யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/12/18

பி.லிட் முடித்து பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பின்னர் பயின்ற பி.எட் கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க இயலாது -அரசு முதன்மை செயலரின் கடிதம்!!!



நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு:

இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு
ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். ஒரு உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு.


அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும். மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை வளர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.

எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் குறித்து விளக்கி கூறலாம். அதில் வேளாண்மை திட்டங்களில் அரசின் உதவி பெறுதல், விவசாயிகள் ஓய்வு நேரத்தில் கோழிப்பண்ணைகள், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல் உள்ளிட்ட தொழில்கள் செய்வது குறித்து அறிவுரைகளை வழங்கலாம்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க உதவலாம். நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மாணவர்கள் போலீசாருக்கு உதவிட முன்வரவேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் உதவவேண்டும்.

ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும்.

10/12/18

அரையாண்டுத் தேர்வு 2018 - மாதிரி வினாத்தாள்கள்



✍🏼 1st Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 2nd Standard - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 3rd Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 4th Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 5th Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8



✍🏼 6th Standard  - Term 2 Model Questions
 https://goo.gl/nF9ccX

✍🏼 7th Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 8th Standard  - Term 2 Model Questions
https://goo.gl/s13it8

✍🏼 9th Standard - Term 2 Model Questions
https://goo.gl/nF9ccX



✍🏼 10th Standard - Half Yearly 2018 - Model Questions
https://goo.gl/gbFGRC

✍🏼 11th Standard - Half Yearly 2018 - Model Questions
https://goo.gl/tDKKuR

✍🏼 12th Standard - Half Yearly 2018 - Model Questions
https://goo.gl/47Yc3i

12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு - 2018 அரசு மாதிரி வினாத்தாள்கள் - Download Here



👉 https://goo.gl/p7xxfh

📮 Tamil  Model Question

📮 English Model Question

📮 Maths Model Question

📮 Physics Model Question

📮 Chemistry Model Question

📮 Biology  Model Question

📮 Botany Model Question

📮 Zoology Model Question

📮 Computer Applications

📮 Computer Science

📮 Commerce Model Question

📮 Accountancy Model Question

📮 Economics Model Question

📮 Business Maths Model Question


👉 https://goo.gl/p7xxfh

11 ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு - 2018 அரசு மாதிரி வினாத்தாள்கள் - Download Here



👉 https://goo.gl/mF21WS

🔰 Tamil  Model Question

🔰 English Model Question

🔰 Maths Model Question

🔰 Physics Model Question

🔰 Chemistry Model Question

🔰 Biology  Model Question

🔰 Botany Model Question

🔰 Zoology Model Question

🔰 Computer Applications

🔰 Computer Science

🔰 Commerce Model Question

🔰 Accountancy Model Question

🔰 Economics Model Question

🔰 Business Maths Model Question


👉 https://goo.gl/mF21WS

நீதிக்கதை :---சிந்தனை கதைகள்




சிறியதே அழகு

தாய் யானையுடன் நடை பயின்றுகொண்டிருந்த குட்டி யானை, அருகில் இருந்த புல்வெளியில் புள்ளிமான் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டது.

“அம்மா, அந்தப் புள்ளிமானோடு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமா?”

“மானோடு விளையாடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கவனமாக விளையாட வேண்டும். கல்லில் தடுக்கி கீழே விழுந்து, காயப்படக் கூடாது” என்று எச்சரித்தது தாய் யானை.

குட்டி யானையைக் கண்டதும் புள்ளிமான் மகிழ்ச்சியோடு ஓடிவந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.

“தினமும் வருகிறேன். நாம் இருவரும் ஜாலியாக விளையாடலாம்” என்றது குட்டி யானை.

“அது முடியாது. நீ பெரியவனாக வளர்ந்துவிட்டால், உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கும். அதனால் உங்க இனத்தினரோடு விளையாட ஆரம்பி” என்றது புள்ளிமான்.

“யார் சொன்னது? நான் பெரிசா எல்லாம் வளரவே மாட்டேன். எப்பவும் இப்படியே குட்டியா, அழகா இருப்பேன். இப்பவே அம்மா கிட்ட சொல்லி, என்னை வளர விடாமல் செய்துடறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது குட்டி யானை.

“அம்மா, மான் அழகா சின்னதா இருப்பதுபோல நானும் சின்னதாவே இருந்துடறேன். உங்களை மாதிரி பெரிய உடம்பு எனக்கு வேண்டாம்மா” என்று அப்பாவியாகச் சொன்னது குட்டி யானை.

”மான் சின்னதா இருக்கிறதும் நாம் பெருசா வளர்றதும் இயற்கை. இதை நீயோ நானோ நினைத்தால் மாற்ற முடியாது. பெரிய உடம்புதான் நம் இனத்துக்குப் பலம்” என்று தும்பிக்கையால் குட்டி யானையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னது அம்மா யானை.

குட்டி யானைக்கு இந்தப் பதிலில் திருப்தியில்லை. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வளர வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடச் சென்றுவிட்டது.

மறுநாள் புள்ளிமானைச் சந்தித்தது.

“என் அம்மாவிடம் நான் வளர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி கவலை இல்லை” என்று சிரித்தது குட்டி யானை.

“நீ ரொம்பச் சின்னவன். உனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது. வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.”

இரண்டும் சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று வந்தது. அதைக் கண்டதும் மானின் உடல் நடுங்கியது.

“குட்டி யானையே, வேகமாக ஓடிடு. சிறுத்தை வந்துகிட்டு இருக்கு. நானும் ஓடறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பாய்ந்து சென்றது புள்ளிமான்.

குட்டி யானைக்கு ஒன்றும் புரியவில்லை. சிறுத்தையின் கவனம் புள்ளிமானின் மீது இருந்ததால், குட்டி யானையை அது கண்டுகொள்ளவில்லை.


சிறுத்தையின் ஆக்ரோஷமான துரத்தலையும் புள்ளிமானின் உயிர் பயத்தையும் கண்ட குட்டி யானைக்கு முதல் முறையாகப் பயம் வந்தது.

தன்னை அறியாமல் அம்மா, அம்மா என்று கத்தியது குட்டி யானை. புள்ளிமானைப் பிடிக்க முடியாத சிறுத்தை மிகவும் ஏமாற்றமடைந்தது. குட்டி யானையைக் கண்டவுடன் மீண்டும் மகிழ்ச்சியடைந்தது. ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.

அதைப் பார்த்த குட்டி யானை, “அம்மா… அம்மா…” என்று அலறியது.

இலைகளைத் தின்றுகொண்டிருந்த அம்மா யானையின் காதில், குட்டியின் குரல் விழுந்தது. உடனே ஓடிவந்தது. அதற்குள் சிறுத்தை குட்டி யானையை நெருங்கிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையால் சிறுத்தையைப் பிடித்து, சுழற்றி வீசியது அம்மா யானை.

தூரத்தில் போய் விழுந்த சிறுத்தையால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வலியில் கதறியது.

“பொதுவா நம்மைக் கண்டால் சிறுத்தை பயப்படும். ஏனென்றால் நம் உருவம் அப்படி. தூக்கி வீசினால் ஒரு மாசத்துக்கு நடக்கக்கூட முடியாது. நீ சின்னவனாக இருப்பதால்தான் சிறுத்தை உன்னை நெருங்கியிருக்கிறது. நமது பலமே நமது பிரம்மாண்டமான உடல்தான். இப்பவாவது உனக்குப் புரியுதா?” என்று கேட்டது அம்மா யானை.


“நன்றாகப் புரிந்துவிட்டது அம்மா. புள்ளிமானுக்கு வேகமாக ஓடக் கூடிய கால்களும் நமக்கு பெரிய உருவமும் இயற்கை கொடுத்திருக்கு. நானும் நல்லா சாப்பிட்டு உங்களை மாதிரி பெரிய ஆளா வளரப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் வயிற்றுக்கு அடியில் போய் நின்றுகொண்டது குட்டி யானை.

கருணை காட்டாத கஜா புயல்: தமிழக கனவு ஆசிரியரின் பெருந்தன்மையான முடிவு

கனவு ஆசிரியர் என்ற விருதைப் பெற்றிருக்கும் தமிழக ஆசிரியர், மீண்டும் ஒரு முறை அந்த விருதுக்கு தான் தகுதியானவரே என்று நிரூபித்துள்ளார். ஒரே ஒருவருக்கு உதவி செய்து விடுவதால், உலகமே மாறிவிடாது. ஆனால், உதவி பெற்ற அந்த ஒருவரின் உலகமே மாறிவிடும். இதனை நிரூபித்திருக்கிறார் அந்த ஆசிரியர் மகன்களால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வந்த மூதாட்டி, கஜா புயலால் வீடிழந்து தெருவில் தவித்து வந்தார்.kaninikkalvi. அவரை தத்தெடுத்து, புது வாழ்வு அளித்துள்ளார் அந்த கனவு ஆசிரியர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யூனியனைச் சேர்ந்த மருதவனத்தில் ஒரு சிறிய குடிசையையே தனது உலகமாக நினைத்து வாழ்ந்து வந்தார் 75 வயது பாக்கியம்
5 மகன்கள் இருந்தும் அனைவரும் கைவிட்ட நிலையில், அக்கம் பக்கத்து வீட்டாரின் உதவியோடு தனியாக வசித்து வந்தார். டெல்டா பகுதிகளை கருணையே இல்லாமல் தாக்கிய கஜா புயல், மூதாட்டியைக் கைவிட்ட மகன்களை விட மிக மோசமாக நடந்து கொண்டது. ஆம் அவரது குடிசையைப் பந்தாடிச் சென்றது. ஏற்கனவே வாழ்விழந்து தற்போது வீடிழந்து, செய்வதறியாது இருந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் தேற்றி தங்களது பாதுகாப்பில் வைத்திருந்தனர் இந்த பகுதியில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்வதில் உறுதுணையாக இருந்த ஆசிரியர் பூபதி, இந்த மூதாட்டியைப் பற்றி அறிந்து ஒரு முடிவை எடுத்தார்.
அதுதான் அவரை தானே தத்தெடுத்து பராமரிப்பது என்று உடனடியாக பூபதி தனது மனைவி பிருந்தாவுடன் நேராக மூதாட்டி இருக்கும் பகுதிக்குச் சென்று அவருக்குத் தேவையான ஆடை, சாமான்கள் எல்லாம் கொடுத்து, அவரது வீட்டைக் கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்தார் தனது கையைப் பிடித்துக் கொண்ட பாக்கியம் அம்மாள், கண்களில் கண்ணீர் தளும்ப பேசினார். எனக்கு 5 பிள்ளைகள் இருந்தும் கைவிட்டுவிட்டன. யார் என்றே தெரியாத தங்கள் உதவி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அப்போது அவரிடம் நான் ஒரு உறுதி அளித்தேன்
இன்று மட்டுமல்ல, உங்களது இறுதிக் காலம் வரை உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தேன். இனி மாதந்தோறும் அவர் வாழ்வதற்குத் தேவையான பணத்தை அனுப்பிவிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் நான் எனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாக எண்ணுகிறேன் என்று பெருமிதத்தோடு கூறினார். இதை ஒரு சாதாரண செய்தியாக நினைக்காமல், நமக்கான ஒரு முன்னுதாரணமாக எண்ணினால் இதுபோன்று பலருக்கும் புதிய உலகம் பிறக்கும்

2 Days Training For BT Teachers - Proceedings & Training Schedule

ஆலோசனை *20 பல்கலைகளுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து *கல்வி தரத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

புதுடில்லி:மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், கல்வி நிறுவனங்கள், தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதில் ஆரோக்கிய மான போட்டியை உருவாக்கும் வகையிலும், சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 ஆலோசனை! ,கல்வி தரத்தை, மேம்படுத்த, மத்திய அரசு, திட்டம்

நாடு முழுவதும் செயல்படும், அரசு, தனியார் பல்கலைகள், மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்கின்றன. பல்கலைகள் நேரடியாகவும், அதன் உறுப்பு கல்லுாரிகள் மூலமாகவும், பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், கல்வித்துறையில் சிறந்து செயல்படுவதோடு, மாணவர்களுக்கு தேவை யான உள் கட்டமைப்பு, ஆராய்ச்சி துறைக்கு தேவையான அம்சங்களை ஒருங்கே பெற்ற பல்கலைகளை தேர்வு செய்து, அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்பு குழுஅந்த வகையில், கல்வித்துறையை சேர்ந்த சிறந்த நிபுணர்களை நியமித்து, சிறப்பு குழு அமைத்து, அவர்கள் மூலம், பல்கலைகளை மத்திய அரசு தேர்வு செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக, 

மும்பை, டில்லியில் செயல்படும், ஐ.ஐ.டி.,க்கள் மற் றும் பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் மையம் ஆகிய அரசு நிறு வனங் களுக்கு, சமீபத்தில் இந்த அந்தஸ்து வழங்க பட்டது.அத்துடன், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மணிப்பால் பல்கலை மற்றும் விரைவில் துவங்கப் பட உள்ளரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பல்கலை ஆகியவற்றிற்கும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில், உள் கட்டமைப்பு, ஆய்வு பணிக்கு தேவையான அம்சங்கள் மற்றும் மாணவர் களின் திறனை மேம்படுத்தும் அம்சங்கள் இருப்ப தால், இந்த அந்தஸ்து வழங்கப் பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடவடிக்கைகள்

இந்நிலையில், நாட்டில் செயல்படும், 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும், 10 தனியார் கல்வி நிறுவனங் களுக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிபுணர் குழு, தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பட்டியல் வெளியானதும், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழுகூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். அதன் பின், அதிகார பூர்வ மாக, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:சிறப்பு அந்தஸ்து கோரி, இதுவரை, 114 கல்வி நிறுவனங் கள் விண்ணப்பித்துள்ளன.

அவற்றில், பல்வேறு, இந்திய தொழில்நுட்ப

கல்வி நிறுவனம் எனப்படும், ஐ.ஐ.டி.,க்கள், என்.ஐ.டி.,எனப்படும், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங் களும் இடம் பெற்றுள்ளன.

இவற்றில், தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அதிலும், முன்னிலை யில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

யாருக்கு வாய்ப்பு?

ஐ.ஐ.டி., சென்னை, டில்லி பல்கலை, ஜாதவ்பூர் பல்கலை, அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., ேகாரக்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு, விரைவில் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்கும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சி.பி.எஸ்.இ., தேர்வு மாணவர்கள் தவிப்பு

பொதுத் தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படாததால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்; எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என, கல்வி ஆண்டு துவங்கும் போதே, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர்கள் திட்டமிட்டு படிக்க, வசதியாக உள்ளது. ஆனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பொது தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை.டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி, முடிவு களை அறிவிக்க, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தொழிற்கல்வி மாணவர்களுக்கு பிப்ரவரியிலும், மற்ற மாணவர்களுக்கு மார்ச்சிலும், தேர்வுகள் துவங்கும் என, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே அறிவித்தது.ஆனால், தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு, எப்போது தேர்வுகள் துவங்கும் என்பது தெரியாமல், மாணவர்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தேர்வுகள் துவங்கும் தேதியை, விரைந்து அறிவித்தால், திட்டமிட்டு படிக்க வசதியாக இருக்கும் என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

JACTTO-GEOவிடம் ஆசிரியர் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும்❗ சித்திக்-ஸ்ரீதர் குழுக்களும்‼*

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய குறைகள் நீண்டகாலக் கோரிக்கைகளாக உருப்பெற்று அதைத் தீர்க்கக் கோரும் களப் போராட்டங்கள் தீவிரமடையும் சூழலிலும் அதை நேரடியாகக் களையாது கோரிக்கை மீதான *உரிமை வேட்கையைத் தணிக்கும் விதமாகவே குறைதீர் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழகம் கண்ட வரலாறு.*

இக்குழுக்கள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்வையில் அரசின் தீரமிகு செயல்பாடாகவும், வழக்காடு மன்றப் பார்வையில் தீர்ப்பிற்கான செயல்பாடாகவும் அமைந்துள்ளதே அன்றி *அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கோரிக்கை களையும் தீர்விற்கான செயல்பாடாக அமைந்ததே இல்லை.*
அதற்கு 7-வது தமிழக ஊதியமாற்றக் குழுவிற்குப் பின் (நமது பார்வையில் 6th Pay Commission) அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவே சாட்சி. எனவே தான் 8-வது தமிழக ஊதியமாற்றக் குழுவிற்குப் பின்பும் கோரிக்கைகள் களையப்படாது போராட்டங்கள் தொடர்கின்றன.
தற்போதும் ஜாக்டோ-ஜியோ மீண்டுமொரு வீரியமிகு போராட்ட முகட்டில் நிற்கையில், அதன் கடந்த கால களப்போராட்டங்களில் ஒரு பொருட்டாகக் கண்டு கொள்ளப்படாத CPS நீக்க வல்லுந‌ர் குழுவும், அரசு ஊழியர் ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன.
உண்மையில் *JACTTO-GEO போராட்டங்கள் எந்நிலையிலும் அரசு அமைக்கும் குழுக்களைக் காரணம் காட்டி நகர்த்தப்படவோ - நிறுத்தப்படவோ இல்லை* என்பது எனது அனுபவத் தெளிவு.
நான் பெற்ற அனுபவத்தைப் பெற்றிருப்பினும் அதை மறந்துவிட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இதன்வழி அதை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், தற்போது குழுவைக் காட்டி ஏமாற்றும் வித்தைக்குள்ளாகச் சிலர் சிக்குண்டுள்ளனர்.
தற்போதும் ஓய்வூதிய வல்லுந‌ர் குழு & ஊதிய முரண்தீர் ஒரு நபர் குழு இரண்டையும் கவனத்தில் ஏற்றி நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கண்கள் பூத்துப்போய்க்கிடக்கின்றன.
இவ்விரண்டுமே JACTTO-GEOவின் கோரிக்கைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை என்பதை முன்பே உணர்ந்ததாலேயே குழுக்களின் முடிவிற்குக் காத்திருக்காது களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது JACTTO-GEO.
JACTTO-GEO-வின் போக்கினை உணர்ந்தோர் அனைவரும் வேண்டுவது, *10.12.2018-ற்குப் பின் காலம் தாழ்த்தாது 11.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த களத்தில் இறங்க வேண்டும்* என்பதே.
ஏனெனில் வழக்காடு மன்ற அனுபவங்களும், அரசின் சாக்குப்போக்கான உறுதியளிப்புகளும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது, *"காத்திருப்புகள் அல்ல களப்போராட்டமே தீர்வைத் தரும்!"* என்பதைத்தான்.
_கற்று மறந்தோரின் நினைவூட்டலுக்காக குழுக்கள் அமைக்கப்பட்ட முறைமையும் ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நடைமுறையையும் பறவைப் பார்வையாக இங்கே பகிர்ந்துள்ளேன்._
*🔛 10.02.2016*
பல கட்டப் களப் போராட்டங்களைக் கடந்து *தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் CPS நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்* இறங்கியது.
*🔛 11.02.2016*
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற *அமைச்சர் குழு & ஜாக்டோ கூட்டமைப்பிற்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.* எனினும், முன்னரே தீர்மானித்திருந்த போராட்ட அறிவிப்பை ஜாக்டோ கூட்டமைப்பு அறிவிக்கவில்லை.
*🔛 12.02.2016*
எனவே, *ஓய்வூதியக் கோரிக்கையோடே இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய கோரிக்கையையும் வலியுறுத்தி* திருச்சி மாநிலச் செயற்குழு முடிவின்படி *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பு சங்கங்களும் வேலைநிறுத்தத்தில்* உடன் இணைந்தன. *19.02.2016-ல் சட்டப்பேரவையில் முதல்வர், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதிய (ரூ.1,500) உயர்வு, சமையல் உதவியாளர் பணப்பயன் ரூ.25,000 உயர்வு, குழுக் காப்பீட்டு தொகை 3 லட்ச ரூபாய் உயர்வு, அரசு ஊழியர் நிர்வாக தீர்ப்பாயம்* உள்ளிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையோடே போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னரே *CPS-ல் இறந்த பணியாளருக்கு பங்களிப்பு தொகை வழங்க ஆணை* வெளியிடப்பட்டது.
*🔛 19.02.2016*
பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, *பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான* சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க *வல்லுந‌ர் குழு* அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.
*🔛 26.02.2016*
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய *G.O.Ms.No.65, Finance (PGC) Department, dated 26.02.2016-ன்* படி *திருமதி.சாந்தசீலா நாயர் இ.ஆ.ப* தலைமையில் வல்லுந‌ர் குழு அமைக்கப்பட்டது.
_(அதன்பின்னர் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டிற்கும் மேலாகக் காலநீட்டிப்பு செய்யப்பட்ட வல்லுந‌ர் குழு திரு.ஸ்ரீதர் தலைமையில் தற்போது அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.)_
*🔛 07.09.2017*
பலகட்ட தனிச்சங்கப் போராட்டங்களையும் பிரிவினைகளையும் கடந்து உருப்பெற்ற *JACTTO-GEO கூட்டமைப்பு செப்.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்* இறங்கியது.
*🔛 15.09.2017*
அரசின் நெருக்கடிகள், நீதிமன்றத் தடைகள், அனைத்தையும் கடந்து தீரமுடன் 8 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் *சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை JACTTO-GEOவிற்கு அளித்த உத்தரவாதத்தின் படி 15.09.2017 பிற்பகல் 2 மணிக்கு பணிக்குத் திரும்பினர்* ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்.
*🔛 21.09.2017*
JACTTO-GEO-வின் கோரிக்கைகள் மீதான நியாயத்தை உணர்ந்த நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால், *தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கை 30.11.2017-க்குள் பெறப்படும்* என்று உறுதியளித்தார்.
மேலும், 30.09.2017-ற்குள் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அரசிற்கு உத்தரவிட்டதோடு, *13.10.2017-ல் புதிய ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் 23.10.2017-ல் இடைக்கால நிவாரணம் குறித்து அறிவிக்க வேண்டும். வேலைநிறுத்தம் தொடர்பாக எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது. வேலைநிறுத்த காலத்திற்கு ஊதியப் பிடித்தம் செய்யக் கூடாது* என நீதிமன்றம் உத்தரவிட்டது.
*🔛 11.10.2017*
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகள் *G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, Dated: 11.10.2017.-ன்* படி வெளியிடப்பட்டது.
*🔛 08.12.2017*
ஊதிய முரண்பாடுகளோடே நடைமுறைக்கு வந்த ஊதியக்குழு அரசாணை, CPS நீக்கக் கோரிக்கை பரிசீலிக்கப்படாமை & ஜாக்டோ-ஜியோ மீதான வழக்கு விசாரணை டிசம்பர் 20-க்கு ஒத்திவைப்பு உள்ளிட்ட சூழலில் 08.12.2017 மதுரையில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று அடுத்த கட்ட போராட்ட அறிவிப்புகளோடே, சனவரி 4-வது வாரத்தில் இருந்து, *ஜாக்டோ-ஜியோவின் அனைத்து உறுப்பு சங்கங்களும் மாவட்டம் வாரியாக சுழற்சி முறையில், சென்னையில் காலவரையற்ற தொடர் மறியலில்* ஈடுபடுதல் எனவும் அறிவித்தது.
*🔛 15.12.2017*
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களை நேரில் சந்திப்பதாக இருந்த நிலையில், தவிர்க்க இயலாத அலுவல் காரணமாக முதல்வரை நேரில் சந்திக்க இயலாததால் *கோரிக்கை & நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான மனுவை முதல்வர் அலுவலகத்திலும், தலைமைச் செயலர் & நிதித்துறை முதன்மைச் செயலரிடம்* வழங்கப்பட்டது.
*🔛 08.01.2018*
மாண்புமிகு தமிழக *ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித்* அவர்கள் தனது ஆளுநர் உரையில் *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒருநபர் குழு* அமைக்கப்படும் என அறிவித்தார்.
*🔛 19.02.2018*
ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்படாத சூழலில் வழக்கமான காலம் கடத்தும் நடவடிக்கையாக *FINANCE (PAY CELL) DEPARTMENT G.O.Ms.No.57, Dated: 19th February, 2018-ன் படி M.A.சித்திக் இ.ஆ.ப* அவர்களின் தலைமையில் *31.07.2018-ற்குள் அறிக்கை சமர்ப்பிக்க* ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
*🔛 21.02.2018*
நீண்ட கால கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காது 30.11.2017-ல் சமர்ப்பிப்பதாக தலைமைச்செயலாளரே நீதிமன்றத்தில் உறுதியளித்த CPS நீக்க வல்லுநர்குழுவின் அறிக்கையே வெளிவரா சூழலில் ஊதியத்திற்கான ஒரு நபர் குழு அமைத்ததன் நோக்கம் உணர்ந்து, முன்னர் அறிவித்தபடியே சிறு கால தாமதத்துடன் *21.02.2018 முதல் 4 நாள்களாக சென்னையில் ஜாக்டோ-ஜியோ-வின் மறியல்* போராட்டம் நடைபெற்றது.
*🔛 24.02.2018*
4 நாள்கள் மறியலைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட வடிவத்தினைத் திட்டமிடக்கூடிய ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் மீண்டுமொரு மாவட்ட மறியலைத் தொடர்ந்து, *1985, 1988--ல் நடைபெற்ற தலைநகர் முற்றுகையைப் போன்று* மற்றுமொரு வீரஞ்செறிந்த முற்றுகையை 08.05.2018 அன்று, இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்களைச் சென்னையில் கூட்டி *தலைமைச் செயலக முற்றுகை நடத்துதல்* எனத் தீர்மானிக்கப்பட்டது.
*🔛 08.05.2018*
*சென்னையே முடங்கும் அளவிற்கு இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்கள் சென்னையில் கூடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட* முயன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோரை அடைக்க தற்காலிகச் சிறையின்றி தலைநகரே திக்குமுக்காட இறுதியில் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் நிரம்பியது.
*🔛 11.06.2018*
*ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் & மாநில நிர்வாகிகள் சென்னையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.* நான்காம் நாளில் அரசின் அடக்குமுறைகளால் முடிவிற்கு வந்தது.
*🔛 03.12.2018*
மீண்டும் பலகட்ட சிக்கல்களையும் போராட்டங்களையும் கடந்து பிரிந்து சென்ற இயக்கங்கள் இணைந்ததையடுத்து ஒருவார கால தாமதத்துடன் 04.12.2018-ல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கும் முன்னாக *நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வேலைநிறுத்தம் 10.12.2018 வரை ஒத்திவைக்கப்பட்டது.*
*🔛 10.12.2018 ❓❓❓*
_முதல் 10 பத்திகளை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு 10.12.2018-ஐ எதிர்கொள்ள JACTTO-GEO மாநில உயர்மட்டக் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன்._
கோரிக்கைகளை உடன் நிறைவேற்றாது வேறு ஏதேனும் காரணங்களோ அல்லது வழக்கமான வெற்று வாக்குறுதிகளோ அரசின் தரப்பில் தரப்படுமாயின் *உடன் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியாக வேண்டும் என்பதே ஜாக்டோ-ஜியோவிடம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*
*_உரிமை வேட்கையோடே உள்ள ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் ஏதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஜாக்டோ-ஜியோ

9/12/18

NMMS 2018 - Best Study Materials & Previous Year Question Papers & Answer Keys Download---கல்விச் செய்திகள்





✅ NMMS Exam 2018 - How to prepare - Tips?
https://goo.gl/U1eT4F


✅ NMMS Exam 2018 - OMR Sheet (Sample)
https://goo.gl/U1eT4F


✅ NMMS Exam 2018 - Study Materials
https://goo.gl/U1eT4F


✅ NMMS Exam 2018 - Previous 6 Year Question Papers & Key Answers
- 2017 Question & Answer
- 2016 Question & Answer
- 2014 Question & Answer
- 2013 Question & Answer
- 2012 Question & Answer
https://goo.gl/U1eT4F


 📲 Android App for NMMS Scholarship Exams 
https://goo.gl/QwNEgZ

அனைத்து வாகனங்களுக்கும் புதிய நம்பர் பிளேட் : பாதுகாப்பு அம்சங்களுடன் தர மத்திய அரசு உத்தரவு



அனைத்து வாகனங்களுக்கும், உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை, அடுத்த ஆண்டில் பொருத்த வேண்டும்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவது, வாகன திருட்டை தடுப்பது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிவது போன்றவை, போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளன.

இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், வாகனங்களுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான நம்பர் பிளேட்டுகளை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மத்திய மோட்டார் வாகன சட்டம், 1989ல், மாற்றங்கள் செய்து, உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக, இந்த நம்பர் பிளேட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த பிளேட்டுகள், வாகனத்துடன் இணைந்ததாக உருவாக்க, வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில், வாகன விபரம், வரி, அபராதம், விபத்து விபரங்கள், உரிமையாளரின் விபரங்கள் மின்னணு முறையில் பதிவேற்றப்படும். சோதனையின் போது, நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்தால், அனைத்து விபரங்களும் தெரியவரும்.

இந்த நம்பர் பிளேட்டுகள் சேதமடைந்தால், அவற்றை அழித்து விட்டு, புதிய நம்பர் பிளேட்டுகளை, தயாரிப்பாளர்களோ, மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ வழங்கலாம். உடைந்த நம்பர் பிளேட்டுகளை திரும்ப பெறாமல், வேறு நம்பர் பிளேட்டுகள் வழங்குவதும், உடைந்த நம்பர் பிளேட்டுகளை, வேறு வாகனங்களில் பொருத்துவதும் குற்றமாகும்.

புதிய வாகனங்களுக்கு, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை வழங்கும் போதும், பழைய நம்பர் பிளேட்டுகளை பெறும் போதும், இதற்கான பதிவேடுகளில், விபரங்களை பதிவேற்ற வேண்டும். இந்த விபரங்களை, நிபுணர் குழு, அடிக்கடி ஆய்வு செய்யும்

இன்றைய சிந்தனை---தகவல் துளிகள்



''கிடைத்த வாய்ப்பை....''


கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன், மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். 

அதுதான் சந்தர்ப்பம் (opportunity) என்னும் சிலை.
அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை
வழுக்கையுமாக இருக்கும்.

சந்தர்ப்ப சிலையிடம் சில கேள்விகள் ... 

உனக்கு இறக்கை எதற்கு..?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!

முன்னந் தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!

ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதோர் இருந்து
கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!

பின்னந் தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது..?.
சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் என்னைப் பற்றிப்
பிடித்துக் கொள்ளா இருப்பதற்காக!

சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள். 

இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார். 

ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால் 
அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது 
என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்..? 

ஆம்,நண்பர்களே.,

இன்றைக்கு கையில் கிடைக்கும் வாய்ப்புகளை 
தவற விட்டு விட்டு பெரிய வாய்ப்பு கிடைக்கும்
என நம்பி காத்து இருப்பதைவிட,கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்வதே வெற்றியை தரும்.

12 ம் வகுப்பு அரசு மாதிரி வினாத்Hereதாள் Download ---கல்விச் செய்திகள்

12th New Official Model Question Papers 2018 - Published

https://goo.gl/RTqR6z



♦ Tamil Question

♦ English Question

♦ Maths Question

♦ Physics Question

♦ Chemistry Question

♦ Biology Question

♦ Botany Question

♦ Zoology Question

♦ Computer Applications

♦ Computer Science

♦Computer Technology

♦ Commerce Question

♦ Accountancy Question

♦ Economics Question

♦ History Question

♦ Nursing Question

♦ Agricultural Science

♦ Ethics & Indian Culture

♦ Vocational Nursing

♦ General Nursing

♦ Advanced Tamil

♦ Political Science

♦ Home Science

♦ Geography Question

♦ Nutrition & Dietics

♦ Home Science Question

♦ Communicative English

 And Official Period Allotment Published

👉 https://goo.gl/RTqR6z

தொலைந்துபோன டெபிட் கார்டை தடை எப்படி செய்வது?---தகவல் துளிகள்




இன்று நமது பணப் பரிவர்த்தனைக்கு பிரதான கருவியாக 'டெபிட் கார்டு' உள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பது, இணைய தளம் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்வது போன்ற வங்கிச் சேவைகளை டெபிட் கார்டு மிகச் சுலபமாக்கிவிட்டது. 

இந்நிலையில், வங்கி டெபிட் கார்டை தொலைக்க நேர்ந்தால், தடுமாறிப் போய்விடுவோம். வங்கியில் இருந்து உங்களது புதிய டெபிட் கார்டை பெறுவதற்கு முன்பு, தொலைந்த அட்டையை 'பிளாக்', அதாவது தடைசெய்வது சற்றுக் கடினமான செயல்.

உங்களது டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். அப்போது, தொலைபேசியில் காத்திருக்கும் நேரம் மற்றும் வங்கிக் கணக்கு எண், டெபிட் கார்டு தொலைந்ததற்கான காரணம், முகவரி போன்ற தகவல்களைத் தருவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நம்மைப் பொறுமையிழக்க வைக்கும்.

இதற்கு மாற்றாக, தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்.

உங்களது 'யூசர் ஐடி' மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இணைய வங்கிக்கணக்கில் உள்நுழையுங்கள். 'ஈ- சர்வீசஸ்' எனும் பிரிவில், ஏடிஎம் கார்டு சேவைகள் என்பதற்குக் கீழே 'பிளாக் ஏடிஎம் கார்டு' என்பதைத் தேர்வு செய்யுங்கள்.


பின்னர் எந்த வங்கிக்கணக்குக்கான டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்களின் ஏடிஎம் கார்டு எண்ணின் முதல் மற்றும் கடைசி 4 இலக்க எண்கள் காண்பிக்கப்படும். அத்துடன் செயல்பாட்டில் உள்ள, தடை செய்யப்பட்ட அனைத்து டெபிட் கார்டுகளும் காண்பிக்கப்படும். நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டை தேர்வு செய்து, அதைச் சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும்.

அதை உறுதிசெய்யும் வகையில், வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி எனும் அங்கீகாரத்தை தேர்வு செய்யவும். வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி-ஐ என்டர் செய்த பின்னர், அதை உறுதி செய்ய (கன்பர்ம்) வேண்டும்.

கடைசியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்யக்கோரும் உங்களின் சேவை கோரிக்கையை வெற்றிகரமாகச் சமர்பித்த பின்னர் வழங்கப்படும் சேவை எண்ணை, எதிர்கால தேவைக்காகவும் மீண்டும் அதுதொடர்பாக விளக்கங்களை வங்கியில் கோரவும் குறித்து வைத்துக்கொள்ளவும்.

டெபிட் கார்டை பிளாக் செய்வதற்கான சேவை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று அந்த எண்ணை வழங்கி புதிய டெபிட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். அந்தச் சமயத்தில் வங்கிகள் உடனடியாக கையில் டெபிட் கார்டை உங்களுக்கு வழங்கும். அது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் அல்லது அதிகபட்சமாக 2 வேலை நாட்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும்.

நீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா?---கல்விச் செய்திகள்



தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர்  191 பேர்,  தமிழ்நாட்டு மாணவர்கள்  வெறும் 4 பேரே!

நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் 191 பேர்; தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 
4 பேர் என்ற அதிர்ச்சித் தகவலை டெக்கான் கிரானிக்கல்' ஏடு புள்ளி விவரங் களுடன் வெளியிட்டுள்ளது.
"டெக்கான் கிரானிக்கல்'' கூறுகிறது.

இது குறித்து "டெக்கான் கிரானிக்கல்" ஆங்கில நாளேட்டின் 07.12.2018 தேதி இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் வெளியிடப் பட்டுள்ள தகவலின்படி, தமிழக அரசுக்குச் சொந்தமான 22 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கே நான்கு மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்திருக்கும் பொழுது, திகைக்க வைக்கும் வகையில் வெளி மாநிலங்களில் கல்வி பயின்ற 191 மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைத்துள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களி லிருந்து ஒரே ஒரு மாணவர் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்திருக்கும் பொழுது, வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் 70 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். வகுப்பில் சேர்ந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம்...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் பெறப் பட்ட தகவல்மூலம் இது தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சினை கடந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. மருத்துவக் கல்லூரிகளில் "நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 422 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வருவாய்த் துறையின் மூலம் பூர்வீகச் சான்றிதழ்களைப் பெற்று இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு வெளி மாநில மாணவர்கள் அதிக அளவில் சேர்வதைக் குறைப்பதற்காக கடந்த ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் பெற் றோரில் ஒருவர் தமிழகத்தில் படித்திருக்க வேண்டும் என்னும் அந்த விதியை அமல்படுத்தியதன் மூலம் இந்தஆண்டு வெளிமாநில மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வரை வெளி மாநிலங் களில் பயிலும் மாணவர்கள், தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தின்கீழ் (ஸ்டேட் போர்டு) பயிலும் மாணவர்கள் மிக அதிகஅளவிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றதால் அவர்களுடன் போட்டி போடமுடியாமல் இருந்தனர். இதற்காக சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மேலாளர்   உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கூடஅளித்திருந்தார். ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர், "நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படி மட்டுமே கேள்வி கேட்கப்படுவதால் வெளி மாநில மாணவர்கள் அதிக அளவில் "நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பூர்வீகச் சான்றிதழ் வழங்கி மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் சேருவதற்குத் தடை விதிக்கக்கோரி தமிழக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இதற்காக வெளிமாநில மாணவர்கள் வருவாய்த் துறை மூலம் பூர்வீகச் சான்றிதழ்களைச் சட்ட விரோதமாகப் பெற்று வருகின்றனர் என்றும் பெருமளவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
இது பற்றி கூறியுள்ள சமூக நீதிக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், "சில நியாயமான வழக்குகள் உள்ளன. மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் அலுவலர்கள் அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களின் பூர்வீக உரிமைகள் மதிக்கப்படவேண்டும். ஆனால் பூர்வீகச் சான்றிதழ்கள் முறைகேடாகப் பயன் படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடது'என்று தெரிவித்துள்ளார்.

 "தற்போது இந்த மாணவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, நாங்கள் அரசிடம் எடுத்துக்கூறி, நமது மாநில மாணவர்களின் நலன்களைக் காப்பதற்கான விதிகளைக் கொண்டு வருவோம்என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இது பற்றி கூறுகையில், "தமிழக அரசு தமிழக மாநிலப் பாடத்தின்படி பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் தனியான இட ஒதுக்கீடு ஏற்பாடு செய்யவேண்டும். வெளிமாநில மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீடு, அவர்களுடைய சொந்த மாநில ஒதுக்கீடு போன்ற வேறு வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் தமிழக மாநிலப்
பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கும் வகையில் சிறப்பு ஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தால்...
தமிழ்நாட்டில் உள்ள 22 அரசுமருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2447 எம்.பி.பி.எஸ். இடங்களில் 40 அளவிலான மாணவர்கள் தான் தமிழக அரசு மற்றும்  தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களிலிருந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் முந்தைய ஆண்டுகளில்  மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 1,277  மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

 சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்றவர்களில் 
611 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
விதிகளின்படி, தமிழக அரசுமருத்துவக் கல்லூரிகளில் மாநிலஇட ஒதுக்கீட்டின்கீழ் இடம்பெறும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கவேண்டும், தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் வசிப்பிடம் அல்லது பூர்வீகத்திற்கான சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. பகுதி அளவிலோ முழுமையாகவோ வெளி மாநிலங்களில் பயின்றமாணவர்கள் பூர்வீகச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இவ்வாறு " டெக்கான் கிரானிக்கல்" ஆங்கில நாளேட் டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு - 2018 அரசு மாதிரி வினாத்தாள்கள் - Download Here---கல்விச் செய்திகள்



👉 https://goo.gl/mF21WS

🔰 Tamil  Model Question

🔰 English Model Question

🔰 Maths Model Question

🔰 Physics Model Question

🔰 Chemistry Model Question

🔰 Biology  Model Question

🔰 Botany Model Question

🔰 Zoology Model Question

🔰 Computer Applications

🔰 Computer Science

🔰 Commerce Model Question

🔰 Accountancy Model Question

🔰 Economics Model Question

🔰 Business Maths Model Question


👉 https://goo.gl/mF21WS

12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு - 2018 அரசு மாதிரி வினாத்தாள்கள் - Download Here கல்விச் செய்திகள்,



👉 https://goo.gl/p7xxfh

📮 Tamil  Model Question

📮 English Model Question

📮 Maths Model Question

📮 Physics Model Question

📮 Chemistry Model Question

📮 Biology  Model Question

📮 Botany Model Question

📮 Zoology Model Question

📮 Computer Applications

📮 Computer Science

📮 Commerce Model Question

📮 Accountancy Model Question

📮 Economics Model Question

📮 Business Maths Model Question


👉 https://goo.gl/p7xxfh

1st to 8th Standard SA Test - Question Papers Collection - From 2012 to 2018 கல்விச் செய்திகள்,


  1. 1st Term - Question Papers Collection for 1st to 8th Standard - Download Here 
  2. 2nd Term - Question Papers Collection for 1st to 8th Standard - Download Here 
  3. 3rd Term - Question Papers Collection for 1st to 8th Standard - Download Here 

DAS Exam - Question Paper and Answer Key 2018

  • DAS Exam - Maths Question Paper and Answer Key | Mrs. Mahalakshmi - Download Here

1st Standard SA - Second Term Model Question Papers 2018

  • 1st Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
2nd Standard SA - Second Term Model Question Papers 2018

  • 2nd Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
3rd Standard SA - Second Term Model Question Papers 2018

  • 3rd Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
4th Standard SA - Second Term Model Question Papers 2018

  • 4th Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
5th Standard SA - Second Term Model Question Papers 2018

  • 5th Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
6th Standard SA - Second Term Model Question Papers 2018

  • 6h Standard - 2nd Term Question Papers for All Subjects - Download Here 
7th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016

  1. 7th Tamil - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  2. 7th English - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  3. 7th Maths - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  4. 7th Science - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  5. 7th Social - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here
8th Standard SA - Second Term Question Papers - From 2012 to 2016

  1. 8th Maths - 2nd Term Model Question Paper | Mr. Santhosh - English Medium Download Here
  2. 8th Tamil - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  3. 8th English - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  4. 8th Maths - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  5. 8th Science - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here 
  6. 8th Social - 2nd Term Question Papers | Mr. S.Ravikumar - Download Here
4th & 5th Standard SA - Second Term Question Papers - 2017

  1. 4th Standard 2nd Term Model Question Paper (Tamil, English, Science, Social) | Mr Sanjay Muthusamy - Tamil Medium Download Here 
  2. 5th Standard 2nd Term Model Question Paper (Tamil, English, Science, Social) | Mr Sanjay Muthusamy - Tamil Medium Download Here 
  3. 3rd Standard 2nd Term Model Question Paper (Tamil) | Mr Sanjay Muthusamy - Tamil Medium Download Here 
  4. 4th Standard 2nd Term Model Question Paper (Tamil, English, Science, Social) | Mr Sanjay Muthusamy - English Medium Download Here 
  5. 5th Standard 2nd Term Model Question Paper (Tamil, English, Science, Social) | Mr Sanjay Muthusamy - English Medium Download Here 

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம்...

                                     

பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம், சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் அமல்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் பதிவேடு மூலமாக மாணவர்களின் வருகையை பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்கு மாற்றாக, நவீன முறையில் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் பேஸ் ரீடிங் முறை, சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல்படுத்தப்படவுள்ளது.  இந்த பள்ளியில் உள்ள ஒரே ஒரு வகுப்பறையில் மட்டும், இந்த திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் 
துவக்கி வைக்கிறார். இந்த முறையில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்து கணிப்பொறியில் இணைத்துவிடுவர். பின்னர் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்ததும், ஆசிரியர் ஒரு புகைப்படம் எடுத்து அதனை கணிப்பொறியில் இணைத்ததும் புகைப்படங்களை சரிபார்த்து, எத்தனை பேர் வந்திருக்கிறார்கள், எத்தனை பேர் வரவில்லை என கணிப்பொறி கூறிவிடும். அத்துடன் இணையதளம் வழியாக இந்த தகவல், தலைமை ஆசிரியர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சென்றடையும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன மூலம் அரசு செயல்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டம், தமிழகத்தில் அரசு பள்ளியில், செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து எதிரொலி - இதர தேர்வு பட்டியலும் ரத்தாகுமா?

                                 

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து ஆனதையடுத்து, மற்ற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலையும் ரத்து செய்து புதிய பட்டியலை தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அரசு பள்ளிகளில், ஆயிரத்து 325 சிறப்பாசிரியர்களை நியமனம் செய்த விவகாரத்தில், குளறுபடிகள் நிகழ்ந்ததாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓவியம் மற்றும் தையல் பிரிவுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, வருகிற 18 ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மதுரையைப்போல், சென்னையிலும் தீர்ப்பு வரும் பட்சத்தில், ஒட்டுமொத்த தேர்வு பட்டியலையும் ரத்து செய்துவிட்டு, புதிய தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடு - ஒரு நபர் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் தாக்கல் என தகவல்

                                          அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் வகையில் தமிழக அரசு அமைத்த ஒரு நபர் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு அரசு செயலர் சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் ஏழு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்,100க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், தனி நபர்கள் என பலரும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதுவரை  பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் ஆசிரியர்களே பெரும்பான்மையாக கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் துறை ரீதியான மனுக்கள் என அதன் தன்மைக்கு ஏற்ப  பிரிக்கப்பட்டு பின்பு அவர்களை நேரில் அழைத்து கருத்துக்களை கேட்டது. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், முதலமைச்சரிடம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஏற்கனவே ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீதர் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

புகைப்பட வருகைப்பதிவு முறை சென்னை அரசு பள்ளியில் அறிமுகம்

சென்னை, அரசு பள்ளிகளில் முதல் முறையாக, சென்னை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், புகைப்பட வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மாணவர்களை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறையை, அரசு பள்ளியில் அறிமுகம் செய்ய, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. பெங்களூரை சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற நிறுவனம் சார்பில், 'ஆன்ட்ராய்ட்' வகை செயலி வழியாக, இந்த தொழில்நுட்பம் அமலாகிறது.இதுகுறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் கூறியதாவது:

நாட்டிலேயே முதன்முறையாக, புகைப்பட வருகைப்பதிவு திட்டம், தமிழக அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது. சீனாவில், ராணுவத்திலும், சில துறைகளிலும், இதை செயல்படுத்துகின்றனர். வகுப்பில் உள்ள மாணவ, மாணவியரின் புகைப்படங்கள், முதலில் சேகரிக்கப்பட்டு, அவை, 'ஆன்ட்ராய்ட் ஆப்' மற்றும், கணினி சர்வரில் உள்ளீடு செய்யப்படும்.வகுப்பு ஆசிரியர், தங்கள் மொபைல் போனில், ஆன்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிலுள்ள வசதியை பயன்படுத்தி, வகுப்பில் உள்ள அனைத்து மாணவ, மாணவியரின் முகம் பதிவாகும் வகையில், ஒரே புகைப்படமாக எடுக்கலாம். அந்த புகைப்படத்தில் பதிவாகும் மாணவ, மாணவியரின் முகங்கள், செயலி வழியாக, வருகைப்பதிவாகி விடும்.இந்த தொழில்நுட்பத்தால், தவறான வருகைப்பதிவு செய்ய முடியாது. வருகைப்பதிவு எடுக்கும் நேரம் குறையும். கணினி முறையில், வருகைப்பதிவு விபரங்களை தொகுத்து வைக்கலாம். அவற்றை, யாரும் திருத்த முடியாது. இது, முழுக்க முழுக்க, 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' என்ற, கணினி வழி செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தில் செயல்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், 8ம் வகுப்புக்கு மட்டும், புகைப்பட வருகை பதிவு முறை, சோதனை முயற்சியாக அமலுக்கு வருகிறது. வரும், 10ம் தேதி, தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இதை துவங்கி வைக்கிறார்.
திட்டத்தின் வெற்றியை பொறுத்து, மற்ற வகுப்புகளுக்கும், மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அசோக் நகர் பள்ளியில், நுழைவு வாயில் கேமரா வழியாக, மாணவியரை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறை, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்க கடலில் புதிய புயல் சின்னம் சென்னை, விசாகபட்டினத்துக்கு, 'குறி

கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே, வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில், கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், சாத்தனுார் மற்றும் சத்தியமங்கலத்தில், தலா, 2 செ.மீ., - வேலுார் கலவை மற்றும் கிருஷ்ணகிரியில், தலா, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.இன்றைய வானிலையை பொருத்தவரை, 'தமிழகத்தில், 28 மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். கரூர், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையில் திடீர் மழை பெய்யலாம். புதுச்சேரியில், வெயில் கொளுத்தும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வங்கக் கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென்கிழக்கில், இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோடு பகுதிக்கும், வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதிக்கும் இடையே, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு, அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும், ஈரப்பதம் நிறைந்த மேக கூட்டங்கள் வலு ஏற்படுத்துவதால், புயல் சின்னமாக உருவாகும். வரும், 10ம் தேதி முதல், காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் மாறி, தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னைக்கும், ஆந்திராவின், விசாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியில், இந்த புயல் கரையை கடக்கும்; இந்த புயல், வலுமிக்க தீவிர புயலாக உருவெடுக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு, தாய்லாந்து தேர்வு செய்துள்ள, 'பேய்ட்டி' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.புயல் உருவாவதால், தற்போதைய நிலையில், கடலோர பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் என, வானிலையாளர்கள் கணித்துள்ளனர்

பள்ளிகளை கண்காணிக்க பறக்கும் படை

ஜனவரி 1ந்தேதி முதல் 'சிப்' இல்லாத ஏ.டி.எம்.கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல்!!!

School Attendance App - New Version உடனே Update செய்யுங்க!

Attendance app version v2.0.1. உள்ளதா என்று பார்க்கவும்.V2.0.0 இருந்தால் update கொடுக்கவும்.

 V2.0.1 என மாற்றம் அடைந்த பின்னர் synchronization date 7.12.2018 உள்ளதா என பார்க்கவும். Date 6.12.2018 இருப்பின் synchronization செய்யவும் date 7.12.18 மாற்றம் அடையும். பள்ளிக்குச் சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும்.

வருகைப்பதிவு முடித்தவுடன் மீண்டும் synchronization செய்யவும். Daily Report சென்று பார்க்கவும். Green tic இருக்கும். உங்கள் வருகைப்பதிவு online இல் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வழிமுறைகளைப் பின்பற்றி வருகைப்பதிவு மேற்கொள்ளவும்.

வேளாண் முதுநிலை பாடங்களுக்கு மீண்டும் இருபருவம்':

வேளாண் முதுநிலைபாடங்களுக்கு, அடுத்த கல்வியாண்டு முதல் மீண்டும் இருபருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.வேளாண் உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்.,), வேளாண் பல்கலை, அதன் உறுப்பு கல்லுரிகள், பாடப்பிரிவுகள்குறித்து ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குகிறது.

வேளாண் பல்கலையில், கடந்த ஜூன் மாதம், தேசிய வேளாண் கல்வி அங்கீகாரக் குழு ஆய்வு நடத்தியது.இதில், வேளாண் பல்கலையின், ஒன்பது உறுப்பு கல்லுாரிகளில், ஏழு பாடப்பிரிவுக்களுக்கு, ஐ.சி.ஏ.ஆர்., அங்கீகாரம் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.ஆனால், ஐ.சி.ஏ.ஆர்., விதிகளை மீறி, முதுகலை மற்றும் முனைவர் பாடப்பிரிவுகளுக்கு, முப்பருவ கல்வி முறை பின்பற்றப்பட்டதால், அங்கீகாரம் வழங்கப்படவில்லை. கடந்த, மூன்று ஆண்டுகளாக முதுகலை படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாத நிலை நீடிக்கிறது.இது குறித்து, பல்கலை துணைவேந்தர் குமார் கூறுகையில், ''வேளாண் பல்கலை மாணவர்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஏ.ஆர்.ஐ.,) மேற்படிப்பை தொடருவதற்கு, உதவியாக முதுநிலை படிப்புகளுக்கு, முப்பருவக் கல்வி முறை பின்பற்றப்பட்டது.


ஐ.சி.ஏ.ஆர்., விதிகளின்படி, இருபருவ கல்வி பின்பற்ற, நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இகுகுறித்து, ஜனவரியில் தேசிய வேளாண் அங்கீகாரக்குழு பல்கலையில் ஆய்வு செய்ய உள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல், முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் இருபருவக் கல்விமுறை பின்பற்றப்படும்,'' என்றார்.

6 மாதங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா"புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு அடித்தது அதிஷ்டம்.!!

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் 3 சென்ட் இலவச வீட்டு மனைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் ஆணையில், நீர்நிலை, மேய்க்கால் மற்றும் சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பயனாளிகளின் தகுதியின் அடிப்படையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களை அப்புறப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கும் தமிழக அரசு, மேய்க்கால் மற்றும் சாலை போன்ற மற்ற ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தவும் ஆணையிட்டுள்ளது. இந்த திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ (C.P.S. solution)



உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் நியமன நடைமுறைகள் ரத்து : அறிவிப்பில் தெளிவில்லை என ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கடந்த 26.7.2017ல் சிறப்பு ஆசிரியர் பிரிவில் காலியாகவுள்ள 632 உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வில் 70 மதிப்பெண் பெற்றேன். பணி வழங்குவதற்கான சீனியாரிட்டி எனக்கு கிடைத்தது. இதன்படி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். அப்போது, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான கல்வியில் உயர்தகுதி பெற்றதற்கான சான்றிதழ் பெறவில்லை என கூறினர்.


 ஓராண்டு வகுப்பான இந்த படிப்பு கடந்த 2004ல் கைவிடப்பட்டது என்பதை விளக்கினேன். இதன்பிறகு வெளியான தேர்வானவர்களின் பட்டியலில் என் பெயர் இல்லை. உரிய கல்வித்தகுதி பெறவில்லையென அதில் கூறப்பட்டுள்ளது. உரிய தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு முடிவுகள் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கு என்னை அழைக்கவும், எனக்கு உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தெளிவாக இல்லை. அறிவிப்பில் முரண்பாடு உள்ளது. எனவே, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் நியமனம் தொடர்பான  ஒட்டுமொத்த நடைமுறைகளும் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்

8/12/18

தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..

Add caption

Add caption
 







வங்கக் கடலில் புதிய புயல்..?? அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகுது மழை !!

கடந்த மாதம் 15 ஆம் தேதி வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலால் புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது. காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பினை கஜா புயல் ஏற்படுத்தி சென்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.


இந்த நிலையில் , வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் அதாவது நாளையும்இ நாளை மறுநாளும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குமரிக்கடல் , மன்னார் வளைகுடா , தென்மேற்கு வங்க கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது .


இதே போல் காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.


இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..


டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இதனிடையே சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

அந்தமான் நிகோபார் தீவுகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக கருத்தாளர்கள் மற்றும் பாட வல்லுநர்கள் அனுப்பி வைக்க SCERT திட்டம் :

கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை, அந்தமான் நிகோபார் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் திறன்மேம்பாடு, கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அடைவுத் தேர்வுகளின் முடிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாணவர்களுக்கு குறைதீர் பயிற்சிஅளிக்க உதவுதல், பாடநூல்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக தக்க ஆதரவு வழங்கப்படும்.
இணைய வளங்களைப் பகிர்ந்தளிக்க... அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடுமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள பாடங்கள் சார்ந்த காணொலிக் காட்சிகள் மற்றும் விரைவுத் துலக்கக் குறியீடுகளின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இணைய வளங்கள்ஆகியவைகளைஅவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்யும்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கத் தேவையான கருத்தாளர்கள் மற்றும் பாட வல்லுநர்கள்,தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக, அவ்வப்போது, தேவையின் அடிப்படையில் அனுப்பிவைக்கப்படுவர். தேவைப்பட்டால் அங்குள்ளஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு வரவழைக்கப்பட்டும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி, அந்தமான் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி மேமன் தாமஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: டிச.11 முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் டிச.11 முதல் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கடந்த நவ.26-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
2019 ஜனவரி 1 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தின் மூலம் டிச.11, 12, 13 ஆகிய மூன்று நாள்களுக்கு மட்டும் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு(Nodal Centre) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்புக் கட்டணம் ரூ.500, ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675-ஐ தனித்தேர்வர்கள் சேவை மையங்களிலேயே நேரடியாகச் செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் டிச.13-ஆம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

இந்த விவரம் உங்களுக்காக Case No. 23928 of 2018 court No.1 Advocate Name : Mr. Shaji Chellan Advocte Chamber No. 88 ஜாக் டோ - ஜியோ ஜாக் டோ - ஜியோ வழக்கு 10.12.2018 பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது. நீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். Department ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும். visitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும். Voter Id. ஆதார் Id Pan Card etc., படம் 1. Department ID படம் 2. visitor pass வாங்க விண்ணப்பம் படம் 3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass


ஜாக்டோ - ஜியோ வழக்கு: நீதிமன்றத்தை நேரடியாக பார்வையிட விரும்புகிறீர்களா?

இந்த விவரம் உங்களுக்காக
Case No. 23928 of 2018
court No.1
Advocate Name : Mr. Shaji Chellan
Advocte Chamber No. 88
ஜாக் டோ - ஜியோ
ஜாக் டோ - ஜியோ வழக்கு 10.12.2018 பிற்பகல்
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது.
நீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
Department ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும்.
visitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.
Voter Id.
ஆதார் Id
Pan Card
etc.,
படம் 1. Department ID
படம் 2. visitor pass வாங்க விண்ணப்பம்
படம் 3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass

சிந்தனையாற்றலுடன் மாணவர்களை உருவாக்க பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி 10ம் தேதி தொடங்குகிறது :

சிந்தனையாற்றலுடன் செயல்திறன்மிக்க மாணவர்களை உருவாக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ம் தேதி சிறப்பு பயிற்சி தொடங்குகிறது.இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:வகுப்பறை செயல்பாடுகளை மாற்றியமைத்து சிறந்த சிந்தனையாற்றலுடன் செயல்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மேம்பட்ட கற்றலுக்கு வழிவகை செய்யும் கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகள் சார்பாக மாவட்ட கருத்தாளர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் பயிற்சி சென்னையில் நடக்க உள்ளது. 2வது கட்டமாக தொடக்கநிலை வகுப்புகளுக்கும் மாநில அளவிலான மாவட்ட கருத்தாளர் பயிற்சி வரும் 17ம் மற்றும் 20ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இதற்கிடையில் மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களை மட்டுமே கருத்தாளர்களாக கொண்டு மாவட்டங்களில் ஒன்றிய அளவில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் நடத்த வேண்டும். இந்த பயிற்சியும் 2 நாட்கள் நடத்த வேண்டும்.பயிற்சியை திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களில் ஒரு சுற்றும், புதன் வியாழன் ஆகிய இரு நாட்களில் மற்றொரு சுற்றும் என தொடர்ந்து நடத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சியினை 2வது பருவத்தேர்வு நாட்களிலும் தொடர்ந்து நடத்திட ஏதுவாக தலைமையாசிரியர்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது ஒரு ஒன்றியத்தில் ஒரு பாடம் வீதம், 5 ஒன்றியங்களில் இப்பயிற்சியினை தனித்தனியாக பாடவாரியாக நடத்த வேண்டும். ஒரு சுற்றிற்கு ஒரு பாடத்திற்கு 50 ஆசிரியர்கள் என எண்ணிக்கையில் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கஜா புயல் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களில், ஒன்றியங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பயிற்சியினை நடத்துவதற்கு ஏதுவாக முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர் தக்க நடவடிக்கையினை சூழலுக்கு தகுந்தவாறு முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியிருந்தது.

விரைவில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க புதிய வசதி..!

ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி
மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன.
ஆம், விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது.

யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

உங்களுக்கு சர்க்கரை நோய் வருமா? வராதா ? தெரிந்து கொள்ளுங்கள்!

இளம்வயது சர்க்கரை நோய் ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது. முதிர்வயது சர்க்கரை ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.

ஜீன் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தை 4.5 கிலோவிற்கு அதிகமாக இருந்தால், அந்த தாயிக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவம் கூறுகின்றது. கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் சீரற்ற நிலை ஏற்பட்டால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது. மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது. இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது

பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம் :

பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம்.பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 14 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும். வயது குறைவாக உள்ள மாணவர்கள், தடை ஆணை பெற்றால் தான் தேர்வு எழுத முடியும். இதற்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, பெற்றோர் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
இத்தடை ஆணையை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம் என, இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அமுதவல்லி அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வு எழுதும் நாளில், 14 வயது கொண்டவர்கள், ஓரிரு மாதங்கள் குறைவாக உள்ளவர்கள், தடை ஆணை பெறலாம். இதற்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், விண்ணப்பிக்க வேண்டும்.

ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட திரு.சித்திக்(IAS) தலைமையிலான குழுவின் அறிக்கை இன்றோ அல்லது நாளையோ அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்!!


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி அசத்திய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்: இரா.வனஜா:

அன்னவாசல்,டிச.7: இலுப்பூர்கல்வி மாவட்டம் அன்னவாசல்  அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆண்டாய்வு நடைபெற்றது..

ஆண்டாய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா திடீரென 6 ஆம் வகுப்புக்குள் சென்று  அறிவியல் பாடத்தில் காற்று என்கிற தலைப்பில் பாடம் நடத்தினார்..பாடம் நடத்தும் பொழுது இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்டு உற்சாகப்படுத்தினார்..மாணவர்களும் ஆர்வமாக பதில் அளித்தனர்..

ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் இருவர்,மாவட்ட கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் என மூவர் அலுவலக பதிவேடுகள் சரியாக உள்ளதா என சரிபார்ப்பார்ப்பார்கள் அதனை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்வார் .அத்துடன் மாவட்ட கல்வி அலுவலர்,பள்ளி துணைஆய்வாளர்,தலைமையாசிரியர்கள்,ஆசிரிய பயிற்றுநர்கள் அடங்கிய குழுவினர்கள்  ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மேற்பார்வை செய்வதையும்   ஆய்வு செய்வதோடு, தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 11 ,12 ஆம் வகுப்பு   மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதையும் ஆய்வு செய்வார்.ஆனால் இன்று யாரும் எதிர்பாராத வகையில்  திடீரென ஆறாம்  வகுப்பிற்குள் சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாடம் எடுத்தது கண்டு அப்பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்..

 பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர்  பாடம் நடத்தும் முறை குறித்தும் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிக்கவும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டுச் சென்றார்..

ஆய்வின் போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,பள்ளி துணைஆய்வாளர் கி.வேலுச்சாமி,மருதாந்தலை பள்ளி தலைமையாசிரியர் பாரதி விவேகானந்தன்,அன்னவாசல் பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன்,மாங்குடி தலைமையாசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.