யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/4/17

TNTET 2017 - Exam Tips - Science!

டெட்வெற்றி நிச்சயம் - கட்டுரை - பிரதீப் பட்டதாரி ஆசிரியர் - பூங்குளம்

பாட வாரியான டிப்ஸ் - இன்று : அறிவியல்

பகுப்புகள்:
தாவரவியல் - 8
விலங்கியல் - 8
இயற்பியல் - 7
தாவரவியல் - 7
மேலும்
நேரடி வினாக்கள் - 15 முதல் 20 வரை
சிந்தித்து விடையளித்தல் வினாக்கள் - 10 வினாக்கள்
வகுப்பு 6- 10 வரை : 22 - 24 மதிப்பெண்
தொடர்புடைய பாட பகுதி - 11 & 12- 6 மதிப்பெண்
::::::::::: தாவரவியல் ::::::
* வகைபாடு
* பண்புகள்
* பயன்கள்
* தாவரவியல் பெயர்
* சட்டம் - ஆண்டுகள்
* அறிஞர் கண்டுபிடிப்பு
* மொனி ரா
* புரோடி ஸ்டா
* பூஞ்சை
* தாவரம் - பிரையோ பைட் / டெரிட்டோ பைட் / ஜின்னோல் பெர்ம் / ஆஞ்சியோஸ்பெர்ம்
* இவற்றின் பண்பு பயன்கள்
* ஒரு வித்திலை
* இரு வித்திலை
* சுவாசம்
* ஒளி சேர்க்கை
* தாவர நோய்கள்
:::::::::: விலங்கியல் :::::::
வகைபாடு
தனிபண்பு
விலங்கு நுண்ணுயிரி
நோய்கள்
பரவும் விதம்
உணவுஉட்கொள்ளல், செரித்தல் முறை
பாலூட்டி வகைப்பாடு
மனிதன் பண்புகள்
உறுப்பு மண்டலம்
நாளமுள்ள, நாளமிள்ளா சுரப்பி
முக்கிய உறுப்பு - கருத்துகள்
இனபெருக்க நிலை - ஹார்மோன்
::::::::: இயற்பியல்::::::::
அடிப்படை அலகு
வழிஅலகு
SI குறியீடு
அளவீட்டியல்
ஒளிபண்பு
ஒலிபண்பு
மின்னியல்
காந்தவியல்
ஆடிகள்
நிறம், எதிரொளிப்பு
இயற்பியல் பண்புகள்
அலகுகள், குறியீடுகள்
::::::::::::: வேதியியல் :::::::
வேதிவினைகள்
அமிலம்
காரம்
தனிமம்
தனிமவரிசை அட்டவணை
பயன்கள்
மூலக்கூறு
சேர்மம்
உலோகம்
அலோகம்
உலோகபோலி
பயன்கள்
பண்புகள்
வினைகள்
PH மதிப்பு
:::::::::: கூடுதல் பகுதி :::::::::
மேற்கண்ட பாட பகுதி சார்ந்த கருத்துகள்  11 , 12 வகுப்பில் கூடுதலாக படித்தல் முழு மதிப்பெண் பெற்று தரும்
√அறிவியல் பொறுத்தவரை மறைமுக வினாக்களே அதிகம்
√தெளிவுற படித்தல் மிக அவசியம்
√பாட பகுதியும் அதிக செறிவு மிக்கது
√விரைவில் மறந்து விடும். திருப்புதல் இப்பாடத்தில் மிக முக்கியம்
√அறிவியல் பெயர்களை வாழ்வியல் நிகழ்வோடு Hint வைத்து படிக்கவும்
√கடினம் எனினும் இப் பாடம் வெற்றியின் அடிப்படை சாராம்சம்
√இயலாது என எதுவும் இல்லை
இலக்கு தெளிவாக இருக்கும் போது

🐝🐝🐝வாழ்த்துகள் _ தேன்கூடு

வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-2 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை பிளஸ்-1 வகுப்புக்கு மாற்றம் வருமா?

வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-2 வகுப்பு பாடத்திட்டத்தில் எவ்விதமாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் பிளஸ்-1 வகுப்புக்குபாடத்திட்டம் மாற்றுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும்என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாடத்திட்டம்

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம்தயாரித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பொதுவாக5 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாற்றம்செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த வகுப்புகளுக்கு பாடத்திட்டம்எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.இந்த வருடம் ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரிதமிழக அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது.பின்னர் அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்ததீர்மானம் அப்படியே இருக்கிறது. எனவே ‘நீட்’ தேர்வில் இருந்துவிலக்கு அளிக்கப்படுமா? என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.

மாற்றம் வருமா?

ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிக்கூடங்கள் தொடங்கஉள்ளன. பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே இலவச பாடப்புத்தகங்கள்வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்பணிகள் கழகம் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்குபாடப்புத்தகங்களை அச்சடித்து விட்டது. எனவே பிளஸ்-2 வகுப்புபாடத்திட்டத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை.

தற்போது 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை பாடப்புத்தகம்அச்சிடப்பட்டு வருகிறது. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிட்டபிறகு 11-வது வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன.எனவே பிளஸ்-1 வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா? எனமாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

அரசு முடிவு எடுக்கும்

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்-1வகுப்புகள் தொடங்க இன்னும் 2½ மாதங்களே உள்ளன. இந்நிலையில்அவசரமாக வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்புபாடத்திட்டத்தை மாற்றுவது சிரமம். இருப்பினும் இது குறித்துஅரசு தான் இறுதி முடிவை எடுக்கும் என்றனர்.பிளஸ்-1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு,அந்த மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் போது புதியபாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

GST - ஜுலை 1 தெரிந்து கொள்வோம்....

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏராளமான மாற்றங்கள்...அனைவரும் அறிய வேண்டிய அறிவிப்புகள்.

ஏப்ரல் 1-ந்தேதி என்பது பொதுவான மாதப்பிறப்பு என்பதைக் காட்டிலும் 2017-18ம் நிதியாண்டு பிறக்கிறது என்பதுதான் சிறப்பானது. இந்த நிதியாண்டில் பல மாற்றங்களை பிரதமர் மோடி தலைமையிலானஅரசு செய்துள்ளது.
பட்ஜெட்டை முன்கூட்டியே அதாவது பிப்ரவரி 1-ந்தேதியேதாக்கல் செய்து, நிறைவேற்றியுள்ளது. பட்ஜெட்டில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. சலுகைகள் முதல் புதிய வரிகள் வரை, வரி குறைப்பு அனைத்தும் அமலாகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது.

இதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, வருமான வரி விலக்கு என பல மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.  அவை என்ன என்பது தெரிந்துகொள்ளலாம்.

வருமானவரி குறைப்பு

1.2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் வருமானவரி செலுத்து அளவு குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதாவது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரைஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள், 10 சதவீதம் வருமானவரி வரி செலுத்தி வந்தனர். அதை 5 சதவீதமாக பட்ஜெட்டில் குறைத்து நிதிஅமைச்சர் ஜெட்லி அறிவித்தார்.அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.அதாவது இந்த நிதியாண்டு முதல் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5. லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் மட்டுமே வருமானவரி செலுத்தினால் போதுமானது.அதிலும், வீட்டுவாடகை, குழந்தைகளின்படிப்பு,மருத்துவச்செலவு என 80 சி படிவத்தில் கணக்குகாட்டினால், அதையும் செலுத்த தேவையில்லை.

2. ரூ.3.5 லட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் ஆண்டுக்கு ரூ.2575 வரி செலுத்தினால் போதுமானது, இதற்கு முன்பு இது ரூ.5,150 ஆகஇருந்தது. மேலும், வரிசெலுத்தியதை திரும்பப் பெறும் டேக்ஸ் ரிபேட் அளவு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் கூடுதல்வரி

3. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் வருமானவரியோடு சேர்த்து, கூடுதல் வரியாக 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது நடைமுறைக்கு வருகிறது.

15சதவீதம் வரி

4. ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல்வருமானம் இருப்பவர்களுக்கு ஏற்கனவே செலுத்தும் வருமானவரியோடுசேர்த்து கூடுதல் வரியாக 15 சதவீதம் செலுத்துவதும் நடைமுறைக்கு வருகிறது.

ஒருபக்க வருமானவரி ரிட்டன் படிவம்

5. ஆண்டுக்கு ரூ. 5லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள்,முதல்முறையாக வருமானவரி செலுத்துபவர்களுக்காக ஒரு பக்கம் கொண்ட வருமானவரி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல்முறையாக வருமானவரி செலுத்தும் நபர்களிடம் அதிகமான விசாரணைகளும் நடத்தப்படாது. ஐ.டி.ஆர்.1 என்ற ஒருபக்க படிவம் மட்டுமே வர உள்ளது.

அபராதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம்

6. 2017-18ம் நிதியாண்டில் வருமானவரி ரிட்டன்களை 2018,டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பாக செலுத்தினால்ரூ.5ஆயிரம் அபராதமும், அதற்கு பிறகு செலுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அதேசமயம், ரூ.5 லட்சம் வரைஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. ஆயிரம் மட்டுமே அபராதம்விதிக்கப்படும்.

வரிவிலக்கு

7. ராஜீவ்காந்தி சேமிப்பு திட்டத்தில் இதற்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு 80சிசிஜி படிவத்தின் படி வரிபிடித்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த நிதியாண்டு முதல் அந்த வரிபிடித்தம்செய்யப்படாது.

வரிபிடித்தம் இல்லை

8. தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்பது இருப்பவர்கள் தங்களின் முதலீட்டில் இருந்து பாதி அளவு பணத்தை இடையே எடுத்தால், வரிபிடித்தம் செய்யப்பட்டுவந்தது. ஆனால், அது மாற்றப்பட்டு பாதிபணம் வரை எடுத்தாலும் வரிவிதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ரூ.2லட்சத்துக்கு மேல் தடை

9.ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரொக்கமாக ரூ. 2லட்சத்துக்குமேல் யாருக்கும் பரிமாற்றம் செய்ய முடியாது. வர்த்தகர்கள் வங்கியில் இருந்து ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கமாகவும் எடுக்க முடியாது. அவ்வாறு ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கப்பரிமாற்றம்செய்தால், எந்தஅளவு பரிமாற்றம் செய்கிறார்களோ அதே அளவு அபராதம் விதிக்கப்படும்.

மருந்துகள் விலை உயர்வு

10. சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை, புற்றுநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான 875 அத்தியாவசிய மருந்துகளின் விலை 2சதவீதம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்கிறது.

இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு

11. ஏப்ரல் 1-ந்தேதி முதல் காப்பீடு பிரிமியம், வாகனங்களுக்கான மூன்றாம்நபர் காப்பீடு பிரிமியம் ஆகியவை 5 சதவீதம்  உயர்த்தப்படுகிறது. அதிலும் 150சிசி முதல் 350 சிசி வரை, அதற்க மேல் உள்ள சிசி உள்ள பைக்குகளுக்கு மூன்றாம்நபர் (தேர்டுபார்ட்டி இன்சூரன்ஸ்)காப்பீடு 40 சதவீதம் உயர்கிறது. கார்களில் 1000 சிசிக்கு மேல் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.

எஸ்.பி.ஐ. வங்கி அபராதம்

12. எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பாக நகரங்களில் வசிப்போர் ரூ.5ஆயிரம், சிறுநகரங்களில்வசிப்போர் ரூ.3ஆயிரம், கிராமங்களில் வசிப்போரு ரூ.ஆயிரம் வைத்துஇருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.100முதல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.மேலும், மாதத்துக்கு 3 முறை மட்டுமே ரொக்கமாக டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் செய்தால், ரூ. 50 சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆதார் கட்டாயம்

13. ஜூலை 1-ந்தேதி முதல் பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கண்டிப்பாக ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.
ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும்சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள்என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது.

3–ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பளபணம் வங்கிகளில் செலுத்தப்படும்.

அந்தவகையில் 4–ந்தேதிதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளபணம் கிடைக்க உள்ளது.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கானஎழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தவிவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.

அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.


நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.

குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

1.மாநகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

2.நகர, சிறு நகர, கிராமபுறப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.

3.டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

4.ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

5.அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

6.எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.

7.எஸ்பிஐயுடன் இணையும் 5 வங்கிகள்
இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

Lab Assistant Post - Experience Certificate Form



முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க 2 நாள்கள் அவகாசம் நீட்டிப்பு.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்ப தற்கான கால அவகாசம் மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு  நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.  அதன்படி, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 4-ஆம் தேதி கடைசித் தேதி என்றும், இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரின்ட் எடுத்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஏப்ரல் 5 கடைசித் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளது. அவற்றில் 3 நாள்கள் அரசு விடுமுறை நாள்கள் என்பதால், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். எனவே, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து கால அவகாசம் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது:  விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 6 கடைசித் தேதி என்றும், இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிண்ட் எடுத்து தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு ஏப்ரல் 7 கடைசித் தேதி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இணையதளத்தில் விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் உள்ளது என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். எனவே, இணையதளத்தில் பதிவு (ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ்) செய்துவிட்டு அதன் பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பிரின்ட் எடுத்து தபாலில் அனுப்புவதற்கு பதில், விண்ணப்பங்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபாலில் அனுப்பலாம்.

இரண்டு முறைகளில் விண்ணப்பித்தாலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.

ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யாதவர்கள் கவனத்திற்கு..! தொடரும் விலை போர்: ஏப்ரல் 15 வரை ஜியோ பிரைம் உறுப்பினராக மாறலாம் மற்றும் பல அதிரடி ஆஃபர்கள்..!

                              
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது முதல் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகள் வாரி வழங்கியது. இப்போது என்னவென்றால் ஜியோவின் வெல்கம் ஆஃபர் மற்றும் நியூ இயர் ஆஃபர்கள் முடிந்த நிலையில் மார்ச் 31-ம் தேதிக்குள் பிரைம் மெம்பராக மார வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்த ஜியோ ஏப்ரல் 15 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது.


அது மட்டும் இல்லாமல் மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் ரீசார்ஜ் செய்து மகிழலாம் என்றும் ஜியோ அறிவித்துள்ளது. இதனால் போட்டி நிறுவனங்கள் இடையில் நேரடியாக விலைப் போரில் ஈடுபட்டு வருகின்றது ஜியோ என்று கூறலாம்.

ஜூலை வரை ஆஃபர்
ஏப்ரல் 15-ம் தேதிக்குள் யாரெல்லாம் ஜியோ பிரைம் 99 ரீசார்ஜ் செய்கின்றார்களோ அவர்கள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தல் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபரை ஜூலை வரை தொடர்ந்து பயன்படுத்தி மகிழலாம்.
  
சம்மர் சர்பிரைஸ்
இந்தச் சலுகை திட்டத்தின் பெயரை சம்மர் சர்பிரைஸ் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை ஜியோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  
ஆகஸ்ட் ரீசார்ஜ் செய்தால் போதும்
ஜியோ பிரைம் ரீசார்ஜினை செய்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இந்தச் சம்மர் சர்பிரைஸ் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் மாதம் தான் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
  
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
ஜியோ நெட்வொர்க்கின் பிரம் ஆஃபரில் இது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பதாகவும், அது ஏப்ரல் 15-ம் தேதிக்குள் 100 மில்லியன் பயனர்களைக் கடக்கும் என்றும் ஜியோ எதிர்பார்க்கின்றது.
  
அம்பானி அறிவிப்பு
ஜியோ இலவச சேவை முடிவுறுகின்றது. ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யுங்கள் இல்லை என்றால் உங்களுக்கான சேவை துண்டிக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிரடி ஆஃபரால் இலவசத்தைப் பயன்படுத்திய பிறகு தூக்கி எறிந்துவிடலாம் என்று இருந்த ஜியோ பயனர்களும் பிரைம் ஆஃபர் ரீசார்ஜ் செய்வார்கள் என்பது ஜியோவின் திட்டமாகும்.

   தரம்படுத்தப்பட்டு வரும் சேவை
ஜியோ நெட்வொர்க் சேவையில் பல தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதால் சேவையில் இடையூறுகள் அதிகமாக உள்ளன. இதனைப் போக்கும் வகையில் இன்னும் சில நாட்களில் பல மடங்கு சேவை தரம்படுத்தப்பட்டுவிடும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
  
கூடுதலாக 100,000 கோடி முதலீடு
ஜியோ நிறுவனத்திற்காக 200,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாதகும், வரும் மாதங்களில் தொலைத்தொடர்பு நெட்வோர்க் டவர்களுக்காக 100,000 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  
போட்டி நிறுவனங்களின் நிலை
6 மாதங்களாக இலவச ஆஃபர்களை ஜியோ நிறுவனம் அளித்து வந்ததால் போட்டி நிறுவனங்களான வோடாபோன், ஐடியா, மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெறும் சிக்கல்கள் உருவாகி போட்டி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது மற்றும் சிறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி 99 ரூபாய் பிரிமியம் ரீசார்ஜ் மற்றும் 149 ரூபாய் முதல் பிற ரீசார்ஜ் போக்குகளையும் அறிவித்திருந்தார்.

   வருவாய் இழந்த போட்டி நிறுவனங்கள்
ஜியோவால் அக்டோபர்-டிசம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 55 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, இதுவே வோடாபோன் நிறுவனம் 1.9 சதவீதம் வரை சேவை வருவாயை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது.

குறுஞ்செய்தி வந்தால் மட்டும் மின்னணு அட்டை பெற ரேஷன் கடைக்குச் செல்லுங்கள்.

செல்லிடப்பேசியில் எட்டு இலக்க ரகசிய எண் உங்களுக்கு வந்தால் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை பெற ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும். அந்த எண்ணை நியாய விலைக் கடை காண்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

நியாய விலைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணும், ஆதார் எண்ணும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசிக்கு எட்டு இலக்கம் கொண்ட ரகசிய எண்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த எண்களுடன் உங்களது செல்லிடப்பேசியை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும்.

அதனை விற்பனையாளரிடம் காண்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். பழைய அட்டையிலும் பொருள்கள்: மின்னணு குடும்ப அட்டை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மின்னணு குடும்ப அட்டையைப் பெறாதவர்களுக்கு பழைய அட்டையை (தாள்களைக் கொண்டது) அடிப்படையாகக் கொண்டு பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் மதுமதி தெரிவித்தார்.

எப்போது முடியும்: மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி, இரண்டு மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதங்களுக்குள் மாநிலம் முழுவதும் வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வக உதவியாளர் தேர்வு பெயர்பட்டியல்கள் வெளியீடு.

பள்ளிகளுக்கான ஆய்வ உதவியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்தோர் மதிப்பெண் விவரங்களுடன் மதுரையில் 4 இடங்களில் பட்டியல்கள் சனிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் தேர்வானவர்களின் சான்று சரிபார்க்கும் பணிகள் வரும் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மதுரை ஓ.சி.பி.எம்.பள்ளியில் நடைபெறவுள்ளன. இதில் 267 பேருக்கு தற்போது அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 சான்று சரிபார்ப்புக்காக வருவோருக்கு மதிப்பெண்களுடனான பெயர்ப்பட்டியல் சனிக்கிழமை காலையில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், மாவட்டக் கல்வி அலுவலக வளாகங்கள் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக வளாகம் ஆகியவற்றில் ஒட்டப்பட்டன. பெயர்ப் பட்டியல்களை ஏராளமானோர் வந்து பார்த்துச்சென்றனர்.

ஓ.சி.பி.எம்.பள்ளியில் நடைபெறும் சான்று சரிபார்க்கும் பணியை எளிதில் செயல்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, நேர்முக உதவியாளர் ஆதிராமசுப்பு ஆகியோர் செய்துள்ளனர். 

Certificate Verification List for the Direct Recruitment Of Lab Assistant

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு.







ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு !!



ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் 
வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்  அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5  விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் பள்ளிகளின் விவரம்:

1. கோ.து.வ.ச.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001.

2. புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்.

3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி..

4. புனித லூர்தன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

5. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில், ஈரோடு  638 001. 

6. எஸ்.எஸ்.கே.வி. (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.  .

7. எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில். கன்னியாகுமரி   

8. சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர். 

9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கூட்டரங்கம்,கிருஷ்ணகிரி.    

10. ஓ.சி.பி.எம். (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, மதுரை  625 002.
   
11. இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், நாகப்பட்டினம். - 611 003.

12. அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு), மோகனூர் ரோடு, நாமக்கல்  637 001,

13. தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூர்.

14. ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை  622 001.     

15. சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம். இராமநாதபுரம்    

16. புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரிசிபாளையம், சேலம் - 636 009.   

17. செயிண்ட் ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.

18. தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, மேரிஸ் கார்னர், தஞ்சாவூர்     

19. புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம் - 643 001.   

20. நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி  625 531.   

21. காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மெயின் ரோடு, சோ.கீழ்நாச்சிப்பட்டு, திருவண்ணாமலை - 606 611.    

22. ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.

23. டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, மோதிலால் தெரு, திருவள்ளூர் - 602 001.      

24. ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரயில் நிலையம் அருகில், திருப்பூர் - 641 601.    

25. பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சி  620 002.    

26. சாரா தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி  - 627 002.

27. விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.     

28. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி, வேலூர்                                                        
29. தூய  இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பாண்டி சாலை, விழுப்புரம்    

30. சத்ரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி விருதுநகர். விருதுநகர்.     

31. நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி மெயின் ரோடு, அரியலூர்.
   
சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும்.  சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது

சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள்  ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுகதகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 21

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 22

* அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 23

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 24

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 25

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 26

* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 27

* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 28

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 29

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 30

* இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பா சிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - மே 31

உத்தேச காலஅட்டவணையின் படி, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

முக்கிய செய்தி:

ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர
AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.
எந்தெந்த வங்கியில் ஆசிரியர்களின் சம்பள கணக்கு உள்ளதோ அக்கிளைக்கு சார்ந்த AEEO க்கள் விண்ணப்பம் அளிக்கும் படி கூறியுள்ளனர்.
மேலும் பணியாளர் பெயர்,கணக்கு எண்,ஆதார் எண்,பான் எண்,வங்கி MCIR எண் ஆகிய விவரங்களை இணைத்து முகப்பு கடிதம் அளிக்க கூறியுள்ளனர்.
ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம்

உன் வாழ்க்கையை நீ வாழ்

உளுந்து

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி

எல்லாம் விதியின்படிதான்நடக்கும்.

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஒரு குட்டி கதை

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா

கடவுளை பற்றி காமராசர்

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால்

கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்

கர்மா

கொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு

சிறந்த 25 பொன்மொழிகள்

சுவைகளின் பலன்கள்

தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா

தமிழ் அறிவோம்

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் வரலாறு

தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?

தர்மம் சொல்லும் உண்மைகள்

தினம் ஒரு குட்டிக்கத2

தினம் ஒரு குட்டிக்கதை

தொப்பையை குறைக்க ஒரு அற்புதமான இயற்கை மருந்து ஓமம்

நல்ல நோட்டு

நாம் எங்கே செல்கிறோம்

படித்ததில் பிடித்த தத்துவங்கள்

பணம் இல்லாத பரிவர்த்தனை பற்றி தெரிந்து கொள்வோம் நண்பர்களே...

பாரதி பிறந்த நாள்

பார்க கேட்க படித்த போதே கண்கலங்க வைத்த

பாவங்களின் 42 வகை

பாஸ்வேர்டு வைக்கும்போது செய்யக்கூடாத 7 விஷயங்கள்

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள்

மண்பாண்டத்தின் மகிமையைப் பற்றி தெரியமா?

மத நம்பிக்கை

மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தர பாண்டியன்

மனித உடல் பற்றிய சுவாரஸ்யமான

மனைவியாக ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம்

முருங்கைக்காயை விட இந்த காயில் தான் அதிகமா இருக்காம்

வாயுப் பிரச்சனை எதனால்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா

100ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்கள்

6B43~1கணினி என்றால் என்ன?

Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet

MOBILE

அறிந்துகொள்ளுவேம்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆசிரியர்களை பற்றி தவறாகவோ

ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி பராமரிப்பு

ஆன்மீகத்தில்பெண்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்

இஞ்சிப் பால்

இருவகையான இருள்

1/4/17

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு; நாளை முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

TRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்

அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், மொட்டை கடிதம் போல, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர். 

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. பதினோரு அடுக்கு மாடி கட்டடத்தில், பயன்படுத்தப்படாத கிடங்கு போல, ஆள் அரவமற்ற நிலையில், இந்த அலுவலகம் செயல்படுகிறது. இங்கு செல்லும் பட்டதாரிகள், எந்த தகவல்களை கேட்டாலும், 'இணையதளத்தை பாருங்கள்; பத்திரிகைகளை பாருங்கள்' எனக்கூறி அனுப்பி விடுகின்றனர். இணையதளமோ, மொட்டை கடிதம் போல, அடிப்படை தகவல்கள் ஏதுமின்றி, வெறும் அறிவிப்புகள் மட்டுமே, ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன.

டி.ஆர்.பி., வரலாறு, செயல்பாடு, அதிகாரிகள், உறுப்பினர்கள் விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் யாரை அணுக வேண்டும், அவர்களின் பெயர் மற்றும் முகவரி, 'டெட்' தேர்வை அறிமுகம் செய்த அரசாணை, 'டெட்' தேர்வின் முந்தைய அறிவிப்புகள், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் போன்ற விபரங்கள் இல்லை. பொது அலுவலருக்கான தொடர்பு எண், செய்தி தொடர்பாளர் யார், அவரது தொலைபேசி எண்ணும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒரு இணையதளத்தில், எந்தெந்த அடிப்படை தகவல்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும், இதில் இல்லை.விதிகளின் படி, இணையதளத்தையே பராமரிக்க தெரியாத, டி.ஆர்.பி., அதிகாரிகள், வருங்கால சந்ததிகளை உருவாக்கும், ஆசிரியர்களின் பணி நியமனத்தை எந்த அளவுக்கு தரமாக நடத்த முடியும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழை மறந்த அவலம் : தமிழகத்தில், அரசாணை மற்றும் அறிவிப்புகளை, தமிழில் வெளியிடுவது கட்டாயமாகும். ஆனால், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில், தமிழ் மொழி மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் பேரை பணி நியமனம் செய்யும், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தை பார்த்தாவது, டி.ஆர்.பி., கற்றுக்கொள்வது நல்லது.

TET தேர்வுக்கு படிப்பது எப்படி? - TIPS

√.முதலில் சூழலை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

√.தேர்வு நாள் வரை பொழுதுபோக்குகளைத் தவிருங்கள்

√.உறவினர் வீட்டு விசேஷங்களை தவிருங்கள்


√.செல்போன் பயன்பாட்டை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள்.

√.ஒரு நாளைக்கு ஒரு சப்ஜெக்ட் அல்லது மணிக் கணக்கில் ஒவ்வொரு சப்ஜெக்ட் என அட்டவணைப் படுத்திக் கொள்ளுங்கள்

√.இப்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் புரியாத பகுதிகளில் தேங்கிக் கிடக்காதீர்கள். பாடங்களைக் கடந்து சென்று கொண்டேயிருங்கள். அப்போது தான் படித்த திருப்தி ஏற்படும்.
√.நீங்கள் பலவீனமாக இருப்பதாக கருதும் பாடத்தில் சற்றே கூடுதல் நேரமும், பலமாக இருப்பதாக நினைக்கும் பாடத்தில் சற்று குறைவான நேரமும் செலவிடுங்கள்

√.வேலைக்கு எதுவும் போகாமல் இருப்பவர்கள் இந்த நேரத்தில் தான் படிக்கவேண்டும், இந்த நேரத்தில் படிக்கக் கூடாது என்றில்லை. தூக்கம் வரும்போது தூங்கிவிடலாம், விழிப்புடன் இருக்கும் தருணங்களில் தெளிவான மனநிலையுடன் படிக்கலாம்

√.முதலில் நம்மிடம் இருக்கும் பாடக்குறிப்புகள், மெட்டீரியல்களை முழுமையாக படித்து முடியுங்கள். புதிய மெட்டீரியல் தேடி நேரத்தை வீணாக்காதீர்.

√.உற்சாகமான மனிதர்களுடன் உரையாடுங்கள். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விலகியிருங்கள்.

√.நேரம் கிடைத்தால் உங்கள் அளவிற்கு படித்து தயார் செய்தவர்களுடன் குழு உரையாடல் மேற்கொள்ளுங்கள்.

√.தூக்கம் வராதவர்கள் படுக்கைக்கு சென்ற பின்பு படித்தவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள். அப்படியே தூங்கிவிடுவீர்கள்.

√.நேரம் வாய்த்தால் படித்தவற்றை ஒரு எக்ஸ்பிரஸ் ரிவிஷன் செய்யுங்கள்.

√.இதற்குப்பிறகு மாதிரித் தேர்வை எழுதிப் பாருங்கள்.

√உங்களுக்கு மதிப்பெண்கள் மத்தாப்புகளாகும்
வானம் வசப்படும். வாத்தியார் கனவும் மெய்ப்படும்.

BREAKINGNEWS | *ஜியோ ப்ரைம் உறுப்பினராவதற்கு ரூ.99 கட்டணம் செலுத்த ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2017-18ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு



வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR'

நீட்' தேர்வு எழுத வயது வரம்பு தளர்வு

புதுடில்லி: 'இந்த ஆண்டு நடக்கும், 'நீட்' தேர்வை, 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் எழுதலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'பிளஸ் 2க்குப் பின், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை, 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சி.பி.எஸ்.இ., நிர்ணயித்த வயது வரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நடப்பு, 2017ல் நடக்கும் நீட் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம். தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை, அடுத்த ஆண்டு முதல் நிர்ணயித்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஏப்., 5 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உயிரியலில் 'சென்டம்' கடினம்: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

விருதுநகர்: 'பிளஸ் 2 உயிரியல் தேர்வில் தாவரவியல் பகுதி எளிதாக, விலங்கியல் வினாக்கள் கஷ்டமாக இருந்ததால் சென்டம் பெறுவது சிரமம்,' என, ஆசிரியை , மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:

விலங்கியல் கடினம் - நிதிஷ் பரத்வாஜ் (மாணவர், நோபிள் மெட்ரிக் .,மேல்நிலை பள்ளி, விருது நகர்): ஒரு மதிப்பெண் கேள்விகள் சுலபமாக இருந்தது. விலங்கியல் பாட பிரிவில் 3 மதிப்பெண்களுக்கான கேள்வி கடினமாக இருந்தது. 5,10 மதிப்பெண் கேள்விகள் சுலபமாக இருந்தது. தாவரவியல் பாட பிரிவில் அனைத்து கேள்விகளுமே சுலபமாக இருந்தது.
நுணுக்கமான கேள்விகள் - சி.ராஜலட்சுமி( மாணவி,ஜேசீஸ் மெட்ரிக்., மேல்நிலைபள்ளி, சிவகாசி): ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. விலங்கியலில் மட்டும் 3 மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தது. சிந்தித்து விடையளிப்பதாக இருந்தது. புத்தகத்தை ஒரு வரிவிடாமல் படித்திருந்ததால் 10 மதிப்பெண் வினாவிற்கு எளிதாக விடை எழுத முடிந்தது. கேள்விகளும் நுணுக்கமாக கேட்கப்பட்டிருந்ததால், பதிலை மட்டும் படித்து எழுதுபவர்களுக்கு கடினமாக இருந்திருக்கும்.
தாவரவியல் எளிமை - சாரதா (ஆசிரியை, ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்): தாவரவியல் வினாக்கள் எளிமையாக இருந்தன. விலங்கியலில் சென்டம் பெறுவது சிரமம். மூன்று மதிப்பெண் வினாக்களில் 18, 22, 26 கடினம். வினா உள்ள பாடங்களை தெளிவாக படித்திருந்தால் தான் விடையளிக்க முடியும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன, எதிர்பார்த்தது வந்தன. 10 மதிப்பெண் வினாவில் உடற்செயலியல் பாடத்தில் வந்த இரு
வினாக்களும் எளிது. இந்த பகுதி 36 வது வினாவில் இருவினாக்களை சேர்த்து கேட்டிருந்ததால் அதிகம் எழுதவேண்டும். பொதுவாக சராசரி மாணவர்கள் மதிப்பெண் பெறுவது கஷ்டம் தான்.

வாய்ப்பும், வளர்ச்சியும் உள்ள துறைகளை தேர்வு செய்யுங்கள்! : ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை

மதுரை: 'உயர் கல்வியில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளும், வளர்ச்சியும் உள்ள துறைகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்,' என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
தினமலர் சார்பில் மதுரையில் நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'வேலை வாய்ப்பு ஆலோசனை' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:எதிர்காலத்தில் எந்த துறைகளில் வாய்ப்பு, வளர்ச்சி உள்ளதோ அந்த துறைகள் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தற்போது இயந்திரமயமாதல் (ஆட்டோமேஷன்), புதிய கண்டுபிடிப்புகள், பாடத் திட்டங்கள் ஆகிய மூன்று சவால்களை மாணவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இயந்திரமயமாதலால் பலரது வேலைவாய்ப்பு பறிபோய் விடுகிறது. ஆராய்ச்சிகள் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
கல்லுாரிகளில் தற்போதுள்ள பாடத் திட்டங்களுக்கும், தற்காலிக வளர்ச்சிக்கும் அதிக இடைவெளி உள்ளதால், படித்த உடன் வேலை என்பது கனவாகிறது. படிப்புகளை தேர்வு செய்வதை விட அனைத்து வசதிகளும், பாடத் திட்டத்தை தாண்டி விஷயங்களை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்வதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், இ.சி., இ.இ.இ., போன்ற படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவற்றை தேர்வு செய்வதில் மாணவர்கள் முன்னுரிமை அளிக்கலாம். எந்த பிரிவு படித்தாலும் 99 சதவீதம் பேர் ஐ.டி., துறையில் தான் வேலைக்கு செல்கின்றனர். மெக்கானிக் இன்ஜி.,யை பெண்கள் தேர்வு செய்யலாம்.படிக்கும் போதே திறமை மட்டுமின்றி, புத்திசாலித் தனத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் 2021க்கு பின் பொறியியல் முடித்தவர்களுக்கு கல்லுாரிகளில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் மாறி, போட்டித் தேர்வுகள் மூலம் வாய்ப்பு ஏற்படும் சூழல் அமையும். அதற்காக மாணவர்கள் தயாராக வேண்டும். உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.மருத்துவத்தை பொறுத்துவரை அரசு பள்ளி மாணவர்களை பாதிக்காத வகையில் தான் 'நீட்' தேர்வு முடிவு அமையும். இதுகுறித்து தமிழக அரசு மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது. கால்நடை மருத்துவம், ஓமியோபதி, சித்தா படிப்புகளுக்கும் எதிர்காலம் உள்ளது. பாரா மெடிக்கல் படித்தால் மேல்படிப்பு கட்டாயம் படிக்க வேண்டும். கலைப் பிரிவுகளில் கணிதம், ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம். பி.டெக்., கட்டடக் கலை, அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ், சட்டப் படிப்புடன் கம்பெனி செகரட்டரிஷிப்பும் முடித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு பேசினார்.

ஜியோ அடுத்த அதிரடி அறிவிப்பு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 120 ஜிபி டேட்டா..!

                                              
                                         ஜியோ அடுத்த அதிரடி அறிவிப்பு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 120 ஜிபி டேட்டா..!

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது.   ரூ. 149 அல்லது அதற்கும் அதிகமாக டேட்டா ரீச்சார்ஜ் செய்தால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை வழங்கி உள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அவர்களுக்கு கூடுதலாக 1 ஜிபி, 5 ஜிபி, 10 ஜிபி பயன்கள் கிடைக்கும். இந்த பலன்களை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியும். ரூ. 149க்கு   கூடுதலாக 2 ஜிபியை பெற முடியும்.


303 ரூபாய் பிளான் மூலம் கூடுதலாக 5 ஜிபியை பெற முடியும். ஏற்கனவே 28 ஜிபி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, கூடுதலாக 5 ஜிபி வழங்கப்படுகிறது.

ரூ. 499 மற்றும் அதற்கும் அதிகமான பிளான்கள் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகையுடன் கூடுதலாக 10 ஜிபி வழங்கப்படுகிறது. இந்த 10 ஜிபியை பயன்படுத்தவில்லை என்றால் அடுத்த மாதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே பிரைமில் சேரும் கடைசி தேதியை மார்ச் 30 வரை ஜியோ நீட்டித்தது குறிப்பிடத்தக்கது. பிரைமில் இணைந்தோர் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 2.7 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதத்திற்கு 10 ஜிபி என்கிறபோது வருடத்திற்கு 120 ஜிபி இலவசமாக வழங்குகிறது ஜியோ! 

பிரைம் யூஸர் ஆவதற்கு 99ரூபாய் ஒரு முறை கட்டணம் (One time fee) கட்ட வேண்டியிருந்தது. ஆனால், அதையும் இலவசமாக பெற ஜியோவில் ஒரு வழி இருக்கிறது.

பிரைம் யூஸர் கட்டணமான 99 ரூபாயை ஜியோ மணி (Jio Money) மூலம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் தருகிறார்கள். அதன் பின் ஏப்ரல் மாதத்துக்கு 303 ரூ ரீசார்ஜ் செய்தால் அதில் ஒரு 50ரூ கேஷ்பேக் உண்டு. ஆக, இந்த 100 ரூபாய் கேஷ்பேக் மூலம் பிரைம் யூஸர் ஆவதற்கான 99ரூ கட்டணத்தை திரும்ப பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். மகிழ்ச்சி.

அதைத் தாண்டி பல டேட்டா ஆஃபர்களையும் அள்ளி தெளிக்கிறது ஜியோ. மாதம் 149ரூ ப்ரீபெய்ட் பிளானில் இலவச கால்களும், 2 ஜிபி டேட்டாவும் உண்டு என சொல்லியிருந்தார்கள் மார்ச் 31க்குள் 149ரூ ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். அதாவது 3 ஜிபி டேட்டா 149 மட்டுமே. போலவே, 303 ரூ ரீசார்ஜில் 28 நாட்களுக்கு, தினம் ஒரு ஜிபி என 28ஜிபி டேட்டா கிடைக்கும். புதிய ஆஃபர் படி 28ஜிபி தாண்டி இன்னுமொரு 5 ஜிபி டேட்டாவை தருகிறது ஜியோ. 303 ரூபாய் தாண்டியும் பல ரீசார்ஜ் பேக்குகள் பல 499, 999, 1999 என ஜியோவில் உண்டு. அதில் அதிகபட்சமாக மாதம் 10ஜிபி வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 120 ஜிபி இலவச டேட்டா. 

இந்த ஆஃபர் எல்லாம் மார்ச் 31க்குள் மட்டும் தான். ஏப்ரல் மாதம் முடிந்தால் அடுத்த மாதம் என்ன செய்வது? இதற்கும் வழி வைத்திருக்கிறது ஜியோ. ப்ரீபெய்ட் என்பதே முன் கூட்டியே கட்டணம் கட்டி வைப்பதுதானே? அதை ஏன் ஒரு மாதத்துக்கு மட்டும் என யோசித்த ஜியோ அதிரடியாக இன்னொன்றை செய்திருக்கிறது. நீங்கள் ஆகஸ்ட் மாதம் அதிக டேட்டா பயன்படுத்தும் தேவை வரும் என நினைக்கறீர்கள். இப்போதே ஆகஸ்ட் மாத பேக்குக்கான கட்டணத்தை கட்டி விடலாம். அந்த மாதம் கூடுதல் டேட்டா உங்களுக்கு கிடைத்துவிடும். திருமண மண்டபத்துக்கு பல மாதங்கள் முன்பே அட்வான்ஸ் தந்து பதிவு செய்கிறோமே.. அது போல ஆஃபரையும் முன்பதிவு செய்யலாம். இது எல்லாம் மார்ச் 31க்குள் செய்துவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

ஜியோவின் ஆஃபர் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் 2016 கடைசி காலாண்டில் பலத்த நட்டத்தை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்தன. பின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்களும் ஆஃபர்களை அடுக்கினார்கள். ஆனால், யாருமே தெளிவான ஆஃபர்களை அறிவிக்கவில்லை. செக்மெண்ட்டட் ஆபர் என குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேயான ஆஃபர்களையே அதிகம் கொண்டு வந்தார்கள். ஜியோவின் இந்த புதிய ஆஃபர்களை சமாளிக்க இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

பெட்ரோல் விலை ரூ.3.77 காசுகள், டீசல் விலை ரூ.2.91 காசுகள் குறைவு

மும்பை: பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ.2.91 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள்  அறிவித்துள்ளன. மேலும் விலை குறைப்பு  இன்று நள்ளிரவு  முதல் அமலுக்கு வருகின்றன.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்

விருதுநகர்: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி, ஏப்.12ம் தேதிக்குள் முடியுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் (மார்ச் 30) முடிவடைந்தது. இதேபோல, பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை திருத்துவதற்கு, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், தலா ஒரு திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று மொழி விடைத்தாள் திருத்தப்படும். 4ம் தேதி பிற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை ஏப்.12ம் தேதிக்குள்ளும், பிளஸ் 2 விடைத்தாள்களை ஏப்.24ம் தேதிக்குள்ளும் திருத்தி முடிக்க, பள்ளி தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் குகைபாதை: 10 அம்சங்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிக நீளமான குகைப்பாதையை வரும் ஞாயிறு (ஏப்ரல்2) பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த பாதையின் 10 முக்கிய அம்சங்கள்:

நேரம் குறையும்:

1.காஷ்மீரில் உத்தம்பூர் மாவட்டம் செனானி முதல் ரம்பன் மாவட்டம் நாஷ்ரி என்ற இடம் வரை ரூ.2,500 கோடி செலவில் இந்த குகைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
2. கடந்த 2011ல் துவங்கிய இந்த குகை பாதை அமைக்கும் பணி தற்போது முடிந்துள்ளது. சுமார், 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
3.இப்பாதையின் நீளம் 10.89 கிலோ மீட்டர்.அதாவது, ஆசியாவிலேயே நீளமான குகைப் பாதை என்ற பெயரைப் பெறுகிறது. 
3.இந்த பாதை மூலம், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் பயணம், 2 மணி நேரம் குறையும்.
4.இந்த பாதையால் தினமும் ரூ.27 லட்சம் அளவுக்கு எரிபொருள் சேமிக்கப்படும்.
 5. ஜம்மு பிராந்தியத்தில்உள்ள கிஸ்த்வர், தோடா, பதேர்வா பகுதிகளுக்கும் இணைப்பு வசதி கிடைக்கும்.

6. இந்த பாதையில்,ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
7.பாதையில் யார் நுழைந்தாலும் அவர்களை கண்டறிய முடியும்.
8.தீத்தடுப்பு சாதனங்கள், மின்னணு கண்காணிப்பு முறைகள் பாதை நெடுக பொருத்தப்பட்டுள்ளன.9.பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆட்படாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.
10.கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவாறு, ஆண்டு முழுவதும் பயன்தரத்தக்க வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய பொறியாளர்களின் திறமைக்கு இக்குகை பாதை ஒரு சான்று.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏராளமான மாற்றங்கள்... அனைவரும் அறிய வேண்டிய அறிவிப்புகள்

ஏப்ரல் 1-ந்தேதி என்பது பொதுவான மாதப்பிறப்பு என்பதைக் காட்டிலும் 2017-18ம் நிதியாண்டு பிறக்கிறது என்பதுதான் சிறப்பானது. இந்த நிதியாண்டில் பல மாற்றங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது.

 பட்ஜெட்டை முன்கூட்டியே அதாவது பிப்ரவரி 1-ந்தேதியே தாக்கல் செய்து, நிறைவேற்றியுள்ளது. பட்ஜெட்டில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. சலுகைகள் முதல் புதிய வரிகள் வரை, வரி குறைப்பு அனைத்தும் அமலாகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது.
 இதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, வருமான வரி விலக்கு என பல மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.  அவை என்ன என்பது தெரிந்துகொள்ளலாம்.
 வருமானவரி குறைப்பு
2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் வருமானவரி செலுத்து அளவு குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதாவது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரைஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள், 10 சதவீதம் வருமானவரி வரி செலுத்தி வந்தனர். அதை 5 சதவீதமாக பட்ஜெட்டில் குறைத்து நிதிஅமைச்சர் ஜெட்லி அறிவித்தார்.அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.அதாவது இந்த நிதியாண்டு முதல் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5. லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவீதம் மட்டுமே வருமானவரி செலுத்தினால் போதுமானது.
அதிலும், வீட்டுவாடகை, குழந்தைகளின்படிப்பு,மருத்துவச்செலவு என 80 சி படிவத்தில் கணக்குகாட்டினால், அதையும் செலுத்த தேவையில்லை.
 2. ரூ.3.5 லட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் ஆண்டுக்கு ரூ.2575 வரி செலுத்தினால் போதுமானது, இதற்கு முன்பு இது ரூ.5,150 ஆகஇருந்தது. மேலும், வரிசெலுத்தியதை திரும்பப் பெறும் டேக்ஸ் ரிபேட் அளவு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 10 சதவீதம் கூடுதல்வரி
3. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் வருமானவரியோடு சேர்த்து, கூடுதல் வரியாக 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது நடைமுறைக்கு வருகிறது.
15சதவீதம் வரி
4. ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல்வருமானம் இருப்பவர்களுக்கு ஏற்கனவே செலுத்தும் வருமானவரியோடு சேர்த்து கூடுதல் வரியாக 15 சதவீதம் செலுத்துவதும் நடைமுறைக்கு வருகிறது.
 ஒருபக்க வருமானவரி ரிட்டன் படிவம்
5. ஆண்டுக்கு ரூ. 5லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், முதல்முறையாக வருமானவரி செலுத்துபவர்களுக்காக ஒரு பக்கம் கொண்ட வருமானவரி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல்முறையாக வருமானவரி செலுத்தும் நபர்களிடம் அதிகமான விசாரணைகளும் நடத்தப்படாது. ஐ.டி.ஆர்.1 என்ற ஒருபக்க படிவம் மட்டுமே வர உள்ளது.
 அபராதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம்
6. 2017-18ம் நிதியாண்டில் வருமானவரி ரிட்டன்களை 2018,டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பாக செலுத்தினால் ரூ.5ஆயிரம் அபராதமும், அதற்கு பிறகு செலுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அதேசமயம், ரூ.5 லட்சம் வரைஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
 வரிவிலக்கு
7. ராஜீவ்காந்தி சேமிப்பு திட்டத்தில் இதற்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு 80சிசிஜி படிவத்தின் படி வரிபிடித்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த நிதியாண்டு முதல் அந்த வரிபிடித்தம்செய்யப்படாது.
வரிபிடித்தம் இல்லை
8. தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்பது இருப்பவர்கள் தங்களின் முதலீட்டில் இருந்து பாதி அளவு பணத்தை இடையே எடுத்தால், வரிபிடித்தம் செய்யப்பட்டுவந்தது. ஆனால், அது மாற்றப்பட்டு பாதிபணம் வரை எடுத்தாலும் வரிவிதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ரூ.2லட்சத்துக்கு மேல் தடை
9.ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரொக்கமாக ரூ. 2லட்சத்துக்கு மேல் யாருக்கும் பரிமாற்றம் செய்ய முடியாது. வர்த்தகர்கள் வங்கியில் இருந்து ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கமாகவும் எடுக்க முடியாது. அவ்வாறு ரூ.2லட்சத்துக்கு அதிகமாக ரொக்கப்பரிமாற்றம்செய்தால், எந்தஅளவு பரிமாற்றம் செய்கிறார்களோ அதே அளவு அபராதம் விதிக்கப்படும்.
 மருந்துகள் விலை உயர்வு
10. சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை, புற்றுநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான 875 அத்தியாவசிய மருந்துகளின் விலை 2சதவீதம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்கிறது.
 இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு
11. ஏப்ரல் 1-ந்தேதி முதல் காப்பீடு பிரிமியம், வாகனங்களுக்கான மூன்றாம்நபர் காப்பீடு பிரிமியம் ஆகியவை 5 சதவீதம்  உயர்த்தப்படுகிறது. அதிலும் 150சிசி முதல் 350 சிசி வரை, அதற்க மேல் உள்ள சிசி உள்ள பைக்குகளுக்கு மூன்றாம்நபர் (தேர்டுபார்ட்டி இன்சூரன்ஸ்)காப்பீடு 40 சதவீதம் உயர்கிறது. கார்களில் 1000 சிசிக்கு மேல் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.
 எஸ்.பி.ஐ. வங்கி அபராதம்
12. எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பாக நகரங்களில் வசிப்போர் ரூ.5ஆயிரம், சிறுநகரங்களில்வசிப்போர் ரூ.3 ஆயிரம், கிராமங்களில் வசிப்போரு ரூ.ஆயிரம் வைத்துஇருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.100முதல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும், மாதத்துக்கு 3 முறை மட்டுமே ரொக்கமாக டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் செய்தால், ரூ. 50 சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.
 ஆதார் கட்டாயம்
13. ஜூலை 1-ந்தேதி முதல் பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கண்டிப்பாக ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

GST - ஜுலை 1 தெரிந்து கொள்வோம்....

GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட
 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் 
சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.


ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும் 
சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள் 
என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது
.3–ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பள 
பணம் வங்கிகளில் செலுத்தப்படும். அந்தவகையில் 4–ந்தேதி 
தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள 
பணம் கிடைக்க உள்ளது.

பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு




பாட வாரியான வழிகாட்டுதல் தொகுப்பு:::


இன்றைய பாடம் - கணிதம்
30 மதிப்பெண் :
நேரடி வினாக்கள் (6)
வாழ்வியல் கணிதம் (18)
தயாரிப்பு வினாக்கள் (6)


  :::::நேரடி வினாக்கள்:::::

எண்கள்
இயற்கணிதம்
அளவியல்
வடிவியல்
புள்ளியல்
முக்கோணம், வட்டம், மற்ற வடிவங்கள்
பரப்பளவு, சுற்றளவு
(வகை, பிரிவுகள், மதிப்புகள், வரையறை)
இவை சார்ந்த நேரடி வினாக்கள் பாட பகுதி சார்ந்தவற்றை படிப்பதன் மூலம் பெறலாம்

::::::: வாழ்வியல் கணிதம் ::::::

விகிதம்
சதவிகிதம்
லாபம் , லாப %
நட்டம், நட்ட %
தனி வட்டி
கூட்டு வட்டி
இயற்கணித நடைமுறை கணக்குகள்
வயது கணக்குகள்
எண்ணியல் கணக்குகள்
மீ.பெ.வ , மீ.பொ.ம
கலப்பு மாறல்
முக்கோண பண்புகள்
வட்ட பண்புகள்
வடிவ அதிகரிப்பு, குறைப்பு
சுருக்குக
வேலை - ஆட்கள்
தூரம் - வேகம்
பரப்பு, சுற்றளவு, கன அளவு

::::::::: தயாரிப்பு வினாக்கள்::::::

மன கணக்குகள்
படம் சார் கணக்குகள்
விட்டுப் பட்ட எண்கள்
பொருந்தாத எண்
பெரியது, சிறியது எது?
எறுவரிசை, இறங்கு வரிசை
பின்னம், தசமம் ஒப்பீடு
கலப்பு பின்னம், நேர் பின்னம்

:::::::::: கூடுதல் பகுதிகள் ::::::::::

வகுப்பு 9 மற்றும் 10
கணம் (படம் சார் கணக்கு)
மெய்யெண் தொகுப்பு ( அனைத்து வகைகள்)
மடக்கை
இயற்கணிதம் ( தொகுப்பு )
வடிவியல் (இணை கரம், நாற்கரம், கன உருவம் / கூட்டு உருவம், வட்டம் )
அளவியல் (கன சதுரம், செவ்வகம், கூம்பு, உருளை , ேகாளம்)
புள்ளியியல் (சராசரி, இடைநிலை, முகடு, வீச்சு)
நிகழ்தகவு ( நாணயம், பகடை, சீட்டு கட்டு)
வகுப்பு 11, 12 தேவை அல்ல.

::::::: பயிற்சி முறை :::::::

அனைத்து கணக்குகளையும் விரைவாக எளிதாக பயிற்சியுடன் விடை காண பழகுங்கள்
வாழ்வியல் கணிதம் தெளிவுற அறிதல் கட்டாயம்
கணிதம் பொறுத்தவரை வினாவிற்கான விடை வினாவில் ஒளிந்துள்ளது. புரிந்து தெளிவாய் தீர்வு காணுங்கள்
தினம் 1 மணி நேரம் ஒரு தலைப்பை பயிற்சி காணுங்கள்
கணித வெற்றியும் எட்டி விடும் தூரம் தான் - வாழ்த்துகள்

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு

TET

101.  இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102.  இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103.  இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104.  இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105.  இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106.  இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107.  இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108.  இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109.  இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110.  இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111.  இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112.  இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113.  இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114.  இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115.  இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116.  இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117.  இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118.  இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119.  இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120.   இலக்கிய உதயம் நூலாசிரியர்               - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121.  இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122.  இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123.  இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124.  இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125.  இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126.  இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127.  இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128.  இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129.  இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130.  இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131.  ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132.  ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133.  ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134.  உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135.  உட்கார்ந்து எதிரூன்றல் -  காஞ்சி
136.  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137.  உண்டாட்டு - கள்குடித்தல்
138.  உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139.  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140.  உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
141.  உமைபாகர்  பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142.  உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143.  உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144.  உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145.  உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146.  உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147.  உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148.  உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149.  உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150.  உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151.  உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152.  உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153.  உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154.  உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155.  உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156.  உலகின் முதல் நாவல் – பாமெலா
157.  உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158.  உவமைக் கவிஞர்                    -சுரதா
159.  உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி
160.  உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
161.  உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162.  உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163.  உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164.  ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165.  ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166.  ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167.  ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168.  ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169.  எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு

TET

170.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171.  . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172.  .       எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173.  எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174.  எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175.  எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை
176.  எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177.  எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178.  எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179.  எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180.  எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181.  எயில் காத்தல் – நொச்சி
182.  எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183.  எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184.   என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185.  ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186.  ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187.  ஏழகம்  - ஆட்டுக்கிடாய்
188.  ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்
189.  ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190.  ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191.  ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192.  ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193.  ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194.  ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195.  ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196.  ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197.  ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198.  ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199.  ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200.  ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

201.  ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202.  ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203.  ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205.  ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206.  ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207.  ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208.  ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209.  ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210.  ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211.  ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212.  ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213.  ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214.  ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215.  ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216.  ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217.  ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218.  ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219.  ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220.  ஒருபிடி சோறு -  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்

TET

221.  ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222.  ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223.  ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225.  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226.  ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227.  ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228.  ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229.  ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230.  ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231.  கங்கை மைந்தன் – தருமன்
232.  கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233.  கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234.  கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449
235.  கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 49
236.  கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 1850
237.  கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238.  கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239.  கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240.  கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241.  கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242.  கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243.  கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244.  கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245.  கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -  இராமவதாரம்
246.  கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247.  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248.  கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249.  கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250.  கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251.  கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252.  கரந்தை - ஆநிரை மீட்டல்
253.  கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254.  கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255.  கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256.  கருப்பு மலர்கள் ஆசிரியர் -  நா.காமராசன்
257.  கல்கியின் முதல் நாவல் - விமலா
258.  கலம்பக உறுப்புகள்  - 18
259.  கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260.  கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261.  கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262.  கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263.  கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264.  கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265.  கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266.  கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267.  கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268.  கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269.  கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270.  கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271.  கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272.  கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273.  கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274.  கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275.  கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276.  கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277.  கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278.  கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279.  கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280.  கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல்  மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா