EMIS' இணையதளத்தை முறையாக பராமரிக்காமல், மாணவர்களின்தகவல்களை அடிக்கடி அனுப்புமாறு உத்தரவிடுவதால், ஆசிரியர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுத்தேர்வுநடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர, ஆதார்எண் சேகரிக்குமாறு, அரசுத் தேர்வுத் துறைஉத்தரவிட்டுள்ளது. இதை, இம்மாத இறுதிக்குள்சேகரித்து, தகவல் பதிவு செய்யஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவால், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகபுலம்புகின்றனர். மேலும், பள்ளிக்கல்வி தகவல்மேலாண்மை மையம் (எமிஸ்) என்றதிட்டம், கடந்த, 2012ல் துவங்கப்பட்டது.இதில், அரசுப்பள்ளி மாணவர்களின் பெயர், வயது, ரத்தவகை, ஆதார் எண் உள்ளிட்டஅனைத்து தகவல்களும் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.
இதற்கு, பள்ளி வாரியாக பிரத்யேக, பயனர்பெயர், கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை, கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே, ஒருங்கிணைத்து பார்வையிட முடியும். ஆனால், ஆன்லைன் பதிவேற்றம்செய்வதில் உள்ள குளறுபடிகளால், மாணவர்களின்தகவல்கள் முழுமையாக திரட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.இதனால், அனைத்து கல்வி சார் செயல்பாடுகளுக்கும், மாணவர்களின் தகவல்களை அளிக்குமாறு, அடிக்கடி கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இதை திரட்டி அனுப்ப, ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.
தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும்14ம் தேதி, முன் அரையாண்டுதேர்வுகள் துவங்கவுள்ளன. இதற்கு பின், டிச., 7ம் தேதி, அரையாண்டு தேர்வுநடக்கிறது.தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் என, ஆசிரியர்கள் 'படுபிசி'யாக சுழன்று கொண்டிருப்பர். இந்நேரத்தில், ஆதார் எண் சேகரிக்குமாறுஉத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்சிலர் கூறியதாவது:மாணவர்களின் ஆதார் எண், எமிஸ்இணையதளத்தில் உள்ளது. இதை, கல்வித்துறைஅதிகாரிகள் முறையாக, 'அப்டேட்' செய்யாததால், பள்ளிகளில் இருந்து அடிக்கடி தகவல்அளிக்க உத்தரவிடுகின்றனர்.
தேர்வுநேரத்தில், ஆதார் எண் சேகரித்தல், அட்டை இல்லாத மாணவர்களுக்கு முகாம்நடத்துதல் என, புதிய உத்தரவுகளைபிறப்பித்துள்ளனர்.இணைய வசதியில்லாத பள்ளிகளில், தனியார் பிரவுசிங் சென்டர்களை தேடி சென்று, தகவல்களைபதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்றதகவல் சேகரிப்பு பணிகளை, கல்வியாண்டு துவங்கும்போதே, முறையாக திட்டமிடாமல், அவசரகதியில்குறுகிய கால அவகாசத்தில் செய்வதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இனிவரும்காலங்களிலாவது, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளை திணிக்காமல்இருக்க, நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுத்தேர்வுநடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர, ஆதார்எண் சேகரிக்குமாறு, அரசுத் தேர்வுத் துறைஉத்தரவிட்டுள்ளது. இதை, இம்மாத இறுதிக்குள்சேகரித்து, தகவல் பதிவு செய்யஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவால், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகபுலம்புகின்றனர். மேலும், பள்ளிக்கல்வி தகவல்மேலாண்மை மையம் (எமிஸ்) என்றதிட்டம், கடந்த, 2012ல் துவங்கப்பட்டது.இதில், அரசுப்பள்ளி மாணவர்களின் பெயர், வயது, ரத்தவகை, ஆதார் எண் உள்ளிட்டஅனைத்து தகவல்களும் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.
இதற்கு, பள்ளி வாரியாக பிரத்யேக, பயனர்பெயர், கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை, கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே, ஒருங்கிணைத்து பார்வையிட முடியும். ஆனால், ஆன்லைன் பதிவேற்றம்செய்வதில் உள்ள குளறுபடிகளால், மாணவர்களின்தகவல்கள் முழுமையாக திரட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.இதனால், அனைத்து கல்வி சார் செயல்பாடுகளுக்கும், மாணவர்களின் தகவல்களை அளிக்குமாறு, அடிக்கடி கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இதை திரட்டி அனுப்ப, ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.
தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும்14ம் தேதி, முன் அரையாண்டுதேர்வுகள் துவங்கவுள்ளன. இதற்கு பின், டிச., 7ம் தேதி, அரையாண்டு தேர்வுநடக்கிறது.தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் என, ஆசிரியர்கள் 'படுபிசி'யாக சுழன்று கொண்டிருப்பர். இந்நேரத்தில், ஆதார் எண் சேகரிக்குமாறுஉத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்சிலர் கூறியதாவது:மாணவர்களின் ஆதார் எண், எமிஸ்இணையதளத்தில் உள்ளது. இதை, கல்வித்துறைஅதிகாரிகள் முறையாக, 'அப்டேட்' செய்யாததால், பள்ளிகளில் இருந்து அடிக்கடி தகவல்அளிக்க உத்தரவிடுகின்றனர்.
தேர்வுநேரத்தில், ஆதார் எண் சேகரித்தல், அட்டை இல்லாத மாணவர்களுக்கு முகாம்நடத்துதல் என, புதிய உத்தரவுகளைபிறப்பித்துள்ளனர்.இணைய வசதியில்லாத பள்ளிகளில், தனியார் பிரவுசிங் சென்டர்களை தேடி சென்று, தகவல்களைபதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்றதகவல் சேகரிப்பு பணிகளை, கல்வியாண்டு துவங்கும்போதே, முறையாக திட்டமிடாமல், அவசரகதியில்குறுகிய கால அவகாசத்தில் செய்வதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இனிவரும்காலங்களிலாவது, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளை திணிக்காமல்இருக்க, நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.