யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/6/17

அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலை பதிவாளர் ஆறுமுகம் செய்திக்குறிப்பு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2017 - 18ம் கல்வியாண்டில், அனைத்து பாடப் பிரிவுகளுக்கும், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய, ஜூன் 14 கடைசி நாள் என நிர்வாகம் அறிவித்திருந்தது.
மாணவர்கள் நலன் கருதி, கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு வகுப்புகள் எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்.டபிள்யூ., - எம்.எச்.எஸ்.எஸ்., - எம்.ஆர்.எஸ்., - எம்.எஸ்சி., மரைன் சயின்ஸ் - நர்சிங் - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய வகுப்புகள். பி.பிஎட்., - எம்.பிஎட்., எம்.பி.டி., - சர்டிபிகேட் புரோகிராம் இன் டென்டல் மெக்கானிக்ஸ், டிப்ளமா இன் ஜெனரல் நர்சிங் மிட்வைப்ரி, பொறியியல் பிரிவில் பி.இ., - பி.இ., பார்ட் டைம் - எம்.இ., - எம்.டெக்., - எம்.பார்ம்., மற்றும் அனைத்து இசைப் பிரிவு வகுப்புகள்.இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக