யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

நீதிக்கதை :--சிந்தனை கதைகள்



முதல் முட்டாள்!


அரேபிய தேசத்திலிருந்து, குதிரை வணிகன் ஒருவன் ஆக்ராவுக்கு வந்திருந்தான். அரபிக் குதிரைகள் என்றால், அக்பர் சக்கரவர்த்திக்கு மிகவும் பிரியம். இதை அறிந்து, சிறந்த குதிரைகள் கொண்டு வந்துள்ளதாக கூறினான் வணிகன். மிக உற்சாகத்துடன், குதிரை லாயத்திற்கு சென்று பார்த்தார், அக்பர்.

எல்லா குதிரைகளையும் பிடித்து விட்டது; அனைத்தையும் விலை கொடுத்து வாங்கினார். மேலும், பல குதிரைகள் கொண்டு வர சொல்லி, முன் பணமாக, 1000 தங்க நாணயங்களை கொடுத்தனுப்பினார்.

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள்- 
''பீர்பால் எவ்வளவோ அறிவாளிகளை ஆதரித்து வருகிறோம். அப்படியிருந்தும் கூட, நாட்டில் முட்டாள்கள் அதிகம் இருப்பதாக அறிகிறேன். 

''நாளை, நாட்டில் உள்ள முட்டாள்களின் பட்டியல் தயாரித்து தர வேண்டும்; அவர்களை, எப்பாடுபட்டாவது திருத்தி விடலாம்...'' என்றார் அக்பர்.
அடுத்த நாள், முட்டாள்கள் பெயர் பட்டியலை, கொடுத்தார் பீர்பால். அதில், முதல் பெயராக, அக்பர் சக்கரவர்த்தி என்று இருந்தது.

இதை கண்ட அக்பர் கோபத்துடன், ''என்ன பீர்பல், என்னையும் ஒரு முட்டாளாக எழுதியிருக்கிறாயே... என்ன ஆணவம் உனக்கு... நான் என்ன முட்டாளா...'' என்று கேட்டார்.
''அரசே... தயவு செய்து சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும். தங்களை உண்மையிலேயே மிகச் சிறந்த அறிவாளியாகத்தான் மதித்து வந்தேன். சில நாட்களுக்கு முன், ஒரு காரியம் செய்தீர்கள். அதை பார்த்த பின் தான், உங்கள் பெயரையும், பட்டியலில் சேர்த்தேன்...'' 

''முட்டாள் தனமான செயலை செய்தேனா... வியப்பாக இருக்கிறதே... அது என்னவென்று சொல்...'' 
''அரசே... எங்கிருந்தோ ஒரு குதிரை வியாபாரி வந்தான். அவன் பெயர் தெரியாது; ஊர் தெரியாது; அவனை நம்பி, முன் பணமாக, 1000 தங்க நாணயங்களை, கொடுத்தனுப்பினீரே... இம்மாதிரி செயலை, மிகச் சாதாரண முட்டாள் கூட செய்ய மாட்டான்...'' 
''ஆமாம்... ஆமாம்... நீ சொல்வது உண்மை தான். அவன் பெயரையும், ஊரையும் அறியாமல், 1000 தங்க நாணயங்கள் கொடுத்தனுப்பியது, முட்டாள் தனமான செயல் தான். ஆனால், அவன் குதிரைகளை கொண்டு வந்து விட்டால்...'' 

''கொண்டு வந்தால் என்ன... உங்கள் பெயரை அடித்து விட்டு, அவன் பெயரை எழுதிவிட்டால் போகிறது...'' என்று சிரித்தபடியே பதிலளித்தார், பீர்பால்.
''ஆம்... இனி எவராயிருப்பினும், தீர விசாரிக்காமல், முன் பணம் தரமாட்டேன்...'' என்ற அக்பர், முட்டாள்கள் பற்றிய விவரங்களை அடியோடு மறந்து விட்டார்.


குட்டீஸ்... துணிச்சலுடன் உண்மையை, சொல்ல பழகுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக