யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கான சித்த வைத்திய உணவு---உடல்நலம் மருத்துவம்




பெண்கள் பூப்பு எய்திய பின் அவர்களுக்கு ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது    தமிழகத்தில் பன்னெடுங்காலமாகப் வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.

பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்.

கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது

பூப்பு காலச் சித்த மருத்துவ உணவு முறை:

தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது.

இதில் எள் -உளுந்து - வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது

1.  மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை

தேவைப்படும் பொருட்கள்:

வெள்ளை எள் ஒரு பங்கு,
சர்க்கரை முக்கால் பங்கு,
ஏலக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுத்து, பின் அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக் கொள்ளவும்.

மருத்துவப் பயன்:

பெண்களுக்குப் பூப்பு நன்றாக வெளிப்பட உதவும்.

2.  மாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி

தேவைப்படும் பொருட்கள்

 சம்பா அரிசி- ஒரு பங்கு, முழு உளுந்து கால் பங்கு, ஏலக்காய் பொடி சிறிதளவு, கரும்பு வெல்லம் தேவையான அளவு

செய்முறை

சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.

மருத்துவப் பயன்:

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.

3. மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி

தேவைப்படும் பொருட்கள்

:வெந்தயம் -ஒரு பங்கு, சம்பா அரிசி நான்கு பங்கு

செய்முறை

சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

மருத்துவப் பயன்

இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாகத் திகழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக