யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/6/18

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள்!!!

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷1. எழுத்து இலக்கணம்:-

🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2 (1. உயிர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயிர் எழுத்துக்கள் - 12
🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷2.சொல் இலக்கணம்:-

🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது - சொல்

🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி

🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்

🐿 பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்

2. பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)

🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்

🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)

🐿 பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்

🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷3.பொருள் இலக்கணம்:-

📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்

(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்

📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்

📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)
3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
📚 மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
11. கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிடத்து உண்டாகும் அன்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷4. யாப்பிலகணம்:-

📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை

1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை

📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்

📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2

4. தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை

📚 தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை

5. அடி:-
📚 அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்

6. தொடை:-
📚 தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷5. அணி இலக்கணம்:-
📚 அணி என்பதன் பொருள் - அழகு

📚 அணிகள் வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்

அணிகள் பின்வருமாறு:-

📚 இல்பொருள் உவமையணி
📚 ஏகதேச உருவக அணி
📚 பிறிது மொழிதல் அணி
📚 வேற்றுமை அணி
📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
📚 இரட்டுற மொழிதலணி
📚 சொற்பொருள் பின்வருநிலையணி
📚 தற்குறிப்பேற்ற அணி
📚 நிரல்நிறை அணி

தமிழ், ஆங்கிலம் மொழி பாட தேர்வுகளில் மாற்றம் பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் 2 தாள் முறை ஒழிப்

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களுக்கு, தலா, இரண்டு தாள்களுக்கு நடத்தப்படும் தேர்வு, இனி, ஒரே தாளாக நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழ்,ஆங்கிலம்,மொழி பாட தேர்வு,மாற்றம்,பிளஸ் 1, பிளஸ் 2 ,பொது தேர்வில்,2 தாள் முறை,ஒழிப்பு


இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், இரண்டு மொழி பாடங்களுக்கு, தலா, இரண்டு தாள்கள் மற்றும் முக்கிய பாடங்களுக்கு, நான்கு தாள்கள் என, எட்டு தாள்களுக்கு, 1978 - 79ம் ஆண்டில், தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அதன்பின், பிளஸ் 1க்கும், பொது தேர்வு நடத்த, 2017 - 18ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மொழி பாடங்களுக்கு தற்போதுள்ள, இரண்டு தாள்களை, வரும் கல்வி ஆண்டு முதல், ஒரே தாளாக குறைக்க வேண்டும் என, பல தரப்பிலும் கோரிக்கைகள் வந்தன.

ஒப்புதல் :

அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலங்களை போன்று,

தமிழகத்திலும், மொழி பாடங்களுக்கு, ஒரே தாளாக தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், மே, 3ல் நடந்த, உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஒரு தாளை குறைப்பதால், மாணவர்கள், எவ்வித மன அழுத்தமும் இன்றி, மொழி பாடங்களை எளிதாக கற்று கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால், இந்த மாற்றத்துக்கு, உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது. மொழி பாடங்களில், ஒரு தாளை குறைப்பதால், காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட பருவ தேர்வுகள், ஆயத்த மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்துவதில், 10 நாட்கள் வரை மிச்சமாகின்றன.


அரசு முடிவு :


இரண்டு தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகளை, ஒரே தாளில் இடம்பெற செய்வதால், அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிப்பதில், எந்த மாற்றமும் இருக்காது. இந்த மாற்றத்துக்கு, ஆசிரியர் மற்றும் பெற்றோர் குழுக்களும் ஒப்புதல் அளித்துள்ளன.

ஜூன், 4ல், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டம், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில் நடத்தப்பட்டது. அதில், வினாத்தாளை குறைக்கும் முடிவுக்கு, அனுமதி வழங்கப்பட்டது. எனவே, இந்த கருத்துக்களை எல்லாம் பரிசீலித்து, மொழி பாடம் மற்றும் ஆங்கிலத்தை, ஒரே தாளாக குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதற்கான மாதிரி வினாத்தாளை வடிவமைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு, அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அன்றே சொன்னது, 'தினமலர்' :
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், மொழி பாட தேர்வுகளை, ஒரே தாளாக குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்த நிலையில், திட்டம் வந்தால் என்ன பயன்; துறை ரீதியாக கிடைக்கும் பலன் குறித்து, நமது நாளிதழில், ஏப்., 25ல், விரிவான செய்தி வெளியானது. இந்த செய்தியில் கூறப்பட்ட கருத்துகள், உயர்மட்டக் குழு மற்றும் பொது கல்வி வாரிய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. அதன்படி, அதிகாரிகள், ஆலோசித்து முடிவு எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் விலை எகிறியதால் அதிர்ச்சி

புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, பிளஸ் 1 புத்தகங்களின் விலை, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, பிளஸ் 1 புத்தகங்கள், ஒரு வாரத்திற்கு முன், டிஜிட்டல் முறையில், தமிழ்நாடு பாடநுால் கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.நேற்று முதல், புத்தக விற்பனை மையங்களில், பாட புத்தகங்களின் விற்பனை துவங்கியது. சென்னையில், டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலக புத்தக விற்பனை மையங்களில், பிளஸ் 1 புத்தகங்களை வாங்க, கூட்டம் அலைமோதியது.அறிவித்தபடி, சிறப்பு கவுன்டர்கள் நேற்று செயல் படவில்லை; கூடுதல் கவுன்டர்களும் அமைக்கப்படவில்லை. அதனால், புத்தகங்கள் வாங்க, பெற்றோர் நீண்ட நேரம் கால் கடுக்க, வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த புத்தகங்களை விற்க, தனியார் புத்தக விற்பனை மையங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அனைத்து மாணவர்களும், பாடநுால் கழக விற்பனை மையத்திலேயே, புத்தகங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.விற்பனை மையங்களில், அனைத்து பாடங்களுக்கான புத்தகங்களும் கிடைக்கவில்லை. அதாவது, 34 வகை புத்தகங்களுக்கு, 11 வகை புத்தகங்கள் மட்டுமே, நேற்று இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. தொழிற்கல்வி புத்தகங்கள் ஒன்று கூட இல்லை. மேலும், புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும், 2017ஐ விட, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

ஆசிரியர் பணிநிரவல்: வலுக்கும் எதிர்ப்பு - கணிதப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான அனைத்துப்பாடங்களையும் பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.

அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் பல நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

 இதனால் கிராமப்புற மாணவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான உயர்நிலைக்கல்வியை எளிதாக பெற்று வருகின்றனர்.

RTE  சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களை அரசாங்கமே கல்விக்கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்பதால் பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 170க்கும் குறைவாகவே உள்ளது.

தற்போதுவரை இப்பள்ளிகளில் 6முதல் 8வகுப்புகளைக் கையாள 3பட்டதாரி ஆசிரியர்களும்,
9மற்றும் 10ஆம் வகுப்புகளைக் கையாள 5 பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் உயர்நிலைப்பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 8பட்டதாரி ஆசிரியர்கள் என்ற ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் 6முதல்10 வகுப்புகளுக்கான குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கையை 8இலிருந்து குறைத்து பணிநிரவல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பள்ளிகளில் ஒரே ஒரு கணித ஆசிரியர் 6முதல்10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் கணிதப்பாடத்தை முழுமையாகக் கற்பித்து , மெல்லக் கற்கும் மாணவர்களையும் பொதுத்தேர்விற்கு தயார்செய்வது என்பது இயலாத காரியம். கணிதப்பாடத்தின் கடினமான புதிய பாடத்திட்டத்தின் காரணமாகவும் , வேலைப்பளு கூடுதலாக இருக்கும் என்பதாலும் கணிதப்பாடத்தைக் கூடுதலாகக் கையாள மற்ற பாட ஆசிரியர்கள் முன்வருவதில்லை.

போட்டித்தேர்வுகளையும், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளையும் மாணவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற கணிதப்பாட புரிதல் மிகவும் அவசியமானது என மதிப்பிற்குரிய கல்வித்துறை செயலாளர் அவர்களும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


*எனவே அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 6முதல்10 வகுப்புகளைக் கையாள குறைந்தபட்சம் இரண்டு கணிதப்பட்டதாரி ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
நாளை நடைபெறும் தலைமையாசிரியர் கலந்தாய்வில் மனுதாரரையும் அனுமதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அவை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் கலந்தாய்விற்கு தயார் செய்யப்பட்ட பதவி மூப்பு பட்டியலில் குளறுபடி இருப்பதாக ஜெயராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ  கவுன்சில்(DCI)

ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு  நீட்  என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என் மத்திய அரசு அறிவித்தது.

 இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகள் நடந்தன. இதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ மூலம் நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடந்தது.இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது.

இந்நிலையில் நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்றும் சிபிஎஸ்-க்கு பதிலாக தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சி.பி.எஸ்.இ நடத்தி வரும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆறாம் வகுப்பில் புதிய சமூக அறிவியல் பாடநூலில் உள்ள பொ. ஆ. மு., பொ. ஆ.பி. என்ற சொற்களின் சுருக்கக் குறியீட்டு விளக்கம்:-

                                                          

பொ.ஆ.மு.-பொது ஆண்டிற்கு முன்
பொ.ஆ.பி.-பொது ஆண்டிற்கு பின்


பொது ஆண்டு - ஒரு ஆண்டு முறை

ஓர் ஆண்டு என்பது புவி சூரியனை ஒரு முறை சுற்றிவருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாகும். காலம் ஒருவரின் பிறப்பு அல்லது ஒரு நிகழ்வு அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது. எ.கா. கிறித்துவ ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு.

பொது ஆண்டு :

பொது ஆண்டு என்பது கிருஸ்த்துவ ஆண்டு முறையைக் குறிக்கும். இது கிருஸ்த்து பிறப்பிற்கு முன், கிருஸ்த்து பிறப்பிற்குப் பின் என்று இயேசு கிருஸ்த்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்யப்படுகின்றது. துவக்ககாலத்தில் கிருத்துவர்கள் மட்டும் பயன்படுத்தியிருந்தாலும், தற்போது அனைத்துச் சமயத்தினரும் பயன்படுத்துவதால் பொது ஆண்டு என்று அழைக்கப்படுகின்றது.

கி.மு. = கிருஸ்த்து பிறப்பிற்கு முன் = Before Christ = BC
கி.பி. = கிருஸ்த்து பிறப்பிற்கு பின் = Anne Domini = AD
பொ.ஆ. = பொது ஆண்டு = Common Era = CE
பொ.ஆ.மு. = பொது ஆண்டுக்கு முன் = Before Common Era = BCE
பொ.ஆ.மு.-பொது ஆண்டிற்கு முன் (கி.மு.விற்கு பதிலாக பொ.ஆ.மு -பொது ஆண்டிற்கு முன் என்பது வழங்கப்படுகிறது.)
பொ.ஆ.பி.-பொது ஆண்டிற்குப் பின் (கி.பி.க்கு பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது).

SSLC, HSE – FIRST YEAR AND SECOND YEAR EXAMINATION- MARCH 2019- TIME TABLE AND RESULT DATE!!!

முந்தைய தேர்வுகளில் இருந்து அதிக வினாக்கள் ‘செட்’ தகுதித் தேர்வை மீண்டும் நடத்த வழக்கு

*முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள்
அதிகளவில் இருந்ததால், மாநில தகுதி தேர்வை (செட்) மீண்டும் நடத்த கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, கோ.புதூரை சேர்ந்த மதுசூதனன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:உதவி பேராசிரியர் பணிடங்களுக்கான மாநில அளவிலான தகுதித்தேர்வை( செட்), கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தியது. கடந்த மார்ச் 4ம் தேதி இந்த தேர்வு மாநிலம் முழுவதும் நடந்தது. தேர்வின் முதல் தாளில் முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட 43 வினாக்கள் அப்படியே மீண்டும் கேட்கப்பட்டிருந்தன.
 மொத்தமுள்ள 50 வினாக்களில் 43 வினாக்கள் மீண்டும் கேட்கப்பட்டதால், 86 மதிப்பெண்கள் அப்படியே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரே வினாக்கள் அடுத்தடுத்த தேர்வுகளிலும் கேட்கப்பட்டதால் தேர்வு எழுதியவர்கள் சுலபமாக தேர்வை எழுதியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரே வினாக்கள் இருந்தால் தகுதியற்ற பலர் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து யூஜிசிக்கு நான் புகார் அளித்தேன். இதனிடையே அவசர, அவசரமாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 எனவே, நீதிமன்றம் தலையிட்டு தரமான வினாக்களைக் கொண்டு மீண்டும் புதிதாக மாநில தகுதி தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர், மனு குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலர், செட் - 2018க்கான கன்வீனர் (கொடைக்கானல் அன்ைன தெரசா பல்கலை. துணைவேந்தர்) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தனர்.a

பிளஸ் 1 புத்தகத்தில், 'நீட்' வினாக்கள்; உயர்கல்வி தகவல்களை அள்ளி தருகிறது:

புதிய பாடத்திட்டத்தில் தயாரான, பிளஸ் 1 புத்தகத்தில், 'நீட்' மற்றும், ஜே.இ.இ., தேர்வு வினாக்களும்
, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
இந்தாண்டு, பிளஸ் 1 வகுப்புக்கு, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், புதிய பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு பக்கத்திலும், செய்முறை பயிற்சிகள் தரப்பட்டுள்ளன.
மாதிரி வினாத்தாள்பழைய பாடத்திட்ட புத்தகங்கள், கறுப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட நிலையில், புதிய புத்தகங்கள், பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன.


 ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு விதமான முன் மற்றும் பின், அட்டை படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

 பின் அட்டைகளில், சர்வதேச அளவிலான பிரபலமான விஞ்ஞானிகள், நிபுணர்கள், ஓவியங்கள் மற்றும் அரிய தகவல்கள், படத்துடன் இடம் பெற்று உள்ளன.

மேலும், பாடம் தொடர்புடைய உயர்கல்வி வாய்ப்புகள், அதற்கான கல்வி நிறுவனங்கள், பாடத்தை படிப்பதால் கிடைக்கும் திறன்கள், அதற்கான இலக்குகள், செய்முறைக்கான வழிகாட்டுதல் உள்ளன.

 மேலும், கருத்து வரைபடங்கள், காணொலி மற்றும் அனிமேஷன் படங்களுக்கான குறிப்புகள், பார்கோடுகள், பாடம் சார்ந்த இணையதள முகவரிகள் போன்றவையும், இடம் பெற்றுள்ளன.

அதேபோல், நீட், ஜே.இ.இ., - சி.ஏ., - டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான, மாதிரி வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

 அதில், எம்.சி.க்யூ., என்ற பல்வகை விடைக்குறிப்பு அடங்கிய, மாதிரி வினாக்கள் தரப்பட்டுள்ளன. எய்ம்ஸ் முதல் வேளாண் பல்கலை படிப்புகள் வரை, தகவல்கள் தரப்பட்டுள்ளன.

*71 ஆயிரம் பேர்*

'இந்த புத்தகங்களை பயன்படுத்தும் மாணவர்கள், படிக்க துவங்கும்போதே, படிப்பை முடித்த பின், அடுத்த இலக்கு என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

 இதற்காக, கல்வி ஆலோசகர்களை தேடி செல்ல வேண்டிய நிலை, இனி இருக்காது' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின்படி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், http://www.textbooksonline.tn.nic.in என்ற இணையதளத்தில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்த பாட புத்தகங்கள் மற்றும், பார்கோடில் இணைக்கப்பட்ட தகவல்களில், இதுவரை, ஆறு லட்சம் தகவல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதில், 71 ஆயிரம் பேர், தமிழக பாடநுால் கழகத்தின், 'மொபைல் ஆப்'களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆசிரியர் பணிநிரவல்: வலுக்கும் எதிர்ப்பு - கணிதப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான அனைத்துப்பாடங்களையும் பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் பல நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

 இதனால் கிராமப்புற மாணவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான உயர்நிலைக்கல்வியை எளிதாக பெற்று வருகின்றனர்.

RTE  சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களை அரசாங்கமே கல்விக்கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்பதால் பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 170க்கும் குறைவாகவே உள்ளது.

தற்போதுவரை இப்பள்ளிகளில் 6முதல் 8வகுப்புகளைக் கையாள 3பட்டதாரி ஆசிரியர்களும்,
9மற்றும் 10ஆம் வகுப்புகளைக் கையாள 5 பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் உயர்நிலைப்பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 8பட்டதாரி ஆசிரியர்கள் என்ற ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் 6முதல்10 வகுப்புகளுக்கான குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கையை 8இலிருந்து குறைத்து பணிநிரவல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பள்ளிகளில் ஒரே ஒரு கணித ஆசிரியர் 6முதல்10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் கணிதப்பாடத்தை முழுமையாகக் கற்பித்து , மெல்லக் கற்கும் மாணவர்களையும் பொதுத்தேர்விற்கு தயார்செய்வது என்பது இயலாத காரியம். கணிதப்பாடத்தின் கடினமான புதிய பாடத்திட்டத்தின் காரணமாகவும் , வேலைப்பளு கூடுதலாக இருக்கும் என்பதாலும் கணிதப்பாடத்தைக் கூடுதலாகக் கையாள மற்ற பாட ஆசிரியர்கள் முன்வருவதில்லை.

போட்டித்தேர்வுகளையும், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளையும் மாணவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற கணிதப்பாட புரிதல் மிகவும் அவசியமானது என மதிப்பிற்குரிய கல்வித்துறை செயலாளர் அவர்களும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


*எனவே அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 6முதல்10 வகுப்புகளைக் கையாள குறைந்தபட்சம் இரண்டு கணிதப்பட்டதாரி ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

EMIS அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு மாணவர்களின் புதிய பதிவு 20.06.2018 தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.


🌷கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர் விவரங்களை வகுப்புவாரியாக வருகைப் பதிவேட்டில் உள்ளபடி EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கீழ்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*

*🌷கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களின் விவரங்களும் தற்போது பயிலும் மேல்வகுப்பிற்கு EMIS குழுவால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சரியாக செயல்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.*

*🌷2018-19 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் புதியதாக சேர்க்கை ஆன மாணவர் சார்ந்த அனைத்து விவரங்களையும் 20.06.2018 ம் தேதிக்குள் உள்ளீடு செய்து முடித்திடல் வேண்டும்.*

*🌷 *2017-18 ஆம் கல்வி யாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் (தற்போதைய 2 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு முடிய) ஏதேனும் தகவல் விடுபட்டிருப்பின் அவற்றை சரிசெய்வதற்கான Updating option வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விடுபட்ட விபரங்களை இவ்வாய்ப்பினைக்கொண்டு சரிசெய்திடல் வேண்டும்.*

🌷 *2017-18 ஆம் கல்வியாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் எவரேனும் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் நிகழ்வில் அம்மாணவர் சார்ந்த விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும். மேலும் பள்ளியில் பயிலாத மாணவர் விபரங்களையும் common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.*

*🌷EMIS எண்ணுடன் மாற்றுச்சான்றிதழ் பெற்று புதியதாக வேறு பள்ளிக்கு சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை common pool ல் இருந்து எடுத்து சார்ந்த பள்ளிகளில் சார்ந்த வகுப்புகளில் சார்ந்த தலைமை ஆசிரியர்களால் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.*

*🌷இந்    நிகழ்வின் போது 2 முதல் 8 வகுப்புகளில் புதியதாக சேர்ந்த மாணவர் விபரங்களை common pool ல் இருந்து எடுக்க முடியாத நிலையில் மட்டும் அத்தகைய மாணவர் விபரங்களை சார்ந்த வகுப்புகளில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களால் புதிதாக பதிவு செய்திடல் வேண்டும்.*

*🌷5 மற்றும் 8 ம் வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளில் மாற்றுச்சான்றிதழ் வாங்கிய மாணவரின் விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.*

🌷 *நடப்பு கல்வியாண்டில் தினந்தோறும் நடைபெறும் சேர்க்கை/ நீக்கல் சார்ந்த விபரங்களை EMIS இணையதளத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் உடனுக்குடன் பதிவுகள் செய்து முடித்திடல் வேண்டும்.*

*🌷2018-19 ஆம் கல்வியாண்டில் EMIS இணையதளத்தில் அனைத்து வகுப்பு மாணவர் சார்ந்த அனைத்து விபரங்களையும் பதிவு செய்யும் பணியை 31.07.2018 ஆம் தேதிக்குள் முடித்திடல் வேண்டும்.*

*🌷எனவே சார்ந்த கல்வி மாவட்டம் வாரியாக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இப்பணியை எவ்வித குறைகளுகு இடமின்றி காலதாமதம் ஏற்படாமல் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.*


முதல் வகுப்பு மாணவர்களுக்கான கையெழுத்துப் பயிற்சி கையேடு மற்றும் சொல்வது எழுதுதல் வார்த்தைகள்!!

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சென்னையில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போதுமான நிதி அரசிடம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் பாரதிய ஜனதா மற்றும் புதிய கட்சிகளுக்கு மக்கள் மனதில் இடம் கிடைக்காது என்றார்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் - மாணவர் விகிதம் அட்டவணை ( ந.க.எண் 055838 - நாள்: 18.04.2018-ன் படி )




மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கலாமா ? RTI Reply!

மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கலாமா ? RTI Reply! 1.    மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்

 விடுப்பை துய்க்கலாமா ?

2.    தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?

3.    தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும்
       ஏற்புடையதா?

High School HM Case Judgement Copy (04.06.2018)

12/6/18

சென்னை எழிலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் உண்ணாவிரதம் : இரவு முழுவதும் தங்கினர் : பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் சென்னையில் 
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 தமிழக அரசு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்  என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த 7 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இருப்பினும் தமிழக அரசு இதுவரை அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. கடந்தாண்டு முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

 இதை கண்டித்து கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனால், முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ-ஜியோ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் தடையை மீறி போராட்டம் நடந்தது.

இந்நிலையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

 அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள ஆவின் வளாகம் முன்பு நேற்று காலை 10 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

 முன்னதாக, தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருவதால் பிரச்னைகளை தடுக்க உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் எழிலக வளாகம் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
 இதேபோன்று பிற மாவட்டங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று மாலை வரை அரசு அழைத்து பேசாததால் நேற்றிரவும் உண்ணாவிரதம் நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய எழிலகம் வளாகத்தில் போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

போராட்டம் குறித்து அமைப்பின் நிர்வாகி மாயவன் கூறுகையில், ‘‘பழைய ஓய்வூதியம் அமல்படுத்துவது, ஊதிய முரண்பாட்டை சரி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்க முடியாத நிலையில் திராணியற்ற அரசாக உள்ளது.

 அரசு துறைகளில் 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாமல் அந்த இடங்களை பறிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 அதை உடனே ரத்து செய்ய வேண்டும். தற்போது எங்கள் போராட்டம் நீடிக்கும். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் நீடிக்கும்’’ என்றார்.

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், 12 சதவீதம், 'பாஸ்' 51வது இடம் பிடித்தார் தமிழக மாணவர்

ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஹரியானா மாணவர், தேசிய அளவில் முதலிடம் பெற்றார். சென்னை தனியார் பள்ளி மாணவர், தேசிய அளவில், 51ம் இடம் பிடித்தார்.

ஐ.ஐ.டி., மற்றும், என்.ஐ.டி.,யில், மாணவர்கள் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வு முடிவை, தேர்வை நடத்திய, கான்பூர் ஐ.ஐ.டி., நேற்று வெளியிட்டது. இதில், மொத்தம், 360 மதிப்பெண்களுக்கு, 337 மதிப்பெண் பெற்று, ஹரியானா மாணவர், பிரணவ் கோயல், தேசிய, 'ரேங்க்' பட்டியலில் முதலிடம் பெற்றார். இவர், ஐ.ஐ.டி., ரூர்க்கி மண்டலத்தில், பதிவு செய்து தேர்வு எழுதியவர்.தமிழகத்தில், சென்னை மண்டலத்தில், சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த, விஜயவாடாவைச் சேர்ந்த மாணவர், மவுரிசிவ கிருஷ்ண மனோகர், அகில இந்திய அளவில், ஆறாம் இடம் பெற்றுள்ளார்.

சென்னையில், 'பிட்ஜீ' பயிற்சி மைய மாணவர், கிரிநாத், 285 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், 51ம் இடம் பிடித்துள்ளார். இவர், சென்னை மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் படித்து, பயிற்சி மையத்தில், நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர். அதேபோல, பல மாணவர்கள், பிட்ஜீ மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த விழாவில், பாராட்டும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

தேசிய அளவில், 23 ஐ.ஐ.டி.,க்களில், 11 ஆயிரத்து, 279 இடங்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,076 மாணவியர் உட்பட, 18 ஆயிரத்து, 138 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில், 8,794 பேர்; பிற்படுத்தப்பட்ட பிரிவில், 3,140; தலித் மாணவர்களில், 4,709 மற்றும் பழங்குடியினர் பிரிவில், 1,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐ.ஐ.டி.,க்களில், மாணவியரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, இந்த ஆண்டு முதல், மாணவியருக்கு தனி இட ஒதுக்கீடு அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, 800 இடங்கள் மாணவியருக்கு மட்டும், தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்க்க அவகாசம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங், சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம் தவறியவர்களுக்கு, சலுகை அளித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, இன்ஜி., 
கல்லுாரிகளில் சேர்வதற்கான, ஆன்லைன் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த கவுன்சிலிங்குக்கு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, இம்மாதம், 8ம் தேதி துவங்கியது. 42 உதவி மையங்களில் நேரம் ஒதுக்கி, விண்ணப்பதாரர்கள், சான்றிதழ்களுடன் வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாதவர்களுக்கு, புதிய சலுகை அளித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வர முடியாதவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கான கடைசி நாளான, ஜூன், 14க்கு முன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்திற்கு, எந்த நேரத்திலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரலாம்.அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு முறை தான் அனுமதிக்கப்படுவர். எனவே, வரும்போது, விண்ணப்ப படிவத்தை பிரதி எடுத்து, அதில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி வர வேண்டும். விண்ணப்பத்தின், மூன்றாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களின், நகல்களையும் எடுத்து வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 புத்தகம் விற்க சிறப்பு கவுன்டர்கள்

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கான, புதிய பாடப் புத்தகங்கள் 
வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வகுப்புகளில், புதிய பாடத்திட்ட பயிற்சிகளும் துவங்கியுள்ளன.பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட, பிளஸ் 1க்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்படுவது தாமதமானது. முடிந்த கல்வியாண்டில், பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்களின் மதிப்பெண் குறைந்ததால், இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்புகள், முன்கூட்டியே துவங்கியுள்ளன. ஆனால், புத்தகங்கள் கிடைக்காமல், மாணவர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், பிளஸ் 1 புத்தகங்கள், டிஜிட்டல் வடிவில், தமிழக பாடநுால் கழக இணையதளத்தில், சில தினங்களுக்கு முன் வெளியாகின. இதை தொடர்ந்து, புதிய புத்தகங்கள், இன்று விற்பனைக்கு வருகின்றன. தமிழக பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகங்கள் கிடைக்கும். சென்னை, டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் உள்ள, தமிழக பாடநுால் கழக விற்பனை மையத்தில், சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், https://textbookcorp.in என்ற இணையதளத்தில், ஆன்லைனிலும், 'புக்கிங்' செய்து, புத்தகங்களை வீட்டிலேயே, 'டெலிவரி' பெறலாம்.

மருத்துவ படிப்பு சேர்க்கை இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம். மேலும், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம்செய்தும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்காக, 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 18ம் தேதிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

'ஜூலை முதல் 'நீட்' பயிற்சி' பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,

நடப்பு கல்வி ஆண்டுக்கு, ஜூலை முதல், 'நீட்' பயிற்சி துவக்கப்படும்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில், நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: கடந்தாண்டு, அரசு வழங்கிய, நீட் தேர்வு பயிற்சியில், ௧,402 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவ கல்வி, 'கட் ஆப்' மார்க், நாளை வெளியிடப்படுகிறது. இதன் பிறகே, இம்மாணவர்களில் எத்தனை பேர், மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர், என்பது தெரியும். அரசின் பயிற்சியால், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், மருத்துவ கல்லுாரி செல்லும் மாணவர்களுக்கும், விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும் ஜூலை முதல், நீட் தேர்வு பயிற்சி துவக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும், எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள, 412 மையங்களிலும், நீட் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி : திருப்பூரில் அமைச்சர் செங் கோட்டையன் பேசியதாவது: புதிய பாடத்திட்டத்தை நடத்துவதற்கு, ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் பயிற்சியளிக்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் லேப்-டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கல்வித்தரத்தை மேம்படுத்த, 'ரோபோ கிளாஸ்' வகுப்பறையை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கல்வித்தரத்தை, தேசிய அளவில் உயர்த்தும் நோக்கத்தில் தான் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன, என்றார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 11.6.18 முதல் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு மொழிப்பாட தேர்வுகளை ஒரே பாடமாக்கி அரசாணை வெளியீடு




9/6/18

சட்டம்

சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்

சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும்

சில உளவியல் உண்மைகள்

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம்

சிறுநீரக கோளாறு

செல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து

டாக்டர்நகைச்சுவை 2

டூரின் துணி யேசுநாதரின் இறப்பில் மொத்தமாக மூன்று துணிகள்

தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்

தாய் பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்

தான் வாழ பிறரை கெடுக்காதே

தினம் ஒரு குட்டிக்கதை

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்

தோல்வி என்றால்?

நமது மனதிலும்

நல்ல குடி நீர் என்பதற்கும்

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும்

பி.இ. சேர்க்கை: இன்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்: உதவி மையத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகச் செல்ல வேண்டும்

 பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக கலந்தாய்வு உதவி மையத்தில் மாணவர்கள் ஆஜராக வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,78,131 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதன்முறையாக ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. கலந்தாய்வை வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க 1,59,631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. 
42 உதவி மையங்களில்: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களிலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. 
அசல் சான்றிதழ் சரிபார்ப்பானது அனைத்து உதவி மையங்களிலும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும். காலை 9 - 10 மணி வரை ஒரு பிரிவு, 10-11 மணி வரை இரண்டாம் பிரிவு என ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவு மாணவர்கள் எனப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை. அதன் பிறகு பிற்பகல் 1.30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
மாணவர்கள், தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் உதவி மையத்துக்கு வந்து விடவேண்டும்.
மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியது என்னென்ன?: சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டிய மையம், தேதி, நேரம், வரிசை (டோக்கன்) எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாணவர் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் தங்களுடைய பயன்பாட்டாளர் குறியீட்டைப் பயன்படுத்தியும் இந்த விவரங்களை மாணவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும்.
அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்: மாணவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, ஆன்-லைன் பதிவு செய்த விண்ணப்ப நகலை பிரதி எடுத்து அதில் மார்பளவு புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்துச் செல்லவேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் (இணை மதிப்பெண் சான்றிதழ்), பிளஸ்-2 பொதுத் தேர்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும். 
தேவைப்படுவோர் இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவருக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான உறுதிமொழி, இலங்கை அகதிகள் என்றால் அதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், விளையாட்டு வீரருக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
நகல் மட்டும் வைத்துக் கொள்ளப்படும்: இந்தச் சான்றிதழ்களைப் பொருத்தவரை அசல் மற்றும் நகல் இரண்டையும் மாணவர்கள் எடுத்துச் செல்லவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் நகல் சான்றிதழ்கள் மட்டும் உதவி மையத்தில் வைத்துக் கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் மாணவர்களிடமே திருப்பி அளிக்கப்பட்டு விடும். 
ஏற்கெனவே வேறு படிப்புகளில் சேர்ந்தவர்கள் என்ன செய்வது?: சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாகவே, வேறு படிப்புகளில் சேர்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் அசல் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கும் மாணவர்கள், கல்வி நிறுவனத்தின் முதல்வரிடமிருந்து அத்தாட்சி (போனஃபைடு') கடிதத்தையும், அந்தக் கல்வி நிறுவனத்தின் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தால் போதுமானது. அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. 
ஆன்-லைன் கலந்தாய்வு குறும் படம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது, இடங்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பன குறித்த குறும் படம் ஒன்று அனைத்து உதவி மையங்களிலும் போட்டுக் காண்பிக்கப்படும்.
அத்துடன், ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான முழு விவரங்கள் அடங்கிய சிறிய புத்தகம் ஒன்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தச் சிறிய புத்தகத்தை மாணவர்கள் தவறாமல் கேட்டுப் பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். 
உதவி மையங்களுக்கு செல்ல முடியாவிட்டால்... 
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு உதவி மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மாணவருக்குப் பதிலாக அவருடைய பெற்றோர் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் பெற்றோர், மாணவரின் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், மாணவரின் அசல், நகல் சான்றிதழ்களையும் உதவி மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய பெற்றோர் தங்களுடைய அசல் புகைப்பட அடையாள (ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை, கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை) இதில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிப்பது அவசியம்.
மாணவரோ அல்லது பெற்றோரோ குறிப்பிட்ட தேதியில் உதவி மையத்துக்குச் செல்ல முடியாதபோது, கடைசி நாளான ஜூன் 14-ஆம் தேதியன்று தொடர்புடைய கலந்தாய்வு உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
இந்த இரண்டாவது வாய்ப்பிலும் உதவி மையத்துக்குச் செல்ல முடியாத மாணவர்கள், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றார் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ்.

மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மேல்நிலைப்பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்துள்ளார்.


தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் பேரவையில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்க புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வித்திட்டத்தின்கீழ் புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் புதிய தொழில்நுட்பத்தினை பள்ளிக்கல்வித்துறை புகுத்தவுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் அட்டைகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படு. பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவினை மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விடும்படி தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

மாணவர் இல்லாததால் மூடப்பட்ட முதல் அரசு பள்ளி

மாணவர்கள் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பள்ளியாக அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மூடப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சி அல்லம்பட்டியில் 1998-ல் சுமார் 50 மாணவர்களோடு அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இரு வகுப்பறைகளைக் கொண்ட பள்ளிக் கட்டிடம், சமையல்கூடம், கழிப்பறைகள், குடிநீர் தொட்டி,விசாலமான மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் செயல்பட்ட இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணிபுரிந்தனர். 

இப்பள்ளியில் அல்லம்பட்டி, மனவயல், தாழிச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகவும், அவர் ஒழுங்கீனமாக செயல்பட்டதாகவும் ஊர் மக்களால் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கல்வித் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய 

நடவடிக்கை இல்லையாம்.இதனால் விரக்தி அடைந்த மக்கள், மாணவர்களை இப்பள்ளிக்கு அனுப்பாமல் அங்கிருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அறந்தாங்கி தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கநிலைக்கு சுருங்கியதால், ஓராசிரியர் பள்ளியானது.


  
அப்போது, இங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பணியாற்றியதாகக் கூறி, கடந்த ஆண்டு பயின்ற 2 மாணவர்களும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர். 

இதனால், இந்தக் கல்வி ஆண்டுஇப்பள்ளி திறக்கப்படவில்லை. இங்கு பணியாற்றிய ஆசிரியரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மூடப்பட்டுள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இளைப்பாறும் இடமாகவும், திறந்த வெளி மதுபானக் கூடமாகவும் பள்ளி வளாகம் தற்போது மாறியுள்ளது.

இதுகுறித்து அல்லம்பட்டியைச் சேர்ந்த அழகர், கூறியது: அல்லம்பட்டி, தாழிச்சேரி, மனவயல் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் இருந்து சுமார் 60 மாணவர்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் செல்கின்றனர்.

அல்லம்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு கடந்தசில ஆண்டுகளாக வந்த ஆசிரியர்கள் முறையாக பணியாற்றாததால் இப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் மறுத்துவிட்டனர். ஆசிரியர்களின் ஒத்துழைப்பின்மையால் இப்பள்ளியை மூடவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. கிராம வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்றார்.

முயற்சி பலனளிக்கவில்லைஅறந்தாங்கி கல்வித் துறை அலுவலர்கள்  கூறியபோது, “அல்லம்பட்டி கிராமத்தில் இருந்து பெரும்பாலான மாணவர்களை தனியார் பள்ளிக்கும், தாழிச்சேரியில் இருந்து பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் அனுப்புகின்றனர். 

EMIS 2018-2019 New Format (pdf)

FLASH NEWS:-தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதலில் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் என்பது நீக்கம் - இயக்குநரின் செயல்முறைகள்!!


தனியார் பள்ளிகளுக்கு 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' ?

தமிழக பள்ளி கல்வித்துறையில், 30 ஆண்டுகளுக்கு முன், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் துவங்கப்பட்டது. மாவட்ட வாரியாக, மெட்ரிக் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மெட்ரிக் பள்ளிகளை, மெட்ரிக் இயக்குனரகத்தில் இருந்து மாற்ற, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. 
இதற்காக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆளுடைய பிள்ளை தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இந்த குழு அறிக்கையில், அனைத்து வகை பள்ளிகளையும் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது. 
அதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கலைக்கப்பட்டு, 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' புதிதாக உருவாக்கப்பட உள்ளது. இதன் கீழ், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., என, அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளும், இணைக்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்ய வேண்டும்

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வருகிற மார்ச்-2019-ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள மற்றும் முதன்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வெழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.


மேலும் அனைத்து தனித்தேர்வர்களும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவுசெய்து கொண்டு, மாவட்டக்கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறை தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.

செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் பொதுத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதுதொடர்பான மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 30-ந்தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரயில் நிலையங்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.5 கேஷ் பாக் அளிக்கும் பேடிஎம்..!

பிளாஸ்ட் கழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்திய ரயில்வே நிர்வாகம் வதோதரா ரயில் நிலையத்தில் பேடிஎம் உடன் இணைந்து 5 ரூபாய் கேஷ்பாக் சலுகை திட்டத்தினை அறிவித்துள்ளது.


வதோதரா ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டிலை கிரஷ் செய்யும் இயந்திரத்தில் தண்ணீர் பாட்டில்களைக் கிரஷ் செய்யும் போது பேடிஎம் மொபைல் எண்ணைச் சமர்ப்பித்தால் இந்தக் கேஷ் பாக் சலுகை வழங்கப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் இன்று ரயில்வே அமைச்சகம் மற்றொரு பசுமை முயற்சியாகச் சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் வழங்குப்படும் உணவு பாக்கெட்களினை மக்கும் தன்மையுடன் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்தச் சேவையினை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மக்கும் பாக்கெட்களின் உணவினை விநியோகம் செய்யக் கூடுதலாக 1 முதல் 5 ரூபாய் செலவாகுவதாகவும் ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது..

24 மணி நேரம் போதவில்லை என புலம்ப வேண்டாம்.. பூமியில் ஒருநாள் 25 மணி நேரமாக அதிகரிக்க போகிறதாம்!

வருங்காலங்களில், நாள் ஒன்றிற்கான நேரம், 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 
அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் இதுபற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.


140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. ஆனால் வருடத்திற்கு 3.82 செ.மீ தூரத்திற்கு நிலவு விலகி சென்றபடியே உள்ளது.


விலகும் நிலவு
தற்போது அது முதலில் இருந்ததைவிட 44 ஆயிரம் கி.மீ தூரம் பூமியை விட்டு விலகி சென்று உள்ளது. எனவே இப்போது ஒரு நாள் நேரம் என்பது 24 மணி நேரமாக உள்ளது.


இதுவே, 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரம் 41 நிமிடங்களாக மட்டுமே இருந்தது.


25 மணி நேரங்கள்
நிலவு நகரும் அளவை கணக்கில் கொண்டு பார்த்தால், அடுத்த 200 மில்லியன் ஆண்டுகளில், பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரங்களாக இருக்கும். அப்போது மக்களின் கால நேரம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஒரு நாளைக்கு 24 மணி நேரமே போதவில்லை என்று புலம்பும் பலர் நம்மில் உண்டு.

அவர்களின் வருங்கால சந்ததிகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 25 மணி நேரத்தை என்ஜாய் செய்யலாம்.

இதை நினைத்து அவர்கள் மனதை தேற்றிக்கொள்ளவும்.
வருங்கால சந்ததிகள்
25 மணிநேரமாக உயர்வது என்னவோ மகிழ்ச்சியான செய்திதான்.

ஆனால், அதுவரை உலகை நாம் பாதுகாப்பாக வைத்திருப்போமா, சுய நலத்திற்காக கூறு போட்டிருப்போமா, என்பதே நமது முன்னால் இருக்கும் கேள்வி

82 கல்லூரிகளுக்கு தடை! போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால்,

நாடு முழுவதும் உள்ள 70 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் தரம், இட வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தது. இதில் 70 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் என 82 மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி இல்லாமலும், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமலும் இருந்தது தெரியவந்தது. இதனால் இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தடை உத்தரவைப் பிறப்பித்ததாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்த காரணத்தினால், நாட்டில் மொத்தமுள்ள 64 ஆயிரம் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பத்தாயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது.
இதேபோன்று புதிய மருத்துவக் கல்லூரிக்காக விண்ணப்பிக்கப்பட்ட 37 தனியார் கல்லூரிகளும், 31 அரசுக் கல்லூரிகளும் என மொத்தம் 68 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும். மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்திலுள்ள  32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் இன்று பேசிய அவர்

 இன்னும் 1 மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள  32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என்றார். பேரவையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நூலகங்களை பராமரிக்க தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் நூலகங்கள் அமைக்க நூல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். எத்தனை நூல்கள் வழங்கினாலும் அதனை பெற்று கொண்டு, நூலகங்களில் வைப்பதற்கென தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணம் : நிகர்நிலை பல்கலை.,-களுக்கு உத்தரவு

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகள், மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜவஹர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வீதம் ஐந்தரை ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடிக்க 71.5 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு மேற்கண்ட கல்விக்கட்டணம் தவிர MBBS சீட் பெற நன்கொடை தனியே வசூலிக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று. கல்லூரியின் தரத்தை பொறுத்து ரூ.80 லட்சம் வரை கட்டாய நன்கொடை வசூல் வேட்டை நடைபெறுவது நிதர்சனம்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ( 12.06.2018 ) - காலை 11 மணிக்கு எடுக்க வேண்டிய உறுதிமொழி :

ஒகி புயலின் போது உயிரிழந்த, காணாமல் போனவர்களின் குடும்பத்தை சேர்ந்த 188 பேருக்கு அரசு பணி - அரசாணை வெளியீடு , G.O(Ms)No:111 - Dated :31.05.2018