யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/3/17

ARN செய்திகள்:9094830243... மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு


இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை…

Admission Help line – 9962814432
அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்

தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.

170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000 மட்டுமே
தொடர்புக்கு : 9962814432
.
1. B.E Mechanical Engineering,
2. B.E Electrical & Electronics Engineering
3. B.E Electronics & Communication Engineering
4. B.E Computer Science Engineering.
5. B.E Civil Engineering.
6. B.E Aeronautical Engineering
7. B.E Mechanical & Automation Engineering
8. B.E Electronic & Instrumentation Engineering
9. B.E Mechanical Engineering (Sandwich)
10. B.E Robotics
11. B.Tech Information Technology
.
இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. Kindly forward to all groups
.
SUCCESS கல்வி அறக்கட்டளை
முன்பதிவிற்கு அழைக்கவும்,  📞 9962814432 / 8680048146. 
இதை அனைவர்க்கும் பகிருங்கள்

பள்ளியில் கூடுதல் வகுப்பறை வசதி செய்து தர கோரிக்கை விடுத்த ஆசிரியருக்குமெமோ கொடுத்த இணை இயக்குனர். அதிச்சியில் ஆசிரியர்கள்!!!

அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை பொதுத்தேர்வு எழுதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த அத்தியாவசிய உணவுகளை சாப்பிடலாம்

ஏப்ரல் 2-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்
ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.5 வயதுக்குட்பட்டவர்கள்: தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக ஏப்ரல் 2-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.43 ஆயிரம் மையங்கள்: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என முக்கியமான இடங்களில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படும். மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சுமார் 1,500 நகரும் மையங்கள் நிறுவப்படும்.தொலை தூரம், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.


இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். எனவே அனைத்து தாய்மார்களும் இந்த முகாமைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் என்றார்.

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும்செயல்படும்.

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில்
பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும்.
தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையைதற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, கூறியதாவது:பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டிசேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் வைத் திருக்க வேண்டும். பிராட்பேண்டில் ஸ்டேடிக் ஐபி, டைனமிக் ஐபி என 2 வகை உள்ளது.

இதில் ஸ்டேடிக் ஐபி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தற்போது இப்புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய வசதியைப் பெற விண்ணப்பித்தால் முதலில் அவர்களுக்கு ‘2999’ என்ற எண்ணில் தொடங்கும் ஒரு டம்மி எண் வழங்கப்படும். இதை ஏற்கெனவே உள்ள லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும்.மேலும், ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘ஜொய்ப்பர்’ என்ற செயலியை (Zoiper App) பதிவிறக்கம் செய்ய வேண் டும். அதில் யூஸர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து இணைக்க வேண்டும். பிறகு, ‘அவுட்கோயிங்’, ‘இன்கமிங்’, டேட்டாசேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செல் போனில் சிம் கார்டு இல்லாமல் மேற்கண்ட செயலி மூலம் ‘கால்’ செய்யலாம். இதுதான் இச்சேவையின் சிறப்பம்சம்.சிலர் வீடுகளில் வாய்ஸ்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பார்கள். அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ‘கால்’ செய்யலாம்.


இச்சேவையைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் கிடையாது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். செல்போன் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் இச்சேவையைப் பயன்படுத்தி பேச முடியும். அத்துடன், குரல் அழைப்பும் (வாய்ஸ் கால்) நன்கு தெளிவாக கேட்கும்.இவ்வாறு கலாவதி கூறினார்.

டெட்' தேர்வு விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்

ஆசிரியர் பதவி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மூன்று
ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் குறிப்பிட்ட பள்ளிகளில் காலை 9மணி முதல் 5மணி வரை வழங்கப்படுகின்றன.

தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக, விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் வழங்கும் இடங்கள், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.வரும், 22 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அறிவித்துள்ள விண்ணப்பம் பெறும் மையங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

வரும், 23க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம் (19.3.2017).

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம் (19.3.2017)...

அன்பார்ந்த!..

பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் பி.எட் பயிலும் இருபால் மாணவர்களுக்கும் ஓர் அன்பான அழைப்பிதல், வருகின்ற

நாள்:19.3.2017
காலை:9மணி.
இடம்:VGS மஹால்
(திண்டுக்கல் பேருந்து நிலையம்   அருகில்)
பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
[மதிய உணவு வழங்கப்படும்]

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர்களின் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவசஉறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
1.இரண்டு புகைப்படம்,
2.பி.எட் சான்றிதழ் நகல்,
3.வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்).

பெண்கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
(தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.)

முக்கிய குறிப்பு:
[விடியல் பயணம் திண்டுக்கல் மாவட்டத்தோடு
இனிதே நிறைவுபெற உ்ளளது].

உறுப்பினர்கள் சேர்க்கை இலவசமாக பெற :
கீழ்கண்ட மாவட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும்  பொதுக் கூட்டத்தில்(திண்டுக்கல் கரூர் நாமக்கல் திருப்பூர் கோவை மதுரை தேனி இராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தஞ்சை திரூவாரூர்  திருச்சி புதுக்கோட்டை)
மாவட்ட கனிணி ஆசிரியர்கள்

திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில்  தங்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,9789180422,9894372125.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

TET தேர்ச்சி பெறவேண்டும் என்ற உத்தரவிலிருந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் விலக்களிக்க வேண்டும்*

பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு : 1,000 ஆசிரியர்கள் கலக்கம்

டெட்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், 1,000 ஆசிரியர்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாகி உள்ளது.

 மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில், 'அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மை அங்கீகாரம் பெறாத பள்ளிகளில், 2010 ஆகஸ்டிற்குப் பின், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், இந்த தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதார், பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.

இந்தஅறிவிப்பால், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திடீரென தேர்வை அறிவித்துவிட்டு, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அங்கீகாரம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வுக்கு பதில், ஆண்டு தோறும் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தலாம். மாறாக, திடீரென, 'டெட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கெடு விதிப்பது பிரச்னையை அதிகரிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வக உதவியாளர் நியமனம் 10 நாளில் முடிவெடுக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில்

 உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-

மாணவிகள் தேர்வு எழுதுவதை பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதி
வருகிறார்கள். மொழித்தேர்வை தமிழ், உருது, இந்தி,
 கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் மாணவர்கள் எழுத
அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவந்தார்.
இதன்காரணமாக கடந்த வருடத்தை விட இந்த வருடம்
பிளஸ்-2 தேர்வை 65 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகிறார்கள்.

ஆய்வக உதவியாளர்கள்
பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக
உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
அதுகுறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும்.

சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள்

இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். நீட் தேர்வை எழுத மாணவர்கள் தயாராக உள்ளனர்.

TET - விண்ணப்பம் வாங்கும் போதும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை!!

TET விண்ணப்பம் வாங்கும்போதும், விண்ணப்பத்தைப் பூர்த்தி
செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை குறித்து வேலூர் விடியல்
பயிற்சி மையம் வழங்கும் முக்கிய குறிப்புகள்.

குறிப்பு 1: விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- ஐ பணமாக செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பு 2: தேர்வுக் கட்டணம் செலுத்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி செலுத்து சலானைப் பூர்த்தி செய்து இந்தியன் வங்கி/ இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி/ கனரா வங்கிக் கிளையில் ரூ.500/- ஐ ( SC/ST (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம். ரூ 250/- ) செலுத்திட வேண்டும்.

குறிப்பு 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வங்கியில் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான செலுத்து சலானின் ஒரு பிரதியை கண்டிப்பாக இணைக்கவேண்டும்.

குறிப்பு 4: விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனைப் பேனாவினைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு 5: விண்ணப்பத்தை மடிக்கக் கூடாது.


குறிப்பு 6: புகைப்படத்தின் மீது Attestation செய்யக் கூடாது.

குறிப்பு 7: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக TRB க்கு அனுப்பக் கூடாது. அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி அல்லது அலுவலகங்களில் கொடுத்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 8: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தரப்படவில்லை.

குறிப்பு 9: ஒருமாவட்டத்தில் வாங்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின்பு வேறு மாவட்டத்திலும் திருப்பித் தரலாம்.

குறிப்பு 10: தாள்I மற்றும் தாள் II ஆகிய இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புபவர்கள் இரண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு 11: தேர்வு மாவட்டக் குறியீடுகள்


குறிப்பு 12: பாடக் குறியீடுகள்

தமிழ். : 100
ஆங்கிலம். : 104
கணிதம். : 300
இயற்பியல். : 400
வேதியியல். : 500
தாவரவியல். : 600
விலங்கியல். : 700


வரலாறு. : 800

5/3/17

இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும், இதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் பிறப்பித்து உள்ளது.

நாடுமுழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவ - மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை
அதிகரித்துள்ளது. மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதேபோல் சமையலர்கள், உதவியாளர்களும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதிய உணவு திட்டத்தில் சில இடங்களில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதற்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வழங்குவதாக புகார்கள் வந்தன. மேலும் பல மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதாக கணக்கிடப்படுகிறது.

எனவேஇது போன்ற முறைகேடுகளை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

TET - 2017" தேர்வு அறிவிக்கை தமிழில் வெளியிட கோரிக்கை

டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.ஆர்.பி., நடத்தும், 'டெட் ' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு, ஏப்., 29 மற்றும், 30ல், நடைபெற உள்ளது.


 இதற்கான அறிவிக்கை, கடந்த வாரம் வெளியானது.தேர்வுக்கான கட்டுப்
பாடுகள், இரு தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின. இரு அறிவிக்கைகளும், ஆங்கிலத்தில் உள்ளன. அதனால், நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூறியதாவது:மூன்றாண்டு இடைவெளிக்கு பின், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கான நிபந்தனைகள், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்கின்றனர்.ஆசிரியர் பணிக்கு வரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், பாடங்கள் குறித்து ஆங்கில அறிவை எதிர்பார்க்கலாம்; தொடர்புக்கான ஆங்கில மொழி புலமையை, எதிர்பார்க்க முடியாது. எனவே, 'டெட்' தேர்வுக்கான
அறிவிக்கை மற்றும் நிபந்தனைகளை தமிழில் வெளியிட வேண்டும்.அரசு விதிகளின்படி, அரசாணை மற்றும் அறிவிக்கைகளை தமிழில் வெளியிட வேண்டும்.

 ஆண்டு முழுவதும், நுாற்றுக்கணக்கான தேர்வை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி.,
யும், தமிழில் தான், அறிவிக்கை வெளியிடுகிறது. எப்போதாவது தேர்வு நடத்தும், டி.ஆர்.பி., விதிகளை பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தலைவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழை
புறக்கணித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'TET' தேர்வுக்கு குறைந்த அவகாசம்:தேர்ச்சி பெறாவிட்டால் பணி பறிபோகும் - ஆசிரியர்கள் கலக்கம்

ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர்கள்
கலக்கத்தில் உள்ளனர்.
இந்ததேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால்,அவர்களின் பணி பறிபோகும் நிலைஏற்பட்டுள்ளது.



  மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைசட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்'தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படவேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,அவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவிகிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும் என, அனைத்து அரசுஉதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால்,வழக்கு காரணமாக, டெட் தேர்வுதள்ளிப்போனது.
இந்நிலையில், பிரச்னைகள் முடிவுக்கு வந்து,ஏப்ரலில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்டஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும் என்றசூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தேர்வுக்கான அவகாசம் மிகவும்குறைவாக உள்ளதால், தேர்வில் தேர்ச்சி அடையமுடியுமா என, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்குழப்பத்தில் உள்ளனர்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது
இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மாநில தலைவர் செல்வம்
கூறியதாவது:

  மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.
வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதுஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.

31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன.
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன.

அதைநடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

வருமான வரி: அரசு ஊழியர்களுக்கு கிடுக்கி

அரசுஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம்
செய்யக்கூடாது. 

  இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான, ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசும், டீசல் விலை, லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த
விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி, 21.43 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
ஜனவரி 1 ஆம்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் , தமிழக அரசு 6 அல்லது 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது .

ஆள் பற்றாக்குறையால் திணறும் தேர்வு துறை

தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், தேர்வு பணிகளை கண்காணிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ல் துவங்கியது. இந்த தேர்வில், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, மாவட்ட வாரியாக இயக்குனர் மற்றும் இணை
இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்வு பணிகள் குறித்த புகார்கள், தேர்வில் பங்கேற்ற மாணவர் எண்ணிக்கை, தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை, காப்பியடித்தோர் எண்ணிக்கை குறித்த விபரங்களை, மாவட்ட வாரியாக பெற, தேர்வுத்துறைக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என, இரண்டு தேர்வுகளிலும், மாவட்டங்களிலிருந்து விபரங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரித்த போது, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் போதுமான ஆட்கள் இல்லாததால், தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிந்தவுடன் காப்பியடித்தவர்கள் விபரம், தலைமை
செயலகத்துக்கும், ஊடகங்களுக்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆள் பற்றாக்குறையால், தலைமை செயலகத்துக்கு தகவல் அனுப்பவே ஊழியர்கள் திணறுவதால், ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை தரப்பில், தேர்வுத் துறைக்கு கூடுதல் ஊழியர்களை அனுப்ப மறுப்பதால், தகவல் சேகரிப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

வருமான வரி: அரசு ஊழியர்களுக்கு கிடுக்கி

அரசு ஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம் செய்யக்கூடாது. இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான, ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச தொகைஸ்டேட் வங்கியில் ரூ.5,000 ஆக உயர்வு

பாரத ஸ்டேட் வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காவிட்டால், 50 - 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, 'ஏப்., 1 முதல், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேணாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும்' எனக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கை விபரம்:சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேண வேண்டும். பெருநகரங்களில் இருப்போர், தங்கள் சேமிப்புக் கணக்குகளில், 5,000 ரூபாய், பகுதியளவு நகரமயமான பகுதிகளில், 3,000 ரூபாய், கிராமப் பகுதிகளில், 1,000 ரூபாய், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு பேணாத வாடிக்கையாளர்களிடம், 50 முதல் 100 ரூபாய் வரை, அபராதமாக வசூலிக்கப்படும். வரும், ஏப்., 1 முதல், இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.
பெருநகரங்களில், வங்கிக் கணக்கில் பேணப்பட வேண்டிய இருப்புத் தொகைக்கும், தற்போது கணக்கில் உள்ள தொகைக்கும், 50 சதவீத வித்தியாசம் இருந்தால், 50 ரூபாய் அபராதமும், அதற்கான சேவை வரியும் வசூலிக்கப்படும்; 70 சதவீத வித்தியாசம் இருந்தால், 75 ரூபாய் அபராதம் மற்றும் சேவை வரி பெறப்படும். அதற்கு மேல் வித்தியாசம் இருந்தால், 100 ரூபாய் அபராதமும் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

நகர்ப்புறங்களில், 40 முதல் 80 ரூபாயும், பகுதியளவு நகர்ப் பகுதிகளில், 25 முதல் 75 ரூபாயும், கிராமப் புறங்களில், 20 முதல் 50 ரூபாயும் அபராதமாக பெற
திட்டமிடப்பட்டு உள்ளது.ஒரு மாதத்தில், மூன்று முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களிடம், 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது; அது, இனியும்
தொடரும். காசோலை புத்தகம் வழங்குதல், பணம் செலுத்துதலை நிறுத்துதல் போன்ற சேவைகளுக்கு கட்டணம் பெறப்படும்.

டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக, ஆண்டுக்கு, 125 முதல், 300 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., பரிவர்த்தனைகள், மாதத்திற்கு, பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் ஐந்து முறையும் இலவசமாக அனுமதிக்கப்படும்.

இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதியை, 2012ல் நீக்கியது. தற்போது மீண்டும் அந்த விதி அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் வசூலிக்கப்படும் தொகை, பாரத ஸ்டேட் வங்கியில், 25 கோடி சேமிப்புக் கணக்குகளை பராமரிக்க தேவைப்படும் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் என, வங்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.


மாநில தலைவர் செல்வம்
கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.
வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.

31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன.
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன.

அதை நடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

TNPSC - Results of Departmental Examinations - December 2016

TNPSC - துறைத் தேர்வுகள் - டிசம்பர்' 2016 [Dept. Exam. - Dec' 2016] தேர்வு முடிவுகள் வெளியீடு...

Results of Departmental Examinations - December 2016
(Updated on 03 March 2017)
Enter Your Register Number :                                                         

"TET - 2017" தேர்வு அறிவிக்கை தமிழில் வெளியிட கோரிக்கை

'டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டி.ஆர்.பி., நடத்தும், 'டெட் ' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு, ஏப்., 29 மற்றும், 30ல், நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை, கடந்த வாரம் வெளியானது.தேர்வுக்கான கட்டுப்
பாடுகள், இரு தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின. இரு அறிவிக்கைகளும், ஆங்கிலத்தில் உள்ளன. அதனால், நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.
இது குறித்து, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூறியதாவது:மூன்றாண்டு இடைவெளிக்கு பின், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கான நிபந்தனைகள், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்கின்றனர்.ஆசிரியர் பணிக்கு வரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், பாடங்கள் குறித்து ஆங்கில அறிவை எதிர்பார்க்கலாம்; தொடர்புக்கான ஆங்கில மொழி புலமையை, எதிர்பார்க்க முடியாது. எனவே, 'டெட்' தேர்வுக்கான
அறிவிக்கை மற்றும் நிபந்தனைகளை தமிழில் வெளியிட வேண்டும்.அரசு விதிகளின்படி, அரசாணை மற்றும் அறிவிக்கைகளை தமிழில் வெளியிட வேண்டும்.

 ஆண்டு முழுவதும், நுாற்றுக்கணக்கான தேர்வை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி.,
யும், தமிழில் தான், அறிவிக்கை வெளியிடுகிறது. எப்போதாவது தேர்வு நடத்தும், டி.ஆர்.பி., விதிகளை பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தலைவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழை
புறக்கணித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

TET' தேர்வுக்கு குறைந்த அவகாசம்:தேர்ச்சி பெறாவிட்டால் பணி பறிபோகும் - ஆசிரியர்கள் கலக்கம்

ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவி கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், வழக்கு காரணமாக, டெட் தேர்வு தள்ளிப்போனது.
இந்நிலையில், பிரச்னைகள் முடிவுக்கு வந்து, ஏப்ரலில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், தேர்வுக்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளதால், தேர்வில் தேர்ச்சி அடைய முடியுமா என, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

4/3/17

TET - விண்ணப்பம் வாங்கும் போதும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை!!

TET விண்ணப்பம் வாங்கும்போதும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை குறித்து வேலூர் விடியல்
பயிற்சி மையம் வழங்கும் முக்கிய குறிப்புகள்.

குறிப்பு 1: விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- ஐ பணமாக செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பு 2: தேர்வுக் கட்டணம் செலுத்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி செலுத்து சலானைப் பூர்த்தி செய்து இந்தியன் வங்கி/ இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி/ கனரா வங்கிக் கிளையில் ரூ.500/- ஐ ( SC/ST (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம். ரூ 250/- ) செலுத்திட வேண்டும்.

குறிப்பு 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வங்கியில் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான செலுத்து சலானின் ஒரு பிரதியை கண்டிப்பாக இணைக்கவேண்டும்.

குறிப்பு 4: விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனைப் பேனாவினைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு 5: விண்ணப்பத்தை மடிக்கக் கூடாது.


குறிப்பு 6: புகைப்படத்தின் மீது Attestation செய்யக் கூடாது.

குறிப்பு 7: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக TRB க்கு அனுப்பக் கூடாது. அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி அல்லது அலுவலகங்களில் கொடுத்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 8: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தரப்படவில்லை.

குறிப்பு 9: ஒருமாவட்டத்தில் வாங்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின்பு வேறு மாவட்டத்திலும் திருப்பித் தரலாம்.

குறிப்பு 10: தாள்I மற்றும் தாள் II ஆகிய இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புபவர்கள் இரண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு 11: தேர்வு மாவட்டக் குறியீடுகள்


குறிப்பு 12: பாடக் குறியீடுகள்

தமிழ். : 100
ஆங்கிலம். : 104
கணிதம். : 300
இயற்பியல். : 400
வேதியியல். : 500
தாவரவியல். : 600
விலங்கியல். : 700

வரலாறு. : 800

முந்தைய TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம்! - பள்ளி கல்வி அமைச்சர்

காலிஏற்படும் 3 ஆயிரம் ஆசிரிய பணியிடங்களில், முந்தைய TNTET  தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத
அடிப்படையில் பணி நியமனம் செய்ய

முதல் அமைச்சரிடம் கலந்து முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்தார்

TET விண்ணப்ப விநியோகம் & சமர்ப்பித்தல் மையங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு 2017*

விண்ணப்ப விநியோகம் & சமர்ப்பித்தல் மையங்கள்

பின்வரும் இணைய இணைப்பில் சென்று மாவட்டம் வாரியான
மையங்களின் பெயர்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*🔸 கன்னியாகுமரி🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/KANYAKUMARI.pdf


*🔸 திருநேல்வேலி🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/TIRUNELVELI.pdf


*🔸 தூத்துக்குடி🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/THOOTHUKUDI.pdf


*🔸இராமநாதபுரம் 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/RAMANATHAPURAM.pdf


*🔸சிவகங்கை 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/SIVAGANGAI.pdf


*🔸விருதுநகர் 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/VIRUDHUNAGAR.pdf


*🔸 தேனி🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/THENI.pdf


*🔸 மதுரை🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/MADURAI.pdf


*🔸 திண்டுக்கல்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/DINDIGUL.pdf


*🔸நீலகிரி 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/Nilgiris.pdf


*🔸கோயமுத்தூர் 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/COIMBATORE.pdf


*🔸 திருப்பூர்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/TIRUPPUR.pdf


*🔸ஈரோடு 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/ERODE.pdf


*🔸 சேலம்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/SALEM.pdf


*🔸நாமக்கல் 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/NAMAKKAL.pdf


*🔸 தருமபுரி🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/DHARMAPURI.pdf


*🔸 கிருஷ்ணகிரி🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/KRISHNAGIRI.pdf


*🔸கரூர் 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/KARUR.pdf


*🔸புதுக்கோட்டை 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/PUDUKKOTTAI.pdf


*🔸திருச்சிராப்பள்ளி 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/TRICHY.pdf


*🔸 நாகப்பட்டிணம்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/NAGAPATTINAM.pdf


*🔸 திருவாரூர்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/THIRUVARUR.pdf


*🔸 தஞ்சாவூர்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/THANJAVUR.pdf


*🔸 பெரம்பலூர்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/PERAMBALUR.pdf


*🔸அரியலூர் 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/ARIYALUR.pdf


*🔸விழுப்புரம் 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/VILLUPURAM.pdf


*🔸கூடலூர் 🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/CUDDALORE.pdf


*🔸 திருவண்ணாமலை🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/THIRUVANNAMALAI.pdf


*🔸 வேலூர்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/VELLORE.pdf


*🔸 காஞ்சிபுரம்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/KANCHIPURAM.pdf


*🔸 திருவள்ளூர்🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/THIRUVALLUR.pdf


*🔸 சென்னை🔸*

http://trb.tn.nic.in/TET2017/02032017/CHENNAI.pdf


*விண்ணப்ப விநியோகத் தேதி:*


06.03.2017 - 23.03.2017.

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசால் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாதம் 12 அரை
நாட்கள் வேலை சுமார் 8 துறைகளில் பணியாற்றி 150 கிலோமீட்டர் பயணம் செய்து இன்று வரை பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 7000 மட்டுமே வழங்குகின்றனர். குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் மண உளைச்சலில் இது வரை 75க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.அரசு இதுவரை மெளனமாகவே உள்ளது எனவே தங்கள் வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கிய தமிழக அரசை  பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம்

நாள்: 10.03.2017    நேரம்: காலை: 9 மணி

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை

EMIS-தலைமையாசிரியர்கள் கவனத்திற்க்கு ,

1.ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் left இருந்தால் அல்லது டபுள் என்ட்ரி இருந்தால் நீங்கள் மாணவனின் விவரத்தை குறிப்பிட்டு tnemiscel@gmail.com. என்ற முகவரிக்கு மெயில் அனுப்பினால்
அவர்கள் delete செய்வார்கள் .

2. பிற வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் emis எண்ணுடன் இருந்தால் அவர்களை உங்கள் பள்ளி emis இல் சேர்க்க student pool இல் search optionஇல் தேடி மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் . மாணவனின் பெயர் மற்றும் பிறந்த தேதி குறிப்பிட்டு அதன் மூலம் தேடி மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் .

3.Emis எண் இல்லாத மாணவர்கள் மற்றும் data not exsit என வரும் மாணவர்களுக்கு நீங்கள் new enrty அடிக்கவேண்டும் .

4. student pool படிவத்தினை பூர்த்தி செய்ய நீங்கள் உங்கள் school emis websiteஇல் உள்ள student pool லில் உள்ள மாணவர்கள் விவரத்தினை எடுத்து பூர்த்தி செய்ய வேண்டும் . படிவத்தில் கடைசியாக உள்ள Reasonஇல் student left என்று குறிப்பிடுங்கள் .அல்லது பிற காரணங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள்.


5. U DISE Verification படிவம் பூர்த்தி செய்ய school wise u dise students details அதை வைத்து பூர்த்திசெய்யுங்கள் , மேலும் ஆதார் எண், போட்டோ விவரத்தினையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு Reasonஇல் aadhar not received, not applied என்று குறிப்பிடுங்கள் . அனைத்து மாணவர்களையும் emis entry போட்டுள்ளோமா என்று சரிப்பார்த்து கொள்ளவும் .

B. E., பட்டதாரிகள் தற்போது B. Ed., பயின்று வரும்நிலையில் அவர்கள் TNTET - 2017 எழுதுவது தொடர்பான தகவல்கள் ஏதும் TNTET - 2017 (தாள் 2) அறிவிக்கையில் இல்லை.



B. E., பட்டபடிப்பை முடித்து தற்போது B. Ed., பயின்று வரும் நபர்களை TNTET - 2017 தேர்வை எழுத அனுமதிப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனு - தள்ளுபடி செய்யப்பட்டது (நாள்: 02.03.2017)

பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.1ல் திருத்தம்

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. இதில், 9.33 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மொத்தம், 2,434 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 4,000 பறக்கும் படைகள், தேர்வு நாட்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள், 31ல் முடிகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தமும் துவங்கியது. அதனால், ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். விடைத்தாள் திருத்துவதா; தேர்வு பணி பார்ப்பதா; பிளஸ் 1 மாணவர்களை கவனிப்பதா என, குழப்பம் ஏற்பட்டது. இதை தடுக்க, இந்த ஆண்டு தேர்வு முடிந்த பின், ஏப்., 1 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது.


தமிழகம் மற்றும் புதுவையில், 150 விடை திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, திருத்த பணிகள் நடக்க உள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்., 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க, தேர்வுத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

TET தேர்வு நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற
அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்குபின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 'அரசுஉதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,200 ஆசிரியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும்TET தேர்வு களில், தேர்ச்சி பெற வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது; ஆனால், 2013க்கு பின் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட உத்தரவில், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.,29, 30 ல் நடக்கும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் நியமனம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் பெறுகின்றனர். இதனால், சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை சேர்ந்த 3௦00 ஆசிரியர்களின் நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது.ஆசிரியர் சங்க நிர்வாகி  கூறியதாவது:'குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்' என, அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது. ஏழு ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.


சிறுபான்மையினர் பள்ளிகளில், TET தேர்ச்சிஇல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'சிறப்பு பணியிடை பயிற்சி' அளித்து பணியில் தொடரவும், தேர்ச்சி மதிப்பெண் 82 எனவும் உத்தரவிட்டது போல், உதவிபெறும் பள்ளிகளில் 23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.கடந்த 2013 முதல் தேர்வே நடத்தாமல் திடீரெனஇப்போது அறிவித்து, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.

TPF TO GPF ACCOUNT SLIP - SOON

ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின்
சேமநலநிதி கணக்கானது( TPF ) பொது வருங்கால வைப்புநிதிக்கு
(GPF) மாற்றப்பட்டதால் 2014-2015 ஆம் வருட கணக்கீட்டு தாள் சரிசெய்யும் பணி மாநில கணக்காயர் அலுவலகத்தில் நிறைவு பெற்று 
( AG's OFFICE )

 பதிவேற்றம் செய்யும் பணி NATIONAL INFORMATION CENTER ( NIC ) மூலம் நடைபெற்று வருகிறது.

 விரைவில் 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்யலாம்.            
 *ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு*


 *கணக்கீட்டுத் தாளை சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்*

'நீட்' தேர்வு விலக்கு கிடைக்குமா? : அமைச்சர்களுக்கே குழப்பம்

நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர்' என,
பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது. வரும் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்க்க, மே, 7ல், 'நீட்' தேர்வு நடக்கிறது.


இதற்கான விண்ணப்ப பதிவு, ஜன., 31ல் துவங்கி, மார்ச், 1ல் முடிந்தது. ஆனால், தமிழகத்தில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ''நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகவே உள்ளனர்,'' என்றார். 'தேர்வு உண்டா' என, தெரியாததால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பதில் அளிக்காமல் மவுனமாக உள்ளார். எனவே, தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு, விலக்கு கிடைக்காதோ என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதில், தெளிவான நிலை தெரிந்தால் தான், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும் என்றும், பெற்றோர் தெரிவித்துஉள்ளனர்.

நிதி பற்றாக்குறையால் தள்ளாடுது -SSA-திட்டம்

SBI - Bank ல உங்க அக்கவுன்டல மினிமம் 5000 இருக்கனுங்கோ....

இனிவங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்

புதுடில்லி : வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் ரூ.5000 :

பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
குறைந்தால் அபராதம் :

இந்தஅபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதுன் அடிப்படையில் வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் ரூ.75 மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன. இந்நிலையில் ஏடிஎம்.,களில் பணம் எடுக்க மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

TNTET - 2017 - தற்போது இரண்டாவது ஆண்டில் D. T. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 1 தேர்வை எழுதலாம்.

TNTET - 2017 Paper - 1

 தற்போது இரண்டாவது ஆண்டில் D. T. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 1 தேர்வை
எழுதலாம்.

 ஆனால் இக்கல்வி ஆண்டிலேயே D. T. Ed., பட்டயபடிப்பை தேர்ச்சி பெற்றால் மட்டுமே TNTET - 2017 தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை D. T. Ed., பட்டய தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே TNTET - 2017 தேர்ச்சி காரணமாக பணிவாய்ப்புக்கு அழைக்கப்பட்டால்  (இவர்களுக்கு பணி வழங்க இயலாது) இவர்கள் பணியை கோர இயலாது.

 கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி (Visually Impaired Candidates) TNTET தாள் 1 தேர்வை எழுத இயலாது. 🚨


TNTET - 2017 தாள் 1 - தகவல் ஏடு [Prospectus Book].

TNTET - 2017 - தற்போது இரண்டாவது ஆண்டில் B. Ed., (கல்வியாண்டு 2016-2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தேர்வை எழுதலாம்.

TNTET - 2017   Paper 2

 தற்போது இரண்டாவது ஆண்டில் B. Ed., (கல்வியாண்டு 2016-
2017) பயின்று வரும் நபர்களும் TNTET - 2017 தாள் 2 தேர்வை எழுதலாம்.

 ஆனால் இக்கல்வி ஆண்டிலேயே (2016-2017)  B. Ed., பட்டபடிப்பை தேர்ச்சி பெற்றால் மட்டுமே TNTET - 2017 தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை B. Ed., பட்ட தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே TNTET - 2017 தேர்ச்சி காரணமாக பணிவாய்ப்புக்கு அழைக்கப்பட்டால்  (இவர்களுக்கு பணி வழங்க இயலாது) இவர்கள் பணியை கோர இயலாது.


 TNTET - 2017 தாள் 2 - தகவல் ஏடு [Prospectus Book]. 
நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 

தேச தாய் - பாரதமாதா 
தேசதந்தை - மகாத்மா காந்தி, 
தேச மாமா - ஜவஹர்லால் நேரு, 
தேச சேவகி - அன்னை தெரசா, 
தேச சட்டமேதை - அம்பேத்கார், 
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி, 
நாட்காட்டி - 1957 சக ஆண்டு, 
நகரம் - சண்டிகார், 
உலோகம் - செம்பு, 
உடை - குர்தா புடவை, 
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத், 
தேச நிறம் - வெண்மை, 
தேச சின்னம் - நான்குமுக சிங்கம், 
தேச பாடல் - வந்தே மாதரம், 
தேசிய கீதம் - ஜனகனமன, 
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை, 
சிகரம் - கஞ்சன் ஜங்கா, 
பீடபூமி - தக்கானம், 
பாலைவனம் - தார், 
கோயில் - சூரியனார், 
தேர் - பூரி ஜெகநாதர், 
எழுது பொருள் - பென்சில், 
வாகனம் - மிதிவண்டி, 
கொடி - மூவர்ணக் கொடி, 
விலங்கு - புலி, 

மலர் - தாமரை, 
விளையாட்டு - ஹாக்கி, 
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி, 
பறவை - மயில், 
இசைக் கருவி - வீணை, 
இசை - இந்துஸ்தானி, 
ஓவியம் - எல்லோரா, 
குகை - அஜந்தா, 
மரம் - ஆலமரம், 
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம், 
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை, 
நீர் உயிரி - டால்பின், 
அச்சகம் - நாசிக், 
வங்கி - ரிசர்வ் வங்கி, 
அரசியலமைப்பு சட்டபுத்தகம், 
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

ஏன் ஊதியக் குழு?

ஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு!

'ஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும், ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வரும்போது, ஊழியக்குழு அமைத்து வேறு ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியமா?' என்றொரு கேள்வி எழக்கூடும்! அதற்கான பதில்:

மாதம் முழுதும் செய்யும் பணிக்கு ஊதியம், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அகவிலைப்படி. ஊழியர்களின் பணிக்கால நீளத்தை (Length of service) கௌரவிக்க ஆண்டு தோறும் ஊதிய உயர்வு!
இவை போல, கால மாற்றத்தை சமன் செய்ய ஊதியக்குழு!

காலம் என்ன செய்கிறது?

50 ஆண்டுகளுக்கு முன் நாம் தொலைக்காட்சி பார்த்ததுண்டா? 40 வருடங்களுக்கு முன் செல்போன் தொடர்பு உண்டா? 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'சொந்த வீடு' நம்மில் எத்தனை பேரிடம் இருந்தது? 20 வருடங்களுக்கு முன்பு இருந்தனவா இத்தனை இருசக்கர வாகனங்கள்? 10 ஆண்டுகளுக்கு முன் 'கார் வாங்க வேண்டும்' என்ற சிந்தனை கடுகளவேனும் இருந்ததா சராசரி மனிதரிடம்? -இதுதான் காலமாற்றம்! இதற்காகத்தான் ஊதியக்குழு!


ஊதியக்குழுவின் பணப்பயன் அரசு ஊழியர்களோடு முடிந்துபோய்விடுவது கிடையாது. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதனடிப்படையில்தான் ஊதிய மாற்றம், ஏற்றம், எல்லாம்! நிதி நிர்வாகத்தின் அடிப்படை அளவுகோல் ஊதியமே!

ப்ளஸ் 1...எதிர்பார்க்கப்படுவதும், 01.01.2016 தொடங்கி அமலாக்கம் செய்யப்பட இருப்பதும் ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு. இதே தேதி முதல், இதே அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட இருப்பது எட்டாவது ஊதியக்குழு. காரணம், தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு கூடுதலாக ஓர் ஊதியக்குழு அமைத்து கௌரவித்திருப்பதுதான்.

கால அலகு (Periodicity)

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுக்களின் அமலாக்க தேதி பின் கண்டபடி இருந்தது.

ஊதியக்குழு                         அமலாக்க தேதி

முதலாவது ஊதியக்குழு     - 01.06.1960 முதல்
இரண்டாவது ஊதியக்குழு - 02.10.1970 முதல்
மூன்றாவது ஊதியக்குழு    - 01.04.1978 முதல்
நான்காவது ஊதியக்குழு    - 01.10.1984 முதல்
ஐந்தாவது ஊதியக்குழு    - 01.06.1988 முதல்
ஆறாவது ஊதியக்குழு    - 01.01.2006 முதல்
ஏழாவது ஊதியக்குழு             - 01.01.2016 முதல்

எதிர்பார்ப்பது

மேற்கண்ட அட்டவணையை கவனித்தால், ஓர் ஊதியக்குழுவுக்கும் அதற்கடுத்த ஊதியக்குழுவுக்குமான கால இடைவெளி ஒரே சீராக இல்லாமல் முன்னும், பின்னுமாய் அமைந்திருக்கும். 01.01.1996 முதல் இது சீரமைக்கப்பட்டு இரண்டு ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலம் 10 ஆண்டுகள் என நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரசுப்பணியில் சேரும் ஓர் ஊதியர் அதிகபட்சமாக ஐந்து ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளால் பயன் பெற்று ஓய்வு பெற முடியும்.

குறைந்த பட்சம்: அதிக பட்சம்

01.06.1960 அன்று அமலாக்கம் செய்யப்பட்ட முதலாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி -
*தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (ஊதியம் + அகவிலைப்படி) = 50+10 = 60

*பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 1800/-
முதலாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சுமார் 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அமுலில் உள்ள 7வது ஊதியக் குழுவின் கடைசி நாளான 31.12.2015 அன்று நிலவரப்படி -

* தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (அடிப்படை ஊதியம் + தர ஊதியம் + அகவிலைப்படி 119%) = 4800+1300+7259 = 13,359

* பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 67000+10000+91630 = ரூ.168630/-
அதாவது, குறைந்தபட்ச ஊதியம் 222 மடங்குக்கு சற்று அதிகமாகவும், அதிக பட்ச ஊதியம் 93 மடங்குக்கு சிறிது அதிகமாகவும் உயர்ந்து விட்டிருக்கிறது.

பணப்பலன் (Monetary Benefit)!

ஊதியக்குழு ஒவ்வொன்றும் தனது பரிந்துரையில் குறைந்தபட்ச பலனை அறிவிப்பது வழக்கம். இந்த பணப்பலன் 5 ரூபாய், 10ரூபாய் என இருந்தது மாறி மூன்றாவது ஊதியக்குழு வில் பணப்பலன் சதவீத கணக்கில் குறைந்தபட்சம் 5% ஆக தரப்பட்டது. இப்பணப்பலன் 4-வது ஊதியக்குழுவில் 7% ஆகவும், 5-வது ஊதியக்குழுவில் 10% ஆகவும் உயர்ந்து கொண்டே வந்து - ஆனந்த அதிச்சியாக 40% பணப்பலனை அறிவித்தது 6வது ஊதியக்குழு பரிந்துரை. அதாவது, அடிப்படை ஊதியத்தில் 40% ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு!

01.01.2006 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட அலுவல் குழு (ஊதியக்குழு) பரிந்துரைக்கான அரசாணை 01.06.2009 அன்றுதான் வெளியிடப்பட்டது. அதாவது அமலாக்க தேதியிலிருந்து 41 மாதங்கள் கழித்து, என்றாலும் -

'தாமதமாய் வந்தாலும் தரமாக வருவேன்' என்பது போல், இதுவரை அறியப்படாத 'தர ஊதியம்' எனும் ஒரு புதிய ஊதிய அலகை அறிமுகம் செய்தது இந்த ஊதியக்குழு.

முந்தைய ஊதியகுழு பரிந்துரைகள் 10% 40% என சதவீத கணக்கில் பணப்பலன் தந்தது போல் அல்லாமல், 'தர ஊதியம்' தான் இந்த ஊதியக்குழுவின் பணப்பலனாக அமைந்தது.

குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1300/- அதிக பட்ச தர ஊதியம் ரூ.10,000/- அறிமுகம் செய்யப்பட்ட தர ஊதியங்களின் எண்ணிக்கை 29.

01.01.2006 அன்று ஓர் ஊழியர் பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தனி ஊதியம் + அகவிலை ஊதியம் + அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகை 186%. அதாவது, ஊதியம் + தர ஊதியம் = 100% அகவிலை (Dearness Pay) ஊதியம் 50%. இவைகள் மீதான அகவிலைப்படி 24+12% = 36%. ஆக 186%. எனவே, அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 1.86 என்ற காரணியால் பெருக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் ஊதியக்குழுவின் பணப்பலனாக தர ஊதியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு சேர்க்கப்பட்ட தர ஊதியம் தந்த அதிக பட்ச பணப்பலன், அடிப்படை ஊதியத்தில் 86% ஆக இருந்தது. பணப்பலன் சதவீத ரீதியில் சொல்லப்படாததால் இது வியப்பாக இருக்கலாம். அதற்கான கணக்கீடு பின் வருமாறு:

* ஓர் ஊழியர் 31.12.2005 அன்று பெற்றிருந்த ஊதியம் ரூ.5000/-
* இவரது ஊதிய ஏற்றமுறை (Pre Revised Scale of Pay) ரூ.5000 - 150 - 8000
* 01.01.2006 முதல் இவருக்கு தரப்பட்ட தர ஊதியம் ரூ.4300/-
* சதவீத ரீதியில் பணப்பலன் 4300/5000X௴100=86%

(இந்த ஊதிய வீதத்துக்கான தர ஊதியம் ரூ.4200/- என அறிவிக்கப்பட்டு, பின்னர் 4300/- ஆக உயர்த்தப்பட்டது)
எல்லாருக்கும் 86% பணப்பலன், தர ஊதியத்தின் மூலம், கிடைத்து விடவில்லை. ஆனால், சராசரியாக, பணப்பலன் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. முந்தைய ஊதியக் குழுவின் பணப்பலனை மிகைத்ததாகவே அமைந்தது.

ஊதிய உயர்வு (increment) ஊதிய உயர்வு தரப்படாத வேலை என்று எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை
இந்த ஊதிய உயர்வானது (Annual Increment) 01.06.1960 முதல் 31.12.2015 வரையான 56 ஆண்டுகளில் - அதாவது முதலாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அடைந்துள்ள மாற்றத்தை பார்ப்போம்.

01.06.1960-ன்போது தரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொகை (ஊதியம் + அகவிலைப்படி 50-1-60 என்ற ஊதிய ஏற்ற முறையில்) 1+0=1
பெறத்தக்க அதிகபட்ச ஊதிய உயர்வு தொகை 37400-67000+GP10000 என்ற ஊதிய ஏற்ற முறையில் 2010+2392 = 4402

ஊதிய உயர்வு தொகை கணக்கிடுவதில் இந்த 7-வது ஊதியக்குழு ஒரு சமச்சீர் முறையையும் கொண்டு வந்தது. அதாவது, ஒன்றுமுதல் ஆறுவரையான ஊதியக்குழுவின்படி பரிந்துரைக்கப்பட்ட ஊதிய ஏற்ற (Scale of Pay) முறைப்படி ஆண்டு ஊதிய உயர்வு (Annual Increment) தொகையானது அனைவருக்கும் ஒரே சதவீத அளவாக இல்லாமல், பதவிக்கு பதவி, ஊதியக்குழுவுக்கு ஊதியக்குழு வேறுபட்ட சதவீத அளவில் இருந்தது. ஊதிய உயர்வு தொகை 1.6% ஆகவும் இருந்தது. 6.1% ஆகவும் தரப்பட்டது.


இந்த முரண்பாடுகளை களைந்து அரசுப்பணியில் உள்ள அனைவருக்கும் 3% ஊதிய உயர்வாக தந்து சமச்சீர் நிலையை எட்டியது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை.
நிலுவை (Arrears)!

ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதிய வீதங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை உள்ள காலத்துக்கு நிலுவைத் தொகை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.
இந்த நிலுவையானது முதல் நான்கு ஊதியக்குழு வரை ரொக்கமாகவும், 5வது ஊதியக்குழு நிலுவையின் ஒரு பகுதி பொது வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டும் வழங்கப்பட்டது. ஆறாவது, ஏழாவது குழுக்களின் நிலுவை தவணை முறையில் ரொக்கமாக தரப்பட்டன.


முதன்முறையாக...!

பொதுவாக, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியமானது ஏறுமுகமாகத் (Upward) தான் இருக்கும். முதன் முறையாக அது இறங்குமுகத்தை (Downward) சந்தித்தது. அதாவது, ஊதியக்குழு பரிந்துரையின்படி முறையாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வுக்கு எந்த பங்கமுமில்லை; எவருக்கும் குறைக்கப்படவில்லை.

ஆனால் - 'ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பள வீதம் போதுமானதாக இல்லை' என்ற முறையீட்டின் பேரில் 'ஒரு நபர் குழு' அமைத்து அறிக்கை பெறப்பட்டது. அந்த ஒரு நபர் குழு அறிக்கைக்குப் பின் பெரும்பான்மை பதவிகளுக்கு 'மீண்டும்' ஒரு உயர்வு வழங்கப்பட்டது. ஊதிய வீதம் / தர ஊதியத்தில்.
அவ்வாறு மீண்டும் தரப்பட்ட உயர்வு சீராய்வு (Review) செய்யப்பட்டது. சீராய்வின்படி, மீண்டும் உயர்த்தப்பட்டு 'சில பதவிகளுக்கு' வழங்கப்பட்ட ஊதியமானது இதே பதவிக்கு மத்திய அரசு போன்றவற்றில் தரப்படும் ஊதியத்தை விட அதிகம் எனவும், இதே சம்பளம் தரப்படும் தமிழக அரசின் பிற பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகம் என்றும் அறிவித்து 'ஒரு சில பதவிகளுக்கு' மட்டும் 'மீண்டும்' உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் குறைப்பு செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பு!

எந்த ஒரு மாநில அரசும் தராத எத்தனையோ சலுகைகளை வழங்கியுள்ளது, தமிழக அரசு. இன்னும் சொல்லப் போனால், அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கை போன்றவற்றை மற்ற மாநிலங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கையில், பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது, தமிழக அரசு எனினும், நினைவு கூறத்தக்க சில விடுபாடுகளும் உண்டு; அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவற்றுள் சில:

* உயர்த்தப்படாத ஓய்வு பெறும் வயது
* மத்திய அரசுக்கு இணையாக வீட்டு வாடகைப்படி...

ஓ.என்.ஜி.சி. மறுப்பும் நெடுவாசல் பொறியாளரின் பதிலும்!

நெடுவாசல் திட்டத்திற்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. திட்டத்தில் ஷேல் வாயுவோ, மீத்தேன் எரிவாயுவோ எடுக்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி. கடந்த 50 ஆண்டாக காவிரி டெல்டாவில் செயல்பட்ட போதிலும் விவசாயம் பாதிக்கபடவில்லை. .எங்கள் நிறுவனம் செயல்படும் இடங்களில் வாழும்

மக்களிடம் சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயுவால் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தினமும் 840 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் நமது மின்னம்பலம் இதழ் சார்பில், ‘நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்நிறுவனம் கூறுகிறதே?’ என்ற கேள்வியை நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் சுரேஷ் ராமநாதனை தொடர்பு கொண்டு கேட்டோம். நாம் கேட்ட உடன் அவர் வாய்விட்டு சிரித்துவிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “ஓ.என்.ஜி.சி.க்குத் தெரியாமல் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் எதுவும் நடக்கவில்லை. எங்கள் கிராமங்களைத் தேர்ந்தெடுத்தது, அங்கே ஆய்வு நடத்தியது, விவசாய நிலங்களை விவசாயிகளிடம் குத்தகைக்குப் பெற்றது என அனைத்தையும் மேற்கொண்டது ஓ.என்.ஜி.சி. நிறுவனம்தான்.

இதை விட முக்கியமாக, நெடுவாசல், வானக்கண் கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆழ்துளைக் கிணறு அமைத்து அதில் குழாய்களை பதித்தது, வெளிக்குழாய்களை அமைத்தது, எக்ஸ்மஸ் ட்ரீ வால்வு என்று சொல்லக் கூடிய நீங்கள் காணும் எண்ணெய் கிணறின் வெளி அமைப்பை நிறுவியது, அதை சீலிங் செய்தது என அனைத்துமே ஓ.என்.ஜி.சி.தான். இது மட்டுமல்லாமல் இந்த திட்டம் தொடங்குவதற்கு முன் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்ததும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்தான். நெடுவாசல் கிராமத்தில் தொடங்கப்பட இருந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த முழு விவரமும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது” என்று தெளிவாக விளக்கம் அளித்தார்.

திருமணமான பெண்கள் படிக்க முடியாது!!

குடும்ப சூழ்நிலை,பொருளாதார சிக்கல் போன்ற காரணங்களால் ஒரு சில பெண்கள் திருமணத்துக்கு பிறகு படிக்கின்றனர்.

இந்நிலையில்,தெலங்கானாவில் சமூகநலத் துறை சார்பாக பெண்கள் இலவசமாகத் தங்கி படிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் திருமணமாகாத பெண்கள் மட்டுமே படிக்க முடியும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.


இந்தக் கல்லூரிகளில் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் படிப்பதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அந்த கல்லூரிகளில் திருமண ஆன பெண்கள் படிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில்,சமூக நலத்துறை சார்பாக 23 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் சுமார் 280 மாணவிகள் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.

இதில், எஸ்.சி பிரிவினருக்கு 75 சதவிகிதமும், எஸ்.டி மற்றும் பி.சி பிரிவினருக்கு 25 சதவிகிதமும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

தெலங்கானா சமூகநலத் துறை கல்லூரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-2018 கல்வியாண்டில் இலவசமாக தங்கி படிக்கும் கல்லூரிகள் பி.எ.,பி.காம்.,பி.எஸ்.சி போன்ற இளங்கலை படிப்புகளுக்கு திருமணமாகாத பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கல்லூரி மேலாளர் பி வெங்கட் ராஜு கூறுகையில், திருமண ஆன பெண்களின் கணவர்கள் மனைவியை பார்ப்பதற்காக விடுதிகளுக்கு வருகின்றனர். அவர்களை பார்க்கும்போது,திருமணமாகாத பெண்களின் மனநிலை திசை திருப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. மாணவிகள் மத்தியில் எந்தவித கவனசிதறலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக செயலாளர், ஆர் .எஸ் .பிரவீண் குமார் கூறுகையில், குழந்தை திருமணங்களை தடுப்பதற்காகதான் பெண்கள் தங்கி படிக்கும் கல்லூரிகள் அரசாங்கத்தால் தொடங்கப்படுகிறது. ஆனால், தற்போது தெலங்கானா அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவு வருத்தமளிக்கிறது. அதற்காக,நாங்கள் திருமணமான பெண்களை ஊக்குவிக்கவில்லை.இருப்பினும் யாரையும் புறகணிக்கவும்,கஷ்டப்படுத்தவும் கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கமாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் கிராம மற்றும் நகர புறங்களில் குழந்தை திருமணம் பெருத்துள்ள நிலையில், எப்படி அரசாங்கம் திருமணமான பெண்களுக்கு கல்வி அளிக்க முடியாது என அறிவிக்கலாம்? என பெண்கள் முற்போக்கு அமைப்பின் சந்தியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா அரசு அறிவித்துள்ள இந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என பெண் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தை திருமணத்தில் முதலிடம் வகிக்கும் சென்னை!

சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வியாசர்பாடியைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.


சென்னையில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம் குறித்து சமூக ஆர்வலர் எமி என்பவருக்கு தகவல் கிடைத்தது. இவரது தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பெசண்ட் நகர் தேவலாயத்துக்கு சென்றனர். அங்கு, மணமகள்கோலத்தில் நின்றிருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

திருமண வீட்டாரிடம் மணப்பெண்ணின் வயது சான்றிதழைக் கேட்டபோது, அதை தருவதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் இருவீட்டாரும் சமூக ஆர்வலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, திருவான்மியூர் போலீஸுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இது குறித்து திருமண வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு ,அவர்கள் இணங்கவில்லை.

பின்னர், மணமக்களின் பெற்றோர்களுக்கு தனிதனியாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து,இருவீட்டாரும் மாணவி திருமண வயதை அடைந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர்.

தற்போது மாணவி கெல்லீசில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுயுள்ளார். இது குறித்து குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படிப்பறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத கிராமபுறங்களில்தான் அதிகளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது என நினைத்தாலும், சிட்டி சென்னையிலும் இதுபோன்று திருமணங்கள் நடந்து வருவது கண்கூடாகக் தெரிகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5480 பெண் குழந்தைத் திருமணங்கள் சென்னையில் நடந்துள்ளன. குழந்தைத் திருமணம் செய்து கொண்டவர்களில் 16,855 பேர் குறைந்த வயதில் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 5 பெண்களில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக யூனிசெஃப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சசிகலா நியமனம்: தினகரன் கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!!!

அதிமுக.,வில் சசிகலா நியமனம் தொடர்பாக, தினகரன் அனுப்பிய கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின் படி, தினகரன் அ.தி.மு.க.,வில் எவ்வித பொறுப்பிலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தினகரன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் பொதுச்செயலர் நியமனம் தொடர்பாக, சசிகலா மார்ச் 10 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம்

தமிழக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம்

*தமிழக உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலாதுறைக்கு மாற்றம்*

*தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநராக உமாநாத் நியமனம்*


புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்!!!

சென்னை: தமிழக அரசின் உள்துறை செயலாளர் மாற்றப்பட்டார். இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழக அரசின் தற்போதைய உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலா துறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குனராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேம்பாட்டு கழக இயக்குனராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்

TPF TO GPF ACCOUNT SLIP

TPF TO GPF ACCOUNT SLIP
*TPF TO GPF*
ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின்
சேமநலநிதி கணக்கானது( TPF ) பொது வருங்கால வைப்புநிதிக்கு (GPF) மாற்றப்பட்டதால் 2014-2015 ஆம் வருட கணக்கீட்டு தாள் சரிசெய்யும் பணி மாநில கணக்காயர் அலுவலகத்தில் நிறைவு பெற்று
( AG's OFFICE )

 பதிவேற்றம் செய்யும் பணி NATIONAL INFORMATION CENTER ( NIC ) மூலம் நடைபெற்று வருகிறது.

 விரைவில் 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்யலாம்.               
 *ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு*

 *கணக்கீட்டுத் தாளை சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்*