யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்,,,,,,,,உடல்நலம் மருத்துவம்




ரத்த சோகை நோய் இந்தியர்களிடையே பரவலாக காணப்படுகிறது. ரத்த சோகை நோய் என்றால் என்ன? உடலின் ஆரோக்கியத்துக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். சிவப்பு அணுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்சிஜனை கடத்துகிறது.

ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அனிமியா ஏற்படும். இதைத்தான் ரத்த சோகை நோய் என்கிறோம். ரத்த சோகை நோய் பெரும்பாலும் பெண்களை தாக்கும். குறிப்பாக கிராமப்புற பெண்கள் ரத்த சோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கிராமங்களில் விவசாய வேலை செய்யும் பெண்கள் செருப்பு அணியாமல் நடக்கும் போது அதனால் வயிற்றில் புழு உருவாகி அது ரத்தத்தை உறிஞ்சிவிடுவதால் ரத்த சோகை ஏற்படுகிறது.

காலுக்கும் வயிற்றுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்க தோன்றலாம். கால் வழியாகத்தான் குடல் பூச்சிகள் உருவாகின்றன. எனவே கால்களை சுத்தமாக வைத்து பராமரிப்பது அவசியம். அடுத்ததாக மாதவிடாய் ஒழுங்காக இல்லாத பெண்களுக்கும்; மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்தம் வெளியேறும் பெண்களுக்கும் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது.

ஆண்களில் ரத்தசோகை நோயால் குறைந்த அளவிலே பாதிக்கப்படுகிறார்கள். ரத்த பரிசோதனை செய்யாமல் அடிக்கடி ரத்ததானம் செய்பவர்களுக்கும் ரத்த சோகை வர வாய்ப்பு உள்ளது. பன்றிக்கறி சாப்பிடுபவர்களுக்கும் ரத்த சோகை வரும்.

ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு சோர்வு, கண்ணில் கருவளையம், முடி உதிர்தல், சக்தி இல்லாமல் சோர்வடைதல், எதிலும் சரிவர கவனம் செலுத்த முடியாது, சோம்பல் ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய், நீண்ட நேரம் வேலை செய்ய முடியாமல் சோர்ந்து விடுதல்,  தூக்கம் இன்மை, தலைவலி, தலைசுற்றல், வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை ரத்தப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை நோய் தாக்கி இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ரத்த சோகை நோய் ஏன் வருகிறது என்று பார்த்தோமேயானால் இரும்புச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடாததே காரணம்.

கிராமப் பகுதியில் இருந்து இப்போது நகர்ப்பகுதி பெண்கள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. காய்கறிகள், கீரைகளை அதிகம் சாப்பிடாமல் பாட்டில், டின்களில், பைகளில் அடைத்த உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள். பெண்கள் 3 வேளையும் காய்கறியுடன் உணவு சாப்பிடுவது அவசியம்.

இரும்பு சத்து நிறைந்த உணவு மூலம் ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம். ரத்தசோகை உள்ளவர்கள் காய்கறிகள், கீரைவகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைவகைகளில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.

கீரை வகைகளை எடுத்துக் கொண்டால் மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை, பசலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஆரைக்கீரை, புதினா, முலைக் கீரை, அகத்திக் கீரை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

பழங்களில் ஆப்பிள், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா, நெல்லிக்கனி, வாழைப்பழம், பேரிக்காய், மாதுளம் பழம் போன்ற வற்றில் இரும்புச் சத்துக்கள் அதிகம் அடங்கி யுள்ளன. உணவு சமைக்க கைக்குத்தல் அரிசியை பயன்படுத்த வேண்டும்.

கிராமங்களில் முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசியைத்தான் பயன்படுத்தி வந்தனர். இப்போது  மாறிவிட்டது. அவர்கள் கூட ரைஸ்மில்லில் அரைத்த அரிசியைத்தான் வேக வைத்து சாப்பிடுகிறார்கள். கைக்குத்தல் அரிசியில் பி.காம்ப்ளக்ஸ் சத்து அதிகம் உள்ளது. அவல் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை கோழிக்கறி, மீன் சாப்பிட வேண்டும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு எளிய உடற்பயிற்சி அவசியம்.

இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு பழக்கங்கள் மாற்றத்தால் இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்கள் சீக்கிரமே பருவம் அடைகிறார்கள். சிறு வயதிலேயே அவர்களுக்கு மாதா மாதம் ரத்தம் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ஹீமோ குளோபின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பெற்றோர் தெரிந்து கொண்டு அனிமியா வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு மாதவிடாய் சரியாக வரவில்லை என்றாலும் ரத்த சோகையாக இருக்கலாம். அதையும் சேர்த்து கவனிக்க வேண்டும். ரத்த சோகை நோயை உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரி செய்ய 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும். எனவே சாப்பிட்ட முதல் நாளே சரியாக வில்லையே என்று எதிர்பார்க்கக்கூடாது.

ரத்த சோகை அதிகம் இருப்பவர்கள் மருத்து வரை அணுகி அயர்ன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் சத்து மாத்திரைகள் என்று சொல்வார்கள். இது சத்து மாத்திரை தானே என்று தொடர்ந்து அயர்ன் மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்டு 3 மாதம் முதல் 6 மாதத்தில் நிறுத்தி விடலாமா என்று கேட்க வேண்டும்.

மீறி நாமாகவே தொடர்ந்து அயர்ன் மாத்திரைகளை சாப்பிட்டால் கல்லீரல், மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும். அவற்றில் வீக்கம் ஏற்பட்டு வயிற்று வலி உண்டாகும். வலது பக்க வயிற்றிலும், இடது பக்க வயிற்றிலும் வலி ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டால் உடலின் செயல்பாடு குறைந்து விடும். உணவு ஜீரணம் ஆகாது, வயிற்றுப்போக்கு ஏற்படும், தோல் வறட்சியாக காணப்படும்.

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போலிக் ஆசிட், அயர்ன் மாத்திரைகளுடன் சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும். ஒரு நாள் கூட விடாமல் 6 மாதம் வரை அவர்கள் சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிகள் கீரை சூப், காய்கறி சூப், ராகி, ராகி கஞ்சி, முருங்கை கீரை கலந்த ராகி தோசை, கம்பு, கோதுமை, கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, புதினா, பேரீட்சம் பழம், மாதுளை, ஆப்பிள் பழங்கள் சாப்பிட வேண்டும்.

சாதம், சப்பாத்தி, பரோட்டா, கீரை ரைஸ், அரைக்கீரை, பழச்சாறு, மில்க்ஷேக், இஞ்சி மிளகு ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், கருவேப்பிலை ரசம் செய்து சாப்பிடலாம். இவை ரத்த சோகை வராமல் 100 சதவீதம் தடுக்கும். ரத்த சோகை இருந்தாலும் 100 சதவீதம் நிவர்த்தி ஆகும். காய்கறிகள், கீரைகள் சேர்ப்பதால் ரத்தம் ஊறும். சுறுசுறுப்பு உண்டாகும்.

குழந்தையின் வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் உதவியாக இருக்கும். ரத்தம் சோகை நோயை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் ரத்த செலுத்தும் நிலை ஏற்படும். அந்த நிலை ஏற்பட விடவேண்டாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை வராமல் தடுத்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கான சித்த வைத்திய உணவு---உடல்நலம் மருத்துவம்




பெண்கள் பூப்பு எய்திய பின் அவர்களுக்கு ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது    தமிழகத்தில் பன்னெடுங்காலமாகப் வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.

பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்.

கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது

பூப்பு காலச் சித்த மருத்துவ உணவு முறை:

தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது.

இதில் எள் -உளுந்து - வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது

1.  மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை

தேவைப்படும் பொருட்கள்:

வெள்ளை எள் ஒரு பங்கு,
சர்க்கரை முக்கால் பங்கு,
ஏலக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுத்து, பின் அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக் கொள்ளவும்.

மருத்துவப் பயன்:

பெண்களுக்குப் பூப்பு நன்றாக வெளிப்பட உதவும்.

2.  மாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி

தேவைப்படும் பொருட்கள்

 சம்பா அரிசி- ஒரு பங்கு, முழு உளுந்து கால் பங்கு, ஏலக்காய் பொடி சிறிதளவு, கரும்பு வெல்லம் தேவையான அளவு

செய்முறை

சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.

மருத்துவப் பயன்:

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.

3. மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி

தேவைப்படும் பொருட்கள்

:வெந்தயம் -ஒரு பங்கு, சம்பா அரிசி நான்கு பங்கு

செய்முறை

சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

மருத்துவப் பயன்

இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாகத் திகழும்.

பனையின் சிறப்பு பற்றிய ஒரு தொடர் பகிர்வு."---உடல்நலம் மருத்துவம்




 1.எவ்வாறு இப்படி பனை மட்டுமே சாய்ந்து விழாமல் உறுதியாய் நிமிர்ந்து நிக்கின்றது???

பனை தனது வேரை அதன் உயரத்தை விட இரண்டு மடங்கு நேராக நிலத்தில் ஊடுருவி நிற்கும்.
(மரம் 50 அடி உயரம் இருப்பின் அதன் வேர் 100 அடி!!!)

பனை புல் போன்று வளைத்து கொடுத்து நிமிர்ந்து விடும்!!!
வேரின் அடி முதல் மரத்தின் உச்சி வரை வளையும் தண்மையுடைய உறுதியான  தண்டுப் பகுதி இருப்பதால் எந்த புயலும் பனையை வேரோடு சாய்ப்பது சாத்தியம் அறிது!!!

 2.எங்கனம் நிலத்தடி நீரை காக்கிறது???

பனையின் வேர் பகுதி மூன்று அடுக்குகளைக் கொண்டது.

முதல் அடுக்கு மழை நீரை உறிஞ்சும் சிறு சிறு துளைகளைக் கொண்டு மழை நீரை உறிஞ்சி பஞ்சு போன்ற இரண்டாவது அடுக்கில் சேமித்து பாதுகாக்கும்!!!
மூன்றாம் அடுக்கு நீரையும் சத்துக்களையும் மரம் முழுவதும் அனுப்பும் அடுக்கு.

பனை சிறிய மழையில் கிடைக்கும் நீரையும் தனது உச்சி மட்டைகளின் மூலம் வீண் செய்யாமல் மரத்தின் வழியே தனது வேரில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது!!!
( பனை ஏறும் மீனைப் பார்த்து ரசித்தவர்களுக்கு இந்த இரகசியம் புரியும்!.)

ஒரு பனை குறைந்த பட்சம்10000 லிட்டர் நீரை சேமித்து வைக்கும் ஆற்றல் படைத்தது!!!

இதன் மகத்துவம் புரிந்த நம் பாட்டன், பூட்டன்கள் பூமியில் வரப்புயர்த்தி அதில் வரிசையாக பனை நட்டனர்.
உயிர் காக்கும்
" உயிர் வேலி" அமைத்தனர்.

மீண்டும் மீண்டும் நினைவில் வைப்போம் "உயிர் வேலி".

 வரப்புயர நீர் உயரும்
''வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோனுயர்வான்''
என்று -அழகாய் அர்த்தத்துடன்- பாடினால் நம் ஔவைக் கிளவி!!!

பனைகள் நிமிர்ந்த பூமியில் நிலத்தடி நீர் வற்றாது!!!

 ஆறு, குளம், குட்டை,ஏரி,வரப்பு, வாய்க்கால்,கிணறு மற்றும் பல பகுதிகளில் நாம் பார்த்த நம் பாட்டன் வைத்த பனைகள் எங்கே???

அடுத்த பதிவில்...

பனை வான் மழையை ஈர்க்கும் திறன் வாய்தது... எப்படி???

ஏன் பனை பல்லுயிர் பெறுக்கும் கற்ப்பக விருட்சம் ???...

பதில் அடுத்த பதிவில்.....

பதிலளித்து,
இந்த தொடரில் நீங்களும் பங்கு பெறுங்கள்.

பனையோடு பயணம் தொடரட்டும்.

பன்னிரு திரளை உப்பு மருந்துகள்----உடல்நலம் மருத்துவம்


பன்னிரு திரளை உப்பு மருந்துகள்
 The Twelve Tissue Remedies

முன்னுரை :

நோயின் சுவடு ஏதும் இல்லாமல் முற்றிலும் ஒழிக்கின்ற ஓமியோபதி மருத்துவ முறைக்கும், ஏனைய பிற மருத்துவ முறைகளுக்கும் இடைப்பட்டதாகவும் குறிக்கத்தக்க குறையேதும் இல்லாததாகவும் அமைந்திருப்பது திரளை உப்பு மருத்துவம் ஆகும்.
ஓமியோபதி மருத்துவர்களுக்குத் துணை மருத்துவமுறையாக உள்ள இம் மருத்துவம், அந் நிலையிலேயே நில்லாமல் வீட்டு மருத்துவ முறையாகவும் பயன்படுதல் வேண்டும்.

 குறிப்புகள் :

மருத்துவ மேதை சுசுலர் ஓமியோபதி மருத்துவ முறை கண்டுபிடிப்பாளர் மாமேதை சாமுவேல் ஆனிமான் தோன்றிய அதே செருமன் நாட்டில் ஒல்டன்பர்க்கு என்னுமிடத்தில் தோன்றியவர் மருத்துவர் மெட்.டபிள்யூ. எச்.சுசுலர் என்பவர் ஆவர்.
அவர் மரபுசார் மருத்துவ கல்விக்குப் பின்னர் ஓமியோபதி மருத்துவ முறைக்கு மாறியவர். இவரே பன்னிரு திரளை உப்பு மருத்துவ முறையை உருவாக்கித் தந்தவர். இதனை அவர் உயிர் வேதியியல் மருத்துவமுறை எனக் குறித்தார்.

 உயிரணுக்களும் குருதியும்

நமது உடம்பில் உள்ள எல்லா உயிரணுக்களுக்கும் அவற்றிற்கேற்ற ஊட்டத்தை எடுத்துச் சென்று வழங்குவது குருதி.
குருதியை ஆராய்ந்து அதன் உள்ளடக்கப் பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. குருதியில் உள்ளவை உறுப்புச் சார்பின் (Organic), உறுப்புச் சார்பற்றன (Inorganic) என இரண்டாகப் பகுக்கப் பெற்றன. அவை

 உறுப்புச் சார்பானவை 
1. கொழுப்பு
2. சர்க்கரை
3. வெண்புரதம்

 உறுப்புச் சார்பற்றவை
1. நீர்
2. சோடியம் குளோரைடு
3. கால்சியம் புளோரைடு
4. சிலிசிக் ஆசிடு
5. அயம்
6. கால்சியம்
7. மக்னீசியம்
8. சோடியம்
9. பொட்டாசியம

 உறுப்புச் சார்பற்றவற்றுள் நீரைத் தவிர எஞ்சியவை அவற்றுள் கூட்டுப் பொருள்களுடன் பின் வருமாறு பன்னிரெண்டாக உள்ளன.

1. கல்காரியா ஃபுளோரிகம்
2. கல்காரியா பாசுபாரிகம்
3. கல்காரியா சல்பூரிகம்
4. பெரம் பாசுபாரிகம்
5. காலி மூரியாடிகம்
6. காலி பாசுபாரிகம்
7. காலி சல்பூரிகம்
8. மக்னிசீயம் பாசுபாரிகம்
9. நேட்ரம் மூரியாடிகம்
10. நேட்ரம் பாசுபாரிகம்
11. நேட்ரம் சல்பூரிகம்
12. சைலீசியா

இக் குருதிப் பொருள்களில் ஐந்து விழுக்காட்டளவில் உள்ள உறுப்புச் சார்பிலாப் பொருள்கள் இன்றேல் ஏனையவை இயக்கமற்ற தேக்கநிலையை அடைந்தும் கட்டுக் குலைந்தும் அழிந்துபடும். அவ்வாறு அவை கெடாமல் கட்டிக் காத்தும் அவற்றை இயக்கியும் காப்பவை ஐந்து விழுக்காடு உறுப்புச் சார்பிலாப் பொருள்களேயாதலால் அவற்றின் சீர்மையும் சமநிலையும் பாதிக்கப்படின் நோய்த் துன்பங்கள் உண்டாகும் என்பதும் வெளிப்படையாகிறது.

 திரளை உப்பு மருந்துகள்

இப் பன்னிரெண்டு மருந்துகளும் திரளை உப்பு மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

இத்திரளை உப்பு மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஓமியோ, திரளை உப்பு மருந்துகளைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தினர்.

 1. கல்காரியா ஃபுளோரிகம்  நெகிழ்வுத் திரளை அணுக்களுக்குரியது

 2. கல்காரியா பாசுபாரிகம்  எலும்பு அணுக்களுக்கு உரியது

 *3. கல்காரியா சல்பூரிகம்  சீழ்கட்டும் நிலைகளுக்கு பயன்படுகிறது

 *4. பெரம் பாசுபாரிகம்  குருதி அணுக்கள், தசை அணுக்கள் 
முதலானவற்றின் உட்பொருளாக காணப்படுகிறது

 5. காலி மூரியாடிகம்  நரம்பு அணுக்களில் காணப்படும் உறுப்புச் சார்பிலாப் பொருள் ஆகிய மெக்னீசியம் பாசுபாரிகம், பொட்டாசியம் பாசுபாரிகம், கால்சிய்ம் என்னும் இவை பொட்டாசியம் குளோரைடு
என்பதோடு சேர்ந்து தசையணுக்களில் உள்ளன.

 6. காலி பாசுபாரிகம்  மூளை, நரம்புகள், தசைகள், குருதி அணுக்கள், ஆகியவற்றில் உள்ளது. மூளை அசதி, மூளையில் அடிபடுவதால் உண்டாகும் பாதிப்புக்கு இது மருந்தாகக் கூடும்.

 7. காலி சல்ஃபூரிகம்  மேற் புறத் தோல், தோலின் அடுக்கு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குச் காலி சல்ஃபூரிகம் உரியதாகும்.

 8. மெக்னீசியம் பாசுபாரிகம்  இது தசை நரம்பு திரளைகளில் உள்ள கனிமப் பொருளாகும். இஃது எலும்புகளில் உள்ளது.

 *9. நேட்ரம் மூரியாடிகம்  உணவு உப்பு உடம்பின் நீரியல் பகுதி, திண்மைப் பகுதி ஆகிய எல்லாவற்றிலும் உள்ளது.

 10. நேட்ரம் பாசுபாரிகம்  மிகையான பால் அமிலத்தால் உண்டாகும் நோய்களுக்கு இவை தேவைப்படுகின்றன.

 11. நேட்ரம் சல்பூரிகம்   கிளாபர் உப்பு என்னும் சோடியம் சல்ஃபேட்டும், உணவு உப்பு ஆகிய சோடியம் குளோரைடும் எதிர் நிலையில்  செயலாற்றுகின்றன. உயிர் அணுக்களில் சேர்ந்த நீரைச் சோடியம் சல்ஃபேடு வெளியேற்றுகின்றது.

 12. சைலீசியா  இணைப்புத் திரளைகளிலும், தோலிலும்,
முடியிலும் நகங்களிலும் சிலிகா அமைந்துள்ளது

நோய் அறிகுறிகளை நன்கு அறிந்த பின்னும் அத்தகைய அறிகுறிகளைக் கொண்ட பல மருந்துகளுள்ளும் உரிய ஒரு மருந்தை வேறுபடுத்தித் தேர்ந்து கொள்வதாலேயே அந் நோயை மிக விரைந்து போக்க முடிகிறது.