யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/15

ஆசிரியர்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி: ஆட்சியரிடம் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் கிளைத் தலைவர் பி. ராஜ்குமார், செயலர் செ. பால்ராஜ், பொருளாளர் சே. சுப்பிரமணியன், நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனு: 2016இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியின்போது ஏற்படும் பல்வேறு இன்னல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களின் உடல்நலம், குடும்பச் சூழல், பணி நிலை, ஆசிரியைகளின் பிரச்னை, பணியாற்றும் பள்ளிகள், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
பள்ளிகளில் கல்வி பாதிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களின் வசிப்பிடத்திலிருந்து 100 முதல் 150 கி.மீ. தொலைவில் தேர்தல் பணிக்கு அனுப்புவதால் அவர்கள் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, ஆசிரியைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்களின் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கர்ப்பிணி ஆசிரியைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாக்குச்சாவடிப் பணிக்குச் செல்லும்போதும், பணி முடிந்து திரும்பும்போதும் ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி செய்ய வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவலர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் பணியிடம் குறித்து அளிக்கப்படும் 2ஆவது கட்டப் பயிற்சியின்போது, தேர்தல் பணிக்கான மையம், அதற்கான ஆணை வழங்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி':

உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம். 
இதுவரை, இந்த திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக, இந்தாண்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 
இந்தாண்டில், அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரித்துஉள்ளது.

இதுகுறித்து, உ.பி., அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.,யில், சில ஆண்டுகளுக்கு முன்வரை, ஆண்டுக்கு, 20 நாட்கள் மட்டுமே, அரசு விடுமுறை தினமாக இருந்தது. சமாஜ்வாதி அரசு பதவியேற்றதும், பல்வேறு சமூகத்தினரின் ஓட்டு வங்கியை குறிவைத்து, அந்தந்த சமூகம் சார்ந்த தலைவர்களின் பிறந்த நாட்களை, அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. 
விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளதால், அரசு நிர்வாக பணிகளில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 24 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க உதவுங்கள்: பள்ளிகள் எஸ்.எம்.எஸ்.,

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, டிசம்பர் முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிச., 23க்குள், இரண்டாம் பருவத் தேர்வுகளை முடிக்கவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.ஆனால், பருவமழையின் தீவிரம் காரணமாக, 10 நாட்களாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், பெற்றோர் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. அதில், 'மழை விடுமுறையால், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விடுமுறை நாட்களில், மாணவர்கள் வீட்டில் பொழுதைக் கழிக்காமல், பாடங்களை படிக்க, பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்; இவ்விஷயத்தில், பிள்ளைகளுக்கு உதவ வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது- நமது நிருபர் -.

ஆரோக்கியப்பச்சை மூலிகை ஆய்வில் உயிரியியல் மாணவி: காந்திகிராம பல்கலை ஏற்பாடு:

ஆரோக்கிய பச்சை மூலிகையில் உள்ள வேதிப்பொருட்கள் குறித்த ஆய்வில், காந்திகிராம பல்கலையின் உயிரியியல்துறை மாணவி சசிகலா ஈடுபட்டுள்ளார்.சீனர்களிடையே 'ஜின் செங்' எனப்படும் பாரம்பரிய மருத்துவ மூலிகை பிரபலம். 
உடல் ஆரோக்கியம், ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வேதிப்பொருட்கள் அதில் உள்ளன. அதன் வேர்கள் மூலம் சீன மருத்துவர்கள் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கண்டனர்.மருத்துவ குணமுள்ள ஆரோக்கிய பச்சை மூலிகை மேற்கு மலைத் தொடரில் மட்டுமே உள்ளதை தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இம்மூலிகையின் வேதிப்பொருட்கள் குறித்த ஆய்வில் காந்திகிராம பல்கலை உயிரியல்துறை மாணவி சசிகலா ஈடுபட்டுள்ளார்.அவர் கூறியதாவது: 1788ல் அகஸ்தியர் மலைக்காடுகளில் இவ்வகை மூலிகை இருந்தது. இதன் தாவரவியல் பெயர் 'டிரைகோபஸ் ஜைலானிக்கஸ்'. பூமிக்குள் நீளமான தண்டினை கொண்டிருக்கும்.
வெற்றிலைக் கிழங்கு குடும்பத்தை சார்ந்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து நாடுகளிலும் இருந்தாலும், அதிக மருத்துவ குணமுள்ள 'டிராவன்கோரிகஸ்' என்னும் ஆரோக்கிய பச்சை மூலிகை மேற்கு மலைத் தொடரில் அகஸ்தியர்(பொதிகை) மலைக்காடுகளில் மட்டுமே வளர்கிறது. இதன் பயன்பாடு 1987 வரை வெளியுலகிற்கு தெரியவில்லை.ஆராய்ச்சியாளர்கள், காணி பழங்குடிகளுக்கு ஏற்பட்ட தொடர்பால் இதன் பயன் வெளியுலகிற்கு தெரிந்தது. 

இம்மூலிகையின் (பாதி பழுத்த) பழத்தை உண்பதன் மூலம் சக்தியுடன், உணவே இல்லாமல் ஆராக்கியத்துடன் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனால், காந்தி கிராம பல் கலையில் அந்த மூலிகை, மற்றும் பழங்களில் உள்ள வேதிப்பொருள்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு உள்ளோம், என்றார்.

விஜய் தொலைக்காட்சியில் கோவை மாவட்டத்தின் மூலத்துறை அரசுப்பள்ளி மாணவர்கள்...


கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு (22-11-15) மாலை 7:00 மணிக்கு"ஒரு வார்த்தை ஒரு லட்சம்"..நிகழ்ச்சியின் அடுத்த சுற்றில் விளையாட உள்ளார்கள்...
நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...ஜெ.திருமுருகன்கணித பட்டதாரி ஆசிரியர்,மூலத்துறைகோவை மாவட்டம்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்: வேலுர்:4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக சென்னை மாவட்ட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) விடுமுறை என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.மற்றும் வேலுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

இடமாறுதலில் வந்த ஆசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

BRTE - கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில்ஏற்பட்டுள்ள கட்டிட சேத விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

தொடக்கக்கல்வி - அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் - இயக்குநர் செயல்முறைகள்

TRB மூலம் (2012-2014) கணித பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றதை முறைபடுத்தி ஆணை வெளியீடு

18/11/15

அரசு ஊழியர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு

புதுடில்லி : 7ம் சம்பள கமிஷன் அறிக்கை வரும் 19ம்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
15 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2,300 கோடி பி.எப். தொகை பங்குச்சந்தையில் முதலீடு

நடப்பு நிதி ஆண்டில்5,000 கோடி ரூபாய் பி.எப். தொகையினைபங்குச்சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசுதிட்டமிட்டிருந்தது. இதில் 2,322 கோடிரூபாய் கடந்தஅக்டோபர் மாதம்வரை பங்குச்சந்தை
சார்ந்த இ.டி.எப்.களில் முதலீடுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகைசென்செக்ஸ் மற்றும் நிப்டி இ.டி.எப்.களில்முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.


இந்த முதலீடுகள் குறித்தஆய்வு மத்தியதொழிலாளர் துறைஅமைச்சர் தலைமையில்வரும் 24-ம்தேதி நடக்கஇருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் கூடுதலாகசேரும் தொகையில்5 சதவீதத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பி.எப் அறங்காவலர்குழு முடிவுசெய்தது. இதன்படிநடப்பு நிதிஆண்டில் 1 லட்சம்கோடி ரூபாய்கூடுதலாக வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தமுடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்ப்புதெரிவித்தன.


முதன்முதலில், ஆகஸ்ட் 6-ம்தேதி பங்குச்சந்தையில்முதலீடு செய்யப்பட்டது. கடந்த இருநிதி ஆண்டுகளாகபி.எப். தொகை மீதானவட்டி 8.75 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதிஆண்டுக்கான வட்டி விகிதம் நவம்பர் 24-ம்தேதி நிர்ணயம்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - அரசு ஊழியர்கள் முடிவு

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்தது. இதனால்சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில்பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில்தமிழக அரசு
ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்கமுன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள்மற்றும் அடிப்படைபணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்றுதலைமை செயலாளர்ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவுசெயலாளர் ஆகியோருக்குஇதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார். 


அந்த கடிதத்தில், “தலைமைசெயலகம் முதல்அனைத்து அரசுதுறைகளிலும் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும்அடிப்படை பணியாளர்கள்2 லட்சத்து 34 ஆயிரம் பேர்களும், தங்களுடைய ஒருநாள் சம்பளத்தை“வெள்ள நிவாரணநிதி”யாக  நவம்பர்மாத சம்பளத்தில்பிடித்தம் செய்துகொள்ளசம்மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார். அதேபோன்று அரசுஅலுவலக ஒன்றியம்சார்பில் மாநிலதலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசுஊர்தி ஓட்டுநர்சங்க மாநிலதலைவர் ஜெயக்கொடிஆகியோரும் ஒருநாள்சம்பளத்தை பிடித்தம்செய்ய அரசுக்குகடிதம் எழுதியுள்ளனர். மொத்தத்தில் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள்மேற்கண்ட 3 சங்கத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

35 பள்ளி கட்டடங்கள் ராமநாதபுரத்தில் இடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 35 பள்ளி கட்டடங்களை இடிக்கப்பட்டன.பழுதடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் படிக்கும்
மாணவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்; அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பழுதடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டுமென, கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து ராமநாதபுரத்தில் தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் 80 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டன. அங்கு படித்த மாணவர்கள் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டனர்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கட்டடங்களை பொதுப்பணித்துறையும், தொடக்க, நடுநிலைப் பள்ளி கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகளும் இடிக்க கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் இதுவரை 35 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.


முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு கூறுகையில், “பழுதடைந்த கட்டடங்களில் வகுப்பறை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த கட்டங்கள் கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து பழுதடைந்த கட்டடங்களும் இடிக்கப்படும்,” என்றார்.

சத்துணவு பொருட்கள்பத்திரப்படுத்த உத்தரவு

தொடர் மழையால், சத்துணவுமையங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுபொருட்கள் பாதிக்காதவாறு, பத்திரப்படுத்தும்படி, அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 42,970 பள்ளி சத்துணவுமையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியர் சாப்பிடுகின்றனர்; 97 ஆயிரம் பேர்பணிபுரிகின்றனர். 

இந்நிலையில், புயல், மழைக்குபள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள பள்ளிசத்துணவு மையங்களில், வெள்ளம் புகுந்துள்ளது. பல மையங்களின்மேற்கூரைகள் ஒழுகுகின்றன. எனவே, சத்துணவு மையஇருப்பு அறையில்அரிசி, பருப்பு, கொண்டைக் கடலைஉள்ளிட்டஉணவுப் பொருட்கள்பாதுகாப்பாக உள்ளனவா என, கண்காணிக்கும் படியும், மழையில் நனையாமல், பத்திரப்படுத்தும் படியும், அமைப்பாளர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது

அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரிப்பு

அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது. இந்த புதிய கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரித்து வருகிறது.


10 லட்சம் ஆலோசனைகள்


மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இராணி புதிய கல்வி கொள்கையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். கடைசியாக 1992-ம் ஆண்டில் கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இன்றளவிலும், அந்த கல்வி கொள்கைதான் அமலில் உள்ளது.இப்போது, புதிய கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற மத்திய அரசாங்க கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் ஓய்வு பெற்ற 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு கல்வியாளர் அடங்கிய குழு, நகல் கல்வி கொள்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கல்வி கொள்கையைஉருவாக்க ஏறத்தாழ 10 லட்சம் ஆலோசனைகளை இந்த குழு பரிசீலித்து வருகிறது.


அமைச்சர்களுடன் ஆலோசனை

இந்த குழு தனது நகல் கல்வி கொள்கைக்கான பணியை டிசம்பர் 31-ந் தேதி முடிக்கிறது. அதன் பிறகு, மத்திய அரசு பரிசீலனை செய்து பிப்ரவரி மாதம் இந்தகல்வி கொள்கையை ஸ்மிருதி இராணி பிரதமரிடம் தாக்கல் செய்கிறார்.2016-ம் கல்வியாண்டில், இந்த புதிய கொள்கை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு எத்தகைய கல்விமுறை பயனுள்ளதாக இருக்கும். வேலை வாய்ப்பிற்கு எது எது உகந்ததாக இருக்கும் என்பது போன்ற ஏராளமான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மத்திய செகண்டரி போர்டு போன்ற பல அமைப்புகள் கருத்துகளை வழங்கி உள்ளன. மேலும், இந்த கல்வி கொள்கை தொடர்பாக ஸ்மிருதி இராணி, மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் பயிற்சியில் புதிய வழிமுறை

கல்வித்துறை நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில்,புதிய வழிமுறைகளை அதிகம் புகுத்த வேண்டும்,என,கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்களின் தலைமைப்பண்பு, கற்பிக்கும் முறை,எளிமையான முறையில் கற்பித்தல்,ஆங்கில வழியில் கற்பித்தல்,ஆய்வுப்பாடம் மற்றும் கணித உபகரணப் பெட்டிகள் குறித்து,ஆண்டுதோறும், கல்வித்துறை சார்பில்,ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இடைநிலை கல்வி இயக்கத்தின் கீழ்,பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்கள் அப்பயிற்சியை வழங்குகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள்,பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்கின்றன.இதில் நடப்பு கல்வியாண்டில்,பயிற்சிக்கு மட்டுமே பெரும்பான்மையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகளுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்டவை தடைபட்டன.தொடர் பயிற்சிகளால் பாதிப்பு தவிர,தொடர் பயிற்சிகளால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்,மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்வித்திறன் முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவில்லை;சில பயிற்சிகளில் மற்ற பள்ளிஆசிரியர்களே பயிற்சியளிப்பதால் அதில் பயனில்லை என சில பள்ளி தலைமையாசிரியர்களே கூறுகின்றனர்.


இதற்கு பயிற்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்,ஒரே முறையை பின்பற்றி பயிற்சியளிப்பதே காரணமாக உள்ளது.பயிற்சிகளின் நோக்கமே மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவது. தற்போது அதன் நிலை மாறி,தொடர் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்விக்கே பாதிப்பு ஏற்படும் நிலையே உள்ளது.உடுமலை,சுற்றுப்பகுதியில்,நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பயிற்சிகள் பாடவாரியாகவே நடத்தப்படுகிறது. இருப்பினும்,மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு அதன் கருத்துகளை கொண்டு செல்வது என்பது குறித்து பயிற்சியளிப்பதில் புதிய முறைகளை புகுத்த வேண்டும் என,எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு முக்கியத்துவம் அளித்து,இதற்கு மட்டுமே அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் பயனின்றி உள்ளது. இதனால்அரசின் நிதி ஒதுக்கீடு வீணடிக்கப்படுவதாகவும் பெற்றோர் புகார் கூறுகின்றனர். அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கம் இதனை ஆய்வு செய்து,புதிய வழிமுறைகளை பயிற்சியில் புகுத்த வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.

இந்நிலையில் சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய மாணவர்களுக்கு புதிய விசாக்களை பிரிட்டன் அரசு விரைவில் அறிமுகம்

இந்திய மாணவர்களுக்கு புதிய விசாக்களை பிரிட்டன் அரசு விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல்

தெரிவிக்கின்றன. இதன்மூலம் பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் பிரிட்டனில் வேலை பார்க்கும் வசதி செய்யப்படும்.


பிரிட்டனில் படிக்கத் திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கு இந்தச் செய்தி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த புதிய விசார திட்டத்தை லண்டன் மாநகர மேயர் போரிஸ் ஜான்ஸன், பிரிட்டன் அரசிடம் தரவுள்ளார். இந்தத் திட்டம் நிறைவேறினால் காமன்வெல்த் ஒர்க் விசா இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த புதிய விசாத் திட்டம் இந்திய மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த மாணவர்கள் அதன் பிறகு 2 ஆண்டுகள் அங்கேயே வேலை செய்து பணம் ஈட்ட முடியும். இதுகுறித்து போரிஸ் ஜான்ஸன் கூறியதாவது: இந்திய மாணவர்களுக்கு புதிய விசா திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.

இரண்டாவதாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களுக்கு சிறப்பு விசா திட்டத்தையும் அரசிடம் தரவுள்ளோம். பிரிட்டனில் 3-வது பெரிய வருவாய் உற்பத்தியாளர்களாக இந்திய மாணவர்கள் உள்ளனர் என்றார் அவர்.

பன்னிராண்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவா சர்மா டாக்டர் அப்துல் கலாம் விருதுக்குத் தேர்வு

கால்நடைகளுக்கு மருத்துவ உதவியை அளிப்பதற்காக மன அழுத்த கண்காணிப்பு திட்ட மாதிரியை உருவாக்கியதற்காக திவா சர்மாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.


நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) இக்னைட் 2015 என்ற விருதை அறிவித்தது. இந்த விருதுக்கான போட்டியில் பள்ளிகளைச் சேர்ந்த 28,106 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் 40 மாணவர்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கடைசியாக 31 மாணவர்களின் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் என்ற வகையில் இந்தத் திட்ட மாதிரியை உருவாக்க போட்டி விதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் திவா சர்மாவின் திட்ட மாதிரி தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

நவம்பர் 30-ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருதைப் பெறவுள்ளார் திவா சர்மா. இதுகுறித்து திவா சர்மா கூறியதாவது: கால்நடைகளின் உடல்நிலை குறித்து அறிய இந்த சாஃப்ட்வேர் பயன்படும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் பிரச்னையை அறிய முடியும். நாடித்துடிப்பு, இருதயத் துடிப்பு, சுவாசத்துக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், உடல் வெப்பநிலையை இந்த சாஃப்ட்வேர் கண்காணிக்கும் என்றார் அவர்.

இந்த சாஃப்ட்வேரைத் தயாரிக்க டெல்லி ஐஐடி-யின் உதவியை நாடியுள்ளார் திவா. இந்தத் திட்டத்துக்கு உறுதுணையாக ஐஐடி டெல்லி இன்னோவேஷன் மையத்தின் பிவிஎம் ராவ் இருந்துள்ளார்.