யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/6/17

அரசு இன்ஜி., கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை

சென்னை: ''அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக, மீண்டும், 6,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, உயர ்கல்வி துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* அரசு இன்ஜி., கல்லுாரிகளில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, மீண்டும், 6,000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 8.29 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* அரசின் பலவகை தொழில் நுட்ப கல்லுாரிகளில், கட்டடவியல்; மின்னியல் மற்றும் மின்னணுவியல்; மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்; இயந்திரவியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய பிரிவுகளில், மாணவர்கள், டிப்ளமா படிக்கின்றனர். அவர்கள், எங்கும், எதையும் கற்கும் வகையில், அண்ணா பல்கலை மூலம், 36 பாடங்களில், ஒரு பாடத்திற்கு, 20 மின் கற்றல் ஒளித்தொகுதி என்ற, 'இ - லேர்னிங் வீடியோ மாட்யூல்ஸ்' வழங்கப்படும்
* சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், 2.5 கோடி ரூபாயில், சுனாமி, நில அதிர்வு போன்ற பல்வேறு அறிவியல் நிகழ்வுகளை எளிதாக விளக்க, ஆறு அடி விட்டம் உடைய, முப்பரிமான அறிவியல் கோளம் அமைக்கப்படும்.
* வேலுாரில் உள்ள திருவள்ளுவர் பல்கலையின், முதுகலை விரிவு மையம், விழுப்புரத்தில் செயல்படுகிறது. அங்கு, மூன்று கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்டப்படும். அழகப்பா பல்கலையில் திறன் வங்கி மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

37 அறிவிப்புகள் விளக்கமாக ........


அரசு பள்ளிகளில், உயர் தரமான கல்வியை கற்பிக்கவும், அங்கு பயிலும் மாணவர்களை, நவீன தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப தயார்படுத்தவும் அதிரடி நடவடிக்கையாக 37 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் நேற்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதற்கு, பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.



சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். 

அவர், 'ஐந்து ஆண்டுகளில், பள்ளிகளில், கல்வி மற்றும் கல்வி சார்ந்த வசதிகள், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்வி வசதியின் பரவல் அனைவரையும் சென்றடைந்த நிலையில், தரமான கல்வியை அளிப்பது அடிநாதமாகியுள்ளது.

கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால சவால்கள், மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. கல்வியின் பரிணாம வளர்ச்சி கருதி, கல்வித் தரம் மாபெரும் உயரத்தை எட்ட வேண்டும்' என, தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, '17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களின் பணி நிரந்தரம்; பள்ளிகள் தோறும் மாணவர் நாளிதழ் வாங்குதல்; 'ஆன்லைனில்' தேர்வு ஹால் டிக்கெட், போட்டித் தேர்வுக்கு வசதிகள், கணினி வழி கல்வி' என, 37 புதிய அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட்டார்.

அதன் விபரம்:

* கிராமம் மற்றும் மலைப் பகுதி உள்ளிட்ட 30 இடங்களில் புதிய துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும்
* சிறப்பாக செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒரு துவக்கப் பள்ளி, உயர்நிலை, நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிக்கு 1.92 கோடி ரூபாயில் ஆண்டுதோறும் 'புதுமைப் பள்ளி விருது' வழங்கப்படும்
* புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், செயல்பாடுகளுடன் கூடிய புதிய கற்றல் 
அட்டைகள், 31.82 கோடி ரூபாயில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்
* 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில், 40 ஆயிரம் மாணவர் பயன் பெறும் வகையில், தலா, மூன்று கணினிகள் உடைய கணினி வழி கற்றல் மையங்கள் 6.71 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* 5,639 அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலை 

'நாப்கின்' வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்படும்
* 31 ஆயிரத்து 322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் 4.83 கோடி ரூபாயில் நாளிதழ் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்


ஆசிரியர் நலன்


* நடப்பு கல்வியாண்டில், 3,336 முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் மற்றும், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என 4,084 காலியிடங்கள் நிரப்பப்படும்
* 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படும்
* கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு யிற்றுவிக்கும் ஆசிரியர்கள்; குழந்தைகள் சேர்க்கையில் சிறப்பான ஆசிரியர்களை ஊக்கு விப்பதற்காக மாவட்டத்திற்கு, ஆறு ஆசிரியருக்கு 'கனவு ஆசிரியர் விருது' வழங்கப்படும். அவர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பாராட்டுத் தொகை வழங்கப்படும்
* அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான, மாணவ - மாணவியர் கற்கும் திறனை அதிகரிப்பதற்காக 39.25 கோடி ரூபா யில் உச்சரிப்பு, எழுத்துக்களை அறிதல் போன்ற வற்றுக்காக, 39.25 கோடி ரூபாயில்,துணை கருவிகள் வழங்கப்படும்
* திறனின்றி தேர்வுகளில் பங்கேற்கும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, பள்ளி ஆசிரியர் களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படும்
* அறிவியல், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்கும், 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மூன்று கோடி ரூபாயில், வெளிநாடு செல்ல வாய்ப்பு அளிக்கப் படும்
* தமிழர் பாரம்பரிய கலை மற்றும் மரபுகலை வளர்க்க,150 வகை பிரிவுகளில், பள்ளி அளவில் துவங்கி, மாநில அளவிலான கலை திருவிழா, ஆண்டுதோறும்,4 கோடி ரூபாயில் நடத்தப்படும்
* பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்பை தொடரும் வகையில், தேசிய வங்கி மூலமாக, ஆண்டுதோறும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங் களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும்
* கிராமப்புற மாணவர்களை தயார் செய்யும் வகையில், ஒன்றியங்கள் தோறும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற, 20 கோடி ரூபாயில் வசதிகள் ஏற்படுத்தப்படும்
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி மையங்கள், அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படும்


மின் ஆளுமை


* பள்ளிக்கல்வி துறைக்கென தனியாக, கற்றல், கற்பித்தல், மேலாண்மை இணையதளம் உருவாக்கப்படும். இதில், பல்வேறு அலைபேசி செயலிகள் உருவாக்கப்படும்
* பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கு, விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு வழங்குதல், மதிப்பெண் பதிவு செய்தல், தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புதல் போன்ற வற்றை மேற்கொள்வதற்காக, அரசு தேர்வுகள் 

துறை, இரண்டு கோடி ரூபாயில் கணினி மயமாக்கப்படும்
* மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவங்க, இணைய வழியில் அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படும்

நுாலகம்
* அரசு பொது நுாலகங்களுக்கு பயனுள்ள, தரமான நுால்கள் வாங்க, 25 கோடியும், சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத் திற்கு,புதிய துறை சார்ந்த மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப நுால்கள் வாங்க, ஐந்து கோடி ரூபாயும் வழங்கப்படும்
* மதுரையில், உலக தமிழ்ச்சங்க வளாகத்தில், ஆறு கோடி ரூபாய் செலவில், மாபெரும் நுாலகம் அமைக்கப்படும்
* மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, மாவட்ட தலைநகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும்
* எட்டு கோடி ரூபாய் செலவில், சிவகங்கை மாவட்டம் - கீழடி, தஞ்சை, நெல்லை, நீலகிரி, திருச்சி, கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில், சிறப்பு நுாலகங்கள் அமைக்கப்படும்
* கோவை, கரூர், நெல்லை, நாமக்கல், கடலுார், வேலுார், திருச்சி, விருதுநகர் ஆகிய நகரங்களில், போட்டித் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 24 மாவட்டங்களிலும், அவை துவங்கப்படும்
* தமிழகத்தில் கணினிமயமாகாத 123 முழுநேர கிளை நுாலகங்கள் 1.84 கோடி ரூபாயில் கணினி மயமாக்கப்படும்
* அரிய நுால்கள், ஓலைச்சுவடி உள்ளிட்ட வற்றை மின் மயமாக்கி, நவீன மின் நுாலகம் அமைக்கப்படும்
* அரிய நுால்கள், ஓலைச்சுவடி மற்றும் ஆவணங்களை, பொது மக்கள் மற்றும் தனியாரிடம் இருந்து பெற்று, பாதுகாக்க, புதிய திட்டம் உருவாக்கப்படும்
* அரிய நுால்களை பாதுகாப்பதற்காக, தனியார் அமைப்புகள் நடத்தும் நுாலகங்களுக்கு 
பராமரிப்பு நிதி வழங்கப்படும்
* சிறந்த அறிவியல் தொழில்நுட்ப நுால்கள் மற்றும் உலகின் தலைசிறந்த பிற மொழி இலக்கியங்களையும், தமிழில் மொழி பெயர்த்து வெளியிட, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறித்த கண்காட்சிகள், நடமாடும் கண்காட்சிகள், 
புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து நடத்தப்படும்
* மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், புதிய பணியிடங்கள், 60 லட்சம் ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டை சீர்படுத்துவதற்காக, இரு புதிய ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
* பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு 34 புதிய வாகனங்கள் 2.89 கோடி ரூபாயில் வழங்கப்படும்


வயது வந்தோர் கல்வி


* திருவண்ணாமலை, அரிய லுார், பெரம்பலுார், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மூன்றாம் வகுப்புக்கு நிகரான சமநிலை கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப் படும். மேலும், ஐந்து மாவட்டங்களில் 14 கோடி ரூபாயில் சமநிலை கல்வி அளிக்கப் படும்
* வெளிநாடுகளில் வாழும் தமிழ் மாணவர் களுக்காக, பாடபுத்தகங்கள் மற்றும் கற்பிப்பதற் கான ஆசிரியர்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்
* இலங்கை, யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற் கும், மலேஷியா பல்கலைக்கும், பொதுமக்க ளிடம் இருந்து பெற்று, ஒரு லட்சம் அரிய நுால்கள் அனுப்பி வைக்கப்படும் பள்ளி கல்வித் துறையை மேம்படுத்த, அரசு அறிவித்துள்ள, இந்த புதிய அறிவிப்புகளுக்கு, கட்சிகள், கல்வி யாளர்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

பிளஸ் 1 பொது தேர்வு: தி.மு.க., எதிர்ப்பு

சென்னை: ''பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி வலியுறுத்தினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: மத்திய அரசு, கல்வித்துறைக்கு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது; அதை பெற முயற்சி செய்யுங்கள்.அமைச்சர் ஜெயகுமார்: மத்திய அரசிடம் இருந்து, 17 ஆயிரம் கோடி ரூபாய், நிலுவைத் தொகை வர வேண்டி உள்ளது.
இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்தி உள்ளார். நிதி அமைச்சரிடமும் பேசி உள்ளோம். கேட்ட நிதி கிடைத்துவிடும் என்ற, நம்பிக்கை உள்ளது.பொன்முடி: புதிதாக பிளஸ் 1 வகுப்பிற்கும,் பொதுத் தேர்வு நடத்தப்படும் என, அறிவித்துள்ளீர்கள். அதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஓராண்டு இடைவெளி விட வேண்டும். ஏனெனில், மீண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வேண்டி உள்ளது.அமைச்சர் செங் கோட்டையன்: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு என்பதை, அனைவரும் வரவேற்றுள்ளனர்; மக்கள் ஏற்றுக் கொண்டனர்.பொன்முடி: மாநில உயர் கல்வி மன்றம், நிர்வாகிகள் இல்லாமல் முடங்கி உள்ளது. துணை வேந்தர் நியமனத்தில், பல்வேறு குளறுபடி நடந்துள்ளது.அமைச்சர் அன்பழகன்: துணை வேந்தர் தேர்வில், குளறுபடி எதுவும் இல்லை.

தேடல் குழு தேர்வு செய்தவர்கள் தான், துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பதவி கிடைக்காதவர்கள், தவறான பிரசாரம் செய்கின்றனர்.பொன்முடி: மேற்கு வங்க கவர்னராக வந்த ராபர்ட் கிளைவ், அங்கு ஆட்சியிலிருந்த, நவாப்புகளிடம் இருந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட வழி வகுத்தார். அதுபோன்ற நிலை ஏற்படாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

3-லிருந்து 67 மாணவர்கள்...! அரசுப் பள்ளியைச் சீராக்கிய ஆசிரியை!

மூன்று மாணவர்கள் மட்டுமே இருப்பதால், இந்த அரசுப் பள்ளி மூடப்படும்' என்று அறிவிக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி ஒன்றை, தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் மீட்டிருக்கிறார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை. இன்று அந்தப் பள்ளியில் 67 மாணவர்கள் படிக்கிறார்கள்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது மட்டங்கிப்பட்டி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊர் கிராமத்தின் அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்ப காலத்தில் நிறைய மாணவர்கள் படித்தார்கள். அங்குள்ள இளைஞர்கள், பெண்கள் பலரும் அங்கே படித்தவர்கள்தான். ஆனால், ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளி ஈர்ப்பு காரணமாகப் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இரண்டு ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியில் மூன்றே மூன்று மாணவர்கள்தான் என்ற நிலை. இனி, இப்பள்ளி மூடப்பட்டுவிடும் என்ற நிலையில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி மலர்.


''இந்தக் கிராமத்தில் இருக்கிற பிள்ளைங்க பக்கத்து ஊரில் இருக்கிற தனியார் பள்ளிக்குப் போயிட்டாங்க. அதனால், ஸ்கூலை மூடறதா அரசாங்கம் முடிவு பண்ணிடுச்சு. இதைப் பத்தி ஊரில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்திச்சு சொன்னேன். 'ஊரிலிருக்கும் ஒரு பள்ளியை மூடறதால் என்னென்ன விஷயங்களை இழப்பீங்க தெரியுமா?'னு எடுத்துச் சொன்னேன். கொஞ்ச பேர் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும், நாங்கதான் சரியாப் படிக்கலை. எங்க குழந்தைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கணும்னு ஆசைப்படறோம்னு சொன்னாங்க. தண்ணீர், கழிப்பறை வசதி இல்லைன்னு பலவற்றையும் சொன்னாங்க. அவங்களோட உணர்வைப் புரிஞ்சுக்கிட்டேன். 'இந்த ஸ்கூலிலேயே இங்கிலீஷ் மீடியத்தைக் கொண்டுவரேன். மற்ற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யறேன்'னு அவங்களுக்கு உறுதி தந்தேன்.
ஊரின் பெரியவங்க சிலரைப் பலமுறை சந்திச்சு அரசுப் பள்ளியின் முக்கியத்துவத்தைச் சொன்னேன். 'சரிம்மா, நாங்க கூட்டம் போட்டு இந்த ஸ்கூலில் பசங்களைச் சேர்க்கணும்னு ஊர்க்கட்டுப்பாடு விதிக்கிறோம்'னு சொன்னாங்க. கூட்டமும் நடந்துச்சு. அங்கே வந்த மக்கள், 'நீங்க கொஞ்ச நாள் இந்த ஸ்கூலில் வேலை செஞ்சுட்டு மாறுதலாகி போயிருவீங்க. அப்புறம் நாங்க என்ன செய்யறது? நீங்க சொல்ற வசதிகள் எங்க பிள்ளைகளுக்குக் கிடைக்கும்னு எப்படி நம்பறது?'னு கேட்டாங்க. நானும் என்னோடு வேலை செய்யும் டீச்சரும் 'இந்தப் பள்ளிக்கான வசதிகள் வர்ற வரைக்கும் நாங்க வேற இடத்துக்கு மாறமாட்டோம்'னு உறுதியா சொன்னோம். ஸ்கூல் முன்னேற்றத்துக்காக ஒரு கமிட்டி உருவாக்கி அதுக்கு இந்த ஊரைச் சேர்ந்த பழனி முருகன் என்பவரை தலைவரா நியமிச்சோம்'' என்கிறார் பாரதி மலர்.

''ஊர்மக்களை சம்மதிக்கவைக்கிறது அவ்வளவு லேசா நடக்கலைங்க'' என்றபடி பேச ஆரம்பித்தார் பழனி முருகன். ''என் பிள்ளைகளையும் பக்கத்து ஊர் தனியார் பள்ளியில்தான் படிக்கவெச்சுட்டு இருந்தேன். ஆனா, நான் படிச்சது இந்த ஸ்கூல்லதான். இந்த ஊரில் இருக்கிற என் தலைமுறை ஆளுங்க எல்லோருமே இங்கேதான் படிச்சோம். அப்படியிருக்கிறப்ப நம்ம பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்துட்டு, ஒரு ஸ்கூலையே மூடவைக்கிறோமேனு நினைச்சு வெட்கப்பட்டேன். இங்கிலீஷ் மீடியம் வரணும். கராத்தே, யோகா கிளாஸ்களைக் கொண்டுவரணும்னு மக்கள் சொன்ன விஷயங்களைச் செய்யறதுனு முடிவுப் பண்ணினோம். இதுக்கெல்லாம் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும்னு தெரிஞ்சது. எங்க ஊரைச் சேர்ந்தவங்க பலரும் அபுதாபி, துபாய்னு வெளிநாட்டுல வேலைப் பார்க்கிறாங்க. அவங்கக்கிட்ட பேசி நிதி திரட்ட ஆரம்பிச்சோம். 'மட்டங்கிபட்டி வாட்ஸ்அப் குரூப்' என ஒன்றை ஆரம்பிச்சு தொடர்புகொண்டோம். நிறைய பேர் பண உதவி செஞ்சாங்க. எங்க ஊரு எம்எல்ஏ., எட்டு லட்சம் கொடுத்தார்'' என்கிறார்.
''அந்தப் பணத்தைவெச்சு செயலில் இறங்கினோம். பள்ளியின் புது வகுப்பறைகளைக் கட்டும் எல்லா வேலைகளையும் ஊர்மக்களே செஞ்சாங்க. புதிய வகுப்பறைகள், குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் என எல்லா வசதிகளையும் செஞ்சுட்டோம். பலரும் பிள்ளைகளை இங்கே சேர்த்தாங்க. இதைப் பார்த்து அரசாங்கத்திலிருந்து புதுசா இரண்டு டீச்சர்களை நியமிச்சாங்க. வசதிகளையும் செஞ்சுத் தர முடியாது. குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துத்தர்றதுக்காகப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நாங்களே ஒரு டீச்சரை நியமிச்சோம். யோகா, கராத்தே வகுப்புகளும் நடத்துறோம். டீச்சர்கள் எல்லோரும் சேர்ந்து ராத்திரி, பகலா கண் முழிச்சு வகுப்பறை சுவர்களில் ஓவியங்களை வரைஞ்சாங்க. அதேமாதிரி அரசு கொடுக்கும் இலவச சீருடை, செருப்புகளில் அளவு குறைவா இருக்கிற பிள்ளைகளுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சு கொடுத்தோம். இப்போ, பள்ளிக்குச் சுற்றுச் சுவர் வேணும். அதை அரசாங்கம் செஞ்சு கொடுக்கும்னு எதிர்பாக்கிறோம்'' என்கிறார் தலைமை ஆசிரியை பாரதி மலர்.
மட்டங்கிபட்டியைப் போல ஒவ்வொரு கிராமத்து மக்களும் ஆசிரியர்களும் அக்கறையுடன் ஒன்றிணைந்தால், அரசுப் பள்ளிகள் கம்பீரமாக உயர்ந்து நின்று குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிக்கும்!
படங்கள்: வீ. சதீஷ்குமார்.

நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்... சட்டசபையில் 'செங்ஸ்'!

சென்னை: நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார்.
அதன்படி சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மூன்று கோடி ரூபாய் செலவில் 32 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.7,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறவிவித்துள்ளது. மேலும்
நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அரியவகை நூல்கள், ஆவணங்களுடன் நூலகம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 30 கோடி ரூபாய் செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.2.10 கோடியில் திறன் வங்கி மையம் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிகளில் இந்த ஆண்டு 10,000 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தொழில்நுட்ப நூல்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

"தமிழகத்தில் புதியதாக 30 தொடக்கப்பள்ளிகள்": அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடியான 37 அறிவிப்புகள்!!!

தமிழகம் முழுவதும் 30 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

பள்ளி கல்வி துறையில் 37 அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 30 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும என்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்க புதுமை பள்ளி விருதுகள் வழங்கப்படு என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பாக துணை கருவிகள் ரூ.31.25 கோடி செலவில் பள்ளிகளுக்கு வழஙகப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தனித்திறன் கொண்ட மாணவர்களை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும், 32 மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாணவர்களின் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, போட்டி தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு நடத்த ரூ.2 கோடியில் மேலாண்மை தளம் அமைக்கப்படும் என்றார்.
கிராமப்புற மாணவர்களுக்கு ஒவ்வொரு ஒன்றியத்திலும் பயிற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார.
அரசு பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது அமைச்சர் கூறினார். 5,639 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 3,336 முதுநிலை பட்டதாரி அசிரியர்களும் 748 கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணிகளாக மாற்றப்படும என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உள்பட பழம்பெரும் நாகரிகம் பற்றி சிறப்பு நூலகம் உள்பட 37 அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.ம்.

DSE PROCEEDINGS-REGULARISATION ORDER FOR BT (HISTORY-TELEGU)

+2 சிறப்பு துணைத் தேர்வு HALL TICKET பெறுதல் தொடர்பாக -தேர்வுத் துறை அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு எப்போது?

PGTRB HALL TICKET DOWNLOAD - 2017

G.O.(Ms) No.33 Dt: March 02, 2017 Examinations - Departmental Examinations - Revision of Syllabus and Scheme of Examinations - Objective / Descriptive and both Objective and Descriptive Pattern of Examinations - Recommendation by the Departmental Examinations Reforms Committee - Implementation - Orders - Issued

அனைத்து தொடக்கப்பள்ளி/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவுப்பு

அனைத்து தொடக்கப்பள்ளி/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவுப்பு

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எனில்  உணவு உண்ணும் மாணவர் 32 எனில்


MDM A32 B00 C00
(MDMspaceA32spaceB00spaceC00)
 என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..

நடுநிலைப்பள்ளியெனில்
1-5. 20 மாணவர்கள்
6-8. 36 மாணவர்கள் என்றால்

MDM A20 B36 C00
(MDMspaceA20spaceB36spaceC00)
என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி
நாள்தோறும் அனுப்புதல் வேண்டும்.
 குறுஞ்செய்தி இலவச

15/6/17

EMIS-Now Site will be kept under maintenance for migration from 2016-17 to 2017-18 academic year

*EMIS* *FLASH NEWS..*

EMIS வெப்சைட் தற்போது *2016-2017* ஆண்டிலிருந்து *2017-2018* ம் ஆண்டிற்கு *ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்கு* மாற்றுவதற்கு வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

*ஓரிரு நாளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்ய திறக்கப்படும்*.

மற்றமாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தானாக சென்றுவிடும்.

மற்றபள்ளியிலிருந்து *புதிதாக வந்துள்ள மாணவர்களை EMIS எண்களை
வைத்து STUDENT POOL லிருந்து எடுத்துக்கொள்ளவும்*.


*அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் இதை பயன்படுத்தி EMIS எண் அனைத்து மாணவர்களுக்கும் இருக்கும்படி செய்ய வேண்டும்*

வங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்!

டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும்
வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது. இப்போது, உங்கள் ஏடிஎம் அட்டையை வங்கிக்கு போகாமலிருக்கலயே பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இந்தஇயந்திரம் வங்கிகளில் உள்ள பல வசதிகளை தன்னிடம் கொண்டுள்ளது. இந்த வகை ஏடிஎம்களின் செலவு தலா 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும். இந்த இயந்திரங்கள் SS32, SS22, SS83 மூன்று வகைகளாக இருக்கும். இந்த இயந்திரங்கள் வழக்கமான ஏ.டி.எம். கள் போலவும் செயல்படும் ஆனால் சில கூடுதல் வசதிகள் உள்ளன.
இதில் முக்கிய அம்சம், ஏடிஎம் மூலமே வங்கிக் கணக்கை திறக்கலாம். அல்லது உங்கள் காசோலைகளை கிளியர் செய்ய முடியும். இந்த இயந்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு அம்சத்தின்படி, உடனடி வங்கி கணக்குகள், பற்று அட்டைகள், தானியங்கி கையொப்ப சரிபார்ப்பு, நிதி பரிமாற்ற, பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் ஆகியவற்றை செய்ய முடியும்.

இதுபோன்ற ஏடிஎம் மிஷின்கள் தற்போது 3 இடங்களில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளதாக என்.சி.ஆர் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

அரசுஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை அமைச்சரவைக்கு
சமர்பித்துள்ளது. 

இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் வரவில்லை. இந்நிலையில் இந்த பரிந்துரைகள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என ஒரு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

இதில் வீட்டு வாடகை அலவன்ஸ் 27% உயர்வு உட்பட பல அலவன்ஸ்களை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் 7ஆவது பே கமிஷன் ஆணையை செயல் படுத்த ரூ 65000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றாமல் போனால் அரசு மேலும் தொகைய உயர்த்த வேண்டி வரும்.
இந்தமுறை 7ஆவது பே கமிஷன் நிறைய அலவன்சுகளை ஒழித்த போதிலும் பல அலவன்ஸ் தொகைகளை அதிகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

FA (b) Question

No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.





No automatic alt text available.



No automatic alt text available.









No automatic alt text available.No automatic alt text available.

No automatic alt text available.No automatic alt text available.
No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.

.கார்த்திக்ராஜா,
இடைநிலைஆசிரியர்,
...நி.பள்ளி - கத்தாழை,

கடலூர் மாவட்டம்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கு *திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்



அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இலக்கு

அரசுபள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், ஐந்தாண்டுகளுக்கு
முன் இருந்த எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும் என பள்ளி கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பயில தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி கஷ்டப்பட்டு சேர்த்து வருகின்றனர்.

பெற்றோர்களின் இந்த மோகத்தால் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பல அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

பள்ளி செயலர் உத்தரவு
இந்தகல்வியாண்டில் கல்வித் துறையின் முன்னேற்ற நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பள்ளியும் கவனம் செலுத்தி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதில் கடந்த 2011- -2012ல், 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைய கூடாது என பள்ளி கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் , பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐந்தாண்டுக்கு முந்தைய இலக்கு

இதன்படி தேனி மாவட்டத்தில் 2011- -2012ல் 5,188 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கை நடந்துள்ளது. கடந்த ஆண்டில் 4,155 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கல்வியாண்டில் நேற்று வரை 3,865 மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி உள் கட்டமைப்பு வசதிகள் போன்ற விபரங்களை பெற்றோரிடம் தெரிவித்து சேர்க்கை அதிகாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தா

இனி பெட்ரோல், டீசல் விலை மாற்றம் தினசரி காலை 6 மணி முதல் அமலில் இருக்கும்!

டெல்லி: நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில்
இருக்கும் என பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாறியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்துவருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

 இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 16-முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பங்க் உரிமையாளர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தாங்கள் நடத்தவிருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெற முடியாது: ஒழுங்கு முறை ஆணையத் தலைவர்களுக்கு அரசு அறிவிப்பு