யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/8/17

திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு:


திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
புதுடெல்லி:

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி ஊழியர் சங்கத்தினர் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏதும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 22-ம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும், செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர். 

நாடு தழுவிய வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: செப்.23-ல் எழுத்துத்தேர்வு

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக் கான போட்டித்தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வுசெப் டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது.தேர்வுக்கான ஆன் லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 27-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைனில் விண்ணப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணி வரை ஆன் லைனில் (www.trb.tn.nic.in) விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


முதல்முறையாக போட்டித்தேர்வு இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படை யிலேயே நிரப்பப்பட்டு வந்தன. தொடக்கத்தில் மாவட்ட அள விலான பதிவுமூப்பு அடிப்படை யிலும் அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையிலும் சிறப்பாசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.தற்போது தான் முதல்முறையாக போட்டித் தேர்வுமூலமாக சிறப்பாசிரியர் பணிநியமனம் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 100 மதிப்பெண் ணில் 90மதிப்பெண் எழுத்துத்தேர் வுக்கும், எஞ்சிய 5 மதிப் பெண் வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் எழுத்துத்தேர்வில், ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண் ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப் படுவர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அப்போது, பதிவுமூப்புக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும்.இறுதியாக எழுத்துத்தேர்வு மதிப் பெண், பதிவுமூப்பு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப் படையில் சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணியில் சேரும் சிறப்பாசிரியர்கள் உரிய கல்வித்தகுதி இருந்தால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

VAO : கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (விஏஓ) ஆறு புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.

கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை:
கிராம கர்ணம், கிராம முன்சீப் தேர்வில் 1980 -க்கு முன்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 2009 -ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட 747 கிராம நிர்வாக அலுவலர்களின் பணி, தகுதியின் அடிப்படையில் விரைவில் வரன்முறை செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணக்குப் பராமரிப்பு, அலுவலகங்களைப் பராமரிப்புக்காக, ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வரும் ரூ.2,500 பராமரிப்புச் செலவுக்கான தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தாலுக்கா அலுவலகங்களில் இணைய வழி பட்டா வழங்கும் திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள 254 கணினி பதிவேற்றுநர்களின் பணி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
வருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்படும் இணையதள சான்றிதழ்களின் பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், எல்காட் நிறுவனம் மூலம் இணையதள வசதி, எழுதுபொருள் செலவினம் ஆகியன அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்களை நிர்வாக சாத்தியக்கூறுகள், வழிவகைகளுக்கு உட்பட்டு, அவர்களது சொந்த உள்வட்டம், வட்டத்தில் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் முதல்வர்.

18/8/17

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 
பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. இத்தேர்விற்கு 'ஆன்லைன்' மூலமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் வல்லுனர்கள் மூலம், வாரத்தில் 2 நாட்கள் (சனி,ஞாயிறு) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி ஆக.19 முதல் செப்.23 வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கும்.மாவட்டத்திற்கு குறைந்தது 100 மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில்,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க இயலாது. மாணவர்களுக்கு பயணப்படியும், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப
பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவை மையங்களாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாவட்டத்திலும் பயிற்சி மையங்கள் செயல்படும்.
''இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'', என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜா பயஸ் தெரிவித்தனர்.

குரூப்–1 முதன்மை தேர்வின் விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்ய வேண்டும் !!

தங்கள் வசம் உள்ள குரூப்–1 முதன்மை தேர்வு விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 
குரூப்–1 தேர்வை கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. இதில் நான் தேர்ச்சி பெற்றேன். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப்–1 முதன்மை தேர்வு நடந்தது. இந்த தேர்வை நன்றாக எழுதியிருந்தேன். ஆனால், நான் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரத்துடன் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, குரூப்–1 தேர்வை ரத்து செய்யவேண்டும். மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிட்டு, குரூப்–1 தேர்வை நடத்த டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சென்னை போலீஸ் கமி‌ஷனரையும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, ‘டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த 7–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுவிட்டது. குரூப்–1 தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத்தாள் என்று கூறி, அதை காட்டி தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விடைத்தாள் போலியானவை. அதுகுறித்து சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த 1–ந் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது’என்றார்.

இதற்கு நீதிபதி, ‘நேர்முக தேர்வின் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், தேர்வில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டியது வரும். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், குரூப்–1 தேர்வு எழுதியவர்களின் உண்மையான விடைத்தாள் தங்களிடம் உள்ளது என்று தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு தேர்வு என்றால், ஒரு விடைத்தாள் தானே இருக்க முடியும்?. அது எப்படி இரண்டு விதமான விடைத்தாள்கள் இருக்க முடியும்?.

எனவே, இது தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது. போலீசாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் தான் உண்மை வெளி கொண்டுவர முடியும். அதனால், இந்த வழக்கை வருகிற 18–ந் தேதிக்கு (நாளைக்கு) தள்ளிவைக்கிறேன். அன்று தங்களிடம் உள்ள உண்மையான விடைத்தாள்களை இந்த ஐகோர்ட்டில், டி.என்.பி.எஸ்.சி. தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர் வக்கீல் எம்.புருஷோத்தமன், ‘அதுவரை நேர்முகத் தேர்வு முடிவின் அடிப்படையில் பணி நியமனம் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தடைவிதிக்க வேண்டும்’ என்றார். அதற்கு நீதிபதி, ‘ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரங்கள், அரசுக்கு தெரியும். அதனால் அவர்களே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். தடை ஏதாவது விதித்தால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். 2 நாட்களில் எதுவும் நடந்து விடாது’ என்று கருத்து தெரிவித்தார்.

தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க 3 அமைச்சகங்கள் ஒப்புதல் !!

அட்டர்னி ஜெனரல் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை*

*இறுதி முடிவெடுக்க மத்திய அரசு ஆலோசனை*


புதுடெல்லி : தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளன.



 நீட் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வினாத்தாள்களில் குளறுபடி ஏற்பட்டதாக நாடு முழுவதும் புகார் எழுந்தது. அதிலும், குறிப்பாக தமிழ் மொழி வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.


இந்நிலையில், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் என்ற உள்ஒதுக்கீட்டை கடந்த மாதம் 22ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது.


இந்த அவசர அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.


மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, “ நீட் என்பது என்பது நாடு முழுவதும் நடத்தப்படும் ஒரே மாதிரியான தேர்வு முறையாகும். அதனால் இதில் ஒரே நிலையில்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

 தமிழகத்திற்கு என தனி ஒதுக்கீடு எதுவும் செய்ய முடியாது’ எனக்கூறி மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வை ஆகஸ்ட் மாத 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதியன்று

*மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அளித்த பேட்டியில்*

 ‘ நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒராண்டிற்கு மட்டும் விலக்கு கேட்டு சட்டம் இயற்றினால் மத்திய அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்’ என தெரிவித்தார்.


இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு வேண்டும் என்ற அவசர சட்ட வரைவை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.

 இது மத்திய உள்துறை ,சட்டத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இதை ஏற்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் சட்ட அமைச்சகம் கேட்டுள்ளது.

 அதற்கு கே.கே.வேணுகோபால் நேற்று அனுப்பிய பதிலில், ‘தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை.


 மேலும், அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.
1956ன் பிரிவின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வரைவு இயற்றப்பட்டுள்ளது.


அதனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கலாம். இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்கும் பட்சத்தில் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமையாது’ என கூறியுள்ளார்.


 இதை ஏற்றுக் கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம், மனிதவளமேம்பாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்தன.


இதையடுத்து அவசர சட்டம் இறுதியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 அதன்பின் தமிழக கவர்னர் அல்லது ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் வெளியிடப்படும். இதன் மூலம் 2017-18 கல்வியாண்டில் தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிகிறது.



விரைவில் நல்ல செய்தி அமைச்சர் நம்பிக்கை
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று ெடல்லி புறப்பட்டு சென்றார். இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.


தொடர்ந்து, நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சட்டத்துறையின் இணை அமைச்சர் பி.பி. சவுத்ரியை சந்தித்து அவசர சட்ட வரைவு விலக்கு கோரி வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உடனிருந்தார்.

 *நேற்று மாலை டெல்லியில் நிருபர்களை சந்தித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி*


நீட் தேர்வின் அவசர சட்ட முன்வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

 துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், ஒப்புதல் கிடைப்பது பற்றி எங்களால் தற்போது எதுவும் கூற முடியாது. துறைகளின் பரிசீலனைக்கு பிறகு தான் தெரியவரும்.



மத்திய தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று எங்களிடம் நேரடியாக எதுவும் குறிப்பிட்டு கூறவில்லை. ஊடகங்கள் வாயிலாக தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது.


 நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் முடிவு எடுக்க முடியும். அது குறித்து நாங்கள் கருத்து5 எதுவும் கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


*உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு*


நீட் தேர்வு குறித்து மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


அதில், ‘நீட் தேர்வு முறையில் தமிழகத்தின் 85 சதவீத அரசாணையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்து, மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இது குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கால தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழக மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.


அதனால் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் விரைவில் மருத்துவ கலந்தாய்வை நடத்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்வதாகவும், இதன் விசாரணையை இன்று நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.


 மேலும், இந்த வழக்கில் சிபிஎஸ்இ மற்றும் மருத்துவ கவுன்சில் ஆகிய நிர்வாகங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுவார்கள் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தில் பணி!

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில்
காலியாக உள்ள தள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: தள பொறியாளர்

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங்

தேர்வு முறை: நேர்காணல்

கடைசித் தேதி: 04.09.2017

மேலும் விவரங்களுக்கு http://www.nhai.org/Doc/14aug17/Instructions%20to%20applicant.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பத்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு !!

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாலயன் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு 2027ஆம் ஆண்டு வரை தொடரும்’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் (15.08.2017) பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பேசும்போது, “ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டது. 
வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாலயன் பகுதிகள், ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு பத்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி-யில் இதற்கு வரிவிலக்கு சட்டம் இல்லை. ஆனால், இதன் ஒரு பிரிவு திரும்பச் செலுத்தும் முறைக்கு அனுமதி அளிக்கிறது. இதன்மூலம் இந்தப் பகுதிகளில் உள்ள 4,284 நிறுவனங்கள் பயன்பெறும். இதற்கு மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.27,413 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மத்திய அரசு 2027ஆம் ஆண்டு வரை இப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ள நிலையில் மத்திய பாஜக அரசின் தீவிர ஆதரவாளரும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான யோக குரு பாபா ராம்தேவ் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தனது சில்லறை வர்த்தகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை !!

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கடலூர் வந்த அமைச்சர் செங்கோட்டையன் 
செய்தியாளர்களிடம்கூறியதாவது:நீட் தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமரை நான்கு முறை சந்தித்திருக்கிறோம்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இதற்காக 54 ஆயிரம் கேள்விகளுக்கான விடைகள்தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ளோம்.பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆய்வின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் வரையறைப்படி, உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரில் புதிய பாடத்திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும் என்று கூறினார்.

ஆசிரியர் பற்றாக்குறை இல்லை

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இருக்கிறோம்.கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை’’என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமஸ்கிருத பாடம்: மத்திய அரசு உத்தரவு'

சமஸ்கிருத பாடம் குறித்த விபரங்களை, அனைத்து பள்ளிகளும் சமர்ப்பிக்க வேண்டும்' 
என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.மத்திய அரசு, பள்ளிகளில் சமஸ்கிருத பாடம் கற்பிப்பதை ஊக்குவிக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமஸ்கிருத பாடம் நடத்தும் பள்ளிகள், பாடத்திட்ட விபரங்களை சேகரிக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும்,25க்குள், மேற்கண்ட விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நீட்‛ அவசர சட்டம்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

                                                    
                                       

*தமிழக ஜெனரல் பிற்பகல் 2 மணிக்கு நேரில்
ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அரசு கொண்டுவந்துள்ள ‛நீட்‛ அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி 
மாணவர்கள் சார்பாக நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு, நீட் குறித்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் கவுன்சிலிங் நடத்த கூடுதல் அவகாசம் வழங்கக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் 3 அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது

தினகரன் குறிவைக்கும் 3 அமைச்சர்கள்: ஊழலை திரட்ட திடீர் உத்தரவு!!

                                                              
               அ.தி.மு.க.,வில் சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரனுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள்
திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் மீது, சசிகலா குடும்பத்தினர் கோபம் அடைந்துள்ளனர்.
இருவரும் துரோகிகள்; இருவரையும் அரசியலில் இருந்து ஒழித்தே தீர வேண்டும். அதற்காக என்னன்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்யுங்கள் என, ஆதரவாளர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க.,வின் சசிகலா ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:

கோபம்:

அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் பொறுப்பில் இருக்கும் தன்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதிப்பதில்லை என்று, தினகரனுக்கு வருத்தம் இருக்கிறது.
ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஆர்.பி.உதயக்குமார் ஆகிய இருவரும், தங்களுடைய தீவிர விசுவாசிகளாக இருப்பர் என்று நம்பினார். அதனால்தான், கட்சியின் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம் தனி அணியாக சென்றதும், அவரது பொறுப்பில், திண்டுக்கல் சீனிவாசனை, தினகரன் நியமித்தார். அதேபோல, அமைச்சர் உதயக்குமாரும் தங்கள் குடும்பத்துக்கு கடைசி வரை விசுவாசமாக இருப்பார் என்று நினைத்தார் தினகரன்.
அவர்கள் இருவரும், திடுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சேர்ந்து கொண்டு, சசிகலா குடும்பத்தினரை மறைமுகமாக விமர்சிக்கத் துவங்கி இருப்பது, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
அதனால், அவர்கள் இருவரையும் அரசியலில் இருந்து ஒழித்தாக வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார். இப்படி உத்தரவிட்ட கையோடுதான், திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா காலில் விழுந்த படத்தை வெளியிட வேண்டியிருக்கும் என, தினகரன் ஆத்திரமாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்து பேசிய சீனிவாசன், துணைப் பொதுச் செயலர் ஆனதும், என் காலிலும், செங்கோட்டையன் காலிலும் விழுந்தவர் தினகரன். என் படத்தை வெளியிடும்போது, இந்தப் படங்களையும் சேர்த்து வெளியிடலாம் என சவால் விடுவது போல கூறினார்.
இதனால், தினகரனின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது. உதயக்குமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர் துறைகளில் நடக்கும் முறைகேடுகளைதோண்டி எடுத்து வெளியிடுமாறு, ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளார். அந்தப் பணியை, தினகரன் ஆதரவாளர்கள் துவக்கி உள்ளனர்.

ஜெயக்குமார் அடுத்த இலக்கு:

இதற்கிடையில், சசிகலா குடும்பத்தினரை விமர்சித்து வரும் அமைச்சர் ஜெயக்குமாரை நோக்கியும் இலக்கு வைத்து வீழ்த்துமாறு, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் தினகரன். ஆனால், இது குறித்தெல்லாம், மூன்று அமைச்சர்களும் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பது, தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை

மருத்துவ கவுன்சிலிங்கை விரைவாக நடத்தக் கோரி, மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛நீட்' அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆஜராகவில்லை. மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

முடியாது:

‛நீட்' அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் வாதாடின.
சட்டச் சிக்கல்ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

தடை:

இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர உத்தரவிட்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் எங்கே என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய கோர்ட், அவசர சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது. எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அவசர சட்டம் இருக்க வேண்டும் எனவும் கூறினர்

BIG BREAKING NEWS-ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை: முதலமைச்சர் பழனிசாமி !!


ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

*ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் - முதலமைச்சர்.


*மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பை அடுத்து வெளிநபர்கள் தேவையில்லாமல் உள்ளே நுழையத் தடை வித்தக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை : திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடு.. 1 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !!

வட மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அசாம், மேற்குவங்கம், பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை கிழக்கு அசாமின் ஆளுநர் பன்வாரிலால் புரேஹித் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாமில் தற்போது மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளால் நிலைமை மோசமாக உள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களை நேரில் பார்வையிட்டேன் என்றார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வடமாநிலங்களில் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை  250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து ரயில்களும் வரும் 20-ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் அறிக்கை : வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்! !

வாழத்தகுந்த நகரங்கள்: இந்தியா எங்கே?

மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் 
யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், வருத்தமளிக்கக் கூடிய விஷயம், என்னவெனில், அந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்று கூட இடம்பிடிக்கவில்லை என்பதுதான்.

லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தின் துணை அமைப்பான எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் அச்சமின்றி வாழத்தகுந்த 140 நகரங்களை கருத்துக் கணிப்பு மூலம் பட்டியலிட்டுள்ளது. நகரங்களின் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் உலக அளவில் மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரம் முதலிடத்தையும், ஆஸ்திரியாவின் வியன்னா மற்றும் கனடாவின் வேன்கூவர் ஆகிய நகரங்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தானின் கராச்சி 134வது இடத்திலும், வங்கதேசத்தின் டாக்கா 137வது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக, அந்நாடுகளில் உள்ள நகரங்கள் மக்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல.

மேலும், ஈராக், லிபியா, சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்டவை மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழவே முடியாத நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளில் ஆண்டு முழுவதும் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கின்றன.

உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து வருவதை இந்த கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது. உலகில் அமைதியாக மக்கள் வாழும் இடங்கள், கடந்த 5 ஆண்டுகளில் 0.8 சதவிகிதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*JACTO GEO - வேலைநிறுத்தம் சூடு பிடிக்கிறது ,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் !!



11/8/17

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கை... டல்! தனியார் கல்வி நிறுவனங்கள் தவிப்பு

நடப்பாண்டில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டி வருவதால்


ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவை காலியாக உள்ளன. கடலுார் மாவட்டத்தில் 20 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், ஒரு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், கடலுார், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர கடலுார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் எஸ்.சி., - எஸ்.டி., க்கென தனியாக ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொறியியல் படித்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் மாணவர்கள் பொறியியல் படிப்பைத் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேப்போல ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தாலும் மீண்டும் 'டெட்' தேர்வு எழுத வேண்டும் என்பதால் பல மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முடித்த பின்பும் வேலை கிடைப்பதில்லை. இதனால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை.ஒரு காலத்தில் தனியார் பயிற்சி பள்ளிகளில் லட்சக் கணக்கில் ரூபாய் நன்கொடை கொடுத்தாலும் சீட் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இன்று மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 'டல்' அடித்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வடலுாரில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இப்பள்ளியின் மூலம் 50 ஆசிரியர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கான கவுன்சிலிங் கடந்த 7ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் உள்ள 50 மாணவர்களுக்கு 21 மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங் மூலம் வடலுார் ஆசிரியர் பள்ளியில் சேர தேர்வாகியுள்ளனர். இதனால் மீண்டும் விண்ணப்பம் பெற்று சேர்க்கை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.கட்டணம் குறைவாக உள்ள பயிற்சி பள்ளிகளிலேயே இந்த பிரச்னை என்றால் தனியார் ஆசிரியர் பள்ளிகளுக்கு கேட்கவே வேண்டாம். பல பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை பூஜ்ஜியமாக இருப்பதால் பயிற்சி பள்ளியை மூடிவிட தயாராகி வருகின்றனர்

கல்லூரி அருகே 'டாஸ்மாக்' மாணவியர் சாலை மறியல்

மாதவரம்: தனியார் கல்லுாரிக்கு
அருகே திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' கடைகளை அகற்றக் கோரி, கல்லுாரி மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த, மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.இரு மாதங்களுக்கு முன், கல்லுாரி அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், அங்கு குவியும், 'குடி'மகன்களால், கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு, டாஸ்மாக் கடை முன் திரண்ட கல்லுாரி மாணவ, மாணவியர், கடையை அகற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து வந்து, 'மாவட்ட ஆட்சியரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர்; இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.சாலை மறியலால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? ( பகுதி -3 )

தமிழ் நாட்டின் ஓய்வூதிய வரலாறு*
தமிழகத்தைப் பொருத்தவரை, ஆரம்ப காலங்களில் அரசு ஊழியருக்கு மட்டும் மிக சொற்பமான அளவில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

1960-ஆம் ஆண்டு மாவட்டக் கழகப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக்கப்பட்டன. அதுநாள் வரையில் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்பது வழங்கப்படவில்லை.


1956-ஆம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்காக, அரசு மற்றும் ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய வைப்புநிதித் திட்டமாக ஓய்வூதியத் திட்டத்தினை முதன் முதலில் கொண்டு வந்தது. 01.04.1956 முதல் 13.06.1966 வரை நடைமுறையில் இருந்த இத்திட்டத்தின்கீழ், ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.8-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10ம் வழங்கப்பட்டது.

 05.12.1964 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஒன்றுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் அன்றைய முதல்வர் திரு.பக்தவச்சலம் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், கூட்டணியின் தலைவர் இராமையாதேவர், *“தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அனாதைகளை விட குறைவான ஓய்வூதியம் பெறுகின்றனர். எனவே, அனாதைகளுக்கு வழங்கப்படுகின்ற ரூ.20-ஐயாவது ஆசிரியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்”* என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் மாநாட்டில் கூறியதாவது *“கூட்டணியின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்களுக்கு ரூ.20 ஓய்வூதியம் வழங்கப்படும்”* என்றார். பிறகு 14.06.1966 முதல் 17.11.1968 வரை ரூ.20 ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

18.11.1968 முதல் 30.09.1978 வரை ரூ.50-ம், அதன் பின்னர் ஊதியத்தில் 30/80, 33/80 என்ற விகிதங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

        அரசாணை எண்: 57, நாள்: 02.02.1980-ன் படி 01.10.1980 முதல் படி-முறை (SLAB SYSTEM) அடிப்படையில் சராசரி மாத ஊதியம்,

ரூ.1000 எனில் 50%

ரூ.1000 - 1500 எனில் 45%

ரூ.1500-க்கு மேல் எனில் 40%

என ஊதியத்தின் படி ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

 அதன்பின் அரசாணை எண்: 1030, நாள்: 14.12.87-ன் படி கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சராசரி 50% 14.12.1987 முதல் வழங்கப்பட்டது.

அரசாணை எண்: 639, நாள்: 03.07.1972-ன் படி 01.04.1972 முதல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்பட்டது

பதிவுகள் தொடரும்.  . . . .

நன்றி : cpstamilnadu.blogspot.com

திண்டுக்கல் எங்கெல்ஸ்

நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் 
கோர்ட் கூறியுள்ளது.நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன்? சி.பி.எஸ்.இ.,யின் இந்த செயல் ஏற்று கொள்ள முடியாது. இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டியவை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது

JACTO-GEO Breaking News*

திட்டமிட்டப்படி 22ம் தேதி அடையாள வேலைநிறுத்தம்* -

திருச்சியில் இன்று நடந்த ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு.

ஜாக்டோ_ ஜியோ ஆகஸ்ட் 22 வேலைநிறுத்தம் நடைபெறும் அன்று காலை 10.00 மணிக்கு வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டும்.

JACTO GEO இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். ..

நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி !

நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது. நீட்  நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.

85 சதவீத உள்ஒதுக்கீடு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், 
மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14-ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து ஜூலை 31-ந் தேதி உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், 85 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது

நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை: தேர்தல் ஆணையம்!!!

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவினை  அதிமுகவின் பொதுக் குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரிவினைத் தொடர்ந்து அதிமுக தற்பொழுது அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் தனக்கு என்று ஒரு தனி அணியினை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று கூடி எடுத்துள்ள முடிவின் படி, டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைந்து செயல்படும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமயிலான அணியினைச் சேர்ந்த 'அஸ்பயர்;' சுவாமிநாதன், தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு கடந்த எட்டாம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அளித்த பதிலானது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த பதிலானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது

2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP....!!

2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP..
.http://cps.tn.gov.in/public/

ஊட்டியில் ப்ளாஸ்டிக் பை? ரூ.1000 அபராதம்!

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை எடுத்து வந்தால் மாவட்ட எல்லைகளில் 
அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தி, 1,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உணவருந்திவிட்டு, பிளாஸ்டிக் பைகள், பொருட்களை ஆங்காங்கே வீசிவிடுகின்றனர். இதனால் ஊட்டி நகராட்சியில் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுவருகிறது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் ஒரு கட்டமாக, கோவை - நீலகிரி எல்லையில், பர்லியார் சோதனைச் சாவடி பகுதியில் செயல்படும் சேகரிப்பு மையம் போன்ற மையங்கள் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் ஏற்கனவே அமைந்துள்ள காவல், வனம் மற்றும் சுங்கச் சாவடிக்குச் சொந்தமான கட்டடங்களில் இந்த மையங்கள், இன்று (ஆகஸ்ட், 10) முதல் இயங்க உள்ளன.

சோதனைச் சாவடிகளில், வாகனங்கள் சோதனை செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் குறைந்தபட்ச அபராதமாக, 1,000 ரூபாய் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இம்மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், வளைவு மிகுந்த சாலைகளில், இரண்டாம் கியரைப் பயன்படுத்த வேண்டும். எரிவாயு சிலிண்டர்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஏப்ரல், மே மாதங்களான கோடை சீசனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய சுற்றுலா பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.16 ஆயிரம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10/8/17

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டம் புதன்கிழமை மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், புதிய பாடத்திட்டக்குழுத் தலைவருமான மு.ஆனந்தகிருஷ்ணன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூ றியதாவது:

புதிய பாடத்திட்டக் குழுவில் பத்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் உறுப்பினர்களிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இருமுறை நடந்துள்ளது. கருத்தறியும் கூட்டம் மதுரையில் தான் முதலில் நடத்தப்படுகிறது. அடுத்ததாக கோவை, தஞ்சை, சென்னையில் நடத்தப்படும். கூட்டங்கள் முடிந்த பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் பள்ளியில் மாணவ, மாணவியர் பயிலும் நிலையில், சமூகத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தயாராவது அவசியம். பாடத்திட்டத்தை மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.

பாடத்திட்டம் தயாரிப்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பள்ளிகளில் ஏற்படுத்துவது அவசியம். மொழி, அறிவியல், கணினி என அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவை மாணவர்கள் சரியாக பெறும் வகையிலும் பாடத்திட்டத்தை அமைக்கவேண்டியுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் (2018-19) 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான புத்தகங்கள் தயார் செய்தல், அவற்றுக்கான பயிற்சியை ஆசிரியருக்கு அளித்தல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளன. அடுத்த 12 ஆண்டுகளுக்கான தொலைநோக்கோடு இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் பொறியியல் பாடமும் சேர்க்கப்படும் என்றார்.
காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் ஐகோர்ட்டு உத்தரவு

காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த மே மாதம் 9-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில், 40 முதல் 70 சதவீத உடல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊனத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, மொத்த இடங்களில் 4 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், 3 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்குவதாக கூறி, அதைவிட குறைவான இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும் புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடை விதிப்பு

இந்த மனு கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம், ஆனால், அந்த தேர்வின் முடிவை வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பதவிக்கான தேர்வில், மாற்றுத்திறனாளிகளின் உடல் ஊனம் தகுதியை அறிவியல்பூர்வமாகவும், அறிவார்ந்த முறையிலும் நிர்ணயம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. தற்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதி மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இதற்காக அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளது என்றும் கூறினார். நிரப்பலாம் தற்போது 3,456 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டால் அது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பணியிடங்களில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன்படி, மொத்த காலிப்பணியிடங்களில் சுமார் 140 இடங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்ப வேண்டும். எனவே, இந்த 140 இடங்களை மட்டும் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்கிறோம். மற்ற இடங்களை நிரப்பிக்கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 100% ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள -ஜாக்டோ - ஜியோ வலியுறத்தல் !! 

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம்

சென்னையில் 5.8.17 அன்று  ஜேக்டோ-ஜியோ சார்பாக   நடைபெற்ற கோரிக்கை பேரணி - ஆர்பாட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த அத்துனை நல் உள்ளங்களும், ஏதோ சில காரணங்களால் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்கள் -அரசு ஊழியர்களிடம் 5.8.17 அன்று சென்னையில் நாம் கண்ட நமது ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் எழுச்சியையும் , ஆர்பரிப்புகளையும்  மற்றும்  கோர்க்கையின் 
முக்கியத்துவத்தையும் அச்சு ஊடக செய்திகள் வாயிலாகவும் , காட்சி  ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் நண்பர்கள் அனுப்பிய கட் செவி (Whatsapp ) மூலமாகவும்  தெரிந்திருந்தாலும்  .இருப்பினும் அவர்களுக்குரிய நடையில் நீங்கள் எடுத்துக் கூறுங்கள் .
           மேலும் ,மாநில , மண்டல , மாவட்ட , வட்ட நிர்வாகிகள் நம்மை அழைப்பார்கள் என்று எண்ணாமல் , கோரிக்கைகள் நமக்கானது, எனவே கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் ஒவ்வொருவரும் தன்னெழுச்சியாக  ஜாக்டோ - ஜியோ அறிவிக்கின்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்ற வகையில் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலோ (அ) பள்ளிகளிலோ உள்ளவர்களிடம்  எடுத்துக்கூறி வருகிற 22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  100% ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கலந்து கொணடார்கள் என்ற புதிய போராட்ட வரலாற்றை படைத்திட  வேண்டுகிறேன் .
         நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
        நமது உரிமைகளை மீட்போம் .
      
            
          இவண்

 பெ.இளங்கோவன்  & 

 ஜெ.கணேசன்

  தொடர்பாளர்கள்    

 ஜாக்டோ - ஜியோ   

      JACTTO - GEO

அன்புடன்
மு.சிவக்குமார், தலைவர் TAMS,TPT

9/8/17

பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், க
ருத்து கேட்க, 'முதல்வன்' பட ஸ்டைலில், கருத்து அறியும் பெட்டி, பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது.
 பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 14 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.
கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பாடத்திட்டத்தை மாற்ற, அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் பதவியேற்றதும், பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றங்கள் துவங்கின.கருத்துக் கேட்பு கூட்டம்
இதன்படி, 'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பாடத் திட்டம் மாற்றப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக,

சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில், நிபுணர்களிடம்கருத்துகள் பெறப்பட்டன. தொடர்ந்து, நாளை மதுரையிலும், ஆக.,11ல், கோவை; 22ல், சென்னை; 25ல், தஞ்சாவூரில், கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
இதைத் தவிர, 'முதல்வன்' திரைப்படத்தில், பொதுமக்களின் கருத்துகளை கேட்க, ஆங்காங்கே புகார் பெட்டி வைப்பது போன்று, தற்போது, பள்ளிகளில், கருத்து அறியும் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.


கருத்தறியும் பெட்டி

இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரும், பாடத்திட்ட குழு ஒருங்கிணைப்பாளருமான, கே.அறிவொளிகூறியதாவது:பாடத்திட்ட தயாரிப்பில், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்துறையினரிடம் கருத்து கேட்கப்படுகிறது.
மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களின் கருத்துகளை கேட்க, இன்று முதல், 11ம் தேதி

வரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கருத்தறியும் பெட்டி வைக்கப்படும். ஆசிரியர்களும், மாணவர்களும், பாடத்திட்டம் தொடர்பாக, தங்களின் கருத்துகளை எழுதி, பெட்டியில் போடலாம்.

பெயர்களை குறிப்பிட விரும்பாவிட்டால், பாடத்திட்ட கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பலாம்.
மாவட்டம் முழுவதும் சேர்த்த விபரங்கள், வரும் 18ம் தேதிக்குள், மாவட்டங் களிலிருந்து பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ கவுன்சிலிங் எப்போது?

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், 
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது.
நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.எப்., விபரங்கள் அறிய எளிய நடைமுறை அறிமுகம்!!!

சம்பளம் பெறும் ஊழியர்கள், பி.எப்., நிலவரம் அறியவும், தொகை பெறவும், 'ஆன்-லைன்' மூலம் 
விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.மாத சம்பளம் பெறும் ஊழியர்களிடம், பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதில், 4.5 கோடி
சந்தாதாரர்கள், 45 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த சேமிப்பு கணக்கு விபரங்கள், முந்தைய ஆண்டு செலுத்திய தொகை, அதற்கான வட்டி மற்றும் இருப்பு விபரங்கள் ஆகியவை, ஊழியர்களுக்கு, நிறுவனம் மூலம், பிப்., மாதம் வழங்கப்படும்.
தற்போது, 'இ--கவர்னன்ஸ்' முறையில், எளிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு
உள்ளன. 'ஆன்ட்ராய்டு' போன் மூலம், இ.பி.எப்.ஓ., என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இணையதளத்தில் நுழைந்தால், சந்தாதாரருக்கு வழங்கப்பட்டுள்ள, யு.எ.என்., எண் மூலம் தங்கள் வைப்பு நிதி பாஸ் புக்கை காணலாம். கடைசியாக செலுத்தப்பட்ட, பி.எப்., தொகை மற்றும் இருப்பு தொகை விபரங்களையும் பெற முடியும்.தற்போது, பி.எப்., தொகை திரும்ப பெறுதல் மற்றும் கடன் பெற, இந்த செயலி வழியாக விண்ணப்பிக்கும் வகையில், நடைமுறை
எளிதாக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் இணைந்துள்ள ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதிய உயர்வு : பள்ளி கல்வித் துறை உத்தரவு

நான்கு ஆண்டுபோராட்டத்திற்கு பின்பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும், உயர்கல்விக்கு 2 ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.
தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி தகுதிகளுக்கு ௨ ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., (அ) எம்.எஸ்சி.,க்கு முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர்.சில ஆண்டுகளுக்கு முன் பல்கலை.,கள் தொலைதுாரகல்வியில் இருந்து எம்.எட்.,ஐ நீக்கின. இதனால்ஆசிரியர்கள் தொலைதுார கல்வி மூலம் எம்.எட்., படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எம்.எட்.,க்கு பதிலாக எம்.பில்., (அ) பி.எச்டி., முடித்திருந்தாலும் ௨வது ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என, 2013, ஜன.,1 ல் பள்ளி கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.

தமிழாசிரியர்களை பொறுத்தவரை பி.லிட்., முடித்தோர் எம்.ஏ.,க்கு ஒரு ஊக்க ஊதியமும், பி.எட்.,க்கு இரண்டாவதுஊக்க ஊதியமும் பெற்று வந்தனர். ஆனால் பி.ஏ., பி.எட்., முடித்து பட்டதாரி தமிழாசிரியராக சேர்ந்தோருக்கு எம்.ஏ.,க்கு மட்டும் ஒரே ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வந்தது.'மற்ற பட்டதாரி ஆசிரியர்களைப்போல் தங்களுக்கும் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து ஒரு ஆசிரியர் தங்களது பணிக்காலத்தில் உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு பெறலாம். அதன்படி பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் எம்.எட்., (அ)எம்.பில்., (அ) பி.எச்டி முடித்திருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம். இந்த உத்தரவை அரசாணை வெளியிட்ட 2013, ஜன.,1லிருந்து செயல்படுத்த வேண்டுமென, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

நீட்'தேர்வு விவகாரம் : சுருதி மாறும் தமிழக அரசு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என, இந்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன், கூறினார்.
நீட் தேர்வு,ஒரு வாரத்தில்,முடிவு,தெரியும்,சுருதி மாறும், தமிழக அரசுமருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டுமென வலியுறுத்துவதற்காக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அடிக்கடி டில்லி வந்து செல்கிறார்.தனி ஆர்வம்
நேற்று, மீண்டும் அவர் டில்லி வந்தார்.வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற, ரக் ஷா பந்தன் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள் எவரும், அலுவலகங்களுக்கு வரவில்லை. ஆனாலும், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து தங்கியிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை, காலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார்.நீட் விவகாரம் தொடர்பாக, நிருபர்களுக்கு பேட்டியளிப்பதில், விஜயபாஸ்கரும், தம்பிதுரையும், எப்போதும் தனி ஆர்வம் காட்டுவது வழக்கம்.மத்திய அமைச்சர்களை, இவர்கள் சந்திக்கும் புகைப்படங்களும், பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விலக்கு கிடைக்குமா

ஆனால், விஜயபாஸ்கர், நேற்று டில்லி வந்த தகவல் கூட, பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. நீட் தொடர்பான அமைச்சரின் டில்லிபயணங்கள் குறித்த, ஊடகங்களின் விமர்சனங்களே, இதற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சரே, நேற்று டில்லியில் இருந்தும், வழக்கத்துக்கு மாறாக, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்தார்.அப்போது, அவர் கூறியதாவது: நீட் விவகாரம் தொடர்பாக, 85 சதவீத ஒதுக்கீட்டை பெறுவதற்கான சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு நடவடிக்கைகள், தீவிரமாக நடக்கின்றன. எனவே, நீட் விவகாரத்தில், தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது, இந்த வாரத்துக்குள் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.இதுவரை, நீட் தொடர்பாக உறுதியாக போராடி வருவதாகவும், நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என, தமிழக அரசு கூறிவந்த நிலையில், தற்போது, மாநில அரசின் சுருதி மாறத் துவங்கியுள்ளது, கவனிக்கத்தக்கது.

கவுன்சிலிங் எப்போது?

நாடுமுழுவதும் உள்ள, அரசுமருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி, 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், முடிந்தது.இந்நிலையில், தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங், ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல், இந்தாண்டு, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கைமுடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

போர்க்கொடி..! கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு -சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி

பள்ளிக் கல்வி துறையில், 155 நாட்களில், எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ள, செயலர் உதயசந்திரனை மாற்றினால், அது, 1.5 கோடி மாணவர்களை பாதிக்கும்' என, கல்வியாளர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து உள்ளனர்; 'அவரை மாற்றக் கூடாது' என்றும் வலியுறுத்தியுள்ளனர்.கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு - சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி
தமிழக பள்ளிக் கல்வி துறை, பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றாமலும், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறாமலும், தடுமாறி வந்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தும், எந்த மாற்றமும் நிகழாமல் இருந்தது.
பாராட்டு :
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையனும், செயலராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற பின், தேசிய அளவில், தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு, புதிய பிம்பம் கிடைத்து உள்ளது. 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமே, தமிழக அரசின் முயற்சியை பாராட்டி உள்ளது. மார்ச், 6ல், பள்ளிக்கல்வி செயலராக பொறுப்பேற்ற உதயசந்திரன்,அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை படி, நேற்று வரையிலான,155 நாட்களில், எண்ணற்ற பணிகளை துறையில் செய்துள்ளார்.இந்நிலையில், பெற்றோர், மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், செயலர் உதயசந்திரனை இடம் மாற்றம் செய்ய, முதல்வர் பழனிசாமி அரசிடம், சிலர் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பல்கலை துணைவேந்தர்கள், பள்ளி தாளாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் பேரவையினர் என, அனைத்து தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'செயலர் உதயசந்திரனை மாற்றக்கூடாது' என, அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் வலியுறுத்த துவங்கிஉள்ளனர்; இதுதொடர்பாக, அரசுக்கு கடிதங்களும் எழுதி வருகின்றனர்.

துவக்கம்:

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தேசிய அளவில், 'கோமா' நிலையில் இருந்த, தமிழக பள்ளிக் கல்வி துறை, அதிலிருந்து மீண்டு, நாட்டிற்கு முன்மாதிரியாக மாறுவதற்கான பயணத்தை துவக்கி உள்ளது. தற்போது, நடுவழியில் கப்பலை கவிழ்த்து விடுவது போல, பள்ளிக்கல்வி செயலரை மாற்றும் முயற்சியில், அரசியல்வாதிகளும், வணிக நோக்கில் செயல்படும் ஏஜென்டுகளும், அரசுக்கு அழுத்தம் தருவது தெரிய வந்துள்ளது. அவர் மாற்றப்பட்டாலோ அல்லது அவரதுசெயல்பாடுகளை முடக்கினாலோ, தமிழகத்தில் படிக்கும், 1.5 கோடி மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் இருளில் தள்ளப்படும். இது போன்ற அதிகாரிகளுக்கு, கூடுதல் ஆதரவு கொடுத்து, பணிகளை முடிக்க, அமைச்சரும், அரசும் உதவ வேண்டும். மாறாக, சுய கவுரவம், லஞ்சம், ஊழலில்ஈடுபடுவதற்காகவும், யாரையாவது திருப்திபடுத்தவும், அவரை மாற்ற முயற்சித்தால், முதல்வர் பழனிசாமியின் அரசு, மாணவர்களுக்கு துரோகம் இழைப்பதாகி விடும். எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரனின் கூட்டுப் பணி, துறையில் தொடர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டணியின் 155 நாள் சாதனைகள் :

* பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தனியார் பள்ளிகள், வியாபார பொருளாக பயன்படுத்திய, மாநில, மாவட்ட, 'ரேங்க்' முறை, அதிரடியாக ஒழிக்கப்பட்டது.
* மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார்பள்ளிகளில், ஏழை மாணவர்கள் இலவச இடம் பெற, 'ஆன்லைன் அட்மிஷன்' முறை கொண்டு வரப்பட்டது.
* புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து, பாதி பாடம் முடிந்த பின், ஆகஸ்டில் ஆசிரியர்களை இட மாற்றம் செய்யும் கவுன்சிலிங் முறை ஒழிக்கப்பட்டு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே, வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
* 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும்; 150 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், ஆன்லைன் விண்ணப்ப முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வு முறையும், விரைவில், 'ஆன் லைன்' மயமாகிறது.
* 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், பள்ளி திறக்கும் நாளிலேயே, பொது தேர்வு நடக்கும் தேதியும், தேர்வு முடிவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மதிப்பெண் சான்றிதழ்களின் விபரங்கள், தமிழில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ்களை, மத்திய அரசின் டிஜிட்டல் இணையதளத்தில்,பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* அண்ணா நுாலக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, முதல் முறையாக, தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடிப்பிடித்து, விருதுக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* கிடப்பில் போடப்பட்ட, சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராமதாஸ் வலியுறுத்தல்

 'நேர்மையாக செயல்படும் கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றம் செய்யும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலராக, உதயசந்திரன், மார்ச்சில் நியமிக்கப்பட்டார். அதன்பின், அத்துறை, புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியது. பொதுத் தேர்வுகளில், தர வரிசையை ஒழித்தது; பிளஸ் 1க்கும், பொதுத் தேர்வை அறிமுகம் செய்தது; பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட, உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவர். அவர் பொறுப்பேற்று, ஐந்து மாதங்களே முடிந்துள்ள நிலையில், அவரை, அத்துறையிலிருந்து மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை,தமிழக அரசு துவங்கி உள்ளது. இதற்கு காரணம், ஆட்சியாளர்களின் ஊழலுக்கு, உதயசந்திரன் ஒத்துழைக்க வில்லை என்பது தான்.ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதில் எழுந்த சிபாரிசு பிரச்னையால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.பாரதியார் பல்கலையில் நடந்த ஊழல்கள் தொடர்பாக, துணைவேந்தர் கணபதி மீது விசாரணை நடத்த, உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டார். பெரியார் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் குறித்து, விசாரணை கமிஷன் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும், அவர் செய்து வருகிறார். அவரையும் மாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படை தேவை, தரமான கல்வி வழங்குவது தான். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள, இரு அதிகாரிகளை மாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட, கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, கல்வித் துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை

தமிழக மாணவர்கள், அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு, 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய பாடத்திட்ட தயாரிப்புக்கு உதவும்வகையில், 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி, கருத்துரு ஒன்றை உருவாக்கி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனை நேரில் சந்தித்து, புதிய பாடத்திட்ட கருத்துருவை வழங்கினார். இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரனையும், பாடத்திட்ட கலைத்திட்டக்குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணனையும் சந்தித்து, ஆலோசனை தெரிவித்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மேற்பார்வையில், கல்லுாரிகள் அளவில், 25 ஆண்டுகளாக தன்னாட்சி முறை சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வியிலும், தன்னாட்சி முறை கொண்டு வந்தால், கல்வி முறையை இன்னும் மேம்படுத்தலாம்

* கல்வித் தரம் உயர, கல்வி நிறுவனங்களுக்கும், அவற்றை நடத்துபவர்களுக்கும் சுதந்திரம் தர வேண்டும் என, 1986 மற்றும், 1992ம் ஆண்டு, தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்ட உள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம்

* கல்லுாரிக்கு தன்னாட்சி தர, யு.ஜி.சி., சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. ஒரு கல்லுாரி, குறைந்தபட்சம், 10 ஆண்டுகளாவது தொடர்ந்து இயங்க வேண்டும்; மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆய்வக, நுாலக, விடுதி வசதிகள், உள்கட்டமைப்பு போன்ற தகுதிகள்நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக் கல்விக்கும் விதிகள் கொண்டு வரலாம்

* தன்னாட்சிக்கு விரும்பும் பள்ளிகளின் விண்ணப்பத்தை, நிபுணர் குழு, 30 நாட்களில் பரிசீலித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதன்படி, தன்னாட்சி குறித்து, அரசு முடிவு எடுக்கலாம்

* தன்னாட்சி அந்தஸ்து பெறும் பள்ளிகள், தனியாக நிர்வாக குழு, நிதிக்குழு, கல்விக்குழு, பாடத்திட்ட குழு, தேர்வு மற்றும் மதிப்பீட்டுக்குழு போன்றவற்றை உருவாக்கி கொள்ள வேண்டும்

* பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம். மேம்படுத்தப்பட்ட கல்வியை, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வழங்கும் போது தான், அது பெரும் சுமையாகவோ, திறமைக்கு அப்பாற்பட்டதாகவோ இருக்காது

* பாடத்திட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறையினர் சேர்ந்து, அவ்வப்போது, பாடத்திட்டத்தை புதுப்பித்து கொள்ளலாம்

* தரமான பாடத்திட்டம், மாணவர்களின் செயல்திறன் பரிசோதனை, தேர்வு முறையில் மேம்பாடு போன்ற அனைத்திலும், பள்ளிகளுக்கும், அரசுக்கும் உரிய ஒத்துழைப்பு இருந்தால், சாதாரண பள்ளியையும், தரம் மிக்க பள்ளியாக மாற்றலாம்

* பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நியமிக்கப்பட்டுள்ள,உயர்மட்டக் குழுவையே தன்னாட்சி முறைக்கான நடைமுறைகளை வகுக்கச் செய்யலாம். அதற்கான விதிகளை, இந்த ஆண்டு, டிச.,க்குள் முடித்தால், 2018 ஜன., யில் விண்ணப்பங்கள் பெறலாம். 2018, ஜூன் முதல் தன்னாட்சி வழங்கலாம்

* இந்த திட்டத்தின் மூலம், சி.பி.எஸ்.இ., மற்றும் சர்வதேச பாடத்திட்டம் மீதுள்ள மோகம் குறைந்து விடும். ஜே.இ.இ., - நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு, நாமே பாடத்திட்டம் உருவாக்கலாம். இதன்மூலம், கல்விப்புரட்சி ஏற்பட்டு, இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக மாறும்.இவ்வாறு,அந்த கருத்துருவில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தையும் பகிரலாம்! :
* பள்ளிகளுக்கான தன்னாட்சி குறித்த கருத்துரு மற்றும் பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, 'தினமலர்' வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். தங்களின் எண்ணங்கள், கருத்துகளை, rlp@dinamalar.in என்ற,'இ - மெயில்' முகவரியில் தெரிவிக்கலாம்.

கல்வித்துறை செயல்பாடுகள்' சவாலுக்கு 12-ந் தேதி நான் தயார்: அன்புமணி

இதுகுறித்து பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கை வெளியிட்டார். அதில் தெரிவித்ததாவது:
பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், 
அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அமைச்சர் அதை விடுத்து விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என சவால் விடுத்தது அமைச்சர் செங்கோட்டையன் தான். அவரது சவாலை நான் ஏற்றுக் கொண்ட நிலையில் அதற்கான இடத்தையும், தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர் தான். ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருப்பது பெருந்தன்மையா... பயமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அவரது இந்த அறைகூவலையும் ஏற்று விவாதத்திற்கான ஏற்பாடுகளை பாமக மேற்கொள்ளும்.

பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதும், சவால்களை எதிர்கொள்வதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என்ற பதத்தையே மருத்துவர் அய்யா அவர்கள் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார். 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் சென்னையில் ‘இன்றையத் தேவைக்கு ஏற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி, அதில் 24 முன்னாள் துணைவேந்தர்களை அழைத்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து விவாதித்தது. அதுமட்டுமின்றி ‘பள்ளிக்கல்வி: இன்றையத் தேவைக்கேற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் ஆவணம் தயாரித்து வெளியிட்டோம். இந்த ஆவணத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியது.

ஆனால், செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அனுமதித்து கல்வியை கடைச்சரக்காகவும், தரமற்றதாகவும் மாற்றியது அதிமுக தான். இப்போதும் கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றவுடன், சொந்த வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக நடத்திய ஆசிரியர்கள் இடமாற்ற ஊழலால் பின்தங்கிய மாவட்டங்களில் ஏழைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும்போது அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

எனினும், செங்கோட்டையனும், அவருக்கு முன்பு இருந்த அமைச்சர்களும் ரூ. 5 லட்சத்தை அளவீடாகக் கொண்டு இடமாற்ற ஆணைகளை வழங்கியதால் இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 60% காலியாக உள்ளன. அதேநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவை குறித்து விவாதிப்பதுடன், தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவிக்க இந்த விவாதம் சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்விவாதத்தை ஆக்கப்பூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு வரும் 12.08.2017 மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். செங்கோட்டையன் தேவையில்லாத வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றிருந்தது.

11th Public Exam ஐ எதிர்த்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது.

11th Public Exam ஐ எதிர்த்து மதுரை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.வாதம் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு  ஒத்தி வைக்கப் பட்டது.11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு பிறப்பித்துள்ள அரசாணையைய ரத்து செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அடுத்த கல்வியாண்டு முதல் 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அப்போது அரசு சாார்பில் தாக்கல் செய்த மனுவில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம்.பல பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடத்தை கற்றுக்கொடுக்காமல், பிளஸ் டூ பாடங்களை கற்றுக்கொடுக்கிறார்கள்.பொதுத்தேர்வுஅறிமுகமானால்தான் 11வது வகுப்பு பாடத்தை கற்பிப்பார்கள்.11வது வகுப்பு பாடத்தை கற்காததால் போட்டித்தேர்வுகளின்போது மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இவ்வாறு வாதிடப்பட்டது.இதனிடையே, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையாக நியமிக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்



2013 TET TEACHERS RELATED NEWS:

2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பின் சார்பில் தங்களுக்கு பணி வழங்கவேண்டும் என திருச்சி   முதன்மை கல்வி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் செய்து சாலையை மறித்து சாலையில் தங்களது கோரிக்கைகளை எழுதி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது.*

8/8/17

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இணையதளங்கள் பற்றிய தகவல்.

பள்ளிக்கல்வி இயக்குநரக இணையதளம் http://dse.tnschools.gov.in என்ற முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இயக்குனரக இணையதளத்தில் இருந்து
32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலக இணையதளம் மற்றும் உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக முதன்மை கல்வி அலுவலக இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/districtname என்ற URL பயன்படுத்தலாம். District name  டைப் செய்யும் போது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும். நேரடியாக பள்ளிகளின் இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/udisecode என்ற URL பயன்படுத்தலாம். இங்கு udisecode என்பது பள்ளியின் 11 இலக்க Udise எண்  ஆகும். இணையதளத்தில் தெரிய வேண்டிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை Login செய்து பதிவேற்றிக்கொள்ளலாம். 
இதேபோன்ற அமைப்பு தொடக்கக்கல்வி இயக்குரகத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

http://dee.tnschools.gov.in என்ற URL பயன்படுத்தலாம்.

நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி
கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
 முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆசிரியர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதில், மாநிலங் களில் தனித்தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்தஆண்டு, மாநில அளவில் விருது பெறு வோரின் பட்டியலை, வரும், 20க்குள், மாநில குழுவுக்கு அனுப்பும்படி, மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத் திய, முன்மாதிரியான ஆசிரியர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.'அவர்கள் விண்ணபிக்க வில்லை என, விட்டு விடக்கூடாது. புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது' என, தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, நல்லாசிரியர் விருது வழங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. அதிகாரிகளின் உறவினர்கள், மேல் அதி காரிகளுக்கு வேண்டியவர்கள், ஆசிரியர் சங்கத் தினருக்கு நெருங்கியவர்கள், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கு, இந்த விருது வழங்க, சிபாரிசு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்தநடைமுறை, பள்ளிக்கல்வி செயலர், உதய சந்திரன், இயக்குனர், இளங்கோவன் கூட்டணி யில், மாற்றப்படும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ள னர். அதேபோல, 2016 குழுவில் இடம் பெற்ற அதி காரிகளே, தங்கள் பெயரை சிபாரிசு செய்த

சம்பவங்களும் நடக்காது என, நம்பிக்கையில் உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரி யர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகை யில், ''பாடம் நடத்துவதிலும், மாணவர்கள் மீதும், பள்ளிக்கல்வியின் உண்மையான வளர்ச் சியில் அக்கறை காட்டுவோருக்கும் நல்லா சிரியர் விருது, வழங்கப்பட வேண்டும். ''எனவே, இதற்கான விதிகளை, பொதுமக்களின் கருத்து கேட்டு மாற்றுவது அவசியம்,'' என்றார்.

நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்.

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 23ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும்,பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி(செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு)பி.எஸ்சி ரேடியோலஜி, இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய படிப்புகளில் இந்த ஆண்டு மாணவ மாணவியரை சேர்க்கை நடக்க உள்ளது.இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 23ம் தேதி 22 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 24ம் தேதிக்குள் வரை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரில் பெற விரும்புவோர் அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு விண்ணப்ப மனுவுடன்விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டுக்கு கட்டணம் ரூ. 400க்கான டிடி கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ‘‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10’’ என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்ப்பட்டோர்(்அருந்ததியர்), பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்ப படிவக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.

TNPSC Group 2A 2017 Exam Level Analysis / Cut off Marks :

Today GROUP-2A Question Scenario

*.TAMIL– Normal Paper, Without careless mistakes one Can score 95+.
*.GENERAL ENGLISH– Similar to Tamil Paper, One Can score 95+.
*.GMA(MATHS)– Standard Paper can score 22+.
*.CURRENT AFFAIRS– 2016 to Very Recent like President Election. (very factual)
*.GENERAL STUDIES– Good Paper as many Qns were Tricky and outside School Text Books-Good Trend.
#155_Plus seems to a good score.

புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு

புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவைஉட்பட, நான்கு இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு என, இரு குழுக்களை, தமிழக அரசு அமைத்துள்ளது.இந்தக் குழுக்களின் ஆலோசனை கூட்டம், ஜூலையில் நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாவது முறையாக, டி.பி.ஐ., வளாகத்தில், கலைத்திட்டக்குழு கூடி ஆலோசித்தது.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடமும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, வரும், 9ல், மதுரை; 11ல், கோவை; 22ல், சென்னை; 24ல், தஞ்சாவூர் என, நான்கு இடங்களில் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி விபரம் பெறலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, பாடத்திட்டம் குறித்து, கருத்துக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

11 லட்சம் பான் கார்டுகளை முடக்கிய அரசு: | உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?


மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார் வெளியிட்டுள்ளார்.
ஒரு நபரின் பெயரிலேயே பலபான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், "பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர்அல்லது பொய்யான அடையாளம்கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும், உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில், 

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html

என்ற Link-ஐ Click  செய்யுங்கள். அடுத்ததாகத்திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத்(உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்