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. பாடம் நடத்துவது உட்பட, கல்வி தொடர்பான பணிகளில் மட்டுமே, அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். கால்நடை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, போலியோ ஒழிப்பு, ரேஷன் கார்டு சரிபார்ப்பு என, வெவ்வேறு அரசு மற்றும் பொது பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறைந்து, கல்வியில் அவர்கள் கவனம் இருப்பதில்லை; மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், இந்நிலை காணப்படுகிறது. ஆசிரியர்கள், கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களின் கட்டளைப்படி, வேறு சில பணிகளையும் செய்கின்றனர்.

தடுக்க வேண்டும் : பல்வேறு துறை செயலர்களை கொண்ட குழு நடத்திய ஆய்வில், இந்த தகவல்கள் உறுதியாகி உள்ளன. பள்ளி ஆசிரியர்களை, கல்வி அல்லாத மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என, அக்குழு பரிந்துரைத்து உள்ளது.

கல்வியை தவிர மற்ற பணிகளில், ஆசிரியர்களின் கவனம் செல்லக் கூடாது என, அறிவுறுத்தி உள்ளது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளை வகுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது; விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்வி உரிமை சட்டம் : கல்வி உரிமை சட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகிய மூன்று பணிகளுக்கு மட்டுமே, பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது; மற்ற பணிகளுக்கு, அவர்களை பயன்படுத்துவதை, அரசு நிறுத்த வேண்டும் என, அச்சட்டம் கூறுகிறது.

பஸ்களில் ஏற்றும் ஆசிரியர்கள்! : பிரதமர் மோடி அமைத்த குழு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் பற்றி கூறியுள்ளதாவது:அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்களும், கல்வி அல்லாமல், மற்ற பணிகளை செய்யும் சூழல் நிலவுகிறது. கட்டணம் வசூலிப்பது, குழந்தைகளை பள்ளி பஸ்களில் ஏற்றி அனுப்புவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.

இவ்வாறு அந்த குழு கூறியுள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இல்லை !!


மக்களை மதிக்காமல் ரேக்ளா பந்தயம்.. இளைஞர்கள் ஆவேசப் போராட்டம்.. கோவையில் பதட்டம் !!

மக்கள் எதிர்ப்பு காரணமாக பலத்த பாதுகாப்புக்கு நடுவே ரேக்ளா பந்தயம் கோவையில் நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் விரைந்து வந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.

இதற்கும் மக்கள் இடையூறு செய்ய வாய்ப்பிருப்பதாக கருதிய அரசு பந்தய பாதையின் இருபுறமும் போலீசாரை குவித்திருந்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற காளைகளை பயன்படுத்தும் விளையாட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கேட்டு மக்கள் போராடி வரும் நிலையில், எப்படியாவது இந்த *ஒற்றுமையை கலைத்துவிட வேண்டும்* என்ற நோக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
இதனால் கோபமடைந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் பைக்குகளில் அங்கு விரைந்து வந்து ரேக்ளா பாதையில் அமர்ந்து தர்ணா நடத்தி வருகிறார்கள். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார்கள். இதனால் போலீசாரால் என்ன செய்வது என தெரியவில்லை. அந்த இடமே பரபரப்பாக காட்சியளிக்கிறது.

TAMIL NADU GOVERNMENT CONDUCT RULES !!

13/1/17

ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று வெளியாகிறது தீர்ப்பு?

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனால் தமிழகத்தில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. இது தொடர்பான வழக்கு
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த 
நிலையில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அப்போது அனைத்து தரப்பும் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சார்பாக ஆஜரான பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியும் தமது வாதத்தை 11 பக்கமாக எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முன்னதாக நடைபெற்ற வாதத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. பசுவிற்கு வலிக்கும் என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம் என மத்திய அரசு வாதம் முன் வைத்தது. ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு கிடையாது, அது ஒரு திருவிழா என்றும் வாதம் செய்தனர்.
இந்த வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வெளியாகும் என்று சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கோர்ட் உத்தரவு வரும் வரை அவசர சட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

நேற்று முன்தினம் மாலை, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனில் மாதேவ் , 'தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும் .ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மத்திய அரசு காத்திருக்கிறது' என கூறிவிட்டார். எனவே அனவைரது எதிர்பார்ப்பும் சுப்ரீம் கோர்ட் மீது உள்ளது. காளையை காட்சி விலங்காக மாற்றிய சட்டத்தில் திருத்தம் செய்யாத நிலையில், உச்சநீதிமன்றம் வாதத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக வழங்குமா என்று தெரியவில்லை.

மருந்து சீட்டுகளை கைகளால் எழுத டாக்டர்களுக்கு தடை!!!

வங்கதேசத்தில், டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் எழுதி கொடுக்கும் மருந்துகளின் பெயர்கள் என்னவென்றே தெரியாத அளவிற்கு அவர்களின் கையெழுத்து உள்ளது. இதனால் மருந்து கடைக்காரர்களுக்கும் மருந்துகளின் பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‛இனி டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும்.அதையும் மீறி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தால் மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

மேலும் சுகாதார துறையினர் இதை கண்காணித்து 3 மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம்!!!

பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர்.

’டிஸ்லெக்ஷியா’ - வாசித்தல் குறைபாடு, ’டிஸ்கிராபியா’- எழுதுவதில் குறைபாடு, ’டிஸ்கால்குளியா’ - கணக்கு போடுதல் குறைபாடு, ’டிஸ்பிராக்சியா’, ’டிஸ்பேசியா’ என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன.

இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இதனைக் கண்டறிந்து, அதற்கான பயிற்சி அளித்து, மாணவர்களை, மேம்படுத்தவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கற்றல் குறைபாடுள்ளவர்கள், மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், ஓரளவு மட்டுமே கல்வியில் பின்தங்கி இருப்பவர்களாக துவக்கத்தில் காணப்படுவர். இதனை சரிசெய்யாமல் விடுவதால், அடுத்தடுத்த வகுப்புகளில், அவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, இக்குறைபாடுகளுக்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ’ஆல்பாஸ்’ முறையினால், இவ்வாறு கற்றலில் பின்தங்கும் மாணவர்கள் குறித்தும் பெரிதானதொரு விழிப்புணர்வு இல்லை. இதனால், பொதுத் தேர்வு வகுப்புகளில், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் இல்லாமல், தேர்ச்சி விகிதம் சரிந்தது.

இக்குறைபாடுகளை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கு முறையே பயிற்சி அளித்து, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, கல்வித்துறை பல்வேறு தேர்வுகளை, நடத்த துவங்கியது. மாணவர்களின், கல்வித்திறன் மட்டுமின்றி, பல்வேறு இணை செயல்பாடுகள் மூலம், அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் அளவிடப்படுகிறது. இந்த அளவுகளைக் கொண்டு, அம்மாணவர் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை ஆசிரியர் பயிற்றுனர்கள் பதிவு செய்தனர்.

ஒருங்கிணைந்த கோவை, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்குட்பட்ட, 22 வட்டாரங்களில் கடந்த 2014-15 கல்வியாண்டில் 40, 2015-16 ல் 39, நடப்பு கல்வியாண்டில், 43 குழந்தைகளும், கற்றலில் பின்தங்கியவர்களாக உள்ளனர்.

மாவட்ட திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ”இதுவரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், மாணவர்களுக்கு அளித்த பயிற்சி அடிப்படையில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்தனர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பட்டியல் தயார்படுத்தப்படவில்லை. ஒரு மாணவர் நுாறு சதவீதம் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை துல்லியமாக கண்டறிய, ’சிறப்பு செயல்திறன் பயிற்சியை, கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இதன்படி, குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருமென கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில், மாணவர்களுக்கு எழுத்து தேர்வு, செயல்திறன் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது, ” என்றார்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - விலங்குகள் நலவாரியம்!!!

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல்

கொடுத்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு தீர்ப்பு தயாராக இருந்தாலும் வரும் சனிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்க சாதியமில்லை” என்றது. சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு கூறியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே தடை உள்ளநிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் கடிதம் எழுதிஉள்ளனர். தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிஉள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது போலீசின் கடமை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜாபர் சேட் சஸ்பெண்டு ரத்து - பணி வழங்க கோர்ட் உத்தரவு!

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட் கடந்த ஐந்தரை வருடங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அரசின்

தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ததுடன் வரும் 18ஆம் தேதிக்குள் ஜாபர் சேட்டுக்கு பணி வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவு தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், தோட்டக்காரர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 61


பணியின் தன்மை: உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், தோட்டக்காரர்.

பணியிடம்: தமிழ்நாடு

வயது வரம்பு: 18 - 30

விண்ணப்பக் கட்டணம்: உதவியாளர் ரூ.100, அலுவலக உதவியாளர் டிரைவர், தோட்டக்காரர்- ரூ.50

கடைசித் தேதி: 23.01.2017

மேலும், கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு http://www.bdu.ac.in/adv/bduntadvtapp2017_v2.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பாதுகாப்பு பணி தேர்வு : ஹால்டிக்கெட்!

நாடு முழுவதும், பிப்ரவரி 5ஆம் தேதி ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் சுமார் 41 மையங்களில் நடைபெறும். பாதுகாப்பு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்னும் யுபிஎஸ்சி இணையதளத்தில் தங்கள் பதிவெண்ணை சமர்பித்து குறிப்பிட்ட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டில் புகைப்படம் அச்சிடப்படாவிட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் 3 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும் என யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

செயல்படாத ரிசர்வ் வங்கி! : அமர்த்தியா சென் !!

பணமதிப்பழப்பு விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாகவும், ரிசர்வ் வங்கி எவ்வித முடிவையும் தன்னிச்சையாக மேற்கொள்ளாமல் செயலற்றுக் கிடப்பதாகவும், 1998ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பணமதிப்பழிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி தனது அதிகாரத்தில் தனித்து இயங்கவில்லை என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்களான ஒய்.வி.ரெட்டி மற்றும் பிமல் ஜலன் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இதுகுறித்து இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரிசர்வ் வங்கி தனது அதிகாரத்தில் தன்னிச்சையாக செயல்படவில்லை. பிரதமர் மோடியின் கட்டளையின்கீழ் செயல்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு பழைய நோட்டுகளை மாற்ற முடியாது என்ற கட்டுப்பாடு கூட மோடியின் பரிந்துரையாலேயே ரிசர்வ் வங்கி செயல்படுத்தியிருக்கும்.

கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டு புழக்கத்தையும் கட்டுப்படுத்தவே இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் முந்தைய காலங்களில் கள்ள நோட்டுகள் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் இதில் அவருக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதோடு பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. இந்த நடவடிக்கையால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது ஏழை மக்கள்தான்’ என்று கூறியுள்ளார்.

பாஸ்போர்ட் தொலைத்தால் அபராதம்!

மலேசியாவில் பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், சுற்றுலாவுக்காக லட்ச கணக்கானோர் மலேசியாவுக்கு வந்து செல்கின்றனர்.

இப்படி மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டினர் தங்களது பாஸ்போர்ட்டை தொலைக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

இதுகுறித்து துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடியும், மலேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலியும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து,மலேசிய குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில், அவரவர் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இதுவரை பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களுக்கென அபராதம் ஒன்றும் விதிக்கப்படவில்லை. மலேசியாவில், முதல் முறை அடையாள அட்டையைத் தொலைத்தவர்களுக்கு 100 ரிங்கிட்டு (1527.97ரூ), அபராதமும், இரண்டாவது முறை தொலைத்தால் 300 ரிங்கிட்டும் (4583.92ரூ) அபராதமும், மூன்றாவது முறை தொலைத்தால் 1,000 ரிங்கிட்டும் (15280.76ரூ) அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதே முறையில்,பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டில் மட்டும் 44, 528 பாஸ்போர்ட்கள் தொலைந்ததாக புகார்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் சுமார் 32 லட்சம் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொண்டு நிறுவனங்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாதான் முதன்மையாக இருக்கிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, 
குழந்தைகள் நலன், எய்ட்ஸ், கல்வி என சகல துறைகளிலும் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி உதவி கிடைக்கிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஆண்டுதோறும் வரும் வருமானக் கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்கவிட்டால், அந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி முறையாக கையாளப்படுகிறதா ? நிதியை கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி ஒரு வழக்கில் கேள்வி எழுப்பியது. அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

அதில், அந்த நிறுவனங்கள், 2014-2015 ஆம் நிதி ஆண்டில் இருந்து தங்களின் ஆண்டு கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

2010-11ம் ஆண்டில் அதிக வெளிநாட்டு நிதி பெற்றிருப்பது டெல்லி (2,016 கோடி). இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு (1,557 கோடி). 2009-10ம் ஆண்டுக் கணக்கின்படி, இந்தியாவிலேயே என்.ஜி.ஓ-க்கள் மூலம் அதிகம் நிதி பெறுவதில் முதல் இடத்தில் இருக்கும் மாவட்டம் சென்னை. 871 கோடி நிதியுதவி பெற்றுள்ளது.

தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. (வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) உரிமம் பெற வேண்டும். கடந்த 2011-2012ஆம் ஆண்டு எஃப்.சி.ஆர்.ஏ. உரிமம் பெறாத தொண்டு நிறுவனங்களை மத்திய உள்துறை ரத்துசெய்து உத்தரவிட்டது.

கடந்த மாதம் வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் 33,000 தொண்டு நிறுவனங்களில், 20,000 தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக செயல்படுவது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவற்றின் நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகளின் பற்றாக்குறையே காரணம்! – உச்சநீதிமன்ற நீதிபதி

இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறையால் பல வருடங்களாக லட்சக்கணக்கான வழக்குகள் நீதிபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன என பலமுறை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவந்துள்ளனர்.


இந்நிலையில், நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லாததால்,வழக்குகள் தேக்க நிலையில் உள்ளது. இது மிகவும் வேதனையளிக்கிறது என புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் வேதனை தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்' விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு நீதிபதிகள் குழு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அந்த விவகாரம் முடிவுக்கு வராமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், காலியிடங்களில் நீதிபதிகளை நிரப்ப முடியாத காரணத்தால் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன், அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறியதாவது, ’உச்சநீதிமன்றத்துக்கு 31 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போது 23 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், உச்ச நீதிமன்ற அலுவல் வேலைகள் முடிக்கப்படாமல் பாதிக்கப்படுகின்றன. இதனால், தினசரி வழக்குகளும் முடிக்கப்படாமல், கால தாமதமடைகின்றன. தற்போது,

நீதிபதிகளை விரைவில் நியமிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த மாத இறுதிக்குள் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்’ என நீதிபதி கூறினார்.

நாட்டில் உள்ள எட்டு மாநில உயர்நீதிமன்றங்களில் மட்டும் 80% வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒட்டுமொத்த வழக்குகளையும் சேர்த்து பார்த்தால் உத்தரபிரதேசத்தில் மட்டும் 25% வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்து, மராட்டியம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதற்கு முன்பு, நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்சனை மற்றும் உயர்நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணியில் உள்ள நீதிபதிகள் அதிகளவில் பணிசுமைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ்.தாகூர் வேதனையுடன் முன்பு பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நீதிபதி தாகூரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ' சொத்து: வழக்கு தள்ளுபடி!

ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க முடியாதென்று கூறி அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானதையடுத்து அவரது சொத்துகள் அனைத்தும் யாருக்கு போய் சேருமென கேள்வி எழுந்தது. தற்போது ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள வி.கே.சசிகலா வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டுமென்று தமிழக பொதுநலன் வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

“ஜெயலலிதா கடந்த 2016-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கில், தனக்கு ரூ.10,63,83,945 வங்கி டெபாசிட், ரூ.27,44,55,450 மதிப்புள்ள முதலீட்டு பத்திரங்களும், ரூ.41,63,55,395 மதிப்புள்ள நகைகளும், ரூ.72,09,83,190 மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் வாகனங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. அவருக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கி, அந்த சொத்துகளில் இருந்து வரும் வருமானத்தை ஜெயலலிதாவின் விருப்பத்தின்படி ஏழைகளின் நலனுக்காக செலவிட வேண்டும்.

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கவும், அந்த குழு ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும், பின்னர் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்கவும், அந்த சொத்துகளை நிர்வகிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க முடியாதென்று கூறி ரமேஷின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, "பொதுநல வழக்குகள் எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும், எது சம்பந்தமாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகள் அவர் சினிமாவில் இருந்தபோது சம்பாதித்தது. அந்த வகையில் மனுதாரரின் மனு ஏற்புடையதல்ல" என வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "தனிநபர் சார்புடைய வழக்குகளை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. அதனால் இந்த வழக்கை ஏற்க முடியாது" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறலாம்

NHIS -2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS - 2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format..

.http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx