யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/6/17

பிளஸ் 1 பொது தேர்வு: தி.மு.க., எதிர்ப்பு

சென்னை: ''பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி வலியுறுத்தினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: மத்திய அரசு, கல்வித்துறைக்கு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது; அதை பெற முயற்சி செய்யுங்கள்.அமைச்சர் ஜெயகுமார்: மத்திய அரசிடம் இருந்து, 17 ஆயிரம் கோடி ரூபாய், நிலுவைத் தொகை வர வேண்டி உள்ளது.
இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்தி உள்ளார். நிதி அமைச்சரிடமும் பேசி உள்ளோம். கேட்ட நிதி கிடைத்துவிடும் என்ற, நம்பிக்கை உள்ளது.பொன்முடி: புதிதாக பிளஸ் 1 வகுப்பிற்கும,் பொதுத் தேர்வு நடத்தப்படும் என, அறிவித்துள்ளீர்கள். அதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஓராண்டு இடைவெளி விட வேண்டும். ஏனெனில், மீண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வேண்டி உள்ளது.அமைச்சர் செங் கோட்டையன்: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு என்பதை, அனைவரும் வரவேற்றுள்ளனர்; மக்கள் ஏற்றுக் கொண்டனர்.பொன்முடி: மாநில உயர் கல்வி மன்றம், நிர்வாகிகள் இல்லாமல் முடங்கி உள்ளது. துணை வேந்தர் நியமனத்தில், பல்வேறு குளறுபடி நடந்துள்ளது.அமைச்சர் அன்பழகன்: துணை வேந்தர் தேர்வில், குளறுபடி எதுவும் இல்லை.

தேடல் குழு தேர்வு செய்தவர்கள் தான், துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பதவி கிடைக்காதவர்கள், தவறான பிரசாரம் செய்கின்றனர்.பொன்முடி: மேற்கு வங்க கவர்னராக வந்த ராபர்ட் கிளைவ், அங்கு ஆட்சியிலிருந்த, நவாப்புகளிடம் இருந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட வழி வகுத்தார். அதுபோன்ற நிலை ஏற்படாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக